ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

3 posters

Go down

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் Empty 1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

Post by டார்வின் Fri 22 Nov 2013 - 16:58

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் K9m0svS4QRKmyHuP39cD+download

விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடுதான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம்த்தை அறிய மக்களிடம் அலையை ஏற்ப்படுத்தியது.அதுவே நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுகமாக தூண்டியது.
மேலும் திடுக்கிட வைக்கும் விஷயம் இந்தியாவின் ரஷ்ய தூதர் Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதாகும்.
காபூலில் ஆப்கன் கவர்னர் கோஸ்ட் -இடம் ஆப்கனுக்கான ரஷ்ய தூதர்," மாஸ்கோவில் காங்கிரஸ் அகதிகள் உள்ளனர். அதில் நேதாஜியும் உள்ளார். கிலாசி மலாங்கிற்கு நேதாஜியுடன் நேரடித் தொடர்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
1945க்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பின் வியட்னாமின் மரியாதைக்குரிய தலைவர் ஹோஸோமின் - உடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வியட்னாமில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
1945 டிசம்பர் 20 அன்று வெளியான செய்திக்குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோலொடோஃப் என்ற ரஷ்ய வெளியுறவு மந்திரி மார்ச் 1946-ல் நேதாஜி ரஷ்யாவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
1946 நவம்பர் 7 அன்று ராஜா யுவராஜ் தத்தா சிங் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் துணைத்தலைவரான ஷீல் பத்ர யாஜீ நேதாஜி, உயிருடன் இருப்பதாகக் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.
மாஸ்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள படோல்ஸ்க் இராணுவ ஆவணக் காப்பகத்தில் அலெக்சாண்டர் கொலசிரிகோவ் என்ற warsaw pact-ன் முன்னாள் மேஜர் ஜெனரல் 1996 அக்டோபரில் சில ஆவணங்களைப் பார்த்துள்ளார். அதில் நேதாஜியை ரஷ்யாவில் தங்க வைத்திருப்பதன் பல்வேறு விளைவுகள் குறித்து ஆராய்ந்ததற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதை நகலெடுக்கவோ ஆவண எண் போன்றவற்றைக் குறிப்பெடுக்கவோ அவர் அனுமதிக்கப்படவில்லை.
நேதாஜி உயிருடன் இருந்ததற்கு இவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதும் அதைப்பற்றி ஆராய அரசாங்கம் தயாராக இல்லை.
நேதாஜி சந்தித்த துரோகங்கள்[தொகு]

அஹமது ஹெச் ஜாஃபர் 1946 அக்டோபர் 3 அன்று உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் படேலிடம் நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு "இல்லை" என்று பதில் கூறினாராம்.சர்தார் மங்கள் சிங்கின் இதே கேள்விக்கும் இதேபதில் அளித்துள்ளார். மேலும் மங்கள் சிங் "நேருஜி நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளாரே, அது அரசாங்கத்தின் கருத்தா அல்லது சொந்தக் கருத்தா" என்று கேட்டதற்கு அரசாங்கத்திற்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறினாராம்.
குருஷேவ் நௌரோஜி என்ற காந்திஜியின் காரியதரிசி காந்திஜி சார்பாக புரஃபசர் லூயிஸ் பிஷருக்கு எழுதியகடிதத்தை ஃபைரவ் சந்திர பட்டாச்சார்யா, பிரின்ஸ்டன் யுனிவர்சிடி, USA- 1993-ல் பார்த்திருக்கிறார். அதன் ஒளிநகலை அமியா நாத் போஸ்க்கும் சமர் குஹாவிற்கும் அனுப்பியுள்ளார்.அக்கடிதம் 1946 ஜூலை 22-ல் எழுதப்பட்டுள்ளது. அதில் "இந்திய ராணுவத்தினருக்கு இந்திய தேசிய ராணுவத்தினரிடம் பரிவு உள்ளது. நேதாஜி ரஷ்யாவின் உதவியுடன் இந்தியா திரும்பினால் இந்தியர்களின் எழுச்சியை காந்தியாலோ காங்கிரசாலோ தடுக்க இயலாது", என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கடிதத்தில் நேதாஜியின் அப்போதைய நிலைமை குறித்தும் கேள்விகள் உள்ளன. காந்திஜி 1946 ஜனவரி 6-ல் மேற்கு வங்கத்தில் காண்டை என்ற இடத்தில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் நேதாஜி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.
நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது. அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தாராம்.
மீரட்டைச் சேர்ந்த ஷியாம்லால் ஜெயின் என்பவர் கோசலா கமிஷன் முன்பு கொடுத்த விவரம் பின்வருமாறு:
1945 டிசம்பர் 26 அல்லது 27 அன்று ஸ்ரீ ஜவஹர் லால் நேரு என்னை ஸ்ரீ ஆசஃப் அலி இருப்பிடத்திற்கு தட்டச்சு இயந்திரத்துடன் வரச்சொன்னார். கொஞ்சம் தட்டச்சு செய்த பிறகு அவர் தனது அங்கியின் பையிலிருந்து எடுத்த ஒரு தாளை 4 நகல் தட்டச்சு செய்யும்படி கூறிவிட்டு ஸ்ரீ ஆசஃப் அலியுடன் பேசப் போய்விட்டார். அதில் "நேதாஜி 1945 ஆகஸ்டு 23 அன்று பைரன்(மஞ்சூரியா) பகுதிக்கு பகல் சுமார் 1.30 மணிக்கு (சைகானிலிருந்து) வந்தார். அது ஜப்பானியரின் வெடிகுண்டு வீசும் விமானம். நேதாஜி தேநீரும் வாழைப்பழமும் சாப்பிட்டார். நேதாஜி கைக்கு ஒன்றாக 2 பெட்டிகளை எடுத்துக்கொண்டு 4 பேருடன் ஒரு ஜீப்பில் ஏறினார். அதில் ஒருவர் ஜெனரல் ஷெய்தி(நேதாஜியுடன் விமான விபத்தில் மரணமடைந்தததாகக் கூறப்பட்டவர்). ஜீப் ரஷ்ய எல்லைப்பக்கமாகச் சென்றது. 3 மணி நேரம் கழித்து ஜீப் திரும்பி வந்து விமானியிடம் தகவல் தெரிவித்தபிறகு விமானம் டோக்கியோ சென்றது."', என்று எழுதியிருந்தது. கையொப்பம் புரியாததால் ஸ்ரீ நேருவுக்காக காத்திருந்த போது கடிதத்தைப் பலமுறை படித்தேன். பின்னர் ஸ்ரீ நேரு 4 தாள்களைக் கொடுத்து அவர் கூறுவதைத் தட்டச்சு செய்யச் சொன்னார். அது
"திரு.கிளமண்ட் அட்லீ,
பிரிட்டிஷ் பிரதம மந்திரி,
10, டௌனிங்க் தெரு,
லண்டன்.
அன்புள்ள திரு.அட்லீ,
சுபாஷ் சந்திர போஸ், உங்கள் போர்க்குற்றவாளி, ரஷ்ய எல்லைக்குள் வர ஸ்டாலினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் அறிகிறேன். இது ரஷ்யாவின் ஏமாற்றுவேலையும் நம்பிக்கைத் துரோகமும் ஆகும். ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்காவுடன் கூட்டு இருக்கும் போது இப்படிச் செய்யக்கூடாது. அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.
உங்கள் அன்புள்ள,
ஜவஹர் லால் நேரு.
மேற்கண்ட விஷயம் உள்ள முகவரி: hindustantimes.com
நேதாஜி இந்திய தேசிய ராணுவம் அமைத்து நேச நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்ததால் நேசநாடுகள் அவரைப் போர்க்குற்றவாளியாகக் கருதின. அவர்கள் குற்றம் என்று குறிப்பிடுவது இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய சுதந்திரத்திற்காக நாடு நாடாக அலைந்து ஆதரவு திரட்டிப் பாடுபட்டது ஆகும். இந்திய தேசிய ராணுவத்தின் தியாகம் மிகுந்த செயல்பாடுகளால் இந்திய ராணுவத்திற்குள்ளேயே ஆங்கில எதிர்ப்பு தோன்றிவிட்டது. அதனால்தான்- இனியொரு போராட்டம் இந்தியாவில் ஏற்பட்டால் அதை அடக்க இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால்தான்- பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது. அதனால்தான் நேசநாடுகளுக்கு நேதாஜி மீது அப்படி ஒரு கோபம். பார்த்த இடத்தில் தண்டிக்கக் காத்திருந்தார்கள். ஆனால் அவர் யார் கையிலும் சிக்கவில்லை. இந்திய காங்கிரஸ்காரர்களை விட ஜப்பன் அரசுக்கு நேதாஜி மீது மிகுந்த மரியாதை இருந்ததால்தான் நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது. நேச நாடுகள் கூட்டணியில் இருந்தாலும் ரஷ்ய அரசு அவரைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. இந்திய அரசு கேட்டுக்கொண்டால் 45 நாட்களில் நேதாஜியை இந்தியாவுக்கு அனுப்புவதாக ரஷ்ய அரசு கூறியும் கேட்கத்தான் யாருக்கும் மனமில்லை. ஏனெனில் மக்களுக்கு நேதாஜி மீது மிகுந்த மரியாதை இருந்தது.

1971 ஜனவரி 23 அன்று வெளியான ஒரு செய்தித் தாள் குறிப்பு
நேதாஜியின் மெய்க்காப்பாளரான திரு. உஸ்மான் படேல் கூறுகிறார்," காந்திஜி, நேரு, ஜின்னா, மௌலானா ஆசாத் ஆகியோர் பிரிட்டிஷ் நீதிபதி ஒருவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்களாம். அது நேதாஜி இந்தியாவில் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டு பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்பதாகும்". இதை மௌலானா ஆசாத் தன்னிடம் கூறியதாகவும் தான் எழுதப்போகும் புத்தகத்தில் இதைக் குறிப்பிடப்போவதாக கூறியதாகவும் கோசலா கமிஷன் முன்பு கூறியுள்ளார். மேலும் கூறுகையில் அவர் கண்ணீர் விட்டுக் கதறினார். உஸ்மான் படேலை 1945 அக்டோபர் 13 அன்று கைது செய்யும்பொழுது அவரிடம் இருந்து 21,600 சிங்கப்பூர் டாலர் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய தேசிய ராணுவத்தினருக்கு உணவுக்கான பொருட்கள் வாங்க வைத்திருந்த அந்தப்பணத்தை அவர் ரப்பர் விற்று சம்பாதித்த பணம் என்று கூறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மேற்கண்ட விஷயம் உள்ள முகவரி: hindustantimes.com
அம்ரித் லால் சேத் என்ற குஜராத் தினசரி ஜனம்பூமியின் எடிட்டர் நேருவுடன் மார்ச் 1946-ல் சிங்கப்பூருக்குச் சென்றவர்களில் ஒருவர். அங்கிருந்து வந்தவுடன் சரத் சந்திர போஸிடம் பின்வருமாறு கூறினார்." மௌண்ட்பேட்டன் நேருவிடம் சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்ய வேண்டாம் என்றும் இந்திய ராணுவத்தில் இந்திய தேசிய ராணுவ வீரர்களைச் சேர்க்கவேண்டாம் என்றும் கூறியதாக தகவல் உள்ளது. இந்திய தேசிய ராணுவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது நேதாஜி இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் அவரிடம் தலைமைப்பதவியைத் தட்டில் வைத்து அளிப்பதற்குச் சமம் ஆகும் என்று கூறினாராம்."
wikipedia
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் Empty Re: 1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

Post by amirmaran Fri 22 Nov 2013 - 17:26

கடைசி வரை நேதாஜியின் மரணம் ஒரு மர்மமாகவே உள்ளது


அன்புடன் அமிர்தா

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் A1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் M1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் I1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் R1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் T1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் H1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் Empty Re: 1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

Post by arul123 Fri 22 Nov 2013 - 22:27

மிக அரிய தகவல் ............மிக்க நன்றி அவரின் மரணத்தின் மர்மம் இன்று வரை விலகவில்லை ...........
arul123
arul123
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் Empty Re: 1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகாவில் ஜூன் 7 க்குப் பிறகு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு
» சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு
» வானவில் பெண்கள்: சி.பி.ஐ.க்குப் பயிற்சியளிக்கும் மதுரைப் பெண்
»  இந்தோனேசியா சுய விடுதலையை பிரகடனம் செய்தது (ஆக.17, 1945)
» 'ரெடி'க்குப் பின்?.. கவலையில் ஆசின்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum