ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு பயம் வேண்டாம்!

3 posters

Go down

தேர்வு பயம் வேண்டாம்! Empty தேர்வு பயம் வேண்டாம்!

Post by சாமி Mon Nov 25, 2013 11:48 am

ஆண்டுதோறும் மார்ச் மாதம்தான் பள்ளி இறுதித் தேர்வு வரும். இருந்தாலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முதலே தேர்வு ஜுரம் வந்துவிடும்.

என்னதான் வகுப்புகளில் ஆசிரியர்கள் தேர்வு பற்றிய பயத்தைப் போக்க எண்ணற்ற பகுதித் தேர்வு, மீள்பார்வைத் தேர்வு, மாதிரி பொதுத் தேர்வு என்று நடத்தினாலும், நேரில் வகுப்புகளில் ஆலோசனைகள் வழங்கினாலும் தேர்வு பற்றிய பயம் மாணவர்களிடத்தில் தொற்றிக் கொண்டுதான் இருக்கும்.

அது மட்டுமா...? பெற்றோர்கள், பத்திரிகைகள், தொண்டு நிறுவனங்கள் எல்லாம் ஒருநாள் கூட்டம் போட்டுச் சொன்னாலும் தேர்வு பயம் மாணவர்களை விட்டபாடில்லை!

இது ஏன் என்பதற்குச் சரியான ஒரே காரணம் உளவியல் சார்ந்த எண்ணமாகத்தான் இருக்க முடியும். இந்த பயம் ஏறக்குறைய 90 சதவீத மாணவர்களிடம் உண்டு என்பதுதான் நிஜம்!

சரி... இதற்கான தீர்வுகளாக கல்வித்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற நிபுணர்கள் - என்ன கூறுகிறார்கள்?

மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது பொதுத்தேர்வு என்பது வழக்கமான தேர்வுகளில் ஒன்றுதான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தெளிவு பெற்றுவிட்டால் பாதி பயம் போய்விடும்!

தேர்வுக்கான கால அட்டவணை ஒரு மாதம் முன்பே அறிவிக்கப்பட்டுவிடும். இதன் பிறகு தான் மாணவர்கள் சரியாகத் திட்டமிட வேண்டும்.

ஏற்கெனவே படித்துவிட்ட பாடங்களின் குறிப்புகளைத் தேர்வின் கால அட்டவணைப்படி வரிசைப்படுத்த வேண்டும்.
இதில் கடைசியாக வருகின்ற பாடப் பிரிவுகளிலிருந்து இரண்டிரண்டு நாள்கள் என்று கணக்கிட்டு அதிலிருந்து படிக்கத் தொடங்க வேண்டும். அதாவது கலைப்பாடங்கள்தான் கடைசியாக வரும். அவற்றை முதலில் தொடங்கி பின்னோக்கி, பாடப் பிரிவுகளைப் படிக்க வேண்டும்.

முதலில் மொழிப் பாடங்கள் தேர்வுதான் வரும். பாடங்களின் குறிப்புகளைத்தான் படிக்க வேண்டுமே தவிர ஒவ்வொரு பாடத்தையும் ஆழ்ந்து படிக்கக் கூடாது. குறிப்புகளைப் பார்த்தாலே அந்தப் பதிலின் முழுவிவரமும் புரிந்து விடும். இதை தங்ஹக் ஹற்
ஞ்ப்ஹய்ஸ்ரீங் என்பர்.

தேர்வுக்கு முன்பு மாணவர்கள் மூலமாகவோ அல்லது வெளி நபர்கள் மூலமாகவோ வரும் எந்த வதந்திகளையும் நம்பக் கூடாது. வேலை மெனக்கெட்டு ஒரு மாணவன் ஓடிவந்து ""டேய்.. இந்தக் கேள்வி வருகிறது.. அதற்குப் பதில் தெரியுமா?'' என்று குழப்பியும் மிரட்டியும் விடுவான். இதைக் கட்டாயம் அலட்சியம் செய்ய வேண்டும்!

தேர்வு நடக்கும் முந்திய இரவு 11 மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிட வேண்டும். ஆனால், விடியற்காலை 5 மணிக்கு எழுந்து அன்றைய தேர்வுப் பாடத்தின் குறிப்புகளைப் பார்வையிட வேண்டும். 8 மணியானால் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, தேர்வுக்குத் தேவையான ஹால் டிக்கெட், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் போன்ற பொருள்களை எடுத்துக்கொண்டு காலை உணவையும் முடித்துவிட்டு பெற்றோரின் ஆசியைப் பெற்றும், கடவுள் நம்பிக்கை உண்டானால் ஒரு நிமிடம் கடவுளை நினைத்துவிட்டும் தேர்வு நடைபெறும் இடத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும்.

""நான் படித்திருக்கிறேன், எனக்கு பதில் தெரியும், எழுதி விடுவேன்'' என்ற எண்ணத்துடன் தேர்வுக்குண்டான வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.

வினாத்தாளைப் பெற்ற பின்பு படிப்பதற்காக ஒதுக்கி இருக்கும் பத்து நிமிடத்தில் கேள்விகளை ஒருமுறைக்கு இரு முறை நன்றாகப் படித்து, கேள்வியின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வேகத்தில் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டால் எழுதும் பதிலும் தவறாகிவிடும்.

பின்பு நிதானமாகத் தெரிந்த கேள்விகளுக்கு முதல் பக்கத்தில் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். கடைசியில் தெரியாத கேள்விகள் என்று கட்டாயம் இருக்கும். அதை ஏதாவது ஒரு அனுமானம் கொண்டு பதிலை எழுதிவிட வேண்டுமே தவிர அதைத் தொடாமல் விடக்கூடாது!

மிக முக்கியமானது தேர்வு முடிந்தவுடன் தேர்வு எண், பக்க எண், கேள்வி எண் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று திருப்பிப் பார்த்து வரிசைப்படுத்திக் கட்டிக் கொடுக்க வேண்டும். இதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொடுக்க வேண்டும்.
தேர்வு முடிந்தவுடன் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அடுத்த தேர்வுக்கான ஆயத்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லாவற்றையும்விட இரண்டு முக்கிய விஷயங்களை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று தங்களின் உடல் நலம் காக்கப்படுதல். இரண்டாவது தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தமது பிற்கால வாழ்க்கை என்று எண்ணக்
கூடாது. நல்ல மதிப்பெண் கிடைத்தால் நல்ல கல்லூரிப் படிப்பு. இல்லையெனில், தொழில் சார்ந்த ஆயிரம் படிப்புகள் இருக்கின்றன.

பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டும். மாறாக மதிப்பெண்ணைக் குறி வைத்து தொந்தரவு செய்யக்கூடாது.

வாழ வழி ஆயிரம் உள்ளது. மாணவர்களுக்குத் தேவை தேர்வு மதிப்பெண் மட்டுமே அல்ல. கடுமையான உழைப்பும், முயற்சியுமே வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும்!

ஆகவே தேர்வு பயமும் வேண்டாம், தேர்விலும் பயம் வேண்டாம். தன்னம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாம்!
-கலைநன்மணி மகிழ்நன் - சிறுவர் மணி - தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தேர்வு பயம் வேண்டாம்! Empty Re: தேர்வு பயம் வேண்டாம்!

Post by ஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:45 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேர்வு பயம் வேண்டாம்! Empty Re: தேர்வு பயம் வேண்டாம்!

Post by amirmaran Mon Nov 25, 2013 2:32 pm

தேர்வு பயம் வேண்டாம்! 103459460


அன்புடன் அமிர்தா

தேர்வு பயம் வேண்டாம்! Aதேர்வு பயம் வேண்டாம்! Mதேர்வு பயம் வேண்டாம்! Iதேர்வு பயம் வேண்டாம்! Rதேர்வு பயம் வேண்டாம்! Tதேர்வு பயம் வேண்டாம்! Hதேர்வு பயம் வேண்டாம்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

தேர்வு பயம் வேண்டாம்! Empty Re: தேர்வு பயம் வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum