ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் அவதரித்த கதை!

Go down

கர்ணன் அவதரித்த கதை! Empty கர்ணன் அவதரித்த கதை!

Post by சிவா Thu Nov 21, 2013 1:22 am

கர்ணன் அவதரித்த கதை! AbYwiCZGRvWrbwrMTHIM+p13

சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான்.

''எந்தவொரு ஜீவாத்மாவும் மரணத்தைத் தவிர்க் கவே முடியாது. எனவே, வேறு வரம் கேள்!'' என் றார் பரமேஸ்வரன்.

உடனே தானாசுரன், ''எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில், ஆயிரம் குண்டலங் களுடன் உயிர்க் கவசம் ஒன்றும் தர வேண்டும். இவை, எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக் கூடாது!'' என்று வரம் கேட்டான்.

''அப்படியே ஆகட்டும்!'' என்று கூறி மறைந்தார் ஈசன்.

பிறகென்ன, ஆணவம் தலை தூக்க... தானாசுர னின் அட்டூழியங்கள் ஆரம்பமாயின! இவனது கொடுமைகளைத் தாங்க இயலாத தேவர்கள், இந்திரனின் தலைமையில் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அபயம் அளிக்க திருவுளம் கொண்டார் திருமால். மறுகணம் அவரின் திருக்கரத்தில் இருந்து சீறிப் புறப்பட்டது சக்ராயுதம்! தலை தெறிக்க ஓடினான் தானாசுரன். விடா மல் துரத்திய சக்ராயுதம், அவனின் குண்டலங்களை ஒவ்வொன்றாக அறுத்து எறிந்தது. அவற்றின் எண்ணிக்கை குறையக் குறைய அசுரனின் பலமும் குறைந்து கொண்டே வந்தது.

உயிர்க் கவசமும் ஒரேயரு குண்டலமும் மட்டுமே மிஞ்சிய நிலையில் சிவபெருமானைச் சரணடைந்தான் அசுரன். ''பகவானே, காப் பாற்றுங்கள்!''

''தானாசுரா! உன்னைத் துரத்தி வரும் சுதர்சனம் ஒரு காலச் சக்கரம். காலத்தின் அதிபதி கதிரவன். எனவே, நீ அவனை நாடினால் பலன் உண்டு!'' என்று அருளினார் சிவபெருமான்.

அதன்படி சூரிய பகவானிடம் சென்ற தானா சுரன், அவர் முன் விழுந்து வணங்கி, தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

''யார் நீ? உலகத்தை ரட்சிக்கும் மும்மூர்த்திகளிடம் செல்லாமல், என்னிடம் வந்த காரணம் என்ன?'' என்று கேட்டார் சூரிய பகவான்.

''சிவபெருமான்தான் உங்களிடம் சரணடையச் சொன்னார். என்னைக் காப்பாற்றுவதாகத் தாங்கள் உறுதி அளித்த பின்னரே முழு விவரங்களையும் சொல்வேன்!'' என்றான் தானாசுரன். வேறு வழியின்றி சூரிய பகவானும் அவனைக் காப்பதாக வாக்குறுதி தந்தார். அதன் பிறகு தன்னைப் பற்றி அவரிடம் விவரித்தான் தானாசுரன்.

''சூரிய பகவானே, நான்... தானாசுரன். பரமேஸ் வரன் அருளால் ஆயிரம் குண்டலங்கள் மற்றும் உயிர்க் கவசத்துடன் வாழ்ந்து வந்தேன். ஆனால், தேவர்களது தூண்டுதலால், என்னை அழிக்க சக்ராயுதத்தை பிரயோகித்து விட்டார் மகா விஷ்ணு. அது, எனது குண்டலங்களில் ஒன்றைத் தவிர மற்றவற்றை அறுத்தெறிந்து விட்டது. மிச்சம் இருக்கும் ஒரு குண்டலத்தையும், கவசத்தையும் இழந்து விட்டால், நான் உயிர்த் தப்ப முடியாது. தாங்களே எனக்கு அபயம் தர வேண்டும்!''

இதைக் கேட்டதும் சூரிய பகவான் திடுக்கிட்டார். அவசரப்பட்டு அசுரன் ஒருவனைக் காப்பாற்று வதாக வாக்கு தந்து விட்டோமே என்று வருந்தினார். எனினும் வேறு வழியின்றி, தானாசுரனை சிறு கோதுமையளவுக்கு மாற்றி, விழுங்கி விட்டார். மறு கணம் அவர் முன் வந்து நின்றது சக்ராயுதம்.

''சக்கரத்தாழ்வாரே, அறியாமல் அசுரனுக்கு அபயம் அளித்து விட்டேன்!'' என வருத்தத்துடன் விவரித்தார் சூரிய பகவான்.

''சூரியதேவா... உன்னையும், உன்னுள் அடைக் கலம் புகுந்த அசுரனையும் இப்போதே என்னால் அழிக்க முடியும். ஆனால், உன்னை அழித்து விட்டால் உலகம் இருளில் மூழ்குமே என்றுதான் யோசிக்கிறேன்...''

- சக்கரத்தாழ்வார் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு பிரசன்னமானார் மகாவிஷ்ணு. அவரை வணங்கினார் சூரிய பகவான்.

''அசுரனுக்கு நீ அளித்த வாக்கை நிறைவேற்ற... அவனை அழிக்காமல் விட்டு விடுகிறேன். துவாபர யுகத்தில், போஜராஜனின் வளர்ப்பு மகளான குந்திதேவி குழந்தை வேண்டி உன்னைப் பிரார்த்திப் பாள். அப்போது, உன் வயிற்றில் உயிரணுவாய் மாறியிருக்கும் தானாசுரனை, அவளுக்கு அளித்து விடு. பாரபட்சம் இன்றி உலகுக்கு ஒளி தரும் உனது நற்குணம் அவனிடமும் உண்டாகட்டும்!'' என்று அருளி மறைந்தார் மகா விஷ்ணு.

துவாபர யுகம். துர்வாச முனிவருக்கு, தான் சிறப்பாக பணிவிடைகள் புரிந்தது... அதனால் மகிழ்ச்சியுற்ற அவர், தனக்கு வரம் அளித்தது பற்றிய சிந்தனையில் லயித்திருந்தாள் குந்திதேவி. அப்போது, வான வீதியில் பயணிக்கும் சூரியனைக் கண்டவள், தான் பெற்ற வரத்தை பரிசோதிக்க எண்ணினாள். உடனே கண்களை மூடி, துர்வாசர் உபதேசித்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தாள்.

மகாவிஷ்ணு அருளியபடி குந்திதேவிக்குக் குழந்தை வரம் தரும் வேளை வந்து விட்டதை உணர்ந்த சூரிய தேவன், தன்னுள் இருக்கும் தானாசுரனின் உயிரணுவை குழந்தையாக்கி குந்தி தேவியின் கைகளில் தந்து மறைந்தார்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு கண் விழித்த குந்திதேவி, திகைத்துப் போனாள்! கவச- குண்டலங்களுடன் திகழும் அந்த குழந்தை யைக் கண்டவள், 'பருவம் அடையும் முன்பே குழந்தையா? உலகம் பழிக்குமே' என்று வருந்தி நின்றாள்.

அப்போது ஓர் அசரீரி ''குந்தியே... வருந்தாதே! நீ பெற்ற வரத்தின் பயன் இது. அதோ அந்த மரத்தடியில் பேழை ஒன்று இருக்கும். குழந்தையை அதில் வைத்து ஆற்றில் விட்டு விடு!'' என்றது.

குழந்தையை ஆற்றில் விட மனம் இல்லை என்றாலும், வேறு வழியின்றி அசரீரி சொன்னபடியே செய்தாள் குந்திதேவி. ஆற்று நீரில் மிதந்து சென்ற பேழை, தேரோட்டி ஒருவனது கையில் அகப்பட்டது. அதன் உள்ளே குழந்தையைக் கண்டவன் பெரிதும் மகிழ்ந்தான்.

அந்தக் குழந்தைக்கு, 'ராதேயன்' எனப் பெயர் சூட்டி சீராட்டி வளர்த்தான். அந்தக் குழந்தையே பிற்காலத்தில், 'இல்லை' என்று சொல்லாத வள்ளல் கர்ணன் ஆனது.

முன்னர் மகாவிஷ்ணு சக்ராயுதத்தை பிரயோகித் தும் தானாசுரனை அழிக்க முடியவில்லை. ஆனால், துவாபர யுகத்தில் அவன் கர்ணனாக திகழ... குருசேத்திர போர் நடந்த வேளையில், தந்திரத்துடன் செயல்பட்டு அவனது கவச- குண்டலங்களை யாசகம் பெற்றுச் சென்றான் இந்திரன். போர்க் களத்தில் கர்ணனது தர்ம பலன் களையும் தானமாகப் பெற்று, அவனை அழித்தார் கிருஷ்ணராக அவதரித்திருந்த மகாவிஷ்ணு!

- (கர்ணபரம்பரைக் கதை)
- எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum