Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயோ இது உண்மையா?
+6
ஜாஹீதாபானு
ayyasamy ram
M.M.SENTHIL
ராஜா
amirmaran
arul123
10 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஐயோ இது உண்மையா?
ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி கிடையாது அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
arul123- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
very interesting... மீதி கதை எங்கே? நன்றாக உள்ளது... முழுவதும் பதிவிடுங்கள்... முழுவதும் தெரிந்து கொள்ள ஆவலில் உள்ளானே.
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
அந்த அலறல் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இருவருடைய இதயமும் நின்றேவிட்டது ஒரு நிமிடம் அதே நேரம் அந்த வெளிச்சமும் அதே இடத்தில் நின்றது பின்னர் சற்று பாதையை விட்டு விலகி காட்டிற்க்குள் சென்று ஏரியின் பின் பகுதியில் சென்று இவர்களுக்கு நேராக நின்றது,இவர்கள் இருவருமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயத்தில் மயக்கம் போட்டு அந்த மரத்தடியிலேயே விழுந்துவிட்டனர்
அவர்கள் பின்னால் வந்த ஒருவர் மரத்திற்க்கு பின்னால் ஒழிந்திருக்கும்போது அவரை ஏதோ காலில் பலமாகக் கடித்துவிட்டது அந்த வலி தாங்கமுடியாமல் தான் பலமாக கத்தியிருக்கிறார் அவரும் சிரிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்து விட்டார், அவர்கள் மூவரும் மயங்கிய பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ஒளி அவர்களை நோக்கி வருகிறது
அவர்களின் முகத்தில் காலைக் கதிரவனின் வெப்பக் கதிர்கள் தன் முகத்தில் பட்டவுடன் கண் விழித்தனர் விழித்துப் பார்த்தால் மூவருக்குமே அதிர்ச்சி,ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறனர் முதலில் அவர்களின் பெயர்களைச் சொல்லி விடுகிறேன் முதலில் வந்த இருவரில் ஒருவரின் பெயர் முத்தையன்,இன்னொருவர் கந்தவேல்,அவர்களை பின் தொடர்ந்து வந்தது வேறு யாருமல்ல கந்தவேலின் அண்ணண் மகன் முருகன் தான் முருகனும் வெளியூருக்கு சென்று திரும்ப தாமத மாகிவிட்டது அதனால் காட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த போது இவர்கள் இருவரும் வருவதைக் கண்டவுடன் அவன் ஒழிந்து கொண்டான் அதற்க்கான காரணமும் இருக்கிறது அதை பிறகு கூறுகிறேன் அவர்கள் முன்னால் சென்றவுடன் இவனும் பின்னாலேயே சென்றுவிடலாம் என்று தான் மறைந்து கொண்டான்,அவர்கள் முன்னால் சென்றதும் பின் தொடர்ந்து சென்றான்
முருகனைப் பார்த்தவுடன் கதிர்வேல் ஒரு நிமிடம் ஆடித் தான் போய்விட்டார்,பழையதையெல்லாம் மறந்து அவனிடம் பாசமாக நீ எங்கேயடா வந்தாய் நீயா இரவில் அலறியது அவனும் ஆமாம் ஏதோ காலில் கடித்து சதையப்பிய்த்துவிட்டது என்று கடிபட்ட இடத்தை பார்த்தால் காலில் எந்த விதமான காயமும் இல்லை பலத்த அதிர்ச்சி அதைவிட மிகுந்த அதிர்ச்சி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை அடர்ந்த வனத்திற்க்குள் ஒரு மிகப் பெரிய மரத்தின் கீழே இருந்தனர் அங்கு மனித நடமாட்டத்திற்க்கான எந்த வாய்ப்பும் தெரியவில்லை ,இரவு நடந்தது ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது ம்யக்கமடைந்தது வரை தெரிகிறது,அதற்க்குமேல் எப்படி இங்கு வந்தோம் எப்படி காலில் ஆன காயம் காணாமல் போனது நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம்
அப்பொழுது ஏதோ பெரிய சத்தம் கேட்டது பறவைகள் அனைத்தும் நான்கு திசைகளிலும் ஆபத்து வருவதைப் போன்று அலறின,ஏதோ அவர்களை நோக்கி வருகிறது.................................
இன்னும் பல த்கில் அனுபங்கள் உங்களுக்காக ............................மீண்டும்
அவர்கள் பின்னால் வந்த ஒருவர் மரத்திற்க்கு பின்னால் ஒழிந்திருக்கும்போது அவரை ஏதோ காலில் பலமாகக் கடித்துவிட்டது அந்த வலி தாங்கமுடியாமல் தான் பலமாக கத்தியிருக்கிறார் அவரும் சிரிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்து விட்டார், அவர்கள் மூவரும் மயங்கிய பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ஒளி அவர்களை நோக்கி வருகிறது
அவர்களின் முகத்தில் காலைக் கதிரவனின் வெப்பக் கதிர்கள் தன் முகத்தில் பட்டவுடன் கண் விழித்தனர் விழித்துப் பார்த்தால் மூவருக்குமே அதிர்ச்சி,ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறனர் முதலில் அவர்களின் பெயர்களைச் சொல்லி விடுகிறேன் முதலில் வந்த இருவரில் ஒருவரின் பெயர் முத்தையன்,இன்னொருவர் கந்தவேல்,அவர்களை பின் தொடர்ந்து வந்தது வேறு யாருமல்ல கந்தவேலின் அண்ணண் மகன் முருகன் தான் முருகனும் வெளியூருக்கு சென்று திரும்ப தாமத மாகிவிட்டது அதனால் காட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த போது இவர்கள் இருவரும் வருவதைக் கண்டவுடன் அவன் ஒழிந்து கொண்டான் அதற்க்கான காரணமும் இருக்கிறது அதை பிறகு கூறுகிறேன் அவர்கள் முன்னால் சென்றவுடன் இவனும் பின்னாலேயே சென்றுவிடலாம் என்று தான் மறைந்து கொண்டான்,அவர்கள் முன்னால் சென்றதும் பின் தொடர்ந்து சென்றான்
முருகனைப் பார்த்தவுடன் கதிர்வேல் ஒரு நிமிடம் ஆடித் தான் போய்விட்டார்,பழையதையெல்லாம் மறந்து அவனிடம் பாசமாக நீ எங்கேயடா வந்தாய் நீயா இரவில் அலறியது அவனும் ஆமாம் ஏதோ காலில் கடித்து சதையப்பிய்த்துவிட்டது என்று கடிபட்ட இடத்தை பார்த்தால் காலில் எந்த விதமான காயமும் இல்லை பலத்த அதிர்ச்சி அதைவிட மிகுந்த அதிர்ச்சி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை அடர்ந்த வனத்திற்க்குள் ஒரு மிகப் பெரிய மரத்தின் கீழே இருந்தனர் அங்கு மனித நடமாட்டத்திற்க்கான எந்த வாய்ப்பும் தெரியவில்லை ,இரவு நடந்தது ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது ம்யக்கமடைந்தது வரை தெரிகிறது,அதற்க்குமேல் எப்படி இங்கு வந்தோம் எப்படி காலில் ஆன காயம் காணாமல் போனது நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம்
அப்பொழுது ஏதோ பெரிய சத்தம் கேட்டது பறவைகள் அனைத்தும் நான்கு திசைகளிலும் ஆபத்து வருவதைப் போன்று அலறின,ஏதோ அவர்களை நோக்கி வருகிறது.................................
இன்னும் பல த்கில் அனுபங்கள் உங்களுக்காக ............................மீண்டும்
arul123- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
ஒவ்வொரு பகுதிக்காகவும் தனி திரி துவங்க வேண்டாம் , இங்கேயே தொடர்ந்து பதிவிடுங்கள்
Re: ஐயோ இது உண்மையா?
வழி காட்டிய நடத்துனருக்கு மிக்க நன்றி...............
arul123- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
ஐயோ இது உண்மையா? என்ற கேள்விக்கு ஏற்ற கதை. தொடரவும் தொய்வில்லாமல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
மிக்க நன்றி M.M.SENTHIL........
arul123- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
அடுத்த பகுதி எப்போ அருள் ?!
ஒவ்வொரு பகுதிகளையும் இன்னும் ஓரிரு பக்கம் அதிகமா கொடுங்க , படிக்க ஆர்வமா இருக்கு
ஒவ்வொரு பகுதிகளையும் இன்னும் ஓரிரு பக்கம் அதிகமா கொடுங்க , படிக்க ஆர்வமா இருக்கு
Re: ஐயோ இது உண்மையா?
ஐயோ இது உண்மையா? 3
ஏதோ ஒரு பெரிய சத்தம் ஏதோ அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டவுடன் மூவருக்கும் ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை சட்டென்று முருகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த செடிகொடி அடங்கிய புதருக்குள் சென்று மறைந்து கொண்டனர்
சத்தம் மிக அருகாமையில் கேட்டது இப்பொழுது நிறைய சத்தங்கள் கேட்டது புதரின் அருகில் வரும்போது தான் தெரிந்தது அவை கரடிகள் என்று அவைகள் அனைத்தும் அந்த பெரிய மரத்தின் கீழே நின்று விளையாட ஆரம்பித்தன இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு தண்ணீர் தாகம் அதிகமானது ஆனால் வெளியே சென்றால் உயிரே போய்விடும் என்ன செய்வது அப்பொழுது
திடீரென்று ஒரு கரடி அந்த புதரையே உற்று நோக்கியது,பின்னர் மெதுவாக அந்த புதரை நோக்கி வர ஆரம்பித்தது இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது என்னசெய்வதென்றே தெரியவில்லை சட்டென்று முருகன் தன்னருகே காய்ந்த மர கட்டை ஒன்று கிடந்தது அதை கையில் எடுத்துக் கொண்டான் எது நடந்தாலும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு அதை தாக்க தயாரானான் அவர்கள் எங்களால் அதிக தூரம் ஓடக்கூட முடியாது பொறுமையாய் இரு என்று சமாதானம் செய்தார்கள்
புதருக்கு அருகில் வந்து விட்டது நுகர்ந்து பார்க்கிறது தன் முகத்தை புதரில் நுழைக்க முற்படும் போது அதற்க்கு பின்னால் இன்னொரு சிறிய கரடி அதன் மீது வந்து வேகமாக மோதி விளையாடியது சட்டென்று திரும்பி அதனுடன் விளையாட ஆரம்பித்து விட்டது
சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைத்தும் வேறொரு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன அப்பொழுது தான் தன் சுயநிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர்,அங்கிருந்து வெளியே வந்தனர்
முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் பின்னர் எது நடந்தாலும் சரி என்று தண்ணீர் இருக்கிமிடம் தேட ஆரம்பித்தனர் அதற்க்கு அவர்களுக்கு அதிக நேரம் தேட அவசியமில்லாமல் சிறிது தூரத்திலேயே தண்ணீர் ஓடும் சல சல சத்தம் கேட்டது அந்த திசையை நோக்கி வேகமாக நடந்து சென்று பார்த்தால் அங்கு மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அதில் ஓடும் தண்ணீர் எந்த வித அசுத்தமும் இல்லாமல் அவ்வளவு சுத்தமாக இருந்தது மூவரும் வேகமாக சென்று தண்ணீரை தொட்டவுடன் வேகமாக கையை பின்னோக்கி இழுத்தனர் அவ்வளவு குளிர் மையாக இருந்தது ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாக அருந்த ஆரம்பித்தனர் ,தண்ணீர் உள்ளே செல்ல செல்ல அவர்களுக்கு ஒரு இனம் புரியாத் சக்தி ஒன்று தன்னுள் நுழைவதாக உணர்ந்தனர்
அதனருகே சிறிது தூரத்தில் ஏதோ பழங்களின் தோட்டங்கள் இருப்பதைக் கண்டனர் அங்கே சென்று பார்த்தால் பல வகை பழங்கள் காய்த்து தொங்கின பறித்து சாப்பிட்டு பசியாரினர் அங்கேயே ஒரு மரத்தின் அடியில் படுத்தனர் படுத்தவுடன் சோர்வினால் உறங்கிவிட்டனர் கண்விழித்து பார்த்த போது மாலை நேரமாகி சூரியன் மறையத் தொடங்கிவிட்டது ,அப்பொழுது தன் சுய ஞாபகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்தன ,இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் ,எப்படி நம் ஊருக்கு செல்வது நாம் உயிரோடு திரும்பி செல்வோமா என்று பயம் உருவாகியது இன்றும் இந்த காட்டில் தான் இருக்க வேண்டுமா ? என்று மூவரும் பேசிக் கொண்டே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே அப்பொழுது
ஒரு ஒற்றையடிப் பாதை தெரிந்தது அதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி எல்லோரின் மனதிலும் ,இங்கு யாரோ இருக்கிறார்கள் அவர்களிடம் சென்றால் கட்டாயம் வழிகிடைக்கும் என்று அந்த பாதை வழியாக நடக்க ஆரம்பித்தனர் இருட்ட ஆரம்பித்தது ஏற்க்கனவே மரங்கள் அடர்ந்து இருந்ததால் வெளிச்சம் குறைவாக தான் இருந்தது ,இருட்டு அதிகமானதால் பாதையை தவிர ஒன்றுமே கண்களுக்கு தெரியவில்லை வேகமாக நடந்தனர் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது .
அப்பொழுது அந்த வழியில் இவர்களை பார்த்துக் கொண்டு ......................?
இன்னும் திகில் தொடரும்
ஏதோ ஒரு பெரிய சத்தம் ஏதோ அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டவுடன் மூவருக்கும் ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை சட்டென்று முருகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த செடிகொடி அடங்கிய புதருக்குள் சென்று மறைந்து கொண்டனர்
சத்தம் மிக அருகாமையில் கேட்டது இப்பொழுது நிறைய சத்தங்கள் கேட்டது புதரின் அருகில் வரும்போது தான் தெரிந்தது அவை கரடிகள் என்று அவைகள் அனைத்தும் அந்த பெரிய மரத்தின் கீழே நின்று விளையாட ஆரம்பித்தன இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு தண்ணீர் தாகம் அதிகமானது ஆனால் வெளியே சென்றால் உயிரே போய்விடும் என்ன செய்வது அப்பொழுது
திடீரென்று ஒரு கரடி அந்த புதரையே உற்று நோக்கியது,பின்னர் மெதுவாக அந்த புதரை நோக்கி வர ஆரம்பித்தது இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது என்னசெய்வதென்றே தெரியவில்லை சட்டென்று முருகன் தன்னருகே காய்ந்த மர கட்டை ஒன்று கிடந்தது அதை கையில் எடுத்துக் கொண்டான் எது நடந்தாலும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு அதை தாக்க தயாரானான் அவர்கள் எங்களால் அதிக தூரம் ஓடக்கூட முடியாது பொறுமையாய் இரு என்று சமாதானம் செய்தார்கள்
புதருக்கு அருகில் வந்து விட்டது நுகர்ந்து பார்க்கிறது தன் முகத்தை புதரில் நுழைக்க முற்படும் போது அதற்க்கு பின்னால் இன்னொரு சிறிய கரடி அதன் மீது வந்து வேகமாக மோதி விளையாடியது சட்டென்று திரும்பி அதனுடன் விளையாட ஆரம்பித்து விட்டது
சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைத்தும் வேறொரு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன அப்பொழுது தான் தன் சுயநிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர்,அங்கிருந்து வெளியே வந்தனர்
முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் பின்னர் எது நடந்தாலும் சரி என்று தண்ணீர் இருக்கிமிடம் தேட ஆரம்பித்தனர் அதற்க்கு அவர்களுக்கு அதிக நேரம் தேட அவசியமில்லாமல் சிறிது தூரத்திலேயே தண்ணீர் ஓடும் சல சல சத்தம் கேட்டது அந்த திசையை நோக்கி வேகமாக நடந்து சென்று பார்த்தால் அங்கு மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அதில் ஓடும் தண்ணீர் எந்த வித அசுத்தமும் இல்லாமல் அவ்வளவு சுத்தமாக இருந்தது மூவரும் வேகமாக சென்று தண்ணீரை தொட்டவுடன் வேகமாக கையை பின்னோக்கி இழுத்தனர் அவ்வளவு குளிர் மையாக இருந்தது ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாக அருந்த ஆரம்பித்தனர் ,தண்ணீர் உள்ளே செல்ல செல்ல அவர்களுக்கு ஒரு இனம் புரியாத் சக்தி ஒன்று தன்னுள் நுழைவதாக உணர்ந்தனர்
அதனருகே சிறிது தூரத்தில் ஏதோ பழங்களின் தோட்டங்கள் இருப்பதைக் கண்டனர் அங்கே சென்று பார்த்தால் பல வகை பழங்கள் காய்த்து தொங்கின பறித்து சாப்பிட்டு பசியாரினர் அங்கேயே ஒரு மரத்தின் அடியில் படுத்தனர் படுத்தவுடன் சோர்வினால் உறங்கிவிட்டனர் கண்விழித்து பார்த்த போது மாலை நேரமாகி சூரியன் மறையத் தொடங்கிவிட்டது ,அப்பொழுது தன் சுய ஞாபகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்தன ,இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் ,எப்படி நம் ஊருக்கு செல்வது நாம் உயிரோடு திரும்பி செல்வோமா என்று பயம் உருவாகியது இன்றும் இந்த காட்டில் தான் இருக்க வேண்டுமா ? என்று மூவரும் பேசிக் கொண்டே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே அப்பொழுது
ஒரு ஒற்றையடிப் பாதை தெரிந்தது அதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி எல்லோரின் மனதிலும் ,இங்கு யாரோ இருக்கிறார்கள் அவர்களிடம் சென்றால் கட்டாயம் வழிகிடைக்கும் என்று அந்த பாதை வழியாக நடக்க ஆரம்பித்தனர் இருட்ட ஆரம்பித்தது ஏற்க்கனவே மரங்கள் அடர்ந்து இருந்ததால் வெளிச்சம் குறைவாக தான் இருந்தது ,இருட்டு அதிகமானதால் பாதையை தவிர ஒன்றுமே கண்களுக்கு தெரியவில்லை வேகமாக நடந்தனர் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது .
அப்பொழுது அந்த வழியில் இவர்களை பார்த்துக் கொண்டு ......................?
இன்னும் திகில் தொடரும்
arul123- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
Re: ஐயோ இது உண்மையா?
மிக்க நன்றி ராஜா
இப்பொழுது பதிவுசெய்துவிட்டேன் அடுத்த பகுதியை தொடர்ந்து பதிவு செய்கிறேன் .............என் சுய முயற்ச்சியின் பதிவு
படிக்கும் அனைவரும் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள் .............
இப்பொழுது பதிவுசெய்துவிட்டேன் அடுத்த பகுதியை தொடர்ந்து பதிவு செய்கிறேன் .............என் சுய முயற்ச்சியின் பதிவு
படிக்கும் அனைவரும் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள் .............
arul123- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|