ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 11 of 28 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Fri Jan 03, 2014 1:38 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//


ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat  பண்ணுவேன் " என்றுபுன்னகை இதுல ஒரு beauty  என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042502

ரொம்ப குடுத்து வச்சவங்க நீங்க...மாமியார் மருமக சண்டையே வந்திருக்காதுலமாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042504

YES! YES!! YES!!!  ஜாலி ஜாலி ஜாலி வேற வேற ப்ரோப்ளேம் வந்தாலும் மாமியார் மருமக சண்டை வரல பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042511 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat Jan 04, 2014 3:22 pm

நான் போய்விட்டால்
உன் வாழ்க்கை?
என்ன செய்வாய் நீ சோத்துக்கு
எப்படி பிழைப்பாய்
இந்த ஏமாற்று உலகில்,
வாரி அணைக்க அன்னையில்லை
தோள் கொடுக்க அப்பனிருந்தும்
அவனால் புண்ணியமில்லை,
உடன் பிறந்தவள் இருந்தும்
நீ அனாதை போல்
வாழ வேண்டுமே!
உள்ள குமுறலை கொட்டி
குமுறி அழுதார்கள்!
இறுதியாய் அவர்கள் சொன்னது,
நாலு நாள் பொழச்சாலும்
நல்ல பொழப்பு பொழைக்கணும்,
இல்லண்ணா மாண்டு
போகும்போது இழவுக்கு
வரும் கூட்டம் கம்மியாத்தான்
நமக்கு வரும்!!
இந்த இடத்த உனக்கு
விட்டுட்டு போறேன்
நீ இதுக்கு மேல
சம்பாரிச்சு காட்டணும்,
உனக்கு ஒரு தேவைய (கல்யாணம்)
பண்ணி பாத்துட்டு
என் உசுரு போனா
இந்த கட்டையில
நெஞ்சுக்கூடு நல்லா வெந்து போகும்!!
அவர்கள் பேச பேச
எனக்கு நா தழுதழுத்தது,
வார்த்தைகள் வரவில்லை!
உனக்கு ஒன்னும் ஆகாதும்மா
தைரியமா இரு என்றேன்!
ஆனாலும் முதுமையில்
சிக்கும் போது
ஒவ்வொரு நொடியும்
மரணத்தை நோக்கியே!!
மாதங்கள் ஓடியது
எழுந்து நடமாட கூட
மற்றவர் துணை வேண்டும்
என்கிற கட்டாயம்,
அப்போதுதான் என் மனதில்
ஒரு இனம் புரியா கவலை!!
பாட்டி இறந்த பின்பு
நாம் என்ன செய்ய போகிறோம்?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Jan 04, 2014 3:30 pm

எளிய வார்த்தைகள் அழுத்தமான கருத்துக்கள் அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat Jan 04, 2014 3:32 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:எளிய வார்த்தைகள் அழுத்தமான கருத்துக்கள் அருமை

உள்ளதை உள்ளபடியே கூறுகிறேன் திரு. செம்மொழியான் பாண்டியன் அவர்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Mon Jan 13, 2014 12:49 pm

காலத்திற்கு அப்படி என்ன
பொறாமை மக்கள் மீது?
குழந்தையாய் பிறக்க வைத்து
இதுதான் வாழ்க்கை என்று
அறிவதற்குள் ஓடி விடுகிறது
வேக, வேகமாய் நாட்கள்,
வாழ்க்கை புரியும்போது
அதை வாழ்ந்து பார்க்க
ஆசை வரும் – அந்த ஆசை
வரும்போதுதான் நமது
ஆயுளின் கடைசி தேதிகள்
கிழிக்கப்படும்!!
அந்த கடைசி தேதிகளில்
இன்றா? நமக்கு கடைசி நாள்,
என்று ஒவ்வொரு நாளும்
நினைக்க வைக்கும் நம் மனம்,
அந்த நினைப்பு மனதில்
வரும்போது - ஒவ்வொரு நொடியும்
மரணத்தை நோக்கியே செல்வதாய்
ஒரு மரண பயம் வரும்!!
அந்த மரண பயத்தை
மரணப் படுக்கையில் உள்ள
நபரை விட
அவரின் அருகில் உள்ள நபரே
அதிகம் தெரிந்து கொள்ள முடியும்!!
நானும் தெரிந்து கொண்டேன்
ஆடி, ஆண்ட அனைத்து மனிதனும்
அடங்கும் நேரம்
வெகு தொலைவில் இல்லை!!
நீ நல்லவனாய் இருந்தாலும்
நாலு பேரை கெடுத்து வாழ்ந்தாலும்
இறுதியாய் கட்டிலில் கிடக்கும்
அந்த நேரம்
ஒவ்வொரு வீரனும் கோழையே!!
என் பாட்டி மிக துணிவுள்ளவல்
யாரிடமும், எதற்கும் அஞ்ச மாட்டாள்
வீரத்தின் விளைநிலம்!!
அப்படிப்பட்ட ஜீவன் இதோ
தனது அத்தியாவசிய கடன்களை கழிக்க
எழுந்திரிக்க முடியவில்லை!!
அட சாமிகளே,
மரணமும் அதற்கும் முன் வரும்
ஒரு சில மாதங்களும்
இவ்வளவு கொடுமைகளா!!
மானே, தேனே என்று என்னை
கொஞ்சி வளர்த்த என் ஆலமரம்
இதோ இலைகள் உதிர்ந்து
எப்போது வேண்டுமானாலும்
விழுந்து விடலாம் என்ற நிலையில்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Mon Jan 13, 2014 1:06 pm

அருகில் இருந்து பார்த்து கொண்டேன்
ஒரு குழந்தையை தன் தாய்
பார்ப்பதை விட மேலாய்!
உடன் என் பாட்டியின் தங்கை
சின்ன பாட்டியும் துணை இருந்தார்கள்!!
என் அப்பனோ, தங்கையோ
துணை வரவில்லை!!
காடு பிரிக்கும் படலம்
இறுதிக் காட்சியை எட்டி இருந்தது,
போனது நாலு சென்ட் நிலம்
அது போனதுதான்!!
மீதியுள்ள நிலத்தை
இரண்டாக பிரிந்து எனக்கும்
இருபத்தியொரு சென்ட் கொடுத்தார்கள்!!
பல ஏக்கர் நிலம் கொண்ட
பெரிய குடும்பம்?
இதோ இப்போது வெறும்
சென்ட் கணக்கில் மட்டுமே
சொத்து இருக்கிறது!!
என் அப்பனவன் செய்த தவறால்
பறிபோனது அனைத்தும்!
குடிக்கு அடிமையாகி
தன் குடியையே கெடுத்துக் கொண்ட
நல்ல மனிதன்? என் அப்பன்!!
இதில் என்ன விசேசம் என்றால்
அவன் இன்றுவரை திருந்தவில்லை
என்ற வேதனையான உண்மைதான்!!
என் பாகத்தை என் பெயரில்
உயில் எழுதினார்கள்,
என் பாட்டி எனக்கு ரேகை வைத்தாள்!!
இது நடந்தது ஏப்ரல் 9 ந்தேதி 2010!!
மிக, மிக வருந்தியவள்
இப்போது தெளிவாய்
என்னிடம் பேசினாள்
செந்தில், உன் வாழ்க்கை
இனி உன் கையில்தான்!!
சொத்து உனக்கு சோறு போடுமா?
இல்லை நீயும்
குடித்தே அழித்துவிடுவாயோ?
அதை காண நான் இருக்க மாட்டேன்
உனக்கென்று ஒரு நல்ல வாழ்வை
நீ தேர்ந்தேடுத்து பிழைத்துக் கொள்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Mon Jan 13, 2014 1:29 pm

படிக்கவே க்‌ஷ்டமா இரூக்க்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by illayatamil Tue Jan 14, 2014 1:09 pm

:வணக்கம்: நல்ல முன்னுதாரணம் அண்ணா.. விரைவில் எழுதுங்கள்..  என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 3838410834
illayatamil
illayatamil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 18/12/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Tue Jan 14, 2014 1:21 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கவே க்‌ஷ்டமா இரூக்க்கு

வாழ்க்கை சில நேரங்களில், சில மனிதர்களை சற்று அதிகமாகவே புண்படுத்திவிடும். அந்த புண்பட்ட மனிதன் அதிலிருந்து மீண்டு வந்தால், சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தால் விரைவில் எட்டலாம் இலக்கை.

உங்கள் உணர்வுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி பானு அவர்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Jan 16, 2014 1:25 pm

வாழ்வில் அனைத்தும்
என்னிடம் இருந்து விலகி இருப்பதாய்
எனக்குள் ஒரு எண்ணம்!!
மனது வெறுமையாகி
உள்ளே ஒன்றுமே இல்லாத நிலை!!
ஏன் குடித்தேன், எவ்வளவு குடித்தேன்
எதுவுமே தெரியாமல் குடித்தேன்!!
ஒன்று மட்டும் மனதில் ஓடியது
இன்னும் சில நாட்களில்
நாம் அனாதையாகி விடுவோம்!!
ஆம்,
சொந்தமும், பந்தமும்
வெறும் வார்த்தைகளே!!
யாராலும், யாருக்கும் பலனில்லை!!
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
எந்த மவராசன் கண்டு பிடித்தான்
இந்த மாபெரும் உண்மையை
அந்த மவராசனுக்கு நான் அடிமை!!
வெறும் பணத்தை மட்டுமே
பார்க்கும் மனித மந்தைகளை
நான் எப்படி சொந்தம் என்பேன்!!
ஒவ்வொரு மனிதனும் என் போல்
வேதாந்தம் பேசித் திரிவான்
யாருமில்லை அன்பு காட்ட
என்ற நிலை வரும்போது!!
பாட்டிக்கு தண்ணீர் கூட
இறங்கவில்லை தொண்டையில்,
கண்ணு நீ வந்து கொஞ்சம்
பால ஊத்திப்பாரு
போகுற உசுரு
நிம்மதியாப் போகுங்சாமி
எதிர் வீட்டு அம்மாயி சொன்னாள்,
கடைசி கால் டம்ளர் பாலை
வாயில் ஊற்றினேன்,
என் விழிகளையே ஊடுருவி
பார்த்தாள் என் அன்பு பாட்டி!!
விழிகளை நோக்க முடியாமல்
நான் சற்று தள்ளி வந்தேன்,
பத்து நிமிடம் கழித்து
என் சின்ன பாட்டி கத்தினாள்
அய்யோ செந்திலு
பாட்டி நம்மள விட்டு போயிட்டாடா!!
என் இதயம் சில வினாடிகள்
துடிக்க மறந்தன!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 11 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 28 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum