ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:49 pm

ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டும் 44-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவ., 20ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவ., 30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என 100க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படகாரர்கள், டி.வி., கேமரா மேன்கள் கோவாவை முற்றுகையிட்டு திரைப்பட விழா குறித்த செய்திகளை எழுதவும், ஒலி, ஒளிபரப்பவும் செய்து வருகின்றனர்.

நான் இயக்குநர்களின் கதாநாயகி... கோவா பட விழாவில் பத்மப்ரியா பேட்டி!!

கோவாவில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வானது. இதற்காக இப்படத்தில் நடித்த ராம், ஷெல்லி, பத்மப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பத்மப்ரியா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* கொஞ்ச நாளாக தமிழ் சினிமாவில் உங்களை காணோமே...?

தவமாய் தவமிருந்து, பட்டியல், மிருகம், சத்தம் போடாதே, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பொக்கிஷம் போன்ற பல படங்கள் மூலம் மக்களிடையேயும், மீடியாவிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளேன். உலகில் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகம் என்று கருதப்படும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் ஒன்றரை ஆண்டு தங்கி முதுகலைப்பட்டம் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன். நல்ல பயனுள்ள அனுபவம். அதுதான் இந்த இடைவெளி என்கிறார்.

* தமிழ் திரை உலகினரோடு தொடர்பில் இருக்கிறீர்களா...?

நான் நடித்த எல்லா படங்களின் இயக்குனர்களோடும், சக நடிகர், நடிகைகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.

* இந்த கோவா திரைப்பட விழாவில் நல்ல படங்களை பார்த்தீங்களா...?

பொதுவாக சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பான படங்களையே பார்ப்பது என் வழக்கம். ஆனால் இந்த வருடம் மிகவும் நல்ல சில படங்களை இந்தியன் பனோரமாவில் பார்த்தேன். நாகராஜ் மஞ்சுளே டைரக்ட் செய்திருக்கும் பாண்டரி இந்த திரைப்பட விழாவின் பாப்புலர் படம். ஜாதி வித்தியாசம் பிரச்னை பற்றிய கமலேஷ்வர் முகர்ஜி இயக்கியுள்ள மேகே தாஜா தாரா வங்காள மொழிப்படம். பிரபல வங்காள இயக்குனர் ரித்விக் கடக்கின் வாழ்க்கை பற்றிய படம். கெளசிக் கங்குலி இயக்கியுள்ள அபுர் பாஞ்சாலி வங்காள படம். அடுத்து அருமையான ஒரு கனடா நாட்டுபடம். ஆங்கிலத்தில் சாமுவேல் பெக்கெட் என்ற புகழ்பெற்ற ஆங்கில கவிஞன் பற்றி படம். இன் சர்ச் ஆப் எ புயட் சாமுவேல் பக்கெட் எழுதியுள்ள நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் கவிதைகள் எனக்கு பிடிக்கும். இன்னும் ஒரு சில படங்களை பார்த்துவிட ஆசை தான்.

* எந்த மாதிரி பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்...?

நான், டைரக்டர்களின் நடிகை. நான் பணிபுரியும் எந்த டைரக்டருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவள். மாடர்ன் பெண், கிராமத்து பெண், இளவரசியோ, ஏழையோ என எந்த மாதிரி கதாபாத்திரம் எனக்கு கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே சிறப்பாக செய்து டைரக்டரிடமும், ஆடியன்சிடமும் நல்ல பெயர் வாங்க முடியும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

* இப்போது ஏதாவது தமிழ்ப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறீர்களா...?

உண்மையாக எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. கைவசம் தமிழ்ப்படம் இல்லை. இந்த ரோலை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர்கள் நினைக்கும்போது நிச்சயம் என்னை கூப்பிடுவார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் எனது கேரக்டர் எனக்கு பிடித்தாள் நடிக்க ஒப்புக்கொள்ளுவேன்.

* மாறுபட்ட கதை அம்சம் உள்ள பல தமிழ்படங்கள் இப்போது வெற்றி பெறுகின்றன. மக்கள் விரும்பி பார்க்கிறார்கள், அந்த மாதிரி படங்களை பார்த்திருக்கிறீர்களா...?

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற இன்னும் சில படங்களை ரசித்து பார்த்தேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:50 pm

தங்கமீன்கள் தேர்வானது மகிழ்ச்சியளிக்கவில்லை - கோவா விழாவில் ராம் பேச்சு!!

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ஒரே ஒரு தமிழ்ப்படமாக தங்கமீன்கள் தேர்வானது. விழாவில் இப்படம் ஐ நாக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், நடிகைகள் பத்மப்ரியா, ஷெல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவா திரைப்பட விழா சார்பில் பூச்செண்டும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. அரங்கு நிறைந்த காட்சியாக தங்கமீன்கள் இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என்று பல மொழிகளை சேர்ந்த பெண்களும், தாய்மார்களும் சிறந்த படத்தை கொடுத்ததற்காகவும், அப்பா ரோலில் தத்ரூபமாக நடித்ததற்காகவும் ராமை பாராட்டி புகைப்படமும் எடுத்து கொண்டனர். பல ஆண்கள் அவரை ஆர தழுவி தங்கள் பாராட்டை தெரிவித்தனர். விழாவில் ராம், தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* உங்கள் பின்னணி பற்றி...?

ஒருத்தருக்கு ஒரு சொந்த ஊர் தான் இருக்கும். ஆனால் என் தந்தை கோயம்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை என்று ஐந்து இடங்களுக்கு டிரான்ஸர் கிடைத்ததால் எனக்கு ஐந்து சொந்த ஊர்களாகிவிட்டது. பல பள்ளிகளில் படித்து பிறகு, சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. முடித்து விட்டு, இந்தி இயக்குனர் ராஜ்குமார் சந்தேயிடம் லஜ்ஜா படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். மேதும் என்ற படத்தை நான் டைரக்ட் செய்ய திட்டமிட்டபோது, ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா, 2005ம் ஆண்டு அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சம்மதித்தார். என் துரதிர்ஷ்டம் அந்த படத்தை ஆரம்பிக்க முடியவில்லை. திரைப்படங்கள் பற்றிய அரிய முக்கியமான பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

2007ம் ஆண்டு கற்றது தமிழ் எனது முதல் படமாக உருவானது. வியாபார ரீதியாக நல்ல வெற்றி கிடைத்தது. கோபக்கார இளைஞன் பற்றிய அந்தப்படம் முற்றிலும் வித்தியாசமாக வந்தது. அடுத்தப்படியாக தந்தை - மகள் பாசத்தை மையமாக வைத்து தங்கமீன்கள் எனும் படத்தை புதுமையான முயற்சியாக ஆரம்பித்தேன். தயாரிப்பாளருக்கு பண பிரச்னை காரணமாக படம் நான்கு வருடங்கள் தாமதமானது. இப்போது உங்கள் முன்னால் வெளியாகியுள்ளது.

* இயக்குநரான நீங்கள் எப்படி இந்தபடத்தின் ஹீரோவானீர்கள்...?

முதலில் கருணாஸ் தான் நடிப்பதாக இருந்தது. அதிலும் வியாபார ரீதியாக பிரச்னை. இயக்குனர் கெளதம் மேனன், தந்தை ரோலுக்கு நீயே பொருத்தமாக இருக்கிறாய், நீ ஹீரோவாக நடித்தால் இந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று உற்சாகப்படுத்தினார். இயக்குநர் கெளதம் மேனனால் தான், நான் நடிகராகவேன்.

* இந்தபடத்தின் கதை எப்படி உருவானது?

எனது பாசத்திற்கு உரிய மகள் ஸ்ரீ சங்கர மோமதிக்கும், எனக்கும் உள்ள பாசப்பிணைப்பு தான் இந்த படம் உருவாக காரணமாக இருந்தது. அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது அவள், கோயம்பத்தூரில் பள்ளியில் படிக்கிறாள். அவளுக்கு தங்க மீன்கள் படம் நன்றாக வந்து ரசிகர்களிடமும் மீடியாவிடமும் பாராட்டு பெற்றது பற்றி மிகவும் மகிழ்ச்சி.

* கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் இடம் பெறும் ஒரே தமிழ்ப்படம் உங்களது தங்க மீன்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியானது தானே?

எனக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மனதிருப்தி ஏற்பட்டாலும் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியில்லை.. எவ்வளவோ நல்ல படங்களில் தமிழ் சினிமாவில் வந்து இருக்கின்றன. அவற்றில குறைந்தது நான்கு படங்களாவது தேர்வாகி இருக்க வேண்டும், அப்போது தான் அது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இனி வரும் காலங்களில் இந்த குறை தீர்க்கப்பட வேண்டும்.

* உங்கள் மகளாக நடித்த சிறுமியை எப்படி தேர்வு செய்தீர்கள்...?

60 குழந்தைகளுக்கு மேல் வரவழைத்து, பேச வைத்து, நடிக்க வைத்து டெஸ்ட் வைத்தோம். தமிழை தாய் மொழியாக கொண்ட குழந்தைகளை மட்டும் தான் டெஸ்ட் எடுத்தோம். சாதனா என்ற சிறுமி சிறப்பாக பொருத்தமாக இருந்தால் அவளையே தேர்வு பண்ணினோம். சாதனாவிற்கு டான்ஸ், மியூசிக் எல்லாம் நன்றாக வரும். திறமைகளுடன் கூடிய எல்லாம் அம்சங்களும் சாதனாவிற்கு இருந்தது. 52 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது, எல்லாம் நாளும் சலிக்காமல், சொல்வதை புரிந்து கொண்டு அப்படியே நடித்தாள். சாதனா தற்போது துபாயில் இருக்கிறாள். அவளின் தாய்-தந்தை இருவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இருவரும் கூட இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தாய் லெட்சுமி ஸ்கூல் டீச்சராகவும், தந்தை வெங்கடேஷ் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பொருத்தமாக நடித்திருந்தார்கள்.

* அருமையான லொகேஷனில் படமெடுத்திருக்கிறீர்கள் எப்படி லொகேஷன் செலக்ட் பண்ணினீர்கள்...?

மலைபக்கத்தில் ரயில் போக வேண்டும், ரயில் பாதைக்கு அருகே ஏரி இருக்க வேண்டும், ஏரிக்கு அருகே ரோடு, ரோடு அருகே வீடு, இந்த மாதிரி லொகேஷனை நானும், என் உதவியாளர்களும் ஒரு மாதம் தேடி அலைந்தோம். பிறகுதான் நாகர்கோவில் அருகே வீராணி ஆளூர் என்ற இடத்தை தேர்வு செய்தோம். ஆனந்த யாழை மீட்டுகிறாள்... பாடலை அச்சன் கோவில், வயநாடு போன்ற இடங்களில் எடுத்தோம்.

* படப்பிடிப்பின் போது ஏதாவது ரிஸ்கான காட்சிகள் இருந்ததா...?

வயநாட்டில் ஐந்து மணி நேரம் மலை மீது ஏறிய பிறகு தான் லொகேஷனுக்கு போக முடியும். 20 உதவியாளர்களுடன், ஐந்து நாட்கள் கூடாரங்கள் எல்லாம் அமைத்து, அங்கேயே தங்கி படமாக்கினோம். பாறை வழுக்கி மீண்டும் ஏறி வரும் காட்சி படமாக்கும்போது எனக்கு கால் தவறி கீழே விழ பார்த்தேன். ஆனால் சுதாரித்து கொண்டேன். அந்த இடத்தில் எனக்கு கீழே ஆயிரம் அடி பள்ளம் இருந்தது. படத்தில் டி.வி. விளம்பரத்தில் வரும் நாயை தேடும் முயற்சியில் அந்த காட்சி வரும்.

* படத்திற்கு நீங்கள் பெற்ற வரவேற்பு...?

வியாபார ரீதியாக திருப்திகரமாக இருக்கிறது. கோவா திரைப்பட விழா தவிர சென்னை, பெங்களூரு திரைப்பட விழாக்களில் போட்டி பிரிவுகளில் தங்கமீன்கள் படத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். கோவா திரைப்பட விழாவில் படம் முடிந்ததும் அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தது, என்னை நெகிழ வைத்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 40 பள்ளிகளில் குழந்தைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் இந்தப்படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டிருக்கிறது.. ஆசிரியர்களின் அணுகுமுறை குறித்தும் இந்தப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா ஐதராபாத்தில் நடக்கிறது. குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் திரையிடப்படும் ஒரே இந்திய திரைப்படம் தங்க மீன்கள் தான் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

* உங்கள் அடுத்த படம் பற்றி...?

எனது அடுத்த படத்தின் பெயர் தரமணி. நகர வாழ்க்கையையும், அதன் உறவுகளையும் பற்றியும் ஒரு கதையை உருவாக்கி வருகிறேன். தங்கமீன்கள் படத்திலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட படம். வசந்த் ரவி என்ற புதுமுகமும், ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்கள். வசந்த் ரவி, லண்டன் பிலிம் பள்ளியிலும், மும்பையில் பிரபல இந்தி நடிகர் அனுபம்கேர் நடத்தும் நடிப்பு பள்ளியிலும் பயிற்சி பெற்றவர்.

இவ்வாறு ராம் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:51 pm

ஏ டச் ஆப் ஸின் A Touch of Sin - விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்

 இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயது ஆண், ஒரு இளம் பெண், இவர்களுக்கு சீனாவில் பல மாநிலங்களில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் இந்த படம். சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றம், அந்த நால்வரை வன்முறையின் எல்லைக்கு எடுத்து சென்றிருப்பது தான் கசப்பான உண்மை. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம், சீனாவில் எங்கோ இருக்கும் சிறு கிராமம் வரை பரவி கிடக்கிறது.

படம் ஆரம்பிக்கும்போது தேசிய நெஞ்சாலையில் தனியாக மோட்டார் பைக்கில் வருபவரை (நடுத்தரவயது ஆண்), மூன்று இளைஞர்கள் கையில் ஆயுதங்களுடன் பணத்திற்காக வழிப்பறி செய்கிறார்கள். மூவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மோட்டார் பைக்கில் சென்று விடுகிறான். காவல்துறை மூன்று கொலை செய்தவரை தேடுகிறது.

கிராமத்து பஞ்சாயத்து தலைவர் அவரது உதவியாளர், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் நிறைய ஊழல்கள் செய்து பணம் சம்பாதிக்கிறார்(கிராமங்களில் ஹைடெக் கட்டிடங்கள், ஹை டெக் ஆபிஸ்) அவர்களிடம் இது பற்றி கேட்டும் பயனில்லை. ஊழலை பொறுத்து கொள்ள முடியாதவர், கிராமத் தலைவர் அவரது மனைவி, உதவியாளர் மூவரையும் எந்த தயக்கமும் இன்றி, சுட்டு கொன்று விட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விடுகிறார்.

தனது தாயின் 70வது பிறந்தநாளுக்கு எங்கிருந்தோ அந்த மலைப்பிரதேச கிராமத்திற்கு ஒரு இளைஞன் வருகிறார். வீட்டிற்கு, மனைவிக்கு ரெகுலராக பணம் அனுப்பினாலும், தான் எங்கே, எந்த வேலை செய்கிறேன் என்று சொல்லுவதில்லை. மனைவி எவ்வளவோ கேட்டும் தன் இருப்பிடம் தெரியக்கூடாது என்பதற்காக அவளுக்கு செல்போன் வாங்கி தர மறுக்கிறான். தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு பெரிய நகரத்திற்கு செல்கிறான். ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் நிறைய பணம் எடுக்கும் கணவன்-மனைவியை நேருக்கு நேர் சுட்டுக் கொன்றுவிட்டு பணப்பையை எடுத்துக் கொண்டு, உடைகளை களைந்துவிட்து வேறு ஒரு தோற்றத்தில் எதுவுமே நடக்காதது மாதிரி நடந்து சென்று விடுகிறான்.

மூன்றாவதாக அழகிய இளம்பெண். சில வருடங்களாக தான் காதலிக்கும் நண்பரை, முதல் மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்பாள். நண்பரோ, பார்க்கலாம் என்பது போல சொல்லிவிடுகிறார். அந்த இளம் பெண் வேலை செய்யும் பியூட்டி பார்லர் இடத்தை அறிந்து கொள்ளும் மனைவி, இரு ஆண்களுடன் சென்று இவளை நன்றாக அடித்து காயப்படுத்துகிறார். இனி இங்கே இருக்க வேண்டாம் என்று வேறு நகரத்திற்கு செல்கிறாள். ஆனால் அங்கும் பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. சுங்கசாவடி நிர்வாகி, முதலாளி இருவரும், இந்த பெண் வேலை செய்யும் மஸாஜ் பார்லருக்கு வந்து, தங்களது ஆசைக்கு இணங்கும் படி கேட்கிறார்கள். கண்டிப்பாக அவள் மறுக்கவே பலாத்காரம் செய்கிறார்கள். தன்னிடம் இருக்கும் சிறு கத்தியால் அந்த நிர்வாகியை கொன்று விடுகிறாள், ரத்தம் தோய்ந்த உடையோடு வெளியேறுகிறாள்.

டிரஸ் தைக்கும் வேலை செய்யும் அரும்பு மீசை இளைஞன் நான்காவது பாத்திரம். சக தொழிலாளியுடன் இவர் பேசிக் கொண்டிருந்ததால், அவரது கை இயந்திரத்தில் பட்டு பலத்த காயம் ஏற்படுகிறது. அவருக்கு காயம் சரியாகும் வரை முதல் இளைஞன் வேலை செய்து சம்பளத்தை அடிப்பட்டவனுக்கு தர வேண்டும் என்று நிர்வாகி உத்தரவு போடுகிறார். சரிப்பட்டு வராது என்று அங்கிருந்து கிளம்பி வேறு மாநிலத்தில் கோல்டன் கிளப் என்ற கேளிக்கை விடுதிக்கு வேலைக்கு சேருகிறான். அங்குள்ள அழகான இளம் பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. தன் குடும்பத்திற்கும், அம்மாவிற்கும் பணம் அனுப்ப முடியவில்லையே என்று விருந்துகிறான், அம்மாவுடன் செல்போனில் பேசி முடித்ததும் மாடியிலிருந்து கீழே குதித்து இறக்கிறான்.

சீனாவின் விமானம் போன்ற செளகரியத்தில் பஸ் பயணம், பசுமையான சூழ்நிலை, மலைகள், பனிமழை பல்வேறு நகரங்கள், சீனருடைய வாழ்க்கை எல்லாம், அழகாக காண்பிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றத்தால் ஏற்படும் மாறுதல்கள், கேளிக்கை விடுதியில் நீச்சல் உடையில் அழகிய இளம் பெண்களின் நடனம், கஸ்டமர்களை திருப்தி அடைய செய்ய ஈடுபடும் சேவை, மேற்கத்திய நாகரீகத்தின் விளைவுகள். முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்புடன் புதுமையான கோணத்தில் இயக்குனர் ஜியா ஜாங்கே படத்தை உருவாக்கியிருக்கிறார்.

2013-ம் ஆண்டில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற படம் இது. மாடர்ன் சீனா பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:52 pm

நான் பெற்ற விருதுகளுக்கு இன்னும் தகுதியுடையவனாக இருந்திருக்க வேண்டும் - கமல் பேச்சு

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கமல், கோவா திரைப்பட விழாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மீடியாவை சந்தித்தபோது, அவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

* ஏக் துஜே கேலியே(கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரதி நடித்தது) படப்பிடிப்பிற்காக கோவா வந்திருந்தேன். அது தான் கோவாவிற்கு எனது முதல் விஸிட். அந்தப்படம் எனது 101-வது படம், அந்தப்படப்பிடிப்பின் போது ஷெட்டில் ஒர பையன் இருந்தான். என்னுடனே நாள் முழுவதும் இருப்பான். பலரிடம் நான் தான் அவனுடைய தந்தை என்று சொல்லுவான்(ஏன்? என தெரியவில்லை) சிரிக்கிறார். அவனுக்கு நீந்துவதற்கு நான் அப்போது சொல்லிக் கொடுத்தேன். கோவா உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும். பல விஷயங்களில் கோவா எனக்கு முக்கியமானது.

* இதுவரை ஐம்பது மலையாள படங்களில் நடித்திருக்கிறேன். அங்கு உள்ள திரைப்படத்துறையினர் நான் ஒரு மலையாளி என்றே கருதுகிறார்கள். அங்கிருந்து தமிழ் படங்களுக்கு சென்று விட்டதாக நினைக்கிறார்கள்.

விஸ்வரூபம்-2 படத்தை இந்தியில் விஸ்வரூபா-2 என்று அழைக்க போகிறோம். விஸ்வரூபம் அல்ல, விஸ்வரூபம் ரிலீஸானபோது, பெயரை பார்த்து இது டப்பிங் படம் என்று ஆடியன்ஸ் கருதிவிட்டார்கள். இந்தியில் உருவாக்கப்பட்ட படம் இது என்பதை தெளிவுப்படுத்தவே விஸ்வரூபா-2.

* என் மகள் ஸ்ருதியிடமிருந்து ஒரு நடிகையாக நிறையவே எதிர்பார்க்கிறேன். ரஜிகாந்த் போன்ற நடிகர்களை பார்த்து குழந்தையாக ஷெட்டுக்கு ஷெட் தாவி வளர்ந்த பெண். நிறைய சாதிக்க வேண்டும். இசையில் முறையாக ஸ்ருதி, பயிற்சி பெற்றவர்.

* இந்தி திரைப்பட ரசிகர்களிடம் நிறைய பாப்புலாரிட்டி இருக்கும் ஒரு சில தென்னிந்திய நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். நிறைய புதிய சவால் உள்ள பாத்திரம் கிடைத்தால் தான் இந்தி படங்கள் பண்ணுவதில் அர்த்தம் இருக்கிறது. அதிகப்பணம் கிடைப்பதற்காக மட்டும் அல்ல. புதிய எல்லைகளை உருவாக்க மேலும் அதிக ஆடியன்ஸ் பெறுவதற்கும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கமல்.

* விஸ்வரூபம் படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றி கேட்டபோது, சர்ச்சை மட்டும் ஒரு படத்திற்கு உதவி ஆகாது. சர்ச்சை எப்படி ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவும்? அது போலத்தான் இதுவும்! விஸ்வரூபம் வெற்றி பெற்றதால், இரண்டாவது பாகம் உருவாக்கப்படவில்லை. விஸ்வரூபம் படப்பிடிப்பு நடக்கும் போதே இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.

* இந்தியாவின் மிகவும் போற்றப்படும் திறமையுள்ள நடிகராக இருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற கமல், தான் சாதித்ததே போதும் என்று மகிழ்ச்சியாக திருப்தி அடைந்ததாக இருப்பார் என்று யாராவது நினைத்தால் அது தவறு, மேலும் மேலும் புதுமைகள் செய்ய விரும்பும் கமல், இதுவரை நான் பெற்றுள்ள விருதுகளுக்கு நான் இன்னும் தகுதி உடையவனாக இருந்திருக்க வேண்டும் என்று தன்னடக்கமாக கூறுகிறார். நடிகர், கதாசிரியர், பாடல் கவிஞர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், பாடகர் என்று பல துறைகளில் தன்னை தொடர்ந்து எப்போதும் தன் தரத்தை உயர்த்திக் கொள்ளுவது தான் கமலின் செயல்பாடு. இந்த குணம் தான் அவருக்கு 4 தேசிய விருதுகளையும், 19 பிலிம்பேர் விருதுகளையும் பெற்று கொடுத்திருக்கிறது. இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் செய்ததில்லை.

* கமல் தனது முதல் ஸ்கிரிப்ட்டை ''உணர்ச்சிகள்'' என்ற படத்திற்காக தனது 18வது வயதில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து ராஜபார்வை, சத்யா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் கதைகளை கமல் எழுதியிருக்கிறார்.

* எனக்கு 25 வயதாகும் போது 100 படங்களில் நடித்துவிட்டேன் என்கிறார் கமல். அவருடைய திரை உலக வயது 53. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.

* இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படங்களிலேயே கமல் படங்கள் தான் அதிகம்.

* வேறு எந்த நடிகரும் நினைத்து பார்க்க முடியாத சோதனையை சாதனையாகச் செய்தவர் கமல். புஷ்பக விமானம், பேசும்படம் என்று ஒரு வசனம் கூட இல்லாமல் புதுமையான, நகைச்சுவையான படங்களை உருவாக்கி வெற்றி பெற்றவர் கமல். புதிய முயற்சிகள் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேப்போன்று நடிகர்களுக்கும் முக்கியம் என்கிறார் கமல்.

* வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி பற்றி கேட்டபோது, எவ்வளவு டெக்னிக்கல் முன்னேற்றம் வந்தாலும், கதை தான் எப்போதும் முக்கியம். சினிமாவிற்கு டெக்னாலஜியை கொடுத்து வரும் நிறுவனங்களுக்கு பயம் தான் முக்கியமாக இருக்கிறது என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:53 pm

கோவா திரைப்பட விழாவில் மறைந்த இசைகலைஞர்களுக்கு அஞ்சலி!!

இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த சிறந்த கலைஞர்களின் நினைவில் என்ற தலைப்பில் பின்னணி பாடகர் மன்னா டே நினைவாக ஜாஞ்ஜீர் இந்தி திரைப்படம், பண்டிட் ரவிசங்கர் நினைவாக அவர் இசை அமைத்த சத்யஜித் ரேயின் பதர் பஞ்சாலி, வயலின் மேதை பத்மபூஷன் லால்குடி ஜெயராமன் நினைவாக அவர் இசை அமைத்த சிருங்காரம்(2007), பிரபல தமிழ் பின்னணி பாடகர் பத்மஸ்ரீ டி.எம்.எஸ் நினைவாக எங்க வீட்டு பிள்ளை(1965), பிரபல நடிகை சுகுமாரி நினைவாக அயல் (2013), மலையாள திரைப்படம், கவிஞர் பத்மஸ்ரீ வாலி நினைவாக எங்க வீட்டு பிள்ளை (1965), பின்னணி பாடகி ஷம்ஷத் பேகம் நினைவாக சி.ஐ.டி.(இந்தி) 1956, பிரபல வங்காள இயக்குனர் ரிது பர்னா கோஷ் நினைவாக சோகெர் பாலி (வங்காளம்) 2003, பிரபல தயாரிப்பாளர் ஷ்ரிங்கர் நாகராஜ் நினைவாக கமல் நடித்த புஷ்பக விமானம் (1987), பிரபல பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் நினைவாக பெட்டட ஹீவு கன்னடம் - 1985 படங்களும், கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. பிரபல இந்தி வில்லன் நடிகரும், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவருமான பிரான், நினைவஞ்சலியாக மதுமதி(1958), ஜிஷ் தேஷ் மே கங்கா பெஹ்தீ ஹை (1960) போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

இதேமாதிரி தாதா சாகிப் பால்கே விருது பெற்று இன்று நம்மிடையே வாழும் பிரபலங்களை கெளரவிக்கும் வகையில், பாரத ரத்னா லதா மங்கேஷ்கருக்காக மஹால் இந்தி - 1947, பிரபல தெலுங்கு நடிகர் பத்மவிபுஷன் விருது பெற்ற ஏ.நாகேஸ்வர ராவுக்காக பிரேம நகர் - தெலுங்கு 1971, பிரபல இந்தி நடிகர் பத்மபூஷன் திலீப் குமாருக்காக தேவதாஸ் இந்தி - 1955, பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேக்காக மாயி இந்தி - 2013, பிரபல வங்காள இயக்குனர் மிருணாள் ஸென்னுக்காக ஆகாஷ் குஸீம் வங்காளம் 1965, பிரபல மலையாள டைரக்டர் அடூர் கோபால கிருஷ்ணனுக்காக நிழல்கூத்து மலையாளம் - 2002, பிரபல இந்தி டைரக்டர் ஷ்யாம் பெனகலுக்காக த்ரிகால் இந்தி - 1985, பிரபல ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்திக்காக பியாஸா இந்தி - 1957, பிரபல தயாரிப்பாளர் டி.ராமா நாயுடுக்காக பிரேம நகரம் தெலுங்கு - 1971, பிரபல தமிழ் இயக்குனர் கே.பாலசந்தருக்காக சிந்து பைரவி தமிழ் - 1985 போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

மேலும் கோவா திரைப்பட விழாவில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட பிரபலமான படங்களில் முக்கியமானவற்றை கவிஞர்கள், காதலர்கள், கலைஞர்கள் என்ற பிரிவில் திரையிடுகிறார்கள். அவற்றில் சஸ்த் தியானேஷ்வர் - (இந்தி 1940), தான்ஸென் - (இந்தி 1943), பக்த மீரா - (தமிழ் 1945), பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி, நடித்தது. மஹல் - (இந்தி 1949), மிர்ஸா காலிப் - (இந்தி 1954), தேவதாஸ் - (இந்தி 1955) திலீப்குமார், வையெந்தி மாலா நடித்தது, காஸ்மீர் கி காலி - (இந்தி 1964) ஷம்மி கபூர், ஷர்மிளா தாகூர் நடித்தது, கெய்டு - (இந்தி 1965) தேவ் ஆனந்த், வஹீதா ரஹ்மான் நடித்தது, அமிதாப், ஜெயா பாதுரி நடித்த அபிமான் - (இந்தி 1973), சங்கராபரணம் - (தெலுங்கு 1979) கே.விஸ்வநாத் இயக்கியது, ரேகா நடித்த உம்ரோ ஜான் - (உருது 1981), கமல்-ஜெயபிரதா நடித்த சாகர சங்கமம் - (இந்தி 1983), சிவக்குமார்-சுஹாசினி நடித்த சிந்து பைரவி - (தமிழ் 1985), மாத்வாச்சார்யா - (கன்னடம் 1986), சர்க்கம் - (மலையாளம் 1992), ஷாரூக்கான்-மனிஷா கொய்ராலா நடித்த தில்ஸே - (இந்தி 1998), மம்மூட்டி, அஜீத், ஐஸ்வர்யா ராய், தபு நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ் 2000), கபி அல்விதா நா கஷ்னா - (இந்தி 2007), ஷம்ஹிதா - (மராத்தி 2012), தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்சனா - (இந்தி 1943) போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

இத்துடன் போலாந்தை சேர்ந்த உலகப்புகழ்ப்பெற்ற பெண் இயக்குனர் அக்னீஸ்கா, இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இவர் இயக்கிய எ உமன் அலோன் (1981), பேர்னிங் புஷ (2013), பீவர் (1981), டைட்டானிக் ஹீரோயின் லியோர்னடா டி காப்ரியே நடித்த டோட்டல் எக்லிப்ஸ் (1995) போன்ற படங்களும் திரையிடப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:54 pm

பிஹைண்ட் கிளோஸ்டு டோர் Behind Closed Door  - விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!!

அலுவலகத்தில் வேலை புரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்த அலுவலகத்தின் மேலதிகாரியால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது, அதை எப்படி அந்த பெண் சமாளிக்கிறார் என்பதே பிஹைண்ட் கிளோஸ்டு டோர் என்ற மொராக்கோ நாட்டு படத்தின் கதை சுருக்கம். நல்ல சஸ்பென்ஸ் டிராமா.

திருமணமாகி ஒரு குழந்தை, கணவருடன் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் சமீராவிற்கு அவரது கம்பெனி டைரக்டர் ரூபத்தில் உபத்திரம் ஆரம்பிக்கிறது. நீ ரொம்ப அழகாக இருக்க, ராத்திரி, பகலும் உன் நினைப்பு தான் என்கிறார் அவரது கம்பெனி டைரக்டர். சமீராவின் படத்தை அவளுக்கே தெரியாமல் கம்யூட்டரில் பார்த்து ரசிக்கிறார். நான் திருமணமானவள், உங்கள் எண்ணம் நடக்காது என்று சமீரா தெளிவாக கூறினாலும் டைரக்டர் ஓயவில்லை. தன் கணவரிடமும் சமீரா எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார்.

சமீராவிற்கு தெரியாமல் ஆபிஸில் அவரது கம்யூட்டரை திறந்து, அவர் சமீபத்தில் செய்த முக்கியமான வேலைகளை கொண்ட பைல்லை அழித்து விடுகிறார். அதே பைலை டைரக்டர் கேட்கும்போது, செய்த பைலை யாரோ அழித்து விட்டார்கள் என்று புலம்புகிறார் சமீரா. ஒருநாள் மட்டும் எனக்கு நீ இணங்கி விடு, எந்த பிரச்னையும் இருக்காது என்கிறார் டைரக்டர். இதை மறுக்கும் சமீராவுக்கு ஆபிஸில் வேலையை சரியாக செய்யவில்லை என்ற கெட்டபெயர் கிடைக்கிறது.

பெண் வக்கீலிடம் சமீரா, கணவருடன் சென்று ஆலோசனை செய்கிறார். சட்டப்படி நடவடிக்கை ஏதாவது சாட்சி தேவை என்கிறார் வக்கீல். கம்பெனி பிரதம நிர்வாகியிடம் புகார் செய்தும் பயன் இல்லை. எல்லாமே பொய் என்கிறார் டைரக்டர். சமீராவுக்கு, அவரது கணவர் மொஷேவிற்கும் நிறைய மன உளைச்சல், பலநாட்கள் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தனக்கு தொல்லை கொடுக்கும் கம்பெனியின் இயக்குனரின் மனைவியை அவரது அலுவலகத்திற்கு சென்று சமீரா சந்தித்து எல்லா பிரச்னைகளையும் விளக்குகிறார். அவரும் நம்புவதாக இல்லை. கடைசியாக இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சமீரா, நேராக டைரக்டரிடம் சென்று ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுக்கு இணங்க சம்மதிக்கிறேன், பிறகு எந்த பிரச்னையும் வரக்கூடாது, எங்கே எப்போது வர வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சொல்கிறார். டைரக்டருக்கோ இன்ப அதிர்ச்சி, முதலில் நம்பவில்லை, எனது நண்பருக்கு கடற்கரை ஓரத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது, அங்கு யாருடைய தொந்தரவும் இருக்காது என்கிறார்.

டைரக்டருடன் அவர் காரிலேயே சமீரா செல்கிறார். கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றதும், டைரக்டருக்கு செம ஜாலி மூடுயாகி, தன்னை கட்டி அணைக்க வரும் டைரக்டரிடம், நான் பாத்ரூம் சென்று பிரஷ் ஆகி வருகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார் சமீரா. பெட்ரூமோடு இணைந்து இருக்கும் பாத்ரூம் பூட்டப்பட்டிருந்ததால் மற்றொரு அறைக்கு சமீரா செல்கிறார். பூட்டப்பட்ட அறையிலிருந்து டைரக்டரின் மனைவி வெளியே வருவதை பார்த்தவர் பேயறைந்தவராக ஆகிறார். நீ எல்லாம் ஒரு மனுஷனா? என்று திட்டிவிட்டு திருமண மோதிரத்தை கழற்றி, அவர் மீது வீசி ஏறிகிறார் மனைவி. அங்கிருந்து தப்பிக்கும் சமீரா, சற்று தூரம் ஓடி தனக்காக காத்திருக்கும் கணவரின் காரில் ஏறிக் கொள்கிறாள். சமீராவும், டைரக்டரின் மனைவியும் சேர்ந்த போட்ட திட்டம் இது என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கம்பெனிக்கு வேறு புதிய நல்ல மனிதர் டைரக்டராகிறார்.

சமீரா, டைரக்டர், சமீராவின் கணவர் மூவருமே தங்கள் ரோல்களில் பொருந்தி நடித்திருக்கிறார்கள். மொராக்கோ நகரின் பல இடங்களை பார்க்கலாம். முகமது பென் செளதா இயக்கியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:55 pm

ஜெய் ஹோ - ஏ.ஆர்.ரஹ்மானை பற்றிய படம்!!

கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சாதனை படைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி உமேஷ் அகர்வால் ஒரு படம் உருவாக்கியிருக்கிறார். ஆஸ்கர் நாயகனை பற்றிய இந்தப்படம் பொருத்தமாக ஜெய்ஹோ (அவருக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மலினியர் படத்தில் வரும் பாட்டு) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கோவா திரைப்பட விழாவை ஒட்டி நடக்கும் பிலிம் பஜாரில் இது காட்டப்பட்டது. ரஹ்மானுடன் ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து அவரது இசை நிகழ்ச்சிகள், இங்கிலாந்தில் ஸ்டுடியோவில் பணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் இசை அமைப்பது, இயக்குனர் டோனி போயெல், சேகர் கபூர், சுபாஷ் கெய் போன்ற பிரபலங்கள் ரஹ்மானைப்பற்றி பேசுவது எல்லாம் இடம் பெறுகின்றன. ரஹ்மானும், இதில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அனிர்பன் பட்டாச்சார்யா எழுத்தில், ராஜீவ் மெஹோத்ரா இசையில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது.

எல்லாம் சரி, திரைப்பட உலகிற்கு ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்தினத்தினை இதில் பேச வைத்திருக்க வேண்டாமா.?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:56 pm

ஜாய் - கிரீஸ் மொழிப்பட விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!!

இந்த திரைப்பட விழாவில் போட்டிக்கு வந்துள்ள படங்களில் கிரீஸ் நாட்டு தயாரிப்பான ஜாய் படமும் ஒன்று. ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து, சில மாதங்களே ஆன கை குழந்தையை யாருக்கும் தெரியாமல் திருடுகிறாள் ஹரா என்ற பெண். இரண்டு நாட்கள் தன் ப்ளாட்டிலேயே குழந்தையை வைத்து தன் குழந்தையை போலவே ஆசையாக கொஞ்சுகிறாள். ரேடியோவிலும், டெலிவிஷனிலும் சிறு குழந்தையை ஒரு பெண், ஆஸ்பத்திரியிலிருந்து திருடி விட்டாள் என்று தொடர்ந்து அறிவிக்கிறார்கள். ஆனாலும், ஹரா பயப்படவில்லை. குழந்தையை காரில் அழைத்து கொண்டு செல்கிறாள். ஹாரா என்று தெரிந்து ஒரு கிரிமினல் அவளை வழிமறித்து குழந்தையோடு தப்பிக்க முயலுகிறான். ஹரா, அவனை பெரிய கல்லால் தலையில் அடித்து கொன்றுவிட்டு செல்கிறாள். போலீஸ் ஹராவை கைது செய்கிறது.

போலீஸ் விசாரணையிலும் சரி, கோர்ட்டிலும் சரி கேட்கப்படும் எந்த கேள்விகளுக்கும் ஹரா வாயைத் திறக்கவே இல்லை. அவளுக்காக வாதாட கோர்ட் ஒரு வக்கீலை நியமிக்கிறது. வக்கீலிடம் கூட ஹரா எதுவும் பேச மறுக்கிறாள். ஹரா ஏன் அப்படி செய்கிறாள் என்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மனநிலை சரியில்லை என்று வாதாடி அவளை தப்பிக்க வைக்கலாம் என்ற வக்கீலின் முயற்சியும் பலிக்கவில்லை. குழந்தையை கடத்தியதற்காகவும், ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவும் ஹராவுக்கு, கோர்ட் ஆயுள் தண்டனை வழங்குகிறது.

ஹராவாக நடித்திருக்கும் அமாலியாவின் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை. ரசிகர்களின் பொறுமையை சோதித்த படம் இது. படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் என்று எதுவும் இல்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:56 pm

ஷட்டர் - மலையாள படம் விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!!

2012-ல் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிய சஸ்பென்ஸ் நிறைந்த படம் ஷட்டர். கொலையை யார் செய்தது? என்பதை கடைசி வரை யூகிக்க முடியாமல் இருப்பது ஒரு வித சஸ்பென்ஸ். அடுத்து என்ன ஆகும்? பிரச்னை எப்படி தீரும் என்று யோசிக்க வைப்பது இந்த படத்தின் சஸ்பென்ஸ்.

துபாயில் சென்று சம்பாதிக்கும் ரஷித்(நடிகர் லால்) விடுமுறைக்கு ரேளா வருகிறார். ஒருநாள் இரவு நண்பர்கள் சிலருடன் குடித்துவிட்டு திரும்பும்போது பஸ் ஸ்டாண்டில் ஒரு விலைமாது நிற்பதை பார்க்கிறார். தனது நண்பர் ஆட்டோ டிரைவரின் உதவியோடு, அந்த பெண்ணை அழைத்து செல்கிறார். பல லாட்ஜ்களில் ரூம் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக தனது வீட்டிற்கு முன்பு தனக்கு சொந்தமான ஆனால் இப்போது காலியாக உள்ள ஒரு கடையில் இருக்கலாம் என்று முடிவு செய்கிறார். நம்பிக்கைக்குரிய நண்பர் ஆட்டோ டிரைவர், கடையின் ஷட்டரை வெளியே பூட்டிவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு திரும்பி வந்து கதவை திறந்து விடுவதாக ஒப்புக் கொள்கிறார். அங்கு தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

ரஷிதை விட்டு செல்லும் ஆட்டோ டிரைவர், ஒரு சினிமா டைரக்டரோடு(நடிகர் ஸ்ரீனிவாசன்), காரில் முதலில் மறுத்தாலும் பின்னர் குடிக்கிறார். எதிரே போலீஸ் செக்கிங்கில் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். ரஷித்திற்கு ஷட்டரை திறந்து விட வேண்டுமே என்று ஆட்டோ டிரைவருக்கு பதட்டம்.

காலையில் வழக்கம்போல் பஜார் பிஸியாகி விடுகிறது. ஜனங்கள், வண்டிகள் நடமாட்டம், அடுத்த கடைகளில் வியாபாரம். உள்ளே தன் தவறை உணர்ந்து ரஷித் தவிக்கிறார். முதலில் சண்டை போட்டு கோபித்தாலும், விலை மாது (நடிகை சஜிதா) ரஷீத்திற்காக வருத்தப்படுகிறார். ரஷீத் கொடுக்கும் பணம், வாட்ச், மோதிரங்கள் எல்லாவற்றையும் திரும்பிக் கொடுக்கிறார். அழுத்தமான கேரக்டர் சஜிதாவுக்கு.

பூட்டப்பட்ட கடையின் வென்ட்டிலேட்டர் வழியாக தன் வீட்டை பார்க்கும் ரஷித், குடும்பத்தினர் படும்பாட்டை எண்ணி வருந்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ரஷித், கல்லூரியில் படிக்கும் தன் மகள் சக மாணவர்களுடன் நண்பர்களாக இருப்பதையும், செல்போனில் அடிக்கடி பேசுவது, எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதிகநேரம் செலவழிப்பதையும் பார்த்து அவளை கண்டித்து அவளுடன் கோபித்து கொள்கிறார். மேலும் 17 வயதாகும் தன் மகளுக்கு திருமணம் செய்யவும் முடிவு செய்துவிடுகிறார்.

ஆட்டோ டிரைவர், மீண்டும் இரவில் வந்து கடையின் ஷட்டரை திறக்க முயலும்போது ஏற்கனவே திறக்கப்பட்டு, ரஷித் மட்டும் உள்ளே இருப்பதை பார்த்து வியந்து போகிறார். ஆட்டோ டிரைவர் திறக்கவில்லை என்றால் யார் திறந்தது? என்ற கேள்வி எழுகிறது.

ரஷித், தயக்கத்துடன் வீட்டுக்குள் செல்லும்போது அவரது மகள், என் தந்தை நல்லவர் என்று எனக்கு நன்றாக தெரியும், தவறான நண்பர்களால் தான் பிரச்னை. என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று சொல்லும்போது, மகள் தான், தன் நண்பர்கள் மூலமாக தன்னை பெரிய அவமானத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் என்ற விஷயம் தெரிய வருகிறது. என்னோடு படிக்கிறவுங்க நண்பர்கள் தான், எனக்காக எதுவும் செய்வார்கள், அவர்களை நான் காதலிக்க மாட்டேன் என்று மகள் சொல்லும்போது தான் ரஷித்திற்கு தன் மகளை பற்றி அவர் எண்ணிய கவலைகள் எல்லாம் தவறு என்று புரிகிறது.தொடர்ந்து மகள் படிக்கட்டும், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று ரஷித் சொல்லும்போது மனைவிக்கு ஒரே ஆச்சர்யம்.

ரஷிதாக லால், விலைமாதுவாக சஜிதா, சினிமா டைரக்டராக பிரபல நடிகர், கதாசிரியர் ஸ்ரீனிவாசன். இயக்குனர் ஜாய் மாத்யு - வெல்டன். கடைசிவரை நல்ல சஸ்பென்ஸ், இடைச்சொறுகலாக சென்டிமென்ட்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா Wed Nov 27, 2013 6:57 pm

வாலெஸா - மேன் ஆப் ஹோம் - போலந்து பட விமர்சனம்

துறைமுகத்தில் சாதாரண தொழிலாளியாக இருந்து அவர்களுக்கு தலைவராகி போலந்து நாட்டின் முக்கிய தலைவராகி சர்வதேச அங்கீகாரமும், புகழும் பெற்று சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்று, போலந்தை கம்யூனிஸயத்தின் இன்னல்களிலிருந்து விடுவித்த லே வாலெஸாவின் வாழ்க்கை சித்திரம் தான் இந்தப்படம். இரண்டு மணிரேநம் போலந்திலேயே இருந்து அங்கு நடைபெறும் சரித்திர புகழ்பெற்ற நிகழ்வுகளை நேரில் கண்ட அனுபவம் இந்தப்படத்தை பார்க்கும் போது தோன்றுகிறது.

தோற்றத்தில் அசல் வாலெஸா போன்று இருக்கும், நடிகர் ராபெர்ட் விக்கிவிஸ், தனது பேச்சு திறமையால் சக தொழிலாளர்களை, கம்யூனிஸ தலைவர்களை, வெளிநாட்டவர்களை, போலந்து மக்களை படிப்படியாக வாலெஸா கவருவது பொருத்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது பாடி லாங்குவேஜ், இருகைகளிலும் இரு விரல்களை வி போன்று காண்பித்து மக்களுடன் ஒன்றுவது, சில இடங்களில் வேகமாக பேசுவது, தன் மறுப்பை ஆணித்தரமாக எடுத்து பேசுவது என வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வாலெஸா பேட்டி எடுப்பதில் படம் ஆரம்பமாகி, பல இடங்களில் ப்ளாஷ் பேக் ஆக செல்கிறது.

வாலெஸாவின் மனைவி தனுடாவாக நடித்திருக்கும் நடிகை அக்னீஸ்கா, யதார்த்தமாக நடித்திருக்கிறார். அழகான தோற்றம், உடல்கட்டு ஒவ்வொருமுறையும் போலீசார், வாலெஸாவை கைது செய்யும்போது பதட்டப்படும் தனுடா ஒரு கட்டத்தில் இது பழக்கமானது தானே என்பதுபோல் நடந்து கொள்ளுவார். நான் ஒரு வேளை திரும்பி வராவிட்டால் என்று சொல்லி, தனது வாட்ச்சையும், திருமண மோதிரத்தையும் கழற்றி மேஜை மீது வைத்து, இவற்றை விற்று, அதில் வரும் பணத்தை குடும்ப செலவுக்கு வைத்துக்கொள் என்று சொல்லுவது உள்ளத்தை தொடும் காட்சி.

தனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் வாலெஸா, நான் ஆஸ்லோ நகருக்கு நோபல் பரிசு வாங்க போகமாட்டேன், ஒருவேளை மீண்டும் என்னை போலந்து நாட்டுக்குள் வர அனுமதி மறுத்துவிட்டால்... என்று தனுடா, தன் கணவன் சார்பில் நோபல் பரிசு பெற்றுக் கொள்வார். (பர்மாவில் ராணுவத்தை எதிர்த்து புரட்சி செய்த சுங்வீ-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது இதே காரணத்திற்காக அவர் போகாமல் அவரது மகன் பரிசை வாங்குவார்)

நோபல் பரிசு பெற்றுக்கொண்டு திரும்பி வரும் தனுடாவை ஏதாவது கடத்தி வருகிறாரா என்று சந்தேகித்து சுங்க அதிகாரிகள் அவரது உடைகளை களையவைத்து நிர்வாணமாக்கி சோதனை செய்வது சரித்திரத்தில் ஒரு அவமானம்.

ஒரு நாட்டின் தலைவருக்கு உரிய அந்தஸ்து அளித்து, அமெரிக்க பார்மென்ட்டில் அவர் உரையாற்ற ஏற்பாடு செய்வது, சுதந்திரம் என்பது மனிதனின் உரிமை என்று தனது உரையை முடிக்கும்போது அனைவரும் கை தட்டி பாராட்டுவதுடன் படம் முடிகிறது.

புகழ்பெற்ற போலந்து இயக்குனர், கெளரவ ஆஸ்கர் விருது பெற்றவர். ஐரோப்பிய சினிமா விருதுகள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆன்ட்ரோ வாஜ்டா, இந்தப்படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

உலகமெங்கும் பாட்டாளி வர்க்கம் இந்தப்படத்தை போற்றும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  Empty Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum