புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_c10 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_m10 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_c10 
5 Posts - 63%
heezulia
 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_c10 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_m10 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_c10 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_m10 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 5:06 pm

 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் F2-2
நேசம் சரவணமுத்து

இலங்கையில் இப்போது கூடுதலான பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். எனினும், சர்வசன வாக்குரிமை கிடைத்ததற்குப் பின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஒரு பெண் கூடப் போட்டியிடவில்லை. ஒரேயொரு பெண் போட்டியிட முன்வந்த போதிலும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டசபைத் தேர்தலில் பலாங்கொடைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை லீலாவதி அசரப்பா தாக்கல் செய்தி ருந்தார். இவர் இந்திய வம்சாவளிப் பிராமணப் பெண். கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதி காரியான டாக்டர் சி. வி. அசரப்பாவின் மனைவி.

பலாங்கொடைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மற்றொரு வேட்பாளர் ஜே. சி. ரத்வத்தை. இவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தந்தையாரான பார்ன்ஸ் ரத்வத்தையின் சகோதரர்.

வேட்புமனு தாக்கல் செய்த போதிலும் லீலாவதி அசரப்பா ஆரம்ப கட்டத்தி லேயே போட்டியிலிருந்து விலகினார். பலாங்கொடையில் ரத்வத்தை குடும்பத்தினருக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதை அறிய வந்ததாகவும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்த்துத் தன்னால் போட்டியிட முடியாதென்பதால் விலகியதாகவும் பத்திரிகையாளர்களுக்கு அவர் கூறினார்.

 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் F2-1

அடலின் மொலமுறே

முதலாவது சட்டசபைத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடாத போதிலும் சட்டசபையில் இரண்டு பெண்கள் உறுப்புரிமை வகித்தார்கள்.

1931ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மீதெனிய அதிகார் ரூவான்வெல தொகுதியிலிருந்து போட்டியின்றித் தெரிவாகினார். 1931 செப்ரெம்பர் மாதம் அவர் இறந்ததால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மகள் அடலின் மொலமுறே தெரிவு செய்யப்பட்டார். அடலினின் கணவர் பிரான்சிஸ் மொலமுறே சட்டசபையில் சபாநாயகர். அடலினுக்கு அவரது கணவரே சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார்.

கொழும்பு வடக்குத் தொகுதியி லிருந்து 1931ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டவர் டாகடர் ரட்னஜோதி சரவணமுத்து. இவர் கொழும்பு மாநகர சபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தெரிவு செல்லுபடியற்றது எனவும் ஏழு வருடங்களுக்குச் சிவில் உரிமையை ரத்துச் செய்வதாகவும் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் 1932 மே 30ந் திகதி நடைபெற்ற இடைத் தேர்தலில் இவரது மனைவி நேசம் சரவணமுத்து போட்டியிட்டார்.

பொறியியலாளர் ஒருவரின் மக ளான நேசம் 1897ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். டாக்டர் ரட்னஜோதி சரவணமுத்துவுக்கும் இவருக்கும் 1915ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இடைத் தேர்தலில் நேசம் சரவணமுத்துவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும், சட்ட சபையில் அப்போதைய பிரதிச் சபாநாயகர் எப். ஏ. ஒபயசேகரவும் முக்கியமானவர்கள். நேசம் சரவணமுத்துவை எதிர்த்துப் போட்டி யிட்ட டாக்டர் எச். எம். பீரிஸ்ஸ¤ம் கொழும்பு வடக்கில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். நேசம் சரவணமுத்து 8681 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.

இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை நேசம் சரவணமுத்துவுக்கு ஏற்பட்டது. அவரது தேர்தல் செல்லுபடியற்றது எனத் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பாகியது. எனினும் அவரது சிவில் உரிமை ரத்துச் செய்யப்படாததால் இரண்டாவது இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார்.

இரண்டாவது இடைத் தேர்தல் 1932 நவம்பர் 12ந் திகதி நடைபெற்றது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எச். வி. காசி செட்டியிலும் பார்க்க 8106 மேலதிக வாக்குகள் பெற்று நேசம் சரவணமுத்து தெரிவாகினார்.

இரண்டாவது சட்டசபைத் தேர்தல் 1936ம் ஆண்டு நடைபெற்றது. முதலாவது சட்டசபையில் அங்கத்துவம் வகித்த இரண்டு பெண்களில் ஒருவர் மாத்திரம் தெரிவாகினார். அடலின் மொலமுறே ரூவான்வெல தொகுதியில் கலாநிதி என். எம். பெரேராவிடம் தோற்றுவிட்டார். நேசம் சரவணமுத்து கொழும்பு வடக்கில் வெற்றி பெற்றார்.

நேசம் சரவணமுத்து சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து 1941 ஜனவரி 19ந் திகதி தனது நாற்பத்தி நான்காவது வயதில் மரணமடைந்தார். டாக்டர் ரட்னஜோதி சரவணமுத்து கொழும்பு மேயராக இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டதற்குப் பதினோராவது நாள் இவரது மரணம் சம்பவித்தது.

இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் இன்னொரு தமிழப் பெண்ணும் போட்டியிட்ட போதிலும் தெரிவு செய்யப்படவில்லை. லக்ஷ்மி ராஜ ரட்னம் ஹட்டன் தொகுதியில் போட்டியிட்டார். அத் தொகுதியி லிருந்து தெரிவு செய்யப்பட்டவர் நடேச ஐயர்.




 சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக