புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_m10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_m10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_m10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_m10நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Nov 22, 2013 4:30 pm

பெர்முடா முக்கோணம், ராம் – சேது பாலம், போன்று உலகில் விடை கண்டறியப்படாத விசித்திரங்களுள் ஒன்றைத்தான். நாஸ்கா கோடுகள் என்று அழைக்கப்படும் வடிவங்கள் தென் அமெரிக்காவின் பெரு என்ற நகரின் அருகே மலைத் தொடரில் அமையப்பட்டுள்ளது. சாதாரணமாக தரையில் இருந்து பார்த்தால் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத நிலப்பரப்பாக தென்படும் இந்த மலைத்தொடர் சற்று உயரப் பறந்து வானில் இருந்து பார்க்கும் போது அதிசயமான வரிகளையும், உருவங்களையும் கொண்டதாகத் தெரிகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 மீட்டர் உயரமுள்ள இந்த மலைத் தொடரில் மிகவும் நேர்த்தியாக, துள்ளியமாக சமன் செய்யப்பட்டார் போல காட்சி தரும் இந்த நிலபரப்பு நவீன கால விமான ஓடுதளத்தைப் போன்றே காட்சி அளிக்கின்றன. மேலும் இங்கே சிலந்திப் பூச்சிகளின் உருவங்களும் தென்படுகின்றன. இவை அனைத்தும் பண்டைய கால விமான தளங்களாகவும், விமானம் தரையிறங்க தேவையான அறிகுறிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகங்களை உருவாக்குகுன்றன.

சரி, இதற்கும் தமிழருக்கும் என்னப்பா சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா? சற்று விரிவாக பார்ப்போம்.

உலகமெங்கும் உள்ள பகுதிகளில் சென்று வாணிபம் செய்து தம் நாகரீகத்தை வேறூன்றியவன் தமிழன் என்று நாம் சொல்லியிருந்தாலும் அதை இங்கு ஆதாரங்களுடன் எடுத்துரைக்க கடமைப்பட்டிருகிறோம்.

தென் அமெரிக்காவில் நவராத்திரித் திருவிழா!
பாரதத்தில் கொண்டாடப்படும் மிகவும் முக்கிய திருவிழாக்களுள் ஒன்றான நவராத்திரித் திருவிழா பெரு நகரில் ராம – சீதா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தென் அமெரிக்க தெய்வங்களின் ஒற்றுமை!

மெக்ஸிக சிவாலயம்
தென் அமெரிக்காவில் முழுவதும் தோண்டிப் பார்க்கும் போது விநாயகர் சிலைகள் கிடைகின்றன. யானை வடிவத்துடன் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த தெய்வச் சிலைகளைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். இதில் என்ன வியப்பு என்று கேட்க்கிறீர்களா? தென் அமெரிக்கப் பகுதிகளில் யானைகளே இருந்ததில்லை, இன்றும் வாழ்வதில்லை என்பது தான் அந்த வியப்பிற்கு காரணம். மேலும் இப்பகுதி மக்கள் சூரியனை வழிபடும் பழக்கம் கொண்டவர்கள்.

மொழி ஒற்றுமை!
ஸ்பெயின் படையெடுப்பிற்கு முன்னர் மெக்ஸிகோவில் வாழ்ந்த மக்கள் “Aztec” என்று அழைக்கப்பட்டனர். இது “Asthikar” என்ற சொல்லில் இருந்து மறுவியதாக இருக்கலாம்! இதே போல் பெருவில் வாழ்ந்த மக்கள் “Incas” என்றழைக்கப்பட்டனர். இது “Ina” என்ற சொல்லில் இருந்து உறுப்பெற்றதாக இருக்கக் கூடும். “இனா” என்பது சூரியனைக் குறிக்கும் ஒரு சொல். இராமரை “இனகுல திலகம்” என்று அழைப்பதுண்டு. அதாவது சூரிய குலத்தைச் சேர்ந்தவன் என்று பொருள்.

மேலும் இந்த பகுதியில் வாழும் மக்கள் கடலில் பயன்படுத்தும் ஓடங்களை கட்டுமரம் என்று அழைக்கின்றனர். இது ஒரு தூய தமிழ் சொல் என்பதும் இன்றளவும் தமிழில் கட்டுமரம் எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது உலகமறிந்தது. மேலும் இவர்களின் மூலம் தான்ன் ஸ்பெயின், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி வாயிலாக கட்டுமரம் என்ற சொல் ஆங்கிலத்தில் ஊடுறுவியது என்கிறது மொழி ஆய்வுக் குறிப்பு. அது மட்டுமல்ல அவர்கள் இன்றும் கட்டுமரம் கட்டும் தொழில் நுட்பம் தமிழர்களின் அதே தொழில் நுட்பத்தை ஒத்து அமைந்துள்ளது.

தமிழரின் கடல் பிரயாணம்!
பழந்தமிழர் கடல் பிரயாணங்களில் தலைசிறந்து காணப்பட்டனர்.”இந்தியர்கள் தலைசிறந்த கடல் பிரயாணிகளாக இருந்தனர் மேலும் அவர்கள் நாகரீகத்திலும் முதிற்சி பெற்றவராய் இருந்தனர். கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூற்றாண்டிற்கு முன்னரே அவர்களுடைய கலாச்சாரத்தை ஜாவா, பாலி, சுமத்ரா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சாம்பா, அன்னம் மற்றும் சியாம் ஆகிய தேசங்களில் நிறுவி 14ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்தனர்” என்று ஆராய்ச்சியாளர், சமன் லால் கூறுகிறார்.

இது மட்டுமல்ல, “அமெரிக்க கண்டத்திற்கு வந்து அமெரிக்கர் என்று பெயர்பெற்றவர்கள் அனைவரும், கிழக்கே இருக்கும் இந்தியாவில் இருந்து நீரோட்டத்தால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள்”, என்று மெக்ஸிக அரசு ஆராய்சியாளரே தெரிவித்திருக்கிறார். இது மெக்ஸிக வெளியுறவு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தென் அமெரிக்க அரசு மற்றும் விழாக்கள்!தென் பாரதத்திலும் பெங்காலிலும் சரக் பூஜா என்று ஒரு விழா கொண்டாடப்படுவதுண்டு. இதே விழா மெக்ஸிகோவிலும், பெருவிலும் கொண்டாடப்படுகிறது. மெக்ஸிகோவில் உள்ள பழங்கால கோவில்கள் கம்போடியாவில் உள்ள தமிழர்கள் கட்டிடக் கலையுடன் கட்டப்பட்ட கோவில்களைப் போல் இருக்கின்றன. மன்னர்களின் முன் ஆலவட்டம் வீசுவது, மன்னரின் மேடை, ஆசனம், கொடை மற்றும் கிரீடம் ஆகியவை அரசரின் கௌரவம் சார்ந்த பழக்கமாக பாரதத்தில் மன்னர்களால் பின்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிகோ மற்றும் பெரு நாட்டு மன்னர்களும் இதை பின்பற்றியுள்ளனர்.

இவர்களின் அரசாட்சி முறையும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்து மற்றும் புத்த மத அரசர்களின் ஆட்சியைப் போன்றே அமைந்திருக்கிறது. மேலும் இவர்களது கட்டிட கலையும் தென்னிந்திய கட்டிடக்கலையை ஒத்து அமைந்துள்ளது. வாஸ்து பார்த்து கட்டிடம் கட்டும் பழக்கம் இவர்களுக்கு இருந்துள்ளது. மெக்ஸிக அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மெக்ஸிக்க மன்னர்களின் கிரீடம், இந்து மற்றும் புத்த மத அரசர்களின் கிரீடத்தைப் போலவே சூரியன் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

விளையாட்டு!
பழந்தமிழரின் பொழுதுபோக்கு விளையாட்டான தாயம் பட்டௌளி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. இதே விளையாட்டு மெக்ஸிகோவிலும் பெருவிலும் பட்ச்சிசி (Pachisi) என்ற பெயரில் இருந்துள்ளது.

அரசர்கள் சிம்ம ஆசனத்தை (Lion throne) பயன்படுத்துவது அவர்களுடைய கௌரவத்தைக் குறிக்கும் பழக்கமாக பாரதத்தில் இருந்துள்ளது. இதே போன்ற சிம்மாசனங்களை மெக்ஸிக அரசர்களும் பயன்படுத்தி வ்அந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகோ, குடெமலா, பெரு, பொலிவியா மற்றும் கொண்டுராஸ் ஆகிய நகரங்களில் உள்ள தெய்வங்கள் பாரதத்தில் வழிபடப்பட்டு வந்த தெய்வங்களை நினைவுபடுத்துகின்றனர். மேலும் இங்கே பாரதத்தில் உள்ளதை விட அதிக படியான தெய்வங்களும், மிக பிரம்மாண்டமான விலையுயர்ந்த ஆலயங்களும் அமையப்பட்டுள்ளன. சிவன், விநாயகர், இந்திரா, சூரியன், அனுமன், விஷ்னு மற்றும் விஷ்னுவின் ஆமை வடிவ கூர்ம அவதாரம் ஆகியவை மத்திய மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் பிரதான கடவுள்களுள் சில. இங்கே சிவன், விநாயகர் மற்றும் விநாயகரின் அருகில் இருக்கும் சுண்டெலியைக் கூட பெருவில் வாழ்ந்த “இன்கா” பழங்குடியினரின் புராதாண கதைகளில் காணலாம். டிகோ ரிவெரா என்ற மெக்ஸிக பழங்கால கோவிலில் கணபதியை தரிசிக்கலாம். குடெமலா அருங்காட்சியகத்தில் அனுமன் மற்றும் சிவனின் சிலைகளைக் காணலாம். மேலும் மெக்சிகோவில் உள்ள வெரா க்ருஷ் என்ற இடத்தில் லிங்க வடிவ சிவனையும் காணலாம். இவை அனைத்தும் தென் அமெரிக்க பழங்குடியினரின் வழிபாட்டு கடவுள்களாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளன.

மெக்ஸிகோவில் உள்ள விஷ்னு சிலையை அவரது கையில் உள்ள சங்கு, சக்கரத்தை வைத்து எளிதாக உணர முடிகிறது. யுனைடட் ஃப்ரூட் லைன் என்ற நறுவனம் குடெமலாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் விஷ்னுவின் இந்த ஆமை வடிவ கூர்ம அவதார சிலையை பாதுகாத்து வருகிறது. இதை அவர்கள் ஆமைக் கல் என்று பெயரிட்டுள்ளனர். இந்திராவின் சிலையும், விஷ்னுவின் வாமன அவதாரச் சிலையும் மெக்ஸிக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றுல் ஒன்று பாலியில் இருந்தும் மற்றொன்று மெக்ஸிகோவில் இருந்தும் கிடைக்கப்பட்டவை.

மெக்ஸிகோவில் இருக்கும் கோவில்களுள் மிகப் பெரியது சிவன் கோவில். போர்கடவுளாக வழிபடப்பட்ட சிவன் பாம்புகளால் சூழப்பட்டுள்ளார். இக்கோவில் சுமார் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும் இங்கு சுமார் 3000 தேவ தாசிகள் வாழ்ந்து இறைப்பணியை ஆற்றியுள்ளனர். கோவில்களில் தேவதசிகள் இருக்கும் வழக்கம் தமிழக கோவில்களில் தான் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கோபுரம் தமிழக கட்டிடக்கலையில் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் படையெடுப்பின் போது இக்கோவில் சிதைக்கப்பட்டு மறு சீரமைப்பு பணிகள் நடந்ததற்கான தடையங்கள் தென்படுகிறது. மெக்ஸிகோவின் டிக்கல் நகரில் உள்ள கோவில்கள், பாரத தேசத்தில் உள்ள மதுராவில் உள்ள கோவில்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தொல்லியல் ஆய்வாளரான ஈ.ஜி. ஸ்கொய்ர், தனது ஆய்வின் இறுதியில் 1851 ஆம் ஆண்டு இதைப் பற்றி, “இந்த புராதான கட்டிடங்களின் உள்ளேயும், வெளியேயும் ஆய்வு செய்யும் போது நமக்கு வெளிப்படையாக புலப்படும் விஷயம் என்னவென்றால், இவை இந்துஸ்தானிய கலைகளை ஒத்து அமையப்பட்டுள்ளது.” என்று எழுதுகிறார்.

மேலும் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபெல்ஸ் குறிப்பிடுகையில், பாரதத்தில் பின்பற்றப்பட்டதைப் போலவே உடன் கட்டை ஏறுதல், பூனுல் மாற்றுதல், காதில் துளையிடுதல் போன்ற பழக்க வழக்கங்களும், சாதி பிரிவுகளும் இங்கிருந்த மக்களிடையே இருந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.

“லீ ரேஸஸ் ஆர்யன்ஸ் டீ பெரு” என்ற புத்தகத்தில் லோபெஸ் என்னும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர், “பெரு நாட்டின் புராண காவியங்களின் ஒவ்வொரு பக்கங்களிலும், இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தின் சுவடுகள் பதிந்துள்ளன” என்கிறார். மேலும் சமஸ்கிருதமே அங்கிருந்த அரசர்களின் மொழியாக இறுந்திருக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

இராமாயணத்தில் பெரு!

பெருவில் உள்ள திரிசூல வடிவம் (Trident in Peru)
இராமாயணத்தில், சீதையை இராவணன் கடத்திச் சென்ற பிறகு சுக்ரிவன் தனது படை வீரர்களை சீதையைத் தேடி வர அனுப்புகிறான். அப்போது கிழக்கே செல்லும் வீரர்களுக்கு ஒரு சின்னம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு தேடி வர சொல்கிறான். அந்த சின்னமானது “திரிசூல வடிவில் ஒரு மலையில் பொறிக்கப்பட்டிருக்கும், மேலும் அது வானத்தில் இருந்து பார்க்கும் போது ஒளிரும்” என்றும் குறிப்பிடுகிறான்.

இதே போன்றொரு சின்னம் பெரு நாட்டின் மேற்கு கடற்கரையோரம் ஒரு மலையில் அமையப்பட்டுள்ளது.

சரி, சீதையைத் தேடி சுக்ரிவன் தனது வீரர்களை இவ்விடத்தைக் குறிப்பிட்டு அனுப்பியதன் நோக்கம் என்ன? அதாவது இராவணன் சீதையைக் கவர்ந்து தமிழக (தென்) பகுதி வழியாக சென்றிருக்கிறான். தென் பகுதி வழியாக சென்றிருந்தால் அவன் அங்கே வாழக்கூடியவனாகத் தான் இருக்க வேண்டும். மேலும் கவர்ந்து சென்ற சீதையை எளிதில் மீட்க முடியாத இடத்திற்கு எடுத்துச் செல்வதாய் தான் அவன் திட்டமிட்டிருக்க வேண்டும். மேலும் விமானம் மூலம் தான் சீதை கடத்தப்பட்டிருக்கிறாள். எனவே அவள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சுக்ரிவனுக்கு வருகிறது. மேலும் தென் பகுதியில் வாழக்கூடியவனாய் இருந்தால் இவ்விடம் சென்றிருப்பான் என்ற சந்தேகம் எழுவதன் மூலம் தமிழன் இப்பகுதியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவனாய் இருந்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல இராமன் சீதையைத் தேடி போகும் போது இலங்கைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே மிதக்கும் பாலத்தை கட்டினார்கள். இதை கட்டியது இராமனுடன் வந்த நலனைப் போன்ற வானரங்களுள் சிலர். நலன் என்பவர் விஸ்வகர்மா என்னும் கட்டிடப் பொரியாளரின் மகன். இவர்கள் இணைந்து மிதக்கும் பாறைகள், மரங்கள், மரக்கட்டைகள், வேர்கள் மற்றும் நாணல்களைக் கொண்டு இந்த பாலத்தை அமைத்தனர். இதற்கு அதாரமாக அதைக் கட்ட பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கற்கள் இன்னும் இராமேஸ்வரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கிட்டத்தட்ட 20 மிதக்கும் தீவுகள் பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படுகின்றன. இது போன்ற தீவுகளை இலங்கைக்கும் பாரததிற்கும் எளிதாக சென்றுவர மற்றும் தமது படைகளின் போக்குவரத்திற்காக இராவணனும் கட்டி இருக்கக்கூடும்.

இன்றும் கூட இது போன்ற மிதக்கும் தீவுகளை பெரு நாட்டு பழங்குடி மக்கள் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள தீவுகளைப் போலவே கட்டுகிறார்கள்.

எனவே தமிழர்கள் பல்லாயிரமாண்டு முன்னரே தென்னமெரிக்காவில் சென்று தன் கலாச்சாரத்தை நிறுவியது புலப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் இராமாயணக் காலத்திற்கு ஒட்டியே நிகழ்ந்துள்ளன. தென் அமெரிக்காவில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் சுமார் கி.மு 1200 ஆம் ஆண்டுகளுக்கு பிறகானதாக இருக்கின்றன. எனவே இங்கு இன்னும் ஆய்வு செய்தால் மேலும் பல்லாயிரமாண்டு முந்தைய தடையங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

பழங்காலத்தில் விமானம் இருந்துள்ளதைப் பற்றி ஏற்கனவே நாம் வேறொரு பதிவில் பார்த்தோம். இது அதை மெய்ப்பிக்கிறது. காரணம் இந்த கோடுகள் தரையில் இருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. இதையே தான் சுக்ரிவனும் குறிப்பிடுகிறான். மேலும் மாயன் நாகரீகம் என்பது தமிழர் நாகரீகமே என்பதையும் முந்தைய பதிவுகளில் பார்த்துள்ளோம்.





அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 22, 2013 8:02 pm

நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? 3838410834 நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? 3838410834 நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? 3838410834 நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா? 3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 22, 2013 9:17 pm

சுவையான தகவல்கள். 
peru நாட்டில் அடுத்ததேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து  குறைந்தது நிச்சயமாக ஒரு கட்சியாவது போட்டி இடும் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக