புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
21 Posts - 58%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
1 Post - 3%
viyasan
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
213 Posts - 41%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
21 Posts - 4%
prajai
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_m10குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Nov 20, 2013 6:18 pm

அன்பு நண்பர்களே,
நெடுங்காலம் ஆகி விட்டது...
ஒரு பாடலை இப்போதாவது இடலாம் என எண்ணம் !

ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !!
இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளனர் ! She is not just a Friend , Philosopher and Guide ! இவர்களுக்கும் மேலானவள் !! தலைவியைத் தன் உயிரெனத் தாங்குபவள் ; தலைவியின் மகிழ்ச்சி தன்னதே எனத் திளைப்பவள் ; அவளின் மென் மனதில் தோன்றும் - முகத்தில் அல்ல அன்பர்களே - சிறு மாறுதல்களையும் உடனறிபவள் ; அது துயரம் சார்ந்ததெனில் உடன் அதை துடைத்தெறிய முயல்பவள் ; தலைவியின் மனம் களவு போனதெனில் , அந்நிலையில் முழு உறுதுணையாய் இருப்பவள் ; தூதும் போவாள் ; தலைவிக்கு அமைச்சாயும் இருப்பாள் ; தலைவனையும் , தவறிழைக்கையில்
அவன் செயல்களை சாடுபவள் ; தலைவி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதவற்றை தலைவனிடம் நயம்படச் சொல்பவள் ;
தலைவனையும் நட்பாய் நினைப்பவள் ...

இப்படிப்பட்ட தோழி கிடைக்க கோடி கோடி புண்ணியம் - தலைவி மட்டுமில்லை , அவளது முன்னோர்களும் -செய்திருக்கவேணும் ...

சரி , இங்கு என்னவென எட்டிப்பார்ப்போமே ...

தன் உற்ற தோழியிடம் தலைவி சொல்கிறாள் ...
என் தலைவனிடம் நீ , என் பொருட்டு , கடிந்து பேசாதே ; உரையல் என்கிறாள் .
ஏன் அவ்வாறு சொல்கிறாள் ..!? ஒன்றுமில்லை , கதை இதுதான் ...

தலைவன் ஏதோ ஒரு நிமித்தமாய் தலைவியை விட்டு சிலகாலம் பிரிந்துவிட நேர்கிறது .
( இதை , சிலர் பரத்தமையோடு உள்ள உறவினால் பிரிந்துள்ளான் என்றும் கொள்வர் ; அப்படிப் பொருள் கொள்வதில் என்ன திருப்தியோ...!?) காதலில் கனிந்து நிற்கும் அன்புள்ளம் கொண்ட இருவர் பிரிந்திருத்தல் வேதனையே . அவளுடன் உடனுறையனாக , மாதொரு பாகனாக , வசித்த நாளெல்லாம் அவள் சுகித்திருந்தவள் மட்டுமல்ல ; இல்லறமும்மாண்புற நடத்தி வந்தவள் . அதனாலேயே , அவளின் பெண்மையுள்ளம் மலர்ந்து மணம் நீக்கமற வீசலாயிற்று ; அவளின் மேனியழகும் மிகுந்து , வாழ்நாளும் நீடிக்குமாய் இன்புற தோற்றம் கண்டது .
ஆனாலும் என் ...!? அத்தலைவன் மனம் பேதலுற்று அவளைப் பிரிந்தபோது , அவளது மேன்மைகளும் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டன ; அவளது பெண்மை நலங்கள் தொலைந்தது மட்டுமல்லாமல் அவளது உடலழகும் மாசுபட்டது ; குறைபட்ட இவ்விரு நலங்களால் அவளது இன்னுயிரும் நீங்கிவிடும் நிலை ; அப்படியும் , தலைவன் மாட்டு அத்தலைவி கொண்ட காதலன்பு குறையவில்லை ! அதானாலேயே , அவள் தோழியிடம் இவ்வாறு கூறலானாள் :

" என் இனிய தோழியே, தலைவரின் பிரிவு என் அனைத்து நலங்களையும் தொலையச் செய்ததுவே ; அவனுக்காகவே வாழ்ந்த என் உயிரும் கழிந்து விடும் போலும் ! என் நிலை பொறுக்காது அவனை சுடு சொற்களால் தீண்டியிருக்கிறாய் .உன்னை எனக்குப் புரியாமல் போய்விடுமா ! ஆனாலும் , நீ இனி அவனை இம்மாதிரியெல்லாம் கடிந்து பேசாதே ! ஏன் தெரியுமா ... என் தலைவனின் நேசம் முன் போல் சுடர் விடவில்லை ; அப்படி உள்ளபோது , நான் எப்படி அவனிடம் ஊடல் கொள்வது ; உரிமையிருந்தால் அல்லவா , கோபமோ , புலவுமோ செல்லும் ; அப்படியான  நிலைதான் இப்போதில்லையே ! இருப்பினும் அவனை நான் ஏற்றுக் கொள்கிறென் ; ஏனென்று விளங்குகிறதா தோழியே ...! அவன் எனக்கு கணவானாக அன்பு காட்டதபோதும் , எமக்கு அன்னை போலும் தந்தை போலும் அன்பு காட்டுகின்றானே ; என் அன்னையை நான் புறக்கணிக்க இயலுமா ?! ; எம் தந்தைக்குதான் நான் அடங்காது ஒழுக முடியுமா ?! இயலாது தானே ! அதனால் , அவனின் அன்பினை நானும் இந்தவாறு இப்போது பாராட்டுகிறேன் ; அவனை வரச் சொல்லடி ; அவன் இனி எமக்கு அன்னையும் அத்தனமாய் இருக்கட்டும் !"

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் ; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.


-அள்ளூர் நன்முல்லையார். ( குறுந்தொகை 93 )


ஆழத்திலும் ஆழ்ந்த தன் உள்ளக் குமுறல்களை எவ்வளவு நுட்பமாய் இத்தலைவி வெளியிடுகிறாள் ...
அவளுக்கு, கழிந்த காதலின் பெருமை இனிக்காண முடியாது எனத் தோன்றினாலும் தலைவனை விட்டுக்
கொடுக்கவும் - அதுவும் தன் உயிரனைய உற்ற தோழியிடம் கூட - அவள் மனம் ஒப்பவில்லை ...

சரி , அன்பர்களை , செவ்வியல் இலக்கியத்தின் சீரியக் குணக்கூறுகளான அமைதியும் , செறிவும் , கட்டுக்கோப்பும்
கொண்ட இக்குறுந்தொகைப் பாடலை நம் உள்ளம் அள்ளும் வண்ணம் நான்கே நான்கு வரிகளில் யாத்தவர்
அள்ளூர் ( என்ன பெயர் பொருத்தம் ! ) நன்முல்லையார்!

இப்பாடலில் எளிய சொற்களே உள ; முதல் வரியில் உள்ள இரண்டு ' நலம் ' கவனிக்கப்பட வேண்டியது !


சாஅய் - சாய்ந்து , மங்கி , குறைந்து
கழியினும் - நீங்கினும் , பிரியினும்
உரையல் - சொல்லாதே , குறையாக சொல்லாதே
புலவி - ஊடல்

நீரும் நிழலது இனிதே ; புலவியும்
வீழுநர் கண்ணே இனிது .


அன்புடன்,
சுந்தரம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக