ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்

Go down

ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Empty ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்

Post by nandhtiha Fri Oct 30, 2009 3:57 pm

http://www.meenagam.org/?p=14693
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்



எழுதியவர்பகலவன் on October 30, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்



ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Hand-writingகடந்த
வாரம் இணையத்தில் நுழைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் ஒரு பேரதிர்ச்சி
காத்திருந்தது. ஆம், அதுவரை தமிழீழ விடுதலை சார்ந்த தளமாக இயங்கிவந்த
‘தமிழ்நாதம்’, ‘புதினம்’ ஆகிய இரு இணையத் தளங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

‘தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த
இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத் தருகின்றோம்’ என்ற அறிவித்தலுடன்
அவற்றின் மூச்சுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’
என்ற வார்த்தை தற்காலிகமானதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றினாலும்
ஆங்கிலத்தில் ‘this website will not be functioning anymore” என்று
குறிப்பிடப்பட்டிருந்ததால் நம்பிக்கைகள் தகர்ந்து போனது. ஊடகம் என்பது
வெறும் பொழுதுபோக்கு சாதனமோ அல்லது பணம் சம்பாதிக்கும் துறையோ அல்ல.
பொறுப்பான ஊடகங்கள் ‘ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்’ என்ற தகுதிக்கு உரியன.
ஊடகங்கள் தமக்கான ஜனநாயக கடமைகளை நிறைவேற்றத் தயங்கினாலோ, தவறினாலோ அதன்
விழைவுகள் அந்த மக்களை நேரடியாகவே தாக்க்விடும் அபாயம் உள்ளது.

அதனால்தான், சிங்கள தேசத்தின் கோரப்
பற்கள் பல ஊடகவியலாளர்களைப் பலி கொண்டது. இந்த ஜனநாயகக் கடமைகளை
நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்ட 34 ஊடகவியலாளர்கள் மகிந்த ஆட்சியில் பலி
கொள்ளப்பட்டுள்ளனர். இந்த 34 ஊடகவியலாளர்களில் 30 பேர் தமிழர்கள் என்பது
அவர்கள் யாத்த வேள்வியை எமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதனால்தான் சிங்கள
தேசம் இன்றுவரை யுத்தம் நிகழ்ந்த அந்த இரத்த பூமிக்கோ, அதன் பின்னர் அந்த
மக்களை சிறைப்படுத்தி வைத்திருந்த வதை முகாம்களுக்கோ இன்றுவரை
ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை. அண்மையில், தமிழகத்திலிருந்து
இலங்கைக்குப் பயணம் செய்திருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு
ஊடகவியலாளரும் அனுமதிக்கப்படவில்லை என்றபோதும், அதுபற்றியெல்லாம்
அலட்டிக்கொள்ளாத தமிழக முதல்வர் ராஜபக்ஷக்களைப் புகழ்ந்து வரும்
கொடுமைகளையும் இந்த ஊடகவியலாளர்களே அம்பலப்படுத்தி வருகின்றார்கள்.

ஒரு சமூகத்தின் பலம் ஊடகங்களின்
பார்வையில் அதிகம் தங்கியுள்ளது. ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் ஆற்றலும்
நல்ல ஊடகங்களுக்கு உண்டு. வன்னிமீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு
யுத்தம் தீவிரமடைந்த காலப் பகுதியில் கொழும்பில் இருந்து இயங்கிய தமிழ்
ஊடகங்கள் மீதும் யுத்த அழுத்தங்கள் தொடுக்கப்பட்டது. தமிழகத்தின்
ஊடகங்களின் அனேகமான செய்தியாளர்களும், கட்டுரையாளர்களும் சிங்கள தேசத்தின்
தமிழக தூதுவரான அம்சாவினால் விலைக்கு வாங்கப்பட்டனர். இன உறவின் காரணமாக
வட இந்திய ஊடகங்கள் சிங்கள தேசத்தின் செய்திகளை மட்டுமே வெளியிட்டன. இந்த
நிலையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலம்பெயர் ஊடகவியலாளர்களால்
நடாத்தப்பட்ட ஊடகங்கள் மட்டுமே ஈழ மண்ணின் அவலங்களைப் பதிவு செய்து
உலகத்திற்கு அம்பலப்படுத்தின. தமிழீழ மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து
புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை வீறு கொண்டு ஒன்றாக எழ வைத்தது.

புலம்பெயர் தேசத்துத் தமிழர்களின்
எழுச்சிக்கு வித்திட்ட தமிழ் ஊடகங்கள், அதன் மூலமாக புலம்பெயர் நாடுகளின்
அரசையும், மக்களையும் ஈழத் தமிழர்கள்பால் கருணை கொள்ள வைத்தது. அதுவும்,
இலத்திரனியல் ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளையும் போர்க்கள அழிவுகளின்
படங்களையும் பதிவு செய்து சிங்கள தேசத்தின் கொடூரங்களை வெளிக்கொணர்ந்தது.
இந்த ஊடகங்களின் தார்மீக கடமையின் வெற்றியாக புலம்பெயர் தேசப்
போர்க்களங்கள் திறக்கப்பட்டு, தமிழீழ மக்களது அவலங்கள் உலக நாடுகளுக்கு
அம்பலப்படுத்தப்பட்டது. இதன் தாக்கம் புலம்பெயர் ஊடகங்களையும் எமக்கான
நியாயங்களை எழுத வைத்தது. இத்தனை மகத்தான பணிகள் புரிந்த மின் ஊடகங்கள்
வரிசையில் தமிழ்நாதம், புதினம் முன்னிலை வகுத்தன என்பதை யாரும் மறுக்க
முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை
போட்ட போது அதற்குப் பலம் சேர்த்தவர்கள், தமிழீழ மக்கள் அழிவுகளைச்
சந்தித்தபோது சிங்கள தேசத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தியவர்கள்,
முள்ளிவாய்க்கால் முடிவுரைக்குப் பின்னர் முரசறைந்து புலம்பெயர் தேசத்து
மக்களை அணி திரட்ட வேண்டியவர்கள், தமிழின அழிப்பை வெற்றி விழாவாகக்
கொண்டாடி தமிழீழ மக்களைச் சிறைக்குள் அடைத்து எக்காளமிட்டவர்கள் மீது
போர்ப் பரணி எழுப்ப வேண்டியவர்கள், சோர்ந்து போன தமிழீழ மக்களுக்கு தேசிய
உணர்வை மீட்டுக் கொடுக்க வேண்டியவர்கள் ஏதேதோ காரணங்களைக் காட்டித் தமது
வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பிக் கொள்ள முயற்சிக்கக் கூடாது.
போர்க்களத்தில் பணியாற்றும் போராளிகள் களுத்தில் சயனைற் குப்பியை அணிந்து
கொள்வது போலவே, தேசிய உணர்வுள்ள ஊடகவியலாளர்களும் துணிந்தே நிற்பார்கள்.

சிங்கள அரசால் தாம் கொல்லப்படப்
போகின்றோம் என்று தெரிந்தும் ஊடகவியலாளர் சிவராம் அவர்களோ, சண்டே லீடர்
பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே அவர்களோ களத்திலிருந்து ஓடி ஒழியவோ,
ஒதுங்கி வாழவோ முற்படவில்லை. இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களுக்கான
முன்னுதாரணங்களாகத் திகழ்பவர்கள். இவர்களது வரலாறு உண்மையான
ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டி. ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்பது
ஊடகவியலாளனுக்கு ஏற்ற கருத்தல்ல. நல்ல கருத்துக்களை விதைப்பவர்கள்
தனிப்பட்டவர்களும் அல்ல. காட்டிக் கொடுப்பவன் மட்டும் துரோகி அல்ல.
செய்யக்கூடிய தளத்தில், செய்யக்கூடிய தகுதியில், செய்யவேண்டிய கடமையில்
இருந்து விலகிக் கொள்பவர்களும் அந்த மக்களுக்கு துரோகம்
விழைவித்தவர்களாகவே கருதப்படுவர்.

காலம் அவரவருக்கு இட்ட கடமைகளை,
கட்டளைகளை நிறைவேற்றத் தவறினால், துரோகிகள் அந்த வெற்றிடத்துக்குள்
நுழைந்து அழிவுகளை ஏற்படுத்திவிடுவார்கள். ‘ஈழநாடு’ பத்திரிகையை
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியவர் கே.சி. தங்கராஜா அவர்கள்
யோகர் சுமாமிகளிடம் ஆசி பெறச் சென்றிருந்த வேளை, யோகர் சுவாமிகள் சொன்ன
செய்திதான் ‘ஈழநாடு’ பத்திரிகையின் வேத வாக்கியமாக இப்போதும் இருந்து
வருகின்றது. ‘ஏசுவார்கள், எரிப்பார்கள் அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’ இது ஈழநாடு பத்திரிகைக்கு மட்டுமல்ல, அனைத்து
ஊடகங்களுக்கும் வேத வாக்கியமாக அமைய வேண்டும்!



சி.பாலச்சந்திரன்

நன்றி: ஈழநாடு
(Visited 67 times, 49 visits today)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும்; டிச., 1ம் தேதி முதல் மழை: பாலச்சந்திரன் தகவல்
» பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
» தமிழன் என்ற இன உணர்வைக் குலைக்கும் கலைஞர் கருணாநிதி! – சி.பாலச்சந்திரன்
» அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
» இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum