ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் அரசியல்!

4 posters

Go down

 இதுதான் அரசியல்! Empty இதுதான் அரசியல்!

Post by சிவா Wed Nov 20, 2013 3:28 am

தேர்தலில் வெளிப்படைத் தன்மை வந்துவிடக் கூடாது என்பதில் நமது அரசியல்வாதிகள் குறியாக இருக்கிறார்கள். முதன்முறையாக, இந்தியாவில் ஓர் அரசியல் கட்சி தேர்தல் நிதி மற்றும் நன்கொடைகள், யாரால் எவ்வளவு தரப்பட்டது என்பதைத் தனது இணையதளத்தில் வெளியிட முற்பட்டால் அவர்களால் அதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

 அரவிந்த் கேஜ்ரிவாலின் "ஆம்ஆத்மி' கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருப்பதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். அப்படிவெளிநாட்டுப் பணம் வந்திருக்குமானால் விசாரிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணையை உடனடியாக முடுக்கி விட்டு, அந்தக் கட்சியை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதக் கடைசிவரை ஆம்ஆத்மி கட்சி வசூலித்திருக்கும் நன்கொடை சுமார் ரூ. 19 கோடி. இதில் கணிசமான அளவு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியப் பிரஜைகள் சிறு சிறு தொகையாக நன்கொடை அளித்தவை. யார் எவ்வளவு நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்கிற முழு விவரமும் ஆம்ஆத்மி கட்சியின் இணையதளத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கும் நிலையில்,ஏதோ பெரிய முறைகேடு நடந்துவிட்டதுபோல, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயும்  வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி இருப்பது நகைப்பை வரவழைக்கிறது.

இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29இன்படி, அரசியல் கட்சிகள் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதும், வெளிநாடுகளிலிருந்து தேர்தல் நிதி பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியாவில் வாக்குரிமையுள்ள இந்தியப் பிரஜைகளிடமிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தனது கட்சிக்குக் கிடைத்திருக்கும் நன்கொடைகள் பற்றி விசாரணை நடத்தும் அதே வேளையில், எல்லா கட்சிகளின் நன்கொடைகளும் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவா போகின்றன?

காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு பெரிய கட்சிகளின் 75%  நன்கொடை வசூல், இன்னாரிடமிருந்து என்று தெரிவிக்க முடியாதவர்களிடமிருந்துதான் பெறப்படுகிறது. அதாவது, ரூ.20,000க்கும் கீழே நன்கொடை பெறப்பட்டால், அவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்கிற தேர்தல் ஆணைய சட்டதிட்டத்துக்குள் ஒளிந்து கொண்டு நிதி திரட்டுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.

2004-2005லிருந்து 2011-2012 வரையில் மேலே குறிப்பிட்ட கட்சிகள் வசூலித்திருக்கும் அதிகாரபூர்வ நன்கொடை ரூ.4,895 கோடி. இதில் ரூ.3,674 கோடி, இனம் தெரியாதவர்களிடமிருந்து ரூ.20,000க்கும் குறைவாகப் பெற்றதாக கட்சிகள் வருமானவரித் துறைக்கு கணக்குக் கொடுத்திருக்கின்றன. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இனம் தெரியாத நபர்களின் நன்கொடை குறைவாகவும், முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நன்கொடை அதிகமாகவும் காணப்படுகிறது.

காங்கிரஸூக்கு கிடைத்த நன்கொடையில் 82.5%, அதாவது ரூ.1,951 கோடி யார் யாரோ கொடுத்தது. பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த ரூ.952.5 கோடி, அதாவது மொத்த நன்கொடையில் 73%, யாரோ கொடுத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.307 கோடி பத்து ரூபாய், இருபது ரூபாயாகப் பொதுமக்களிடம் வசூலித்தது. இதை நாம் நம்பித்தான் தீரவேண்டும். காரணம் அவர்கள் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

காங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாவுக்கும் பெயர் தெரிய அளிக்கப்பட்ட நன்கொடைகளில் கணிசமானவை அரசியல் அறக்கட்டளைகளால் அளிக்கப்பட்டவை. அதென்ன அரசியல் அறக்கட்டளை என்று கேட்டு விடாதீர்கள். ஆதித்ய பிர்லா குழுமம், டாடா சன்ஸ் குழுமம், பார்தி எண்டர்பிரைசஸ் ஆகியவை எலெக்டொரல் ட்ரஸ்ட் என்று இதற்காகவே அறக்கட்டளை நிறுவியுள்ளன. சத்யா எலக்டொரல் ட்ரஸ்ட், ஹார்மனி எலக்டொரல் ட்ரஸ்ட், கார்ப்பரேட் எலக்டொரல் ட்ரஸ்ட் ஆகியவை ஏனைய அரசியல் கட்சிகளின் அறக்கட்டளைகள்.

பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.

  விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டியது தனது இணைய தளத்தில் நன்கொடை விவரங்களை வெளியிடும் ஆம்ஆத்மி கட்சியல்ல, ஏனைய தேசியக் கட்சிகள்தான்!

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இதுதான் அரசியல்! Empty Re: இதுதான் அரசியல்!

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 7:15 am

 இதுதான் அரசியல்! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதுதான் அரசியல்! Empty Re: இதுதான் அரசியல்!

Post by amirmaran Wed Nov 20, 2013 10:40 am

அப்படி எப்படி  வெளியிட முடியும்...? உண்மையான நன்கொடை என்றால் தான் சொல்ல முடியும்.... ஊழலில் கிடைத்த பணம், மதவாத பிரிவினையை தூண்டி கிடைத்த பணம், தீவிரவாதத்துக்கு கிடைத்த பணம், இப்படி கணக்கு காட்ட முடியுமா? இல்ல மக்களுக்கு சேர வேண்டிய பணம் என்று சொல்ல முடியுமா? எல்லாம் பொய் தான்..  இணைய தளத்தில் இல்ல அரசிதழில் வெளியிட்டாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்... ஏமாந்து பாழகிய மக்கள் எதையும் நம்புவார்கள்...


அன்புடன் அமிர்தா

 இதுதான் அரசியல்! A இதுதான் அரசியல்! M இதுதான் அரசியல்! I இதுதான் அரசியல்! R இதுதான் அரசியல்! T இதுதான் அரசியல்! H இதுதான் அரசியல்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 இதுதான் அரசியல்! Empty Re: இதுதான் அரசியல்!

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 1:20 pm

பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.


இதுபோல இந்தியாவிலும் வந்தால், பல கட்சிகளின் நிலைமை  இதுதான் அரசியல்! 1OdWwAYdR0Sqg9xTaZd1+Pokiri


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 இதுதான் அரசியல்! Empty Re: இதுதான் அரசியல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum