Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசை... ஆசை...!
4 posters
Page 1 of 1
ஆசை... ஆசை...!
மரக்கிளையில் அமர்ந்தபடி கூ... கூ... என்று கூவிக் கொண்டிருந்தது அந்தக் குயில். அப்போது அந்தப் பக்கமாக வாத்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மரக்கிளையில் குயிலின் சத்தத்தைக் கேட்டதும் அண்ணாந்து பார்த்தது வாத்து. தத்தித் தத்தி மரத்தடியின் அருகே சென்றது வாத்து.
"இந்தக் குயில் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்தபடி கூவுகிறதே... நாமும் இதனைப் போன்று இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறிடவேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தது.மரக்கிளையில் அமர்ந்திருந்த குயிலோ மரத்தடியில் வாத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.""வாத்தே, எதற்காக இப்படி இந்த மரத்தடியில் நின்றபடி அண்ணாந்து என்னைப் பார்க்கிறாய். உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டது குயில்.
""குயிலே, குயிலே என் ஆசையை யாரிடம் தெரிவிப்பது என்று யோசனை செய்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீ இதனைப் பற்றிக் கேட்டாய். உன்னிடமே என்னுடைய யோசனையைத் தெரிவிக் கிறேன்,'' என்றது வாத்து.""வாத்தே, உனக்கு ஏற்பட்டிருக்கிற ஆசையென்னவோ! அதனை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டது குயில்.""குயிலே! எனக்கு உன்னைப் போன்று உயர்ந்த மரக்கிளையில் நின்றபடி பாட்டுப் பாட வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. நீதான் எப்படியாவது என்னுடைய ஆசையினை நிறைவேற்றி வைக்க வேண்டும்,'' என்றது வாத்து.
""வாத்தே, உன்னுடைய யோசனையானது மிகவும் விசித்திரமாக இருக்கிறதே! உனது ஆசையை நானெப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? இதெல்லாம் நடக்கிற காரியமா? இது ஒருபோதும் நடைபெறாது. அதனால் உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆசையை தவிர்த்திடு,'' என்றது குயில்.
""குயிலே, நான் மரத்தில் ஏறுவதற்கு ஏதாவது யோசனை கூறுவாய் என்று எதிர்பார்த்தால், என் முயற்சியினையே கைவிட்டு விடும்படியாகக் கூறுகிறாயே,'' என்று கேட்டது வாத்து.""வாத்தே! உன்னுடைய முயற்சி விசித்திரமாக இருக்கிறதே! ஒருவருக்கு முயற்சி தேவைதான். ஆனால், அந்த முயற்சியானது நிறைவேறும் முயற்சியாக இருக்க வேண்டும். நிறைவேறாத முயற்சியினால் ஒருவருக்கு எந்தப் பலனும் ஏற்படாது. இதனை நீ நன்றாக உணர்ந்து கொள்,'' என்றது குயில்.
""குயிலே! என் முயற்சி பலன் அளிக்கும் முயற்சியோ அல்லது பலனளிக்காத முயற்சியோ, அதனைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. நிச்சயமாக நான் மரம் ஏறிவிடுவேன் என்ற முடிவோடு இருக்கிறேன்,'' என்றது வாத்து.
""வாத்தே, நான் இயற்கையிலேயே இறக்கைகளோடு பறக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறேன். அதனால் மரம் விட்டு மரம் பறந்து செல்கிறேன். ஆனால், நீயோ அவ்வாறில்லை. உனக்கு இயற்கை யிலேயே பறக்கும் சக்தியானது இல்லை. நீ கனமான உடலோடு காணப்படுகிறாய். எனவே, உன்னால் உயரமான இடத்தில் எல்லாம் பறந்து செல்ல முடியாது,'' என்றது குயில்.
"இனிமேல் நாம் குயிலிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தால் அது தொடர்ந்து இதனைத்தான் கூறிக் கொண்டிருக்கும். அதனால் நாமே மரம் ஏற முயற்சிக்க வேண்டும்' என்று முடிவு செய்தது வாத்து.மரத்தின் மேலே எப்படி ஏறுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தது வாத்து. அப்போது அந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது.
வாத்து உடனே அந்தக் குரங்கை அழைத்தது.""குரங்கே, நீ என்னைத் தூக்கிச் சென்று மரக்கிளையின் உச்சியில் அமர வைக்கிறாயா?'' என்று கேட்டது வாத்து.குரங்கும் வாத்தைப் பிடித்துக் கொண்டே மரத்தின் மேலே ஏறியது. உயர்ந்த மரக் கிளையில் வாத்தை அமர வைத்தது. மரத்தில் உயரமான மரக்கிளையில் அமர்ந்த மகிழ்ச்சியில் வாத்து ""பாக்... பாக்...'' என்று கத்தத் தொடங்கியது.அதனைக் கேட்ட குரங்கோ எரிச்சல் அடைந்தது.
"வாத்து நம்மைத்தான் ஏளனம் செய்கிறது' என்று மனதுள் நினைத்தது.உடனே வாத்தின் இறக்கைகளைப் பிய்த்து எறிந்தது. அதன் பின்னர் மரத்தை விட்டு இறங்கிச் சென்றது.""குரங்கே, குரங்கே என் இறக்கையைப் பிய்த்து விட்டாயே! என்னை விட்டு விட்டு நீ மட்டும் மரத்தை விட்டு இறங்குகிறாயே! என்னையும் கீழே இறக்கி விடு,'' என்றது வாத்து.
வாத்தின் பேச்சைக் குரங்கு தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அது வேகமாக மரத்தை விட்டுக் கீழே இறங்கியது.
வாத்தோ எப்படிக் கீழே இறங்குவது என்று தெரியாமல் இறக்கைகளை இழந்தபடி வலியால் துடித்தது. இதனையெல்லாம் மரக்கிளையில் ஓர் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த குயில் வாத்தை பார்த்தது.""வாத்தே, எனது அறிவுரையை நீ கேட்டிருந்தால் உனக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது,'' என்று கூறியபடி பறந்து சென்றது.வேண்டாத ஆசையால் ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி அழுதது வாத்து.பட்டூஸ்.... உங்களது வேண்டாத ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
நன்றி : சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசை... ஆசை...!
சரிங்கமாபட்டூஸ்.... உங்களது வேண்டாத ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்! wrote:
கதை அருமை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆசை... ஆசை...!
ஆசை அதிகம் கொண்டால் அது நமக்கு, பெரிய சோதனை கொடுத்து நம் வாழ்க்கையை அழித்துவிடும் என்பதை சொன்ன கதை மிக அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|