புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
81 Posts - 67%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
1 Post - 1%
viyasan
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
273 Posts - 45%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
18 Posts - 3%
prajai
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Nov 20, 2013 6:18 pm

அன்பு நண்பர்களே,
நெடுங்காலம் ஆகி விட்டது...
ஒரு பாடலை இப்போதாவது இடலாம் என எண்ணம் !

ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !!
இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளனர் ! She is not just a Friend , Philosopher and Guide ! இவர்களுக்கும் மேலானவள் !! தலைவியைத் தன் உயிரெனத் தாங்குபவள் ; தலைவியின் மகிழ்ச்சி தன்னதே எனத் திளைப்பவள் ; அவளின் மென் மனதில் தோன்றும் - முகத்தில் அல்ல அன்பர்களே - சிறு மாறுதல்களையும் உடனறிபவள் ; அது துயரம் சார்ந்ததெனில் உடன் அதை துடைத்தெறிய முயல்பவள் ; தலைவியின் மனம் களவு போனதெனில் , அந்நிலையில் முழு உறுதுணையாய் இருப்பவள் ; தூதும் போவாள் ; தலைவிக்கு அமைச்சாயும் இருப்பாள் ; தலைவனையும் , தவறிழைக்கையில்
அவன் செயல்களை சாடுபவள் ; தலைவி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதவற்றை தலைவனிடம் நயம்படச் சொல்பவள் ;
தலைவனையும் நட்பாய் நினைப்பவள் ...

இப்படிப்பட்ட தோழி கிடைக்க கோடி கோடி புண்ணியம் - தலைவி மட்டுமில்லை , அவளது முன்னோர்களும் -செய்திருக்கவேணும் ...

சரி , இங்கு என்னவென எட்டிப்பார்ப்போமே ...

தன் உற்ற தோழியிடம் தலைவி சொல்கிறாள் ...
என் தலைவனிடம் நீ , என் பொருட்டு , கடிந்து பேசாதே ; உரையல் என்கிறாள் .
ஏன் அவ்வாறு சொல்கிறாள் ..!? ஒன்றுமில்லை , கதை இதுதான் ...

தலைவன் ஏதோ ஒரு நிமித்தமாய் தலைவியை விட்டு சிலகாலம் பிரிந்துவிட நேர்கிறது .
( இதை , சிலர் பரத்தமையோடு உள்ள உறவினால் பிரிந்துள்ளான் என்றும் கொள்வர் ; அப்படிப் பொருள் கொள்வதில் என்ன திருப்தியோ...!?) காதலில் கனிந்து நிற்கும் அன்புள்ளம் கொண்ட இருவர் பிரிந்திருத்தல் வேதனையே . அவளுடன் உடனுறையனாக , மாதொரு பாகனாக , வசித்த நாளெல்லாம் அவள் சுகித்திருந்தவள் மட்டுமல்ல ; இல்லறமும்மாண்புற நடத்தி வந்தவள் . அதனாலேயே , அவளின் பெண்மையுள்ளம் மலர்ந்து மணம் நீக்கமற வீசலாயிற்று ; அவளின் மேனியழகும் மிகுந்து , வாழ்நாளும் நீடிக்குமாய் இன்புற தோற்றம் கண்டது .
ஆனாலும் என் ...!? அத்தலைவன் மனம் பேதலுற்று அவளைப் பிரிந்தபோது , அவளது மேன்மைகளும் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டன ; அவளது பெண்மை நலங்கள் தொலைந்தது மட்டுமல்லாமல் அவளது உடலழகும் மாசுபட்டது ; குறைபட்ட இவ்விரு நலங்களால் அவளது இன்னுயிரும் நீங்கிவிடும் நிலை ; அப்படியும் , தலைவன் மாட்டு அத்தலைவி கொண்ட காதலன்பு குறையவில்லை ! அதானாலேயே , அவள் தோழியிடம் இவ்வாறு கூறலானாள் :

" என் இனிய தோழியே, தலைவரின் பிரிவு என் அனைத்து நலங்களையும் தொலையச் செய்ததுவே ; அவனுக்காகவே வாழ்ந்த என் உயிரும் கழிந்து விடும் போலும் ! என் நிலை பொறுக்காது அவனை சுடு சொற்களால் தீண்டியிருக்கிறாய் .உன்னை எனக்குப் புரியாமல் போய்விடுமா ! ஆனாலும் , நீ இனி அவனை இம்மாதிரியெல்லாம் கடிந்து பேசாதே ! ஏன் தெரியுமா ... என் தலைவனின் நேசம் முன் போல் சுடர் விடவில்லை ; அப்படி உள்ளபோது , நான் எப்படி அவனிடம் ஊடல் கொள்வது ; உரிமையிருந்தால் அல்லவா , கோபமோ , புலவுமோ செல்லும் ; அப்படியான  நிலைதான் இப்போதில்லையே ! இருப்பினும் அவனை நான் ஏற்றுக் கொள்கிறென் ; ஏனென்று விளங்குகிறதா தோழியே ...! அவன் எனக்கு கணவானாக அன்பு காட்டதபோதும் , எமக்கு அன்னை போலும் தந்தை போலும் அன்பு காட்டுகின்றானே ; என் அன்னையை நான் புறக்கணிக்க இயலுமா ?! ; எம் தந்தைக்குதான் நான் அடங்காது ஒழுக முடியுமா ?! இயலாது தானே ! அதனால் , அவனின் அன்பினை நானும் இந்தவாறு இப்போது பாராட்டுகிறேன் ; அவனை வரச் சொல்லடி ; அவன் இனி எமக்கு அன்னையும் அத்தனமாய் இருக்கட்டும் !"

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் ; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.


-அள்ளூர் நன்முல்லையார். ( குறுந்தொகை 93 )


ஆழத்திலும் ஆழ்ந்த தன் உள்ளக் குமுறல்களை எவ்வளவு நுட்பமாய் இத்தலைவி வெளியிடுகிறாள் ...
அவளுக்கு, கழிந்த காதலின் பெருமை இனிக்காண முடியாது எனத் தோன்றினாலும் தலைவனை விட்டுக்
கொடுக்கவும் - அதுவும் தன் உயிரனைய உற்ற தோழியிடம் கூட - அவள் மனம் ஒப்பவில்லை ...

சரி , அன்பர்களை , செவ்வியல் இலக்கியத்தின் சீரியக் குணக்கூறுகளான அமைதியும் , செறிவும் , கட்டுக்கோப்பும்
கொண்ட இக்குறுந்தொகைப் பாடலை நம் உள்ளம் அள்ளும் வண்ணம் நான்கே நான்கு வரிகளில் யாத்தவர்
அள்ளூர் ( என்ன பெயர் பொருத்தம் ! ) நன்முல்லையார்!

இப்பாடலில் எளிய சொற்களே உள ; முதல் வரியில் உள்ள இரண்டு ' நலம் ' கவனிக்கப்பட வேண்டியது !


சாஅய் - சாய்ந்து , மங்கி , குறைந்து
கழியினும் - நீங்கினும் , பிரியினும்
உரையல் - சொல்லாதே , குறையாக சொல்லாதே
புலவி - ஊடல்

நீரும் நிழலது இனிதே ; புலவியும்
வீழுநர் கண்ணே இனிது .


அன்புடன்,
சுந்தரம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக