Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
2 posters
Page 1 of 1
வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
நீலம் நெய்தல் நிலவி(ம்) மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள்
வேலஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
- திருஞானசம்பந்தர்
சிவபெருமான் தன் பேரருளை வாரி வழங்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள கோயில்களுள் பலவகையாலும் மேம்பட்ட சீரும் சிறப்பும் பொலியத் திகழ்வது சிக்கல்.
பெருமைகள் பல பெற்ற எம்பெருமான் ஆட்சி செய்யும் தலம் என்றாலும், அவரே மகிழும் வண்ணம் ஒரு நிகழ்வு இத்தலத்தில் காலம்காலமாக நிகழ்ந்து வருகிறது. அது என்ன என்பதைப் பார்க்கும் முன் தலபுராணம் தெரிந்து கொள்வோம்.
பழங்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தார். அச்சமயம் காமதேனுப் பசுவும் இங்கு வந்து இறைவனைப் போற்றி வணங்கியது.
இத்தலத்துத் திருக்குளத்தில் காமதேனு நீராடியபோது அதன் பால் பெருகி உண்டான வெண்ணெய் நீர்நிலை முழுவதும் பரவியது.
தவமிருந்த வசிட்டர் குளத்தினுள் பெருகியிருந்த பாலில் மிதந்த வெண்ணெயைக் கண்டார். அதனை ஒன்றாகச் சேர்த்துத் திரட்டி சிவலிங்கமாக அமைத்து, ஆன்மார்த்தமாக சிவ பூசனை செய்தார். பூசனை இனி நிறைவேறியது. லிங்கத்தை வேறிடத்தில் அமைக்க முயன்றார் வசிட்டர். வெண்ணெய் லிங்கப் பிரானோ திருவிளையாடல் புரிய எண் "கல்' என இறுகி அசையாது நின்றார்.
வசிட்ட முனிவர் "செல்வமே சிவபெருமானே, யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன். எங்கெழுந்தருளுவது இனியே' என்று தொழுது லிங்கத் திருமேனயை "சிக்' எனப் பிடித்தார். அன்று முதல் இத்தலத்திற்கு சிக்கல் எனப் பெயர் வழங்கலாயிற்று.
வெண்ணெயால் திருமேனி அமைந்ததால் இறைவன் வெண்ணெய் லிங்கப் பிரான். வடமொழியில் நவநீதேஸ்வரர்.
இத்தலத்தில் முருகப் பெருமான் சிங்கார வேலவராக அமர்ந்து காட்சியளிக்கிறார். முருகனின் திருப்பெயர்களுள் சிகி வாகனன் என்பதும் ஒன்று. இதற்கு மயில் மீது அமர்ந்து விளங்குபவன் என்று பொருள் சிகிவாகனனாக அதாவது மயில்வாகனனாக முருகன் இத்தலத்தில் வீற்றிருப்பதால் சிகி என்பதே மருவி "சிக்கல்' என்றானதாகக் கருதுவோரும் உண்டு.
அம்பிகை வேல்நெடுங்கண்ணி என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் தெற்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டுள்ளாள். வேல்போன்ற நீண்ட விழிகளை உடையவள் என்ற பொருளுடைய இப்பெயர், வடமொழியில் சத்தியா தாட்சி என வழங்குகிறது.
வெண்ணெய்பிரானும் வேல்நெடுங்கண்ணியும் பெருமைகொள்ளும் வண்ணம் இங்கே ஆண்டு தோறும் நிகழும் ஓர் அற்புத சம்பவம், புராணச் சிறப்பு உள்ளது.
அமரர் காவலன் ஆறுமுகன், அசுரன் சூரபத்மனை அழித்திட ஆங்காரமாகப் புறப்பட்டபோது, அந்த ஓங்கார ரூபனுக்கு ஒப்பற்ற ஆயுதம் ஒன்றினை அளித்திட எண்ணினாள் அன்னை வேல்நெடுங்கண்ணி.
என்ன ஆயுதம் தருவது?
எப்போதும் அன்னையின் பார்வையில் இருக்கும் பிள்ளைக்கு ஆபத்து எதுவும் வராது அல்லவா? அதனால் தன் விழிகளுக்கு ஒப்பான வேல் ஆயுதத்தினை வேலனுக்கு அளித்தாள் வேல்நெடுங்கண்ணி.
அருள்விழியாள் அளித்த வேலை அனல் விழியால் பிறந்த அழகன் வாங்கும் போது அவன் உடலில் பெருகிய வெப்பத்தால் பொங்கியது வியர்வை.
அப்போதே அவனது நெற்றிக்கு அச்சாரம் இடப்பட்டுவிட்டதால் அகமகிழ்வோடு ஆசியளித்தாள் அம்மை.
புராணம் சொல்லும் இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக இன்றும் சிக்கல் திருத்தலத்தில் நிகழ்கிறது அந்த அற்புதம்.
ஆண்டுதோறும் கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள் (சூரசம்ஹாரத்திற்கு முதல்நாள்), சூரனை வதைத்திட சிங்காரவேலவர், வேல்நெடுங்கண்ணியிடம் வேல்பெற்றிட வருவார். அன்னை அளித்திடும் வேலைப் பெற்றதும் பிள்ளை முகத்தில் வியர்வை துளிர்த்திடும். அருகில் இருப்போர் மேலேயெல்லாம் அது பெருகித் தெளித்திடும்.
இத்தலத்து முருகனின் மூலவர் விக்ரகமே உற்சவராகவும் இருப்பது தனிச்சிறப்பு என்றால், அந்த விக்ரகத் திருமேனியில் சிங்காரவேலவன் முழுமையாய் உறைந்திருப்பதை உணர்த்தும் விதமாக வேல்வாங்கும் தருணத்தில் வியர்வை பொங்குவது, கண்டால் மட்டுமே உணரக்கூடிய அதிசயம்.... அற்புதம்!
அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின், ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.
கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோலவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டுவு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.
இவர் சன்னதியில் கட்டமுது கட்டுவோர் வேண்டிய யாவும் எட்டுவார் என்பது நிச்சயம்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்தூரில் போர் முடித்து என்பார்கள். சூரசம்ஹாரம் செந்திலில் நடந்தாலும் அதற்கான அச்சாரமாக அன்னை வேல்நெடுங்கண்ணி சிங்காரவேலனுக்க வேலாயுதத்தினைத் தருவதும், அதனைப் பெற்றிடும் வேலவன் திருமுகம் வியர்ப்பதும் ஆண்டுதோறும் அடியவர் கண்டு அகம் மகிழும் அற்புதம்.
சூரனை அழித்திடச் சென்ற சுப்ரமண்யன், அவனுக்கு இரங்கி குக்குடமும் மயிலுமாக ஆக்கிக் கொண்டான்.
பகைவனுக்கும் அருளிய அந்தச் சிங்கார வேலவன் பக்தர்களுக்கு அருள மாட்டானா என்ன?
தரிசித்துப் புண்ணியத்தோடு முருகனின் பேரருளையும் பெற்றுவர இந்தக் கந்தசஷ்டியில் நீங்களும் புறப்படுங்கள்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்திலிலே போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை தக்க நலன்களைத் தந்திட வேண்டியே நித்தம் பணிவோம் நினைந்து.
எங்கே இருக்கு: நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. திருவாரூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 - 12, மாலை 4 - 9
இந்த ஆண்டு சிக்கல் திருத்தலத்தில்...
சிங்காரவேலவன் வேல்வாங்கி வியர்வை சிந்தும் நாள் - 07.11.2013
சூரசம்ஹாரம் - 08.11.2013
தெய்வானை திருமணம் - 09.11.2013
வள்ளி திருமணம் - 10.11.2013
- க. சுகுமாறன், மன்னார்குடி
சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள்
வேலஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
- திருஞானசம்பந்தர்
சிவபெருமான் தன் பேரருளை வாரி வழங்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள கோயில்களுள் பலவகையாலும் மேம்பட்ட சீரும் சிறப்பும் பொலியத் திகழ்வது சிக்கல்.
பெருமைகள் பல பெற்ற எம்பெருமான் ஆட்சி செய்யும் தலம் என்றாலும், அவரே மகிழும் வண்ணம் ஒரு நிகழ்வு இத்தலத்தில் காலம்காலமாக நிகழ்ந்து வருகிறது. அது என்ன என்பதைப் பார்க்கும் முன் தலபுராணம் தெரிந்து கொள்வோம்.
பழங்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தார். அச்சமயம் காமதேனுப் பசுவும் இங்கு வந்து இறைவனைப் போற்றி வணங்கியது.
இத்தலத்துத் திருக்குளத்தில் காமதேனு நீராடியபோது அதன் பால் பெருகி உண்டான வெண்ணெய் நீர்நிலை முழுவதும் பரவியது.
தவமிருந்த வசிட்டர் குளத்தினுள் பெருகியிருந்த பாலில் மிதந்த வெண்ணெயைக் கண்டார். அதனை ஒன்றாகச் சேர்த்துத் திரட்டி சிவலிங்கமாக அமைத்து, ஆன்மார்த்தமாக சிவ பூசனை செய்தார். பூசனை இனி நிறைவேறியது. லிங்கத்தை வேறிடத்தில் அமைக்க முயன்றார் வசிட்டர். வெண்ணெய் லிங்கப் பிரானோ திருவிளையாடல் புரிய எண் "கல்' என இறுகி அசையாது நின்றார்.
வசிட்ட முனிவர் "செல்வமே சிவபெருமானே, யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன். எங்கெழுந்தருளுவது இனியே' என்று தொழுது லிங்கத் திருமேனயை "சிக்' எனப் பிடித்தார். அன்று முதல் இத்தலத்திற்கு சிக்கல் எனப் பெயர் வழங்கலாயிற்று.
வெண்ணெயால் திருமேனி அமைந்ததால் இறைவன் வெண்ணெய் லிங்கப் பிரான். வடமொழியில் நவநீதேஸ்வரர்.
இத்தலத்தில் முருகப் பெருமான் சிங்கார வேலவராக அமர்ந்து காட்சியளிக்கிறார். முருகனின் திருப்பெயர்களுள் சிகி வாகனன் என்பதும் ஒன்று. இதற்கு மயில் மீது அமர்ந்து விளங்குபவன் என்று பொருள் சிகிவாகனனாக அதாவது மயில்வாகனனாக முருகன் இத்தலத்தில் வீற்றிருப்பதால் சிகி என்பதே மருவி "சிக்கல்' என்றானதாகக் கருதுவோரும் உண்டு.
அம்பிகை வேல்நெடுங்கண்ணி என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் தெற்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டுள்ளாள். வேல்போன்ற நீண்ட விழிகளை உடையவள் என்ற பொருளுடைய இப்பெயர், வடமொழியில் சத்தியா தாட்சி என வழங்குகிறது.
வெண்ணெய்பிரானும் வேல்நெடுங்கண்ணியும் பெருமைகொள்ளும் வண்ணம் இங்கே ஆண்டு தோறும் நிகழும் ஓர் அற்புத சம்பவம், புராணச் சிறப்பு உள்ளது.
அமரர் காவலன் ஆறுமுகன், அசுரன் சூரபத்மனை அழித்திட ஆங்காரமாகப் புறப்பட்டபோது, அந்த ஓங்கார ரூபனுக்கு ஒப்பற்ற ஆயுதம் ஒன்றினை அளித்திட எண்ணினாள் அன்னை வேல்நெடுங்கண்ணி.
என்ன ஆயுதம் தருவது?
எப்போதும் அன்னையின் பார்வையில் இருக்கும் பிள்ளைக்கு ஆபத்து எதுவும் வராது அல்லவா? அதனால் தன் விழிகளுக்கு ஒப்பான வேல் ஆயுதத்தினை வேலனுக்கு அளித்தாள் வேல்நெடுங்கண்ணி.
அருள்விழியாள் அளித்த வேலை அனல் விழியால் பிறந்த அழகன் வாங்கும் போது அவன் உடலில் பெருகிய வெப்பத்தால் பொங்கியது வியர்வை.
அப்போதே அவனது நெற்றிக்கு அச்சாரம் இடப்பட்டுவிட்டதால் அகமகிழ்வோடு ஆசியளித்தாள் அம்மை.
புராணம் சொல்லும் இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக இன்றும் சிக்கல் திருத்தலத்தில் நிகழ்கிறது அந்த அற்புதம்.
ஆண்டுதோறும் கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள் (சூரசம்ஹாரத்திற்கு முதல்நாள்), சூரனை வதைத்திட சிங்காரவேலவர், வேல்நெடுங்கண்ணியிடம் வேல்பெற்றிட வருவார். அன்னை அளித்திடும் வேலைப் பெற்றதும் பிள்ளை முகத்தில் வியர்வை துளிர்த்திடும். அருகில் இருப்போர் மேலேயெல்லாம் அது பெருகித் தெளித்திடும்.
இத்தலத்து முருகனின் மூலவர் விக்ரகமே உற்சவராகவும் இருப்பது தனிச்சிறப்பு என்றால், அந்த விக்ரகத் திருமேனியில் சிங்காரவேலவன் முழுமையாய் உறைந்திருப்பதை உணர்த்தும் விதமாக வேல்வாங்கும் தருணத்தில் வியர்வை பொங்குவது, கண்டால் மட்டுமே உணரக்கூடிய அதிசயம்.... அற்புதம்!
அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின், ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.
கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோலவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டுவு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.
இவர் சன்னதியில் கட்டமுது கட்டுவோர் வேண்டிய யாவும் எட்டுவார் என்பது நிச்சயம்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்தூரில் போர் முடித்து என்பார்கள். சூரசம்ஹாரம் செந்திலில் நடந்தாலும் அதற்கான அச்சாரமாக அன்னை வேல்நெடுங்கண்ணி சிங்காரவேலனுக்க வேலாயுதத்தினைத் தருவதும், அதனைப் பெற்றிடும் வேலவன் திருமுகம் வியர்ப்பதும் ஆண்டுதோறும் அடியவர் கண்டு அகம் மகிழும் அற்புதம்.
சூரனை அழித்திடச் சென்ற சுப்ரமண்யன், அவனுக்கு இரங்கி குக்குடமும் மயிலுமாக ஆக்கிக் கொண்டான்.
பகைவனுக்கும் அருளிய அந்தச் சிங்கார வேலவன் பக்தர்களுக்கு அருள மாட்டானா என்ன?
தரிசித்துப் புண்ணியத்தோடு முருகனின் பேரருளையும் பெற்றுவர இந்தக் கந்தசஷ்டியில் நீங்களும் புறப்படுங்கள்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்திலிலே போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை தக்க நலன்களைத் தந்திட வேண்டியே நித்தம் பணிவோம் நினைந்து.
எங்கே இருக்கு: நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. திருவாரூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 - 12, மாலை 4 - 9
இந்த ஆண்டு சிக்கல் திருத்தலத்தில்...
சிங்காரவேலவன் வேல்வாங்கி வியர்வை சிந்தும் நாள் - 07.11.2013
சூரசம்ஹாரம் - 08.11.2013
தெய்வானை திருமணம் - 09.11.2013
வள்ளி திருமணம் - 10.11.2013
- க. சுகுமாறன், மன்னார்குடி
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Similar topics
» முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» சினிமாவில்தான் சண்டைக் காட்சிகள் பார்க்க வேண்டுமா? இது நிஜ சண்டைக்காட்சி.
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» சினிமாவில்தான் சண்டைக் காட்சிகள் பார்க்க வேண்டுமா? இது நிஜ சண்டைக்காட்சி.
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|