Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
3 posters
Page 1 of 1
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
சென்னை : வங்கக்கடலில் உருவான, "ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை, சென்னை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில், கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
புயல் கூண்டு:
புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
"ஹெலன்' பெயர் எப்படி?
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
தினமலர்
வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
புயல் கூண்டு:
புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
"ஹெலன்' பெயர் எப்படி?
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
தினமலர்
Re: ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
புயலின் இந்த பெயர்களுக்கு என்ன அர்த்தம்?தானே, நீலம், மகாசென், பைலின்'"ஹெலன்'"லெகர், மாடி, நா நாவுக்'
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
அமெரிக்காவில் ஒரு புயல், பெரும் உயிர் அல்லது
பொருட் சேதத்தை ஏற்படுத்தினால், அந்த பெயரை
மறுபடியும் வேறொரு புயலுக்கு வைப்பதில்லை...
---
அடுத்து வரும் புயலுக்கான பெயர்பட்டில்:
-
![ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் EiJmuVJR3abrVXesjInw+puyals](https://www.filepicker.io/api/file/EiJmuVJR3abrVXesjInw+puyals.PNG)
பொருட் சேதத்தை ஏற்படுத்தினால், அந்த பெயரை
மறுபடியும் வேறொரு புயலுக்கு வைப்பதில்லை...
---
அடுத்து வரும் புயலுக்கான பெயர்பட்டில்:
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» “இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்
» சென்னை அருகே இன்று (18)காலை புயல் கரையை கடக்கிறது
» நள்ளிரவில் மாருதா புயல் கரையை கடக்கும்
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
» நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
» சென்னை அருகே இன்று (18)காலை புயல் கரையை கடக்கிறது
» நள்ளிரவில் மாருதா புயல் கரையை கடக்கும்
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
» நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|