Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
+3
ayyasamy ram
தமிழ்செல்விஞானப்பிரகசம்
vasudevan31355
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவது என்பது ஒரு கண்ணியமற்ற செயல். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணம் உண்மையாக இருக்குமானால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சிலைகள் அதுவும் சாலைகளின் நடுவே ஆக்கிரமித்திருக்கும் அனைத்து சிலைகளும் அதே போல அகற்றப்படவேண்டும். ஆனால் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது என்பது ஏதோ காழ்ப்புணர்ச்சியிலும், தனி மனித விரோத போக்கு என்ற ரீதியின்படியும் இருப்பது போல் உள்ளது. தவிர நாம் வணங்கும் தெய்வங்கள், வரலாற்று நாயகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று அனைவரையும் நம் கண் முன் அச்சு அசலாக நிறுத்திக் காட்டி பெரியவர் முதல் சிறியோர் வரை இப்படித்தான் கட்டபொம்மன் இருந்திருப்பார், இப்படித்தான் கப்போலோட்டிய தமிழன் இருந்திருப்பார் இப்படித்தான் சிவபெருமான் இருப்பார், இப்படித்தான் வீர சிவாஜி இருந்திருக்கக் கூடும் என்று அனைவரது மனக்கண்களிலும் அவர்களை நிறுத்திய அந்த மகாநடிகனும் கூட அவருக்கு சிலை நிறுவுமளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவரே. கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த கண்ணியமான நடிகரின் சிலை அந்த பகுதிக்கே ஒரு அழகையும், கம்பீரத்தையும், பெருமையையும் தருகிறது என்பது மறுக்க இயலாத ஒன்று. தவிர நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாகவும் அது விளங்குகின்றது. தவிரவும் உலக நடிகர்களை மிஞ்சும் வண்ணம் நடித்துக் காட்டி அனைவரது அன்பிற்கும் தான் ஏற்ற பாத்திரங்களால் பாத்திரமாகி பாரதத்திற்கே பெருமைத் தேடித் தந்த அந்த மாபெரும் நடிகரின் சிலை அங்கிருக்க மிகவும் தகுதியானது. இதில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் உள்ளது என்ற விகண்டாவிவாதம் ஏற்புடையது அல்ல. சிவாஜி மகாத்மாவுக்கு நிகரானவரா என்ற அர்த்தமற்ற கேள்விகளை சிலர் எழுப்புகிறார்கள். மகாத்மாவுக்கு சமமாக இருப்பவர்களுக்குத்தான் கடற்கரையில் சிலைக்கு இடம் என்றால் அங்கு எம்ஜியார் அவர்களுக்கோ, அறிஞர் அண்ணா அவர்களுக்கோ மற்றும் பிறருக்கு சிலைகளுக்கோ, நினைவுச் சின்னங்களோ, சமாதியோ அமைத்திருக்க முடியாது. எல்லோரும் மகாத்மாக்கள் ஆகி விட முடியாது. அவரவர்களும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்கவர்கள். மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராடியவர்கள். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அவர்களும் மதிக்கப்பட்டு அவர்களுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டிருப்பதும் வெகு நியாயமே!
நடிகர் திலகத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஜனத்திரளைப் பார்த்து தமிழ்நாடே ஸ்தம்பித்தது. அரசியலில் தோல்வி அடைந்தாலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன் அசத்தலான நடிப்பின் மூலம் நம் தமிழக நெஞ்சங்களில் கொலு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் ஒன்றே தமிழகம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு சான்று.
அப்பேற்பட்ட கலைஞனின் சிலையில் கைவைக்க தமிழக அரசு துணிந்திருப்பது துரதிருஷ்ட வசமானது. நடிகர் திலகத்தின் அந்த அழகிய சிலையைக் காண அவரது ஆத்மார்த்தமான பக்தர்கள் பலர் பேருந்துகளில் இதற்காகவே ஏறி சிலையை வணங்கிச் செல்வதும் உண்டு. சிவாஜி ரசிகர்களுக்கென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் தலைவனைப் பற்றி பேசி மகிழ அவர்கள் உரிமையுடன் தேர்ந்தெடுத்திருப்பது மூன்று இடங்கள். ஒன்று சிவாஜி அவர்களின் சொந்தத் திரையரங்கான சாந்தி திரை அரங்கம். கிட்டத் தட்ட அவர்களுக்கு அது ஒரு புண்ணியஸ்தலம். சிவாஜி ரசிகர்களின் அடுத்த கோவில் சிவாஜி அவர்களின் வீடான 'அன்னை இல்லம்'. இதையும் அவரது ரசிகர்கள் கோவிலாக வழிபட்டு வருகிறார்கள். அடுத்து கடற்கரையில் நிற்கும் சிவாஜி சிலை. இங்கே குழுமிக் கூடி அவர்கள் சிவாஜி அவரகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உண்டு யாருக்கும் இடைஞ்சல் தராமல்.
நாட்டில் எவ்வளவோ வேலைகள் பாக்கி இருக்க சிவாஜி சிலையை அகற்ற மட்டும் இந்த அரசு இவ்வளவு தீவிரம் காட்டுவதேன் என்ற கேள்வி எல்லோரது நெஞ்சிலும் எழுந்துள்ளது. சிவாஜி அப்படி என்ன தவறு செய்தார்? அவரது சிலை என்ன பாவம் செய்தது? அவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரே நினைவுச் சின்னமாக விளங்கும் அந்த சிலையையும் நொண்டிச் சாக்குகள் சொல்லி எடுப்பதால் இந்த அரசுக்குக் கிடைக்கக் கூடிய லாபதான் என்ன? நடிகர்களின் பிதாமகரின் சிலை பற்றி வாய் திறக்காமல் வாய் மூடி மௌனியாக நடிகர் சங்கம் இருப்பதின் பின்னணி என்ன? சரத்குமார், சிவாஜியின் மேல் உயிரையே வைத்திருக்கும் ராதாரவி போன்றோர்கள் அரசியல் பிழைப்புக்காக வாய் திறவாமல் இருக்கிறார்களா? அல்லது பயத்தின் காரணமாகவா? நான் சிவாஜி தோளில் வளர்ந்தேன்... நான்தான் சிவாஜியின் முதல் பிள்ளை ராம்குமார், பிரபு எல்லாம் எனக்குப் பிறகுதான் என்று பேட்டிகளில் முழங்கும் சீனியர் நடிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எல்லாம் பேச்சளவிலும், ஏட்டளவிலும் தானா என்ற கேள்வியும் எழுகிறது.
நிஜமாகவே போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்றால் சிலை எடுப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. போக்குவரத்து இடைஞ்சல்களை மீறி அந்த சிலை இருக்க வேண்டும் என்று வாதிடுவது நியாமும் ஆகாது. இறந்து போனவர்களின் சிலைகளை விட வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது. விலை மதிப்பற்றது. விபத்து என்பது பல வழிகளில் நடை பெறுகிறது. குடிபோதை, கவனமின்மை, போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமை, சரியான ஓட்டும் பயிற்சி இல்லாமை என்று. அத்தகைய காரணங்களால் நடைபெறும் விபத்துகளுக்கு சிலைகள் எப்படி பொறுப்பாக முடியும்? அதுவும் சிவாஜி சிலையால் மட்டுமே சிட்டியில் விபத்து ஏற்படுகிறது என்று சொல்வது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இல்லை?! ஆனால் இதைப் போல பல சிலைகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் தருகின்றனவே! அவைகளை மட்டும் விட்டு வைக்கப் படுவது எந்த வகையில் நியாயம்?
சிவாஜி ரசிகர்கள் பொதுவாகவே வம்புதும்புவிற்குப் போகாதவர்கள். அவர்களுக்கு கல்லெறியத் தெரியாது, கறுப்புக் கொடி பிடிக்கத் தெரியாது. போராட்டங்கள் நடத்தத் தெரியாது. வாகனங்களைக் கொளுத்தத் தெரியாது. அப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை பயந்து போய் சிலைப் பற்றி எதுவும் செய்யாமல் 'கம்'மென்று விட்டிருப்பார்களோ என்னமோ? அவர்களுக்கு எந்த பக்க பலமாக எந்தப் பின்னணியும் கிடையாது. பெரும்பாலும் அவர்கள் அமைதியானாவர்கள்தான். இப்போதும் அவர்கள் கண்ணியம் காக்கிறார்கள். முறையாக சிவாஜி சமூக நலப் பேரவை என்ற அமைப்பு சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறது. சிவாஜி அபிமானிகள் தங்கள் மதிப்பிக்குரியவரின் சிலை என்ன கதிக்கு ஆளாகுமோ என்று கலங்கி நிற்கிறார்கள். அவர்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அது மட்டுமல்ல. சிவாஜி ரசிகர்களின் வேதனைக் குரலை ஒரு புறம் புறந்தள்ளி விட்டாலும் சிவாஜியின் புதல்வர்கள் ராம்குமார், பிரபு இவர்களின் மன நிலைமை எவ்வாறு இருக்கும் என்று சற்று யூகியுங்கள். தங்கள் தந்தையின் சிலைக்கு நேரும் அவமானங்களை அவர்கள் அமைதியாக கண்ணீருடன் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி தோன்ற வாய்ப்பில்லை. அப்படி வன்முறையைத் தூண்டும் பிள்ளைகளும் இல்லை அவர்கள்.
கடந்த ஆட்சியாளர்களால் வைக்கப் பட்ட சிலை... அது எடுக்கப் பட்டே தீர வேண்டும் என்ற பழி சொல்லுக்கு இந்த அரசு ஆளாகி விடக் கூடாது என்பதே நமது விருப்பம். அது முறையான செயலும் அல்ல. இப்போது இன்னொரு கேள்வி மனதில் எழாமல் இல்லை. சிவாஜி சிலை தற்சமயம் இருக்கும் இடத்தில் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதிய பின்னணித் தலைவர்கள் சிலைகள் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது இந்த அரசு அப்படிப்பட்ட தலைவர்களின் சிலையைத் தூக்குமா? அப்படி தூக்கினால் சம்பந்தப்பட்ட அரசியல்கட்சிகள் சும்மா இருக்குமா? போராட்டம் வெடிக்காதோ? ஓட்டுக்களை முன்னிட்டாவது அந்த சிலைகளின் மேல் கை வைக்க மாட்டார்கள். ஆனால் சிவாஜி?.... இளிச்சவாயர் ஆயிற்றே! கேக்க யாருமே இல்லையே! அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் இல்லையே! கேவலம் ஒரு சாதாரண நடிகர் தானே! அவர் சார்பாக என்ன பெரிய ஓட்டு வங்கி இருக்கிறது? அவரால் யாருக்கும் ஒரு ஆதாயமும் இல்லையே? அதனால் சிலையை எடுத்தால் போயிற்று. யார் இருக்கிறார்கள் கேட்க? உண்மையான சிவாஜி விசுவாசிகளைத் தவிர.
மொத்தத்தில் நியாயமான காரணமாக இருப்பின் அந்த சிலை அகற்றப்படலாம். வீம்புக்கு என்றால்?....
நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவது என்பது ஒரு கண்ணியமற்ற செயல். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணம் உண்மையாக இருக்குமானால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சிலைகள் அதுவும் சாலைகளின் நடுவே ஆக்கிரமித்திருக்கும் அனைத்து சிலைகளும் அதே போல அகற்றப்படவேண்டும். ஆனால் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது என்பது ஏதோ காழ்ப்புணர்ச்சியிலும், தனி மனித விரோத போக்கு என்ற ரீதியின்படியும் இருப்பது போல் உள்ளது. தவிர நாம் வணங்கும் தெய்வங்கள், வரலாற்று நாயகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று அனைவரையும் நம் கண் முன் அச்சு அசலாக நிறுத்திக் காட்டி பெரியவர் முதல் சிறியோர் வரை இப்படித்தான் கட்டபொம்மன் இருந்திருப்பார், இப்படித்தான் கப்போலோட்டிய தமிழன் இருந்திருப்பார் இப்படித்தான் சிவபெருமான் இருப்பார், இப்படித்தான் வீர சிவாஜி இருந்திருக்கக் கூடும் என்று அனைவரது மனக்கண்களிலும் அவர்களை நிறுத்திய அந்த மகாநடிகனும் கூட அவருக்கு சிலை நிறுவுமளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவரே. கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த கண்ணியமான நடிகரின் சிலை அந்த பகுதிக்கே ஒரு அழகையும், கம்பீரத்தையும், பெருமையையும் தருகிறது என்பது மறுக்க இயலாத ஒன்று. தவிர நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாகவும் அது விளங்குகின்றது. தவிரவும் உலக நடிகர்களை மிஞ்சும் வண்ணம் நடித்துக் காட்டி அனைவரது அன்பிற்கும் தான் ஏற்ற பாத்திரங்களால் பாத்திரமாகி பாரதத்திற்கே பெருமைத் தேடித் தந்த அந்த மாபெரும் நடிகரின் சிலை அங்கிருக்க மிகவும் தகுதியானது. இதில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் உள்ளது என்ற விகண்டாவிவாதம் ஏற்புடையது அல்ல. சிவாஜி மகாத்மாவுக்கு நிகரானவரா என்ற அர்த்தமற்ற கேள்விகளை சிலர் எழுப்புகிறார்கள். மகாத்மாவுக்கு சமமாக இருப்பவர்களுக்குத்தான் கடற்கரையில் சிலைக்கு இடம் என்றால் அங்கு எம்ஜியார் அவர்களுக்கோ, அறிஞர் அண்ணா அவர்களுக்கோ மற்றும் பிறருக்கு சிலைகளுக்கோ, நினைவுச் சின்னங்களோ, சமாதியோ அமைத்திருக்க முடியாது. எல்லோரும் மகாத்மாக்கள் ஆகி விட முடியாது. அவரவர்களும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்கவர்கள். மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராடியவர்கள். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அவர்களும் மதிக்கப்பட்டு அவர்களுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டிருப்பதும் வெகு நியாயமே!
நடிகர் திலகத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஜனத்திரளைப் பார்த்து தமிழ்நாடே ஸ்தம்பித்தது. அரசியலில் தோல்வி அடைந்தாலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன் அசத்தலான நடிப்பின் மூலம் நம் தமிழக நெஞ்சங்களில் கொலு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் ஒன்றே தமிழகம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு சான்று.
அப்பேற்பட்ட கலைஞனின் சிலையில் கைவைக்க தமிழக அரசு துணிந்திருப்பது துரதிருஷ்ட வசமானது. நடிகர் திலகத்தின் அந்த அழகிய சிலையைக் காண அவரது ஆத்மார்த்தமான பக்தர்கள் பலர் பேருந்துகளில் இதற்காகவே ஏறி சிலையை வணங்கிச் செல்வதும் உண்டு. சிவாஜி ரசிகர்களுக்கென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் தலைவனைப் பற்றி பேசி மகிழ அவர்கள் உரிமையுடன் தேர்ந்தெடுத்திருப்பது மூன்று இடங்கள். ஒன்று சிவாஜி அவர்களின் சொந்தத் திரையரங்கான சாந்தி திரை அரங்கம். கிட்டத் தட்ட அவர்களுக்கு அது ஒரு புண்ணியஸ்தலம். சிவாஜி ரசிகர்களின் அடுத்த கோவில் சிவாஜி அவர்களின் வீடான 'அன்னை இல்லம்'. இதையும் அவரது ரசிகர்கள் கோவிலாக வழிபட்டு வருகிறார்கள். அடுத்து கடற்கரையில் நிற்கும் சிவாஜி சிலை. இங்கே குழுமிக் கூடி அவர்கள் சிவாஜி அவரகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உண்டு யாருக்கும் இடைஞ்சல் தராமல்.
நாட்டில் எவ்வளவோ வேலைகள் பாக்கி இருக்க சிவாஜி சிலையை அகற்ற மட்டும் இந்த அரசு இவ்வளவு தீவிரம் காட்டுவதேன் என்ற கேள்வி எல்லோரது நெஞ்சிலும் எழுந்துள்ளது. சிவாஜி அப்படி என்ன தவறு செய்தார்? அவரது சிலை என்ன பாவம் செய்தது? அவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரே நினைவுச் சின்னமாக விளங்கும் அந்த சிலையையும் நொண்டிச் சாக்குகள் சொல்லி எடுப்பதால் இந்த அரசுக்குக் கிடைக்கக் கூடிய லாபதான் என்ன? நடிகர்களின் பிதாமகரின் சிலை பற்றி வாய் திறக்காமல் வாய் மூடி மௌனியாக நடிகர் சங்கம் இருப்பதின் பின்னணி என்ன? சரத்குமார், சிவாஜியின் மேல் உயிரையே வைத்திருக்கும் ராதாரவி போன்றோர்கள் அரசியல் பிழைப்புக்காக வாய் திறவாமல் இருக்கிறார்களா? அல்லது பயத்தின் காரணமாகவா? நான் சிவாஜி தோளில் வளர்ந்தேன்... நான்தான் சிவாஜியின் முதல் பிள்ளை ராம்குமார், பிரபு எல்லாம் எனக்குப் பிறகுதான் என்று பேட்டிகளில் முழங்கும் சீனியர் நடிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எல்லாம் பேச்சளவிலும், ஏட்டளவிலும் தானா என்ற கேள்வியும் எழுகிறது.
நிஜமாகவே போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்றால் சிலை எடுப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. போக்குவரத்து இடைஞ்சல்களை மீறி அந்த சிலை இருக்க வேண்டும் என்று வாதிடுவது நியாமும் ஆகாது. இறந்து போனவர்களின் சிலைகளை விட வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது. விலை மதிப்பற்றது. விபத்து என்பது பல வழிகளில் நடை பெறுகிறது. குடிபோதை, கவனமின்மை, போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமை, சரியான ஓட்டும் பயிற்சி இல்லாமை என்று. அத்தகைய காரணங்களால் நடைபெறும் விபத்துகளுக்கு சிலைகள் எப்படி பொறுப்பாக முடியும்? அதுவும் சிவாஜி சிலையால் மட்டுமே சிட்டியில் விபத்து ஏற்படுகிறது என்று சொல்வது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இல்லை?! ஆனால் இதைப் போல பல சிலைகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் தருகின்றனவே! அவைகளை மட்டும் விட்டு வைக்கப் படுவது எந்த வகையில் நியாயம்?
சிவாஜி ரசிகர்கள் பொதுவாகவே வம்புதும்புவிற்குப் போகாதவர்கள். அவர்களுக்கு கல்லெறியத் தெரியாது, கறுப்புக் கொடி பிடிக்கத் தெரியாது. போராட்டங்கள் நடத்தத் தெரியாது. வாகனங்களைக் கொளுத்தத் தெரியாது. அப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை பயந்து போய் சிலைப் பற்றி எதுவும் செய்யாமல் 'கம்'மென்று விட்டிருப்பார்களோ என்னமோ? அவர்களுக்கு எந்த பக்க பலமாக எந்தப் பின்னணியும் கிடையாது. பெரும்பாலும் அவர்கள் அமைதியானாவர்கள்தான். இப்போதும் அவர்கள் கண்ணியம் காக்கிறார்கள். முறையாக சிவாஜி சமூக நலப் பேரவை என்ற அமைப்பு சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறது. சிவாஜி அபிமானிகள் தங்கள் மதிப்பிக்குரியவரின் சிலை என்ன கதிக்கு ஆளாகுமோ என்று கலங்கி நிற்கிறார்கள். அவர்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அது மட்டுமல்ல. சிவாஜி ரசிகர்களின் வேதனைக் குரலை ஒரு புறம் புறந்தள்ளி விட்டாலும் சிவாஜியின் புதல்வர்கள் ராம்குமார், பிரபு இவர்களின் மன நிலைமை எவ்வாறு இருக்கும் என்று சற்று யூகியுங்கள். தங்கள் தந்தையின் சிலைக்கு நேரும் அவமானங்களை அவர்கள் அமைதியாக கண்ணீருடன் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி தோன்ற வாய்ப்பில்லை. அப்படி வன்முறையைத் தூண்டும் பிள்ளைகளும் இல்லை அவர்கள்.
கடந்த ஆட்சியாளர்களால் வைக்கப் பட்ட சிலை... அது எடுக்கப் பட்டே தீர வேண்டும் என்ற பழி சொல்லுக்கு இந்த அரசு ஆளாகி விடக் கூடாது என்பதே நமது விருப்பம். அது முறையான செயலும் அல்ல. இப்போது இன்னொரு கேள்வி மனதில் எழாமல் இல்லை. சிவாஜி சிலை தற்சமயம் இருக்கும் இடத்தில் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதிய பின்னணித் தலைவர்கள் சிலைகள் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது இந்த அரசு அப்படிப்பட்ட தலைவர்களின் சிலையைத் தூக்குமா? அப்படி தூக்கினால் சம்பந்தப்பட்ட அரசியல்கட்சிகள் சும்மா இருக்குமா? போராட்டம் வெடிக்காதோ? ஓட்டுக்களை முன்னிட்டாவது அந்த சிலைகளின் மேல் கை வைக்க மாட்டார்கள். ஆனால் சிவாஜி?.... இளிச்சவாயர் ஆயிற்றே! கேக்க யாருமே இல்லையே! அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் இல்லையே! கேவலம் ஒரு சாதாரண நடிகர் தானே! அவர் சார்பாக என்ன பெரிய ஓட்டு வங்கி இருக்கிறது? அவரால் யாருக்கும் ஒரு ஆதாயமும் இல்லையே? அதனால் சிலையை எடுத்தால் போயிற்று. யார் இருக்கிறார்கள் கேட்க? உண்மையான சிவாஜி விசுவாசிகளைத் தவிர.
மொத்தத்தில் நியாயமான காரணமாக இருப்பின் அந்த சிலை அகற்றப்படலாம். வீம்புக்கு என்றால்?....
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
உண்மையான சிவாஜி ரசிகர்களின் மனநிலையை எடுத்துக் காட்டியுள்ளது, தங்களது கட்டுரை. அரசின் முடிவில மாற்றம் ஏற்படவேண்டுமென்பதே நமது விருப்பம்.
தமிழ்செல்விஞானப்பிரகசம்- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
-
நியாயமான காரணம் கோர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது...
-
சிறந்த நடிகர் என்ற எல்லையைத் தாண்டி
இவர் என்ன சமூக சேவைகள் செய்துள்ளார்..
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நியாயமான காரணம் கோர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது...
-
சிறந்த நடிகர் என்ற எல்லையைத் தாண்டி
இவர் என்ன சமூக சேவைகள் செய்துள்ளார்..
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சமூக உதவிகள்
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சமூக உதவிகள்
அன்புள்ள அய்யாசாமி அய்யா அவர்களே!
தங்களுடைய கேள்வி நியாயமானதே! நடிகர் திலகம் நடிகர் என்ற எல்லையைத் தாண்டி பலதரப்பட்ட ஏராளமான நிதி உதவிகளை அவர் இந்நாட்டிற்கு செய்திருக்கிறார். பல சமூக அமைப்புகளுக்கு நிறைய நிதி உதவிகளும், பொருளுதவிகளும் அளித்துள்ளார். நடிகர் திலகம் எப்போதுமே தான் செய்யும் தர்ம காரியங்களை விளம்பரப்படுத்த விரும்பாதவர் என்பது அவரைப் பற்றி நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் பலருக்கு உதவிகளை அள்ளி அள்ளி வழங்கியவர் அவர். இதை சிவாஜி ரசிகனாகிய என்னை போன்றோர் கூறினால் அவ்வளவாக நன்றாக இருக்காது. தவிரவும் தங்கள் அபிமான நடிகரைப் பற்றி இவர்கள் உயர்த்தித்தான் சொல்வார்கள் என்ற அவநம்பிக்கையும் எங்கள் மேல் பலருக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு. .அதனால் நடிகர் திலகத்தின் மனிதாபிமானத்தைப் பற்றியும், அவர் நாட்டிற்கு செய்த பல்வேறு சமூக உதவிகளைப் பற்றியும் கூறும் பொதுவான ஒரு சிறு பதிவை ஆதாரமாக நான் இங்கு தங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் படித்து தெரிந்து கொள்ள இங்கே இடுகை செய்கிறேன்.
மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளரும், கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய தமிழ்வாணன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற ஒரு சிறப்பான நூலை எழுதி முதல் பதிப்பாக வெளியிட்டார். பொதுவாகவே தமிழ்வாணன் துணிச்சலாக எழுதக் கூடிய நபர் என்று பெயர் எடுத்தவர். யாரையும் விமர்சனம் செய்யத் தயங்காத நபர் இசை மேதை சுப்புடு போல. அவ்வளவு எளிதில் அவர் வாயால் எவரும் பாராட்டுப் பெற்று விட முடியாது. அவர் தான் எழுதிய அந்த நூலில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மையைப் பற்றி இரண்டு பக்கங்கள் எழுதியுள்ளார். அதில் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சிவாஜியின் கொடைத்தன்மையைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற நூலில் இருந்து சில பக்கங்கள்
சிவாஜி அவர்கள் 1960 களிலேயே, நடிக்க வந்த எட்டு வருடங்களிலேயே, கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய்கள் சமூகப் பணிகளுக்காக செலவிட்டுள்ளார் என்று தமிழ்வாணன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போதே 20 லட்ச ரூபாய் (ஏன் இப்போதும் இருபது லட்ச ரூபாய் என்பது பெரும்தொகைதானே!) என்பது நடக்கும் 2013-ஆண்டில் எவ்வளவு மதிப்புள்ள கோடிகளாக இருந்திருக்கும் என்பதை நீங்களே கணக்கில் கொள்ளுங்கள். தமிழ்வாணன் போன்ற ஒரு பொதுவாதியே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் சிவாஜி அவர்களின் கொடைத் தன்மையைப் பற்றி மேலும் அறிய வேண்டுமோ!
இது ஒரு சிறு உதாரணம்தான். நடிகர் திலகம் இந்த நாட்டிற்காக தந்த கொடைகள் ஏராளம். தனக்கு விளம்பரமே தேடிக் கொள்ளாமல் அவர் செய்த நற்பணிகளும், அவர் மன்றங்கள் செய்த நற்பணிகளும் கணக்கிலடங்கா. நடிகராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த தேசியவாதியாகவும் வாழ்ந்தவர் அவர். சுதந்திரப் போராட்ட தியாகி சின்னையா மன்றாயர் அவர்களின் புதல்வர். நல்லதொரு குடும்பத்திற்கு பல்கலைக் கழகமாக உதாரணமாக அவருடைய 'அன்னை இல்ல'த்தைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள்.
லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் நடிகர் திலகம் 100 சவரன் எடையுள்ள தங்கப் பேனாவை வழங்கும் போது
1964-இல் இந்தியா சீன யுத்தத்தின் சமயம் சிவாஜி அவர்கள் லால்பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரியாக இருந்த போது தன் மனைவி கமலா அம்மாள் அவர்களின் நகைகள் அனைத்தையும் (கிட்டத்தட்ட 200 பவுன். இப்போதைய மதிப்புகள்????!!!) யுத்த நிதிக்காக வழங்கியவர். தாலிச்சரடைக் கூட கழற்றி கொடுக்கத் தயாராகி விட்ட நிலையில் 'தாலிச்சரடை எல்லாம் கழற்றக் கூடாது' என்று சாஸ்திரி சிவாஜி, கமலா அம்மாவிடம் மனமுருகி அன்புக் கட்டளை பிறப்பித்தார். அது போல 'ஸ்கூல் மாஸ்டர்' கன்னட, மலையாளப் படங்களில் கௌரவ வேடம் ஏற்று நடித்து நடிகர் திலகம் பெருமைப் படுத்தியதால் தயாரிப்பாளர், இயக்குனர் திரு பி.ஆர்.பந்துலு அவர்கள் பரிசாக தனக்களித்த 100 சவரன் எடையுள்ள தங்கப் பேனாவையும் யுத்த நிதிக்காக சாஸ்திரிகளிடம் வழங்கிய வள்ளல் சிவாஜி அவர்கள்.
ஒருமுறை மகாராஷ்டிரத்தில் உள்ள கொய்னா அணைக்கட்டு உடைந்து விட, அப்போதைய மகாராஷ்டிர முதல் மந்திரி திரு ஒய்,பி. சவான் அனைவரிடமும் உதவி கேட்க சிவாஜி அவர்கள் சற்றும் தாமதியாமல் அப்போதே ரூபாய் 1100000 த்தை சவானுக்கு அனுப்பி வைத்தார் சிவாஜி.
1964- இல் மும்பையில் வீர சிவாஜிக்கு சிலை அமைத்தார் நடிகர் திலகம் சிவாஜி. அது மட்டுமல்ல. மும்பையில் பல இடங்களில் வீர சிவாஜி சிலைகள் நிறுவ பொருளதவி செய்தவர் நடிகர் திலகம்.
1971-இல் வீரபாண்டியக் கட்ட பொம்மனுக்கு கயத்தாறில் சிவாஜி நினைவு மண்டபம் அமைத்தார். கட்ட பொம்மனுக்கு சிலையும் நிறுவினார். பெருந்தலைவர் காமராசருக்கு பல சிலைகளைத் திறந்து வைத்த பெருமைக்கு உரியவர் சிவாஜி.
பல்வேறு நட்சத்திரக் கலை விழாக்களை தன் சொந்தப் பொறுப்பில் இரவென்றும், பகலென்றும் பாராமல் நடத்தி, நாட்டில் பஞ்சம், வெள்ளம் போன்ற பாதகமான சூழ்நிலைகளின் போது கோடி கோடியாய் வசூல் செய்து நாட்டின் நலனுக்காகக் கொடுத்தவர் சிவாஜி.
தேச நலனின் மீது கொண்ட அக்கறையினால் யுத்த களத்தில் சோர்வுற்றிருந்த ராணுவ வீரர்களுக்கு நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கே சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை உற்சாகப் படுத்தியவர் சிவாஜி.
காமராஜர் அவர்கள் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த போது பிரதம மந்திரி நேரு அவர்களிடம் உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை நிதியாக தந்தவர் சிவாஜி.
சென்னை அடையாறில் டாக்டர் சஞ்சீவி அவர்கள் தொடங்கிய இலவச மருத்துவமனைக்கு அஸ்திவாரம் போட அனைத்து உதவிகளையும் செய்தவர் சிவாஜி.
1977-இல் தமிழக முதல்வராக இருந்த எம்ஜியார் அவர்களிடம் ரூபாய் 4 கோடியை கொடி நாள் நிதியாக வசூலித்து வழங்கினார் சிவாஜி.
நான் இங்கு சொன்னதெல்லாம் கடுகளவே. அவர் அள்ளித் தந்த கோடிகளுக்கு கணக்கே இல்லை. ஆனால் அவர் புகழ் விரும்பா புருஷராக இருந்ததால் பல விஷயங்கள் சந்தைக்கு வரவில்லை. அதையும் மீறி அவர் செய்த தான தர்மங்கள் பலவற்றிற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
பத்திரிகை ஆசிரியர் எனது அன்பிற்குரிய சகோதரர் 'பம்மலார்' என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் திரு 'பம்மல்' சுவாமிநாதன் அவர்களிடம் சிவாஜி அவர்கள் செய்த அத்துணை நற்காரியங்களின் விவரங்கள், அவர் அள்ளிக் கொடுத்த கொடைகள், தான தர்மங்கள், சமூக நற்பணிகள் என்று அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல. தஞ்சாவூரைச் சுற்றியுள்ள அவரது கிராமப் பகுதிகளை சார்ந்த பலருக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்தவர் சிவாஜி அவர்கள். குறிப்பாக விதவைகள், விதவைத் தாய்மார்கள் பலருக்கு சிவாஜி அவர்கள் வேலை வாய்ப்பு உதவிகள் செய்து அவர்கள் குடும்பம் வறுமையில்லாது வாழ வழிவகைகள் செய்துள்ளார்.
இது போன்ற பல்வேறு உதவிகளை பல்வேறு கால கட்டங்களில் அமைதியாக சிவாஜி அவர்கள் செய்துள்ளார்.
ஆனால் விளம்பரம் தேடா விந்தை மனிதராக சிவாஜி அவர்கள் இருந்ததனால் அவரின் பல்வேறு சமூக உதவிகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய் விட்டது. அவரது ரசிகர்களாகிய நாங்கள் அவற்றையெல்லாம் வெளிக் கொணர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே சிவாஜி அவர்களின் கொடைத் தன்மையை கண்டிப்பாக ஆதாரங்களுடன் வெளியிடுவோம். வெளியிட்டிருக்கிறோம்.
முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர் திலகத்தின் கொடைத் தன்மையை விளக்கும் ஒரு பதிவை வெளியிடச் செய்தமைக்காக தங்களுக்கு மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் அய்யாசாமி அவர்களே!
நன்றி!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
அன்புள்ள அய்யாசாமி அய்யா அவர்களே!
தங்களுடைய கேள்வி நியாயமானதே! நடிகர் திலகம் நடிகர் என்ற எல்லையைத் தாண்டி பலதரப்பட்ட ஏராளமான நிதி உதவிகளை அவர் இந்நாட்டிற்கு செய்திருக்கிறார். பல சமூக அமைப்புகளுக்கு நிறைய நிதி உதவிகளும், பொருளுதவிகளும் அளித்துள்ளார். நடிகர் திலகம் எப்போதுமே தான் செய்யும் தர்ம காரியங்களை விளம்பரப்படுத்த விரும்பாதவர் என்பது அவரைப் பற்றி நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் பலருக்கு உதவிகளை அள்ளி அள்ளி வழங்கியவர் அவர். இதை சிவாஜி ரசிகனாகிய என்னை போன்றோர் கூறினால் அவ்வளவாக நன்றாக இருக்காது. தவிரவும் தங்கள் அபிமான நடிகரைப் பற்றி இவர்கள் உயர்த்தித்தான் சொல்வார்கள் என்ற அவநம்பிக்கையும் எங்கள் மேல் பலருக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு. .அதனால் நடிகர் திலகத்தின் மனிதாபிமானத்தைப் பற்றியும், அவர் நாட்டிற்கு செய்த பல்வேறு சமூக உதவிகளைப் பற்றியும் கூறும் பொதுவான ஒரு சிறு பதிவை ஆதாரமாக நான் இங்கு தங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் படித்து தெரிந்து கொள்ள இங்கே இடுகை செய்கிறேன்.
மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளரும், கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய தமிழ்வாணன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற ஒரு சிறப்பான நூலை எழுதி முதல் பதிப்பாக வெளியிட்டார். பொதுவாகவே தமிழ்வாணன் துணிச்சலாக எழுதக் கூடிய நபர் என்று பெயர் எடுத்தவர். யாரையும் விமர்சனம் செய்யத் தயங்காத நபர் இசை மேதை சுப்புடு போல. அவ்வளவு எளிதில் அவர் வாயால் எவரும் பாராட்டுப் பெற்று விட முடியாது. அவர் தான் எழுதிய அந்த நூலில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மையைப் பற்றி இரண்டு பக்கங்கள் எழுதியுள்ளார். அதில் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சிவாஜியின் கொடைத்தன்மையைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற நூலில் இருந்து சில பக்கங்கள்
சிவாஜி அவர்கள் 1960 களிலேயே, நடிக்க வந்த எட்டு வருடங்களிலேயே, கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய்கள் சமூகப் பணிகளுக்காக செலவிட்டுள்ளார் என்று தமிழ்வாணன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போதே 20 லட்ச ரூபாய் (ஏன் இப்போதும் இருபது லட்ச ரூபாய் என்பது பெரும்தொகைதானே!) என்பது நடக்கும் 2013-ஆண்டில் எவ்வளவு மதிப்புள்ள கோடிகளாக இருந்திருக்கும் என்பதை நீங்களே கணக்கில் கொள்ளுங்கள். தமிழ்வாணன் போன்ற ஒரு பொதுவாதியே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் சிவாஜி அவர்களின் கொடைத் தன்மையைப் பற்றி மேலும் அறிய வேண்டுமோ!
இது ஒரு சிறு உதாரணம்தான். நடிகர் திலகம் இந்த நாட்டிற்காக தந்த கொடைகள் ஏராளம். தனக்கு விளம்பரமே தேடிக் கொள்ளாமல் அவர் செய்த நற்பணிகளும், அவர் மன்றங்கள் செய்த நற்பணிகளும் கணக்கிலடங்கா. நடிகராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த தேசியவாதியாகவும் வாழ்ந்தவர் அவர். சுதந்திரப் போராட்ட தியாகி சின்னையா மன்றாயர் அவர்களின் புதல்வர். நல்லதொரு குடும்பத்திற்கு பல்கலைக் கழகமாக உதாரணமாக அவருடைய 'அன்னை இல்ல'த்தைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள்.
லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் நடிகர் திலகம் 100 சவரன் எடையுள்ள தங்கப் பேனாவை வழங்கும் போது
1964-இல் இந்தியா சீன யுத்தத்தின் சமயம் சிவாஜி அவர்கள் லால்பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரியாக இருந்த போது தன் மனைவி கமலா அம்மாள் அவர்களின் நகைகள் அனைத்தையும் (கிட்டத்தட்ட 200 பவுன். இப்போதைய மதிப்புகள்????!!!) யுத்த நிதிக்காக வழங்கியவர். தாலிச்சரடைக் கூட கழற்றி கொடுக்கத் தயாராகி விட்ட நிலையில் 'தாலிச்சரடை எல்லாம் கழற்றக் கூடாது' என்று சாஸ்திரி சிவாஜி, கமலா அம்மாவிடம் மனமுருகி அன்புக் கட்டளை பிறப்பித்தார். அது போல 'ஸ்கூல் மாஸ்டர்' கன்னட, மலையாளப் படங்களில் கௌரவ வேடம் ஏற்று நடித்து நடிகர் திலகம் பெருமைப் படுத்தியதால் தயாரிப்பாளர், இயக்குனர் திரு பி.ஆர்.பந்துலு அவர்கள் பரிசாக தனக்களித்த 100 சவரன் எடையுள்ள தங்கப் பேனாவையும் யுத்த நிதிக்காக சாஸ்திரிகளிடம் வழங்கிய வள்ளல் சிவாஜி அவர்கள்.
ஒருமுறை மகாராஷ்டிரத்தில் உள்ள கொய்னா அணைக்கட்டு உடைந்து விட, அப்போதைய மகாராஷ்டிர முதல் மந்திரி திரு ஒய்,பி. சவான் அனைவரிடமும் உதவி கேட்க சிவாஜி அவர்கள் சற்றும் தாமதியாமல் அப்போதே ரூபாய் 1100000 த்தை சவானுக்கு அனுப்பி வைத்தார் சிவாஜி.
1964- இல் மும்பையில் வீர சிவாஜிக்கு சிலை அமைத்தார் நடிகர் திலகம் சிவாஜி. அது மட்டுமல்ல. மும்பையில் பல இடங்களில் வீர சிவாஜி சிலைகள் நிறுவ பொருளதவி செய்தவர் நடிகர் திலகம்.
1971-இல் வீரபாண்டியக் கட்ட பொம்மனுக்கு கயத்தாறில் சிவாஜி நினைவு மண்டபம் அமைத்தார். கட்ட பொம்மனுக்கு சிலையும் நிறுவினார். பெருந்தலைவர் காமராசருக்கு பல சிலைகளைத் திறந்து வைத்த பெருமைக்கு உரியவர் சிவாஜி.
பல்வேறு நட்சத்திரக் கலை விழாக்களை தன் சொந்தப் பொறுப்பில் இரவென்றும், பகலென்றும் பாராமல் நடத்தி, நாட்டில் பஞ்சம், வெள்ளம் போன்ற பாதகமான சூழ்நிலைகளின் போது கோடி கோடியாய் வசூல் செய்து நாட்டின் நலனுக்காகக் கொடுத்தவர் சிவாஜி.
தேச நலனின் மீது கொண்ட அக்கறையினால் யுத்த களத்தில் சோர்வுற்றிருந்த ராணுவ வீரர்களுக்கு நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கே சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை உற்சாகப் படுத்தியவர் சிவாஜி.
காமராஜர் அவர்கள் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த போது பிரதம மந்திரி நேரு அவர்களிடம் உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை நிதியாக தந்தவர் சிவாஜி.
சென்னை அடையாறில் டாக்டர் சஞ்சீவி அவர்கள் தொடங்கிய இலவச மருத்துவமனைக்கு அஸ்திவாரம் போட அனைத்து உதவிகளையும் செய்தவர் சிவாஜி.
1977-இல் தமிழக முதல்வராக இருந்த எம்ஜியார் அவர்களிடம் ரூபாய் 4 கோடியை கொடி நாள் நிதியாக வசூலித்து வழங்கினார் சிவாஜி.
நான் இங்கு சொன்னதெல்லாம் கடுகளவே. அவர் அள்ளித் தந்த கோடிகளுக்கு கணக்கே இல்லை. ஆனால் அவர் புகழ் விரும்பா புருஷராக இருந்ததால் பல விஷயங்கள் சந்தைக்கு வரவில்லை. அதையும் மீறி அவர் செய்த தான தர்மங்கள் பலவற்றிற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
பத்திரிகை ஆசிரியர் எனது அன்பிற்குரிய சகோதரர் 'பம்மலார்' என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் திரு 'பம்மல்' சுவாமிநாதன் அவர்களிடம் சிவாஜி அவர்கள் செய்த அத்துணை நற்காரியங்களின் விவரங்கள், அவர் அள்ளிக் கொடுத்த கொடைகள், தான தர்மங்கள், சமூக நற்பணிகள் என்று அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல. தஞ்சாவூரைச் சுற்றியுள்ள அவரது கிராமப் பகுதிகளை சார்ந்த பலருக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்தவர் சிவாஜி அவர்கள். குறிப்பாக விதவைகள், விதவைத் தாய்மார்கள் பலருக்கு சிவாஜி அவர்கள் வேலை வாய்ப்பு உதவிகள் செய்து அவர்கள் குடும்பம் வறுமையில்லாது வாழ வழிவகைகள் செய்துள்ளார்.
இது போன்ற பல்வேறு உதவிகளை பல்வேறு கால கட்டங்களில் அமைதியாக சிவாஜி அவர்கள் செய்துள்ளார்.
ஆனால் விளம்பரம் தேடா விந்தை மனிதராக சிவாஜி அவர்கள் இருந்ததனால் அவரின் பல்வேறு சமூக உதவிகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய் விட்டது. அவரது ரசிகர்களாகிய நாங்கள் அவற்றையெல்லாம் வெளிக் கொணர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே சிவாஜி அவர்களின் கொடைத் தன்மையை கண்டிப்பாக ஆதாரங்களுடன் வெளியிடுவோம். வெளியிட்டிருக்கிறோம்.
முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர் திலகத்தின் கொடைத் தன்மையை விளக்கும் ஒரு பதிவை வெளியிடச் செய்தமைக்காக தங்களுக்கு மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் அய்யாசாமி அவர்களே!
நன்றி!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
வாசு சார்
நடிகர் திலகத்தின் சிலை பற்றியும், அவருடைய கொடைத்தன்மை பற்றியும் தங்கள் பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. இது வரை அறிந்திராத தகவல்களாக பலருக்கு இது தெரிய வரும். தங்களுக்கு என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். நடிகர் திலகத்தின் திருவுருவச்சிலையின் அமைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களில் அனைத்து அம்சங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
நடிகர் திலகத்தின் சிலை பற்றியும், அவருடைய கொடைத்தன்மை பற்றியும் தங்கள் பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. இது வரை அறிந்திராத தகவல்களாக பலருக்கு இது தெரிய வரும். தங்களுக்கு என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். நடிகர் திலகத்தின் திருவுருவச்சிலையின் அமைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களில் அனைத்து அம்சங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
மிக்க நன்றி வீயார் அவர்களே.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
வாசு சார் மற்றும் நண்பர்களுக்கு,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை பற்றி வழக்கு நடந்து கொண்டிருப்பதால், உணர்ச்சி வசப்பட்டு காரியத்தைக் கெடுத்து விடாமல், சட்ட பூர்வமாக அதனை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்னால் முடிந்த பங்களிப்பினை அதில் தந்து வருகிறேன். நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தங்களைப் போன்ற உண்மையான ரசிகர்களின் ஆதரவும் வாழ்த்தும் இருக்கும் போது நிச்சயம் நாம் வெற்றி கொள்வோம்.
நன்றி
ராகவேந்திரன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை பற்றி வழக்கு நடந்து கொண்டிருப்பதால், உணர்ச்சி வசப்பட்டு காரியத்தைக் கெடுத்து விடாமல், சட்ட பூர்வமாக அதனை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்னால் முடிந்த பங்களிப்பினை அதில் தந்து வருகிறேன். நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தங்களைப் போன்ற உண்மையான ரசிகர்களின் ஆதரவும் வாழ்த்தும் இருக்கும் போது நிச்சயம் நாம் வெற்றி கொள்வோம்.
நன்றி
ராகவேந்திரன்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
அறியாத பல செய்திகளை வழங்கியுள்ளீர்கள் மிக்க நன்றி ஐயாvasudevan31355 wrote:நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சமூக உதவிகள்
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
மிக்க நன்றி ராகவேந்திரன் சார் மற்றும் ராஜா சார்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
திரு வாசு அவர்கள்,
திரு அய்யாசாமி அவர்களின் கேள்விகளுக்கு உரிய முறையில் விளக்கம் அளித்தீர்கள். சமூகத்திற்கு மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் அவர்கள் உண்மையிலயே பல நல்ல காரியங்கள் செய்துள்ளதை அவர் அறிந்திருக்க மாட்டார்.
விளம்பரம் செய்து கடையேழு வள்ளல்களுக்கு பிறகு எட்டாவது வள்ளல் என்று வேண்டுமானால் புகழ் பாட வைக்கலாம். ஆனால் உண்மையான வள்ளல்தன்மை செய்யும் நல்ல காரியங்களை விளம்பரப்படுத்த எவன் ஒருவன் விரும்பமாடானோ அவனே வள்ளல். தமிழகத்தின் உண்மையான நடிக வள்ளல் சிவாஜி ஒருவர் தான்.
மேலும் அவர் சிலையை அகற்ற அரசு தரப்பில் கூறும் காரணம் " அந்த இடத்தில் 10 விபத்துக்கள் நடந்துள்ளன என்று. கிட்டத்தட்ட சுமார் 45,000 மேல் ஒரு நாளில் வாகனங்கள் அந்த சாலையில் பயணிக்கின்றன.
அப்படி உண்மையிலயே சிலை ஒரு தடை என்றால் ஒரு வருடத்தில் சுமார் குறைந்தது 250 முதல் 500 விபத்துக்கள் அல்லவா நடந்திருக்கவேண்டும்? அரசு தரப்பில் கூறும் இந்த காரணத்தை மேலும் ஆராய்ந்தால் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடைபெறுவதை கூறுகிறார். இரவு 11 மணிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் வேகம் ஓட்டுபவர் கூட சாலை காலியாக இருக்கும் patchathil 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுவதை நாம் பார்க்கிறோம். இது ஓட்டுபவர் தவறே தவிர சிலை தவறு கிடையாது.
TRAFFIC POLICE முக்கால் வாசி நேரம் வசூலில்தான் மும்மரமாக ஈடுபடுகிறார்களே தவிர போக்குவரத்தை சீர் செய்ய அல்ல என்பதை நாம் கண்கூடாக பல இடங்களில் பார்க்கிறோம்.
சிலையால் விபத்து என்றால் போக்குவரத்து முதலில் எடுக்கவேண்டிய சிலை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா சிலை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் எழும்பூரில் உள்ள தீரன் முத்துகொனே சிலைகளாகும். மேற்கூறிய சிலைகளால்தான் மக்களுக்கு என்றுமே உண்மையான தொல்லை. அதை விடுத்து சிவனே என்றிருக்கும் சிவாஜி சிலையால் விபத்து என்பது எள்ளி நகயாடவேண்டிய ஒரு விஷயமாகும்.
மனுதாரர் உண்மையிலயே சமுதாய அக்கறை கொண்டிருப்பவறேன்றால் மேற்கூறிய எல்லா சிலைகளை பற்றி அல்லவா வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும் ? அல்லது தெருவுக்கு தெரு உள்ள TASMAC கடைகள் பற்றி வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும் அல்லது சென்னை நகரில் உள்ள முக்கால் வாசி சாலைகள் கேவலமாக உள்ளதால் விபத்துக்கள் நிகழ்வது பற்றி PWD மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும்.
அல்லது ஆட்சியில் அமர்ந்தது முதல் மக்களுக்கு மின்சார கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின்சார டெபொசிட் தொகை அதிகரிப்பு, காய் கனிகள் விலைகள் உயர்வு, அரிசி விலை உயர்வு இப்படி அதியவச்ய பொருள் அனைத்தும் விலை உயர்வதற்கு காரணமாக விளங்கும் இந்த ADMK அரசின் பொதுமக்கள் அணுகுமுறை குறித்தல்லவா பொதுநல வழக்கு தொடரபட்டிருக்கவேண்டும்? அதை விடுத்து சிவாஜி சிலை மீது தொடர்ந்திருப்பது தமிழகத்தின் உண்மை தமிழனாம் சிவாஜி அவர்கள் மீது மனுதாரர் கொண்டுள்ள வயிற்றெரிச்சலையும், காழ்புனர்ச்சியையும் காட்டுகிறது ! மனுதாரர் சார்பில் வாதாடும் வக்கீல் இப்படி ஒரு இழிவான மானங்கெட்ட தமிழின எதிரியாக இருக்கிறார் இவர் பெயர் காந்தி வேறு !!
திரு அய்யாசாமி அவர்களின் கேள்விகளுக்கு உரிய முறையில் விளக்கம் அளித்தீர்கள். சமூகத்திற்கு மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் அவர்கள் உண்மையிலயே பல நல்ல காரியங்கள் செய்துள்ளதை அவர் அறிந்திருக்க மாட்டார்.
விளம்பரம் செய்து கடையேழு வள்ளல்களுக்கு பிறகு எட்டாவது வள்ளல் என்று வேண்டுமானால் புகழ் பாட வைக்கலாம். ஆனால் உண்மையான வள்ளல்தன்மை செய்யும் நல்ல காரியங்களை விளம்பரப்படுத்த எவன் ஒருவன் விரும்பமாடானோ அவனே வள்ளல். தமிழகத்தின் உண்மையான நடிக வள்ளல் சிவாஜி ஒருவர் தான்.
மேலும் அவர் சிலையை அகற்ற அரசு தரப்பில் கூறும் காரணம் " அந்த இடத்தில் 10 விபத்துக்கள் நடந்துள்ளன என்று. கிட்டத்தட்ட சுமார் 45,000 மேல் ஒரு நாளில் வாகனங்கள் அந்த சாலையில் பயணிக்கின்றன.
அப்படி உண்மையிலயே சிலை ஒரு தடை என்றால் ஒரு வருடத்தில் சுமார் குறைந்தது 250 முதல் 500 விபத்துக்கள் அல்லவா நடந்திருக்கவேண்டும்? அரசு தரப்பில் கூறும் இந்த காரணத்தை மேலும் ஆராய்ந்தால் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடைபெறுவதை கூறுகிறார். இரவு 11 மணிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் வேகம் ஓட்டுபவர் கூட சாலை காலியாக இருக்கும் patchathil 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுவதை நாம் பார்க்கிறோம். இது ஓட்டுபவர் தவறே தவிர சிலை தவறு கிடையாது.
TRAFFIC POLICE முக்கால் வாசி நேரம் வசூலில்தான் மும்மரமாக ஈடுபடுகிறார்களே தவிர போக்குவரத்தை சீர் செய்ய அல்ல என்பதை நாம் கண்கூடாக பல இடங்களில் பார்க்கிறோம்.
சிலையால் விபத்து என்றால் போக்குவரத்து முதலில் எடுக்கவேண்டிய சிலை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா சிலை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் எழும்பூரில் உள்ள தீரன் முத்துகொனே சிலைகளாகும். மேற்கூறிய சிலைகளால்தான் மக்களுக்கு என்றுமே உண்மையான தொல்லை. அதை விடுத்து சிவனே என்றிருக்கும் சிவாஜி சிலையால் விபத்து என்பது எள்ளி நகயாடவேண்டிய ஒரு விஷயமாகும்.
மனுதாரர் உண்மையிலயே சமுதாய அக்கறை கொண்டிருப்பவறேன்றால் மேற்கூறிய எல்லா சிலைகளை பற்றி அல்லவா வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும் ? அல்லது தெருவுக்கு தெரு உள்ள TASMAC கடைகள் பற்றி வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும் அல்லது சென்னை நகரில் உள்ள முக்கால் வாசி சாலைகள் கேவலமாக உள்ளதால் விபத்துக்கள் நிகழ்வது பற்றி PWD மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும்.
அல்லது ஆட்சியில் அமர்ந்தது முதல் மக்களுக்கு மின்சார கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின்சார டெபொசிட் தொகை அதிகரிப்பு, காய் கனிகள் விலைகள் உயர்வு, அரிசி விலை உயர்வு இப்படி அதியவச்ய பொருள் அனைத்தும் விலை உயர்வதற்கு காரணமாக விளங்கும் இந்த ADMK அரசின் பொதுமக்கள் அணுகுமுறை குறித்தல்லவா பொதுநல வழக்கு தொடரபட்டிருக்கவேண்டும்? அதை விடுத்து சிவாஜி சிலை மீது தொடர்ந்திருப்பது தமிழகத்தின் உண்மை தமிழனாம் சிவாஜி அவர்கள் மீது மனுதாரர் கொண்டுள்ள வயிற்றெரிச்சலையும், காழ்புனர்ச்சியையும் காட்டுகிறது ! மனுதாரர் சார்பில் வாதாடும் வக்கீல் இப்படி ஒரு இழிவான மானங்கெட்ட தமிழின எதிரியாக இருக்கிறார் இவர் பெயர் காந்தி வேறு !!
Barrister Rajinikanth- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அணு உலை குறித்து எதிர்ப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்: அதிகாரிகள் அதிர்ச்சி
» இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
» இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|