Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
4 posters
Page 1 of 1
திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
திகில், மர்மம், கதையில் எதிர்பாராத திருப்பம் என்று சென்ற வருடம் ஒரு கலக்கு கலக்கிய படமான பீட்சாவின் இரண்டாவது பாகம் தான் வில்லா – பீட்சா 2.
‘சூது கவ்வும்’ படத்தில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்க தீபன் சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார்.
இவர்கள் தவிர, நாசர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வருகிறார். மற்ற நேரங்களில் அவருடைய புகைப்படம் தான் நடித்திருக்கிறது.
மற்றபடி, பீட்சா போன்று திகில், மர்மம், எதிர்பாராத திருப்பம் என்று ‘வில்லா’ வேறு கதைக்களத்தில் பயணித்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு இறுதிக் காட்சிகளில் குழப்பங்களே மிஞ்சுகிறது.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் எழுந்து போய் தம் அடிப்பவர்கள், பாப் கார்ன் வாங்கி வருபவர்கள், பாட்டு வரும் போது ஒரு குட்டித் தூக்கம் போடுபவர்கள் கவனிக்க வேண்டும்.
கொஞ்சம் நீங்கள் அசந்தாலும், படம் புரியாமல் “என்னாச்சு … பாண்டிச்சேரியில் ஒரு பங்களா … ஹீரோ அங்க போனாரு … அப்புறம் என்னாச்சு” என்று நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாமல் முழிப்பீர்கள். ஜாக்கிரதை!
Re: திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
கதைச் சுருக்கம்
கதைப்படி நாசர் ஒரு பிரபல ஓவியர். அவரது மகன் அசோக் செல்வன் (ஜெபின்) ஒரு வளரத் துடிக்கும் நாவலாசிரியர். சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தாயை இழந்தவர். அப்பாவின் கட்டுப்பாட்டில் வளரும் ஜெபின், அவரின் விருப்பத்திற்கு இணங்கி தொழில் செய்து நஷ்டத்தை அடைகிறார்.
நாசர் உடல்நலக்குறைவால் இறந்துவிட செய்வதறியாது தவிக்கிறார் ஜெபின்.தனது நாவலை வெளியிட யாராவது முன் வர மாட்டார்களா என்று ஏங்குகிறார்.
ஜெபினின் காதலி ஆர்த்தி (சஞ்சனா) ஒரு ஒவியக் கல்லூரி மாணவி. ஜெபினுக்கு ஆறுதலாக இருக்கிறார்.
அந்த சமயத்தில், தன் அப்பா தனக்காக பாண்டிச்சேரியில் வாங்கி வைத்திருக்கும் ஒரு ஆடம்பர மாளிகை (வில்லா) பற்றி குடும்ப வழக்கறிஞர் மூலமாக ஜெபினுக்குத் தெரியவருகிறது.
சந்தோஷத்துடன் அங்கு செல்லும் ஜெபின் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்? அந்த மாளிகையில் நடக்கும் அமானுஷ்யங்கள் என்ன? அங்கிருக்கும் ஓவியங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? தனது நாவலை வெளியிட்டாரா? காதலியைக் கரம் பிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு படத்தின் இரண்டாவது பாதி பதில் சொல்கிறது.
Re: திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
படத்தின் பலம்
இரண்டரை மணி நேரங்கள் படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என்று திரைக்கதையை ஜவ்வாக இழுக்காமல் ஆங்கிலப் படங்களைப் போல் சுருக்கமாக 1 மணிநேரம் 42 நிமிடங்களில் படத்தை முடித்திருக்கும் இயக்குனர் தீபனுக்கு பாராட்டுக்களைக் கூறவேண்டும்.
மாளிகையைச் சுற்றியே கதை நகர்ந்தாலும், படம் பார்ப்பவர்களைத் திகிலூட்டும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தீபக் குமார்பதி
பீட்சாவின் தீம் இசையையும் சேர்த்து காட்சிகளுக்கு ஏற்றவாறு அதிரடி இசையை வழங்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
நாசர் சில நிமிடங்கள் தோன்றினாலும் ஒரு அனுபவ நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதே போன்று படத்தில் பொன்ராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் ஒருவர் மனதில் நிற்கிறார்.
சூது கவ்வும் படத்தில் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களைக் கவ்விய சஞ்சனா, சொகுசு மாளிகை, பாண்டிச்சேரி உட்பட கவர்ச்சிக் காட்சிகளைச் சேர்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் கூட ஒரு இடத்தில கூட முகம் சுளிக்கும் படியான காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்.
Re: திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
படத்தின் பலவீனம்
ஓவியங்களில் இருக்கும் நபர்கள் யார் யார் என்று சரியாகத் தெரியாத நிலையிலும், கார் விபத்து நடப்பது போன்ற ஓவியத்தை வைத்து தன் அம்மா என்று கணிக்கும் ஜெபின்.
ஒருவர் மருத்துவமனையில் இருப்பது போல் இருக்கும் ஓவியத்தை வைத்து நோய்வாய்ப்பட்டு இறந்து போன தன் அப்பா என்று தானே கணித்திருக்க வேண்டும்? ஆனால் இது யாருன்னு தெரியலையே என்று சஞ்சனாவிடம் கூறுகிறார் ஜெபின்.
அந்த காட்சிகளைப் பார்க்கும் நமக்கு, கதைக்காகத் தான் ஜெபின் அப்படி கூறுகிறார் என்பது தெளிவாகத் தெரியும்.
அவ்வளவு பெரிய பங்களா இருக்கும் அந்த இடம் ஒரு ஆள் அரவமற்ற பகுதியாகவே முதலில் காட்டப்படுகிறது.
ஆனால் நாய் இறந்து கிடந்து துர்நாற்றம் அடிக்கும் போதும், நண்பரின் காலில் அடிப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது போல் அங்கு எப்படி அத்தனை பேர் வந்தார்கள்?
பொன்ராஜையும் அவரது குடும்பத்தினரையும் அவரது சகோதரரே கொல்லப்போகிறார் என்று தெரிந்த ஜெபின், நினைத்திருந்தால் பொன்ராஜிடம் அதை விளக்கமாக எடுத்து கூறி அவரைக் காப்பாற்றி இருக்கலாமே?
கடைசிவரை நாசர் நல்லவரா கெட்டவரா என்றே தெரியவில்லை…
தன் காதலியை தானே குத்திக் கொல்வது போன்ற ஓவியம் ஒன்று இருந்ததே அந்த சம்பவம் நிஜவாழ்வில் நடந்ததா? இல்லையா? என்று படம் பார்த்தவர்கள் வீடு வந்து சேரும் வரை படத்தின் கிளைமாக்ஸை நினைத்து குழப்பிக் கொண்டே இருக்கும் படி இறுதிக் காட்சிகளில் அப்படி ஒரு குழப்பம்.
மொத்தத்தில் வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்
Re: திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
படம் பார்த்துவிட்ட உணர்வு. விமர்சனம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
படம் ஆரம்பிக்கும் பொழுதே முடிந்து விட்டது.... முதல் பாதியை தவிர்த்து,கதையை இன்னும் கொஞ்சம் கொண்டு போய் இருந்தால் சூப்பராக இருந்து இருக்கும்... எதிர் பார்த்து சென்றால் ஏமாற்றமே... என்னைப்போல்
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
வில்லா ...
ஒருவர் மருத்துவமனையில் இருப்பது போல் இருக்கும் ஓவியத்தை வைத்து நோய்வாய்ப்பட்டு இறந்து போன தன் அப்பா என்று தானே கணித்திருக்க வேண்டும்? ஆனால் இது யாருன்னு தெரியலையே என்று சஞ்சனாவிடம் கூறுகிறார் ஜெபின். wrote:
அண்ணா, அந்த ஓவியத்தில் நோயாளி இரு கால்களை இழந்தவராக சித்தரிக்கப் பட்டிருக்கும் !
பூர்ணகுரு
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Similar topics
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்...
» கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் நடிங்க பாஸ்! ஒரு ரசிகனின் குமுறல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|