ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

3 posters

Go down

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Empty தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

Post by யாழவன் Fri Oct 30, 2009 8:28 pm




தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Sad ங்களது தோற்றப் பொலிவால் எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுந்தால் அதை எதிர்கொண்டு ஜெயிப்பது எப்படி?

ஒவ்வொருவரும் சொல், எண்ணம், செயல்பாடு ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள பழகும்போதுதான் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்வது சாத்தியம். உடல் தோற்றத்தின் அடிப்படையில் நீங்கள் உங்களைப் பற்றி கொண்டுள்ள எதிர்மறை எண்ணங்களுக்கு அடிமையாக வேண்டிய கட்டாயம் கிடையாது. முயற்சி மேற்கொண்டு புதிய திறன்களை வளர்த்துக் கொண்டு உங்களைப் பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க பழகலாம்.

அப்படி இல்லாமல் உங்களைப் பற்றி ஒரு வித வெறுப்புடன் மனதில் உங்கள் தோற்றத்தை காணும்போது, நீங்கள் விரக்தி அடைந்த அனுபவம், வெகுவாக பயந்த சூழ்நிலைகள் ஆகியவையே உங்கள் மனக் கண்ணில் தோன்றி எதிர்மறையான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.

உயர்வாக எண்ணுங்கள்

நீங்களாக உங்கள் மனதிற்குள் கூறிக் கொள்ளும் வார்த்தைகள் எத்தகைய தன்மையானதோ, அதற்கேற்ப தாக்கம் மனதில் ஏற்படும். 'நான் அழகாக இல்லை', 'அசிங்கமான தோற்றம்', 'பருத்த உடம்பு' என்று கூறும்போது மனதில் ஒருவித சங்கடம் ஏற் படுகின்றது.

அதே சமயம் 'அமைதி', 'நம்பிக்கை', 'மன நிறைவு' என்று கூறும்போது ஒருவித சாந்தமான உணர்வு மனதில் தோன்றுகிறது. அதனால்தான் தியானத்திற்கு பயன்படுத்துபவை வெறும் சொற்கள் அல்ல, மந்திரங்கள் என்று கூறப்படுகின்றது. உடம்பும், மனதும் இறுக்கமில்லாமல் செயல்பட்டால்தான் சிந்தனையும், செயலும் இசைவுடன் ஒன்றுபடும்.

பக்குவப்படுத்தும் பயிற்சிகள்

எனவே எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு மனதில் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளிலும், விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து மனதை இறுக்கத்தில் இருந்து சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் நேரம் ஒதுக்கி மனதையும், உடலின் அனைத்துப் பகுதிகளையும் தளர்த்தி பழகினால் உடம்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மனதை ஒருமுகப் படுத்த முடியும். இவ்வாறு ஒரு வாரம், பத்து நாட்கள் என்று பயிற்சி மேற்கொண்டால் உடம்பும், மனமும் கட்டுப்பாட்டிற்குள் செயல்படத் தொடங்கும்.

மேலும் தோற்றத்தை முழுமையாகக் காட்டும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு உடம்பு முழுவதையும் காண்பது என்பது எதிர்மறை எண்ணம் உடையவர் களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கலாம். இருந்தபோதிலும் விரும்பும் உடல் பாகங்களை மனதில் கொண்டு வந்து படிப்படியாக எதிர்மறையான எண்ணங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு பயிற்சி பெறலாம்.

எண்ணங்கள் ஏற்படுத்தும் மாற்றம்

நீங்கள் உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காண்போம். உருவத்தில் ஒரே தோற்றம் உடைய இருவர் தங்களைப் பற்றி கூறிக் கொள்ளும்போது ஒருவர் தன்னை மிகவும் அசிங்கமாக இருப்பதாக கூறிக் கொண்டார். மேலும் அவர் பருமனாக இருப்பதாகவும், எப்படித்தான் எடையை குறைக்க போகிறேனோ தெரியவில்லை என்று சலிப்புடனும் தன்னையே நொந்து கொண்டார்.

அவருடன் பிறந்த மற்றொருவர் தன்னைப் பற்றி ஆக்கப்பூர்வமாக கருதுகின்றார். இன்று மிகவும் அன்புடன் நடந்து கொள்வதாகவும், தன்னுடைய ஊதா நிற கண்களுக்கு பொருத்தமாக உடை அமைந்துள்ளதாகவும் கூறுகின்றார். விரைவில் எடையை குறைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவேன் என்றும் தனக்குத் தானே கூறிக் கொள்கின்றார். இருவரும் இரட்டை குழந்தைகளாகவும், உருவத்தில் ஒரே தோற்றத்துடன் இருந்தாலும், மனதில் எடுத்துக் கொள்வது அவர் களின் அனுபவத்தின் அடிப்படையில் அமைகின்றது.

தவறாக கணித்தால்...?

உங்களைப் பற்றி உண்மையாக, சரியாக கணிக்கும் திறனை உங்களின் தன்மதிப்பு என்று கூறலாம். ஆனால் சாதாரணமாக உளவியல் ரீதியாக தன்னைப் பற்றிய கணிப்பு இரண்டு விதங்களில் தவறாகப் போய்விட வாய்ப்புகள் அதிகம். ஒன்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது. உங்களைப் பற்றி சரியாக கணித்தால் உங்களால் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாது என்று கருதும்போது நீங்கள் விரும்புவதே உண்மை என்று கருதி உங்களை ஏமாற்றிக் கொள்வது.

இரண்டாவது வகை உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்து எப்போதுமே சரிதான் என்று நினைக்கும் நிலைப்பாடே ஆகும். அதாவது உங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தாலும் மாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் அதையே உண்மை என நம்புவது. இத்தகைய இருவகையான நிலைப்பாடுகளும் சரியானவை இல்லை. மேலும் இவை உங்களைப் பற்றி சரியான மதிப்பீடு செய்யவிடாமல் உங்களது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடைக் கற்களாகவும் அமைந்து விடுகின்றன.

செயல்தான் பேசும். வெறும் தோற்றம் கிடையாது. நட்புணர்வு, அறிவுக்கூர்மை, உண்மையாக நடந்து கொள்ளுதல், நகைச்சுவை உணர்வு, சமூக பிரக்ஞை போன்றவற்றுக்குத்தான் பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. வெறும் தோற்றத்திற்குக் கிடையாது.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப்பற்றி தோற்றத்தின் அடிப்படையில் ஏற்படும் அபிப்ராயம் அப்படியே நிலைப்பதில்லை. பழகும்போது ஏற்படும் அபிப்ராயமே நிலையானது. முதலில் பார்த்தவுடன் அழகாக தோன்றுவது என்பது உண்மையா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் என்கின்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

வரலாற்றைக் காணும்போது ஆபிரகாம்லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், மிகேல் கோர்ப சேவ், ஹென்றி கிசிங்கர், மகாத்மாகாந்தி அடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரது ஆளுமைத் திறன்களும், தனிமனித பண்புகளுமே அவர்களை உயர்த்தி உள்ளதைக் காணமுடியும். கோல்டா?மேயர், எலினார் ரூஸ்வெல்ட், மார்க்கரெட் தாட்சர், அன்னை தெரசா போன்றவர்கள் எந்தவித அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்கள் கிடையாது. பண்பால் உயர்ந்தவர்கள்.

குறையை சாதகமாக்குங்கள்

அலைஸ்வாக்கர் என்பவர் 'பர்ப்பிள் கலர்' (கருஞ் சிவப்பு நிறம்) என்ற புத்தகத்தை எழுதி புலிட்சர் பரிசு பெற்றவர் ஆவார். அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றவரானார். ஆனால் அவர் ஜார்ஜியாவில் இளம் வயதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எட்டு வயதில் அவரது சகோதரர் அவரது கண்ணில் துப்பாக்கியால் சுட்டதால் ரவை குண்டு தாக்கி வலது கண்பார்வையை இழக்க நேர்ந்தது. சாதாரணமாக இத்தகைய துன்பத்தை எதிர்கொள்வது கடினமான ஒன்றாகும்.

தனக்கேற்பட்ட பார்வை இழப்பையே தனக்கு கிடைத்த பரிசாக கருதத் தொடங்கினார். நன்றாகத் தெரியும் கண்ணை வைத்து அவருக்கு முன்னால் தோன்றும் காட்சிகளை பார்க்க முடியும் என்றும், பார்வையற்ற கண்ணால் கண்ணுக்குப் புலப்படாதவற்றை அகக் கண்ணால் பார்க்க முடியும் என்றும் கூறுவார். இது அவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகின்றது. மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் இருப்பதே பெரும்பாலானவர்களின் துயரத்திற்கு காரணம் என்கிறார் அவர்.

மனோபாவத்தில் மாற்றம் ஏற்படும்போது அவரவர் மனதில் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். அப்போது பலர் எதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று உணரத் தொடங்குவார்கள். வேலை, உறவுகள், தீய பழக்கங்களில் இருந்து வெளிவருவது போன்றவற்றில் மாற்றத்தை உண்டாக்க தயாராகிவிடுவார்கள்.

அப்போது அவர்கள் எடுக்கும் யதார்த்தமான முடிவு மற்றும் செயல்பாடுகள் அவர்களை சரியான பாதையில் பயணம் செய்ய உதவும். சில நேரங்களில் அத்தகைய முயற்சி மேற்கொள்ளும்போது பொறுமை இழந்துவிட நேரிடும். இதுவும் ஏற்புடைய உணர்வு வெளிப்பாடே. இருப்பதை ஏற்றுக் கொள்வது ஒரு வகை வளர்ச்சியே. அதே சமயம் இருப்பதில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் ஆக்கப்பூர்வமான, பயன்பாடு சார்ந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவரவர்களே சுயபரிசோதனை செய்து தங்களிடம் உள்ள மனக்குறையை களைந்து வெற்றிப் பாதையில் நடைபயில முயற்சி மேற்கொள்ள முடியும்.

விபத்துகள், தோல்விகள், இடர்பாடுகள் போன்றவைதான் பலரை வீறுகொண்டு எழச் செய்திருக்கின்றன. மனோபாவத்தில் உரியமாற்றம் இருந்தால் அனைவரின் வாழ்க்கையும் வளமானதாகவே அமையும். நிகழ்காலத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். புதியதோர் உலகத்தை உருவாக்குங்கள். உங்களுக்குள் தோன்றும் அல்லது சுமத்தப்படும் எதிர்மறை எண்ணங்களை வேரோடு களையுங்கள். வசந்த காலம் என்பது அனைவருக்கும் சாத்தியமே.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Empty Re: தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

Post by ரூபன் Fri Oct 30, 2009 8:32 pm

ஒருவரைப்பார்த்தவுடன்அவரைப்பற்றிதோற்றத்தின்அடிப்படையில்ஏற்படும் அபிப்ராயம்அப்படியேநிலைப்பதில்லை. பழகும்போதுஏற்படும்அபிப்ராயமே நிலையானது. முதலில்பார்த்தவுடன்அழகாகதோன்றுவதுஎன்பதுஉண்மையா என்றுபொறுத்திருந்துபார்த்தால்தான்தெரியும்என்கின்றார்ஜார்ஜ்பெர்னாட்ஷா.

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Empty Re: தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

Post by மீனு Fri Oct 30, 2009 8:38 pm

மிக மிக அருமையான தகவல் யாழவன்..நன்றிகள் பல..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Empty Re: தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

Post by யாழவன் Fri Oct 30, 2009 8:39 pm

ரூபன் wrote:ஒருவரைப்பார்த்தவுடன்அவரைப்பற்றிதோற்றத்தின்அடிப்படையில்ஏற்படும் அபிப்ராயம்அப்படியேநிலைப்பதில்லை. பழகும்போதுஏற்படும்அபிப்ராயமே நிலையானது. முதலில்பார்த்தவுடன்அழகாகதோன்றுவதுஎன்பதுஉண்மையா என்றுபொறுத்திருந்துபார்த்தால்தான்தெரியும்என்கின்றார்ஜார்ஜ்பெர்னாட்ஷா.

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Empty Re: தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

Post by யாழவன் Fri Oct 30, 2009 8:39 pm

மீனு wrote:மிக மிக அருமையான தகவல் யாழவன்..நன்றிகள் பல..
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Empty Re: தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum