ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14

2 posters

Go down

உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14 Empty உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14

Post by டார்வின் Thu Nov 14, 2013 7:43 pm

உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்’ என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14 ZVhXA0jS0iIbcd0FBVsh+1395945_637131639678963_2089459354_n

ஒரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி’ என்று சொல்லப்பட்ட இந்த நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை... என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம்... வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான். அதனால்தான், 'வாழ்க்கை முறை நோய்’ என்றும் இதற்கு பெயரைச் சூட்டி வைத்துள்ளனர்.
''சரியான புரிதலும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை பெருகக் காரணம்'' என்று எடுத்ததுமே தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் சென்னையைச் சேர்ந்த 'சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்' கருணாநிதி.
''சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன என்பதை முதலில் நாம் அனைவருமே உணர வேண்டும். சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. இதைத்தவிர கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்தப் பணியை கணையத்தில் சுரக்கும் 'இன்சுலின்' என்கிற ஹார்மோன் தொடர்ந்து செய்கிறது. அதனால் ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே 'சர்க்கரை நோய்’ என்கிறோம்'' என்று நோய் பற்றி சொன்ன டாக்டர், அதற்கான அறிகுறிகள், நோயின் வகைகள், தடுப்பு முறைகள், உணவுகள் என்று அனைத்தையும் விரிவாகவே விளக்கினார்.
அறிகுறிகள்!
''அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்... உடல் பருமன். இதில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை' என்று சொல்லக்கூடிய 'ப்ரீ டயாபீட்டிஸ்’ வகையும் உள்ளது.
டைப்-1: உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்-1 சர்க்கரை நோய் என்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை, 'கிருமிகள்’ என்று நினைத்துத் தாக்கி, அழித்துவிடும். இதனால், இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டு, வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்த வேண்டிய சூழல் உருவாகும்.
டைப்-2: உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால், அது குறைந்த அளவாகவோ... அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கர்ப்பக் கால சர்க்கரை நோய்: பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே 'கர்ப்பக் கால சர்க்கரை நோய்’ என்கிறோம். இவர்களில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்து தேவைப்படுகிறது. இந்த நோய், பிரசவத்துக்குப் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், பின்னாளில் சர்க்கரை நோய் தாக்குதலில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
ப்ரீ டயாபீட்டிஸ்: சர்க்கரை நோயாளிகளைவிட, ப்ரீ டயாபீட்டிஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 'சர்க்கரை நோய் எந்நேரமும் தாக்கக்கூடும்’ என்று 'வானிலை அறிவிப்பு’ ஸ்டைலில் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும்.
இந்த நான்கு நிலையிலும் இருப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்படலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்துகள், இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை!
இப்படி கண்டறியுங்கள்!
சாதாரண ரத்தப் பரிசோனை மூலமாகவே கண்டறிய முடியும் என்றாலும். முழுமையாக உறுதிபடுத்திக் கொள்ள ஜி.டி.டி பரிசோதனை, ஹெச்.பி.ஏ.1 சி பரிசோதனை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கைக்கு அடக்கமாக கிடைக்கும் 'குளுக்கோ மீட்டர்’ கருவி மூலமாக, நாமே நம் விரலில் இருந்து 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விலை 1,500 ரூபாய். இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ் 'இது 10 முதல் 15 சதவிகிதம் சர்க்கரையின் அளவை துல்லியமாக காட்டுவதில்லை’ என்பதுதான்'' என்ற டாக்டர், தொடர்ந்து நோய்க்கான காரணிகளைப் பற்றி சொன்னார்.
நோய்க்கான காரணிகள்..?
''டைப்-2 சர்க்கரை நோய்... 45 வயதைக் கடந்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது மற்றும் எடை அதிகரிப்பதுதான் காரணம். மரபியல் காரணமாகவும் இந்த நோய் தாக்கும். பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வருவதற்கு 80 முதல் 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால், 60 சதவிகித வாய்ப்பு இருக்கும். இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, 25 வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம்... உணவுப் பழக்கம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவையே.
vigadan
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14 Empty Re: உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14

Post by krishnaamma Thu Nov 14, 2013 8:08 pm

நல்ல பதிவு , நல்ல நேரத்தில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum