ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்குள் அட்லான்டிஸ

2 posters

Go down

கடலுக்குள் அட்லான்டிஸ Empty கடலுக்குள் அட்லான்டிஸ

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Nov 22, 2013 4:39 pm

அட்லான்டிஸ் என்ற மர்மத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கிரேக்க அறிஞர் ப்ளாட்டோதான்(இவர் தத்துவ மேதை சாக்ரடிஸின் சீடர்).அட்லான்டிஸ் என்பது மிக முன்னேறிய ஒரு தீவு நாகரீகத்தைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை. இதைப் பற்றி ப்ளாட்டோ தன்னுடைய “ தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் ” என்ற உரையாடல் தொகுப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடல்களில் வரும் கதாபாத்திரங்கள் , அட்லான்டிஸ் பற்றியும், அது (ப்ளாட்டோவின் காலத்துக்கு) 9000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூகம்பத்தினாலோ சுனாமியினாலோ அழிந்து விட்டது என்று குறிப்பிடுகின்றன.கதையில் இந்தத் தீவு ஹெர்குலஸ் தூண்களுக்கு வெளியே எங்கோ ( இன்றைய கிப்ரால்டர் ஜலசந்தியில் ) இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.



அட்லாண்டிஸ் பற்றிக் கிடைத்த எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு என்று பார்த்தால் அது. ப்ளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே.ஆனால் இது பற்றி மனிதர் கொஞ்சம் விலாவாரியாகவே எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.இவர் எழுதிய இந்த உரையாடல் சாக்ரடிஸ்,ஹெர்மோகிரெடஸ்,தைமியஸ் மற்றும் க்ரிடியஸ்ஸுக்கு நடுவில் நடக்கிறது. சாக்ரடிஸ் முன்னதாக சிறந்த சமூக அமைப்புகள் (ideal societies) பற்றிப் பேசியதற்கு பதிலளிக்கும் போது தைமியஸும் க்ரிடியஸும் அப்படிப் பட்ட சமூகத்தின் ஒரு உண்மையான கதையை சாக்ரடிசுக்கு கூற முன்வருகின்றனர். கதை 9000 வருடங்களுக்கு முன்னால் ஏதனியர்களுக்கும் அட்லாண்டியர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள்,போர் பற்றியது.ஏதனியர்கள் மறந்து போன இந்த அட்லாண்டிஸ் பற்றிய வரலாறு சோலோன் (ஏதனியப் பயணி மற்றும் கவிஞர்) என்பவருக்கு எகிப்திய குருமார்களால் சொல்லப்பட்டது. சோலான் இதை ட்ரோபிடஸ் என்ற தன் சொந்தக்காரருக்குச் சொல்லுகிறார். இந்த ட்ரோபிடஸின் மகன் க்ரிடியஸ். இந்தக் க்ரிடியஸின் பேரனின் பேரும் க்ரிடியஸ்தான்(ப்ளாட்டோவின் கொள்ளுத்தாத்தா).இந்தப் பேரன் க்ரிடியஸ்தான் தன் தாத்தா க்ரிடியஸ் தனக்கு அட்லான்டிஸ் பற்றி சொன்னதாக ப்ளாட்டோவின் உரையாடலில் (சாக்ரடிஸுக்கு) இந்தக் கதையைச் சொல்லும் பேர்வழி.
தைமியஸ் நீங்கலாக இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் அனைவரும் புராதன கிரேக்கத்தில் இருந்ததற்கான சரித்திரக் குறிப்புக்களும் ஆவணங்களும் இருந்திருக்கின்றன.மேலும் பல நூல்களில் இவர்களது வாழ்வும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால் இதை முழுவதும் கட்டுக்கதை என்றும் புறந்தள்ள முடியவில்லை.
கதையில் சொல்லப்பட்டபடி ,அட்லான்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள் , பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில் . நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான கோவிலில் கடல் கடவுள் பொசைடான் இறக்கைகளுள்ள ஆறு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப் படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்தனர். இப்படிப் போகிறது (பிளாடோவின்) வருணனை. இதைத் தவிர இங்கு வாழ்ந்த மக்கள், பழக்க வழக்கங்கள், ஆயுதங்கள், உலோகங்கள், சீதோஷண நிலை இப்படி A to Z எல்லாவற்றையும் பற்றி ப்ளாட்டோ விலாவாரியாக எழுதியிருக்கிறார். எவ்வளவு சிறப்பான ஒரு சமூகம் என்றால் உடோபியன் என்ற வார்த்தையே அட்லான்டிஸிலிருந்து மருவி வந்ததாகச் சொல்கிறார்கள்-அவ்வளவு உன்னதமான சமுதாயமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது அட்லாண்டிஸ் ஒவ்வொரு விடயத்திலும்.
கதையாடலைப் பார்த்தால் இப்படியும் ஒரு சமுதாயம் இருந்திருக்குமா என்ற வியப்பும் அது எங்கிருந்தது, ஏன் மறைந்த்து,எப்படி மறைந்தது என்ற தேடல்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக மக்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்து விட்டது.
ஆனால் பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் ப்ளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப் படுத்தியதென்று சொல்கிறார்கள். மறு தரப்போ சீரியசாக அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. கிட்டத்தட்ட நூறு இடங்கள் வரை புராதன அட்லாண்டிஸ் இருந்த இடமாக நம்பப்பட்டு சொல்லப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலவே வல்லுனர்களும் அகழ்வாராய்சியாளர்களும் ஆதாரக் குறிப்புகளுடன் இவையாக இருக்கலாம் என்று சொல்லும் இடங்கள். மற்றவை கிட்டத்தட்ட காலையில் எழுந்தவுடன் ”கனவில்” அட்லான்டிஸ் இருந்த இடம் தெரிந்தது டைப். கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும் தன்மைகள்(continental drift) பற்றி மேலும் பல தெளிவுகள் ஏற்பட்ட 1950 களில் அட்லான்டிஸ்-மறைந்த கண்டம் என்பது தவறானது என்றே கிட்த்தட்ட நிருபணமாகியுள்ளது.


பதினேழாம் நூற்றாண்டின் அறிஞர் அதனாசியஸ் கிர்ச்செர் அட்லாண்டிக் கடல் நடுவில் அட்லாண்டிஸ் என்று சுட்டிக்காட்டி வரைந்த வரைபடம்.

அட்லான்டிசின் புராண கதைச்சுருக்கம். கிரேக்கக் கடல் கடவுளான பொசைடான் ஒரு தீவில் க்ளெய்டோ என்ற அழகான ஒரு பெண்ணைப் பார்த்து மையல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. தலைச்சன் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு கடல் அகழிகள் அமைத்து ஒரு தீவு நகரமாக்கி விடுகிறார்.அதுவே அட்லஸின் பெயரால் அட்லாண்டிசாக ஆகி அட்லஸ் முதல் அனைவராலும் ஆளப் பட்டது. இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்தது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான கடல் கடவுள் பொசைடான் கோவில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோவிலுக்குள் உலவும் அளவு பிரும்மாண்டம். இப்படிப் போகிறது அட்லான்டிஸ் புராணக் கதை
இன்றைய தேதி வரை அட்லாண்டிஸ் பற்றி ஆயிரக் கணக்கில் ஆய்வுகள் , தேடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள் என்று வந்த வண்ணம் இருக்கிறது கிரீசின் அருகில் ,ஸ்பெயினின் அருகில் ,இத்தாலியின் அருகில் என்று எத்தனையோ இடங்களில் அட்லான்டிசைக் கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பூமியில் இருந்ததா, இல்லை அதீத மனித கற்பனையின் வெளிப்பாடா என்ற புதிர்களை உள்ளடக்கியவாறு இன்னும் இந்த உலகில் மர்மமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது அட்லான்டிஸ் என்னும் மாயாலோகம்.



- ச.சங்கர்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கடலுக்குள் அட்லான்டிஸ Empty Re: கடலுக்குள் அட்லான்டிஸ

Post by Dr.S.Soundarapandian Fri Nov 22, 2013 8:48 pm

ச.சங்கருக்கும் செம்மொழியான் பாண்டியனுக்கும் நான் நன்றி சொல்லுவது எதற்காக என்றால் , பிளேட்டோவின் அட்லாண்டிஸ் கதையோடு தமிழர் வரலாறு எதுவும் இயைந்துள்ளதா என்று பார்க்க ஒரு எழுச்சி தமிழர்களுக்கு வர வாய்ப்பு உள்ளது என்பதற்காக !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum