ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைல்

2 posters

Go down

நைல் Empty நைல்

Post by டார்வின் Tue Nov 19, 2013 5:42 pm

நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[3]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[4]. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[5].
நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் கிளைகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாக தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.
சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்த பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்த பகுதியிலேயே அமைந்திருந்தன.
நைல் Q4XOQpQJT6idFtJ1R9kK+285px-Nile_watershed_topo
வரலாறு
நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்த காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடியேறத் தொடங்கினர். இந்த காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.

யோநைல்
நைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கி பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்த படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நைல்
வெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.

நீல நைல்
நீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[8].
இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.
இதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்து பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது

நீரோட்டம்
அகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆக குறைகின்றது.
வெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம்.
நைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்த குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது.
நீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்த காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.
நைல் LLjCH2EMTOylQcXuc7Xy+nile-river
நீர் பங்கீட்டு சிக்கல்
நைல் ஆற்றின் நீர் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கதை எதிர்த்தவன்னம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கிய காரனி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலை தீர்க்க முனைந்து வருகின்றது[9].
பெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெரும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிருவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின[10].
மே 2010ல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இனைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்வும் இந்த தீர்மானம் வழியுறுத்துகின்றது[11]. இந்த தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களிம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன[12]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்து பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டுள்ளது
wikipedia
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நைல் Empty Re: நைல்

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 8:01 am

நைல் 103459460 
-

பார்த்தால் பரவசமூட்டும்
நைல் நதியே..
உன் அழகில்
நான் மூழ்கிப்போனேன்..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum