ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிவாஜி என்ற மாநடிகர்'

+9
krishnaamma
jenisiva
ஜாஹீதாபானு
veeyaar
பாலாஜி
ராஜா
பூர்ணகுரு
சிவா
vasudevan31355
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 Wed Nov 13, 2013 10:52 am

First topic message reminder :

'சிவாஜி என்ற மாநடிகர்'

தொடர்-1

ஈகரையில் என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி!

புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அனைவருக்கும் என் நன்றி!

'பராசக்தி

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 I18283_vlcsnap-2012-08-01-10h36m15s131

'வெளி வந்த நாள்: 17-10-1952

மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம்

திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

இசை: ஆர். சுதர்சனம்

ஒளிப்பதிவு: எஸ்.மாருதிராவ்

தயாரிப்பு: நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள்

இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு

நடிக, நடிகையர்: நடிகர் திலகம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்வரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.


கதை:

பாரிஸ்டர் சந்திரசேகரன் தன் தம்பிகளுடன் சிறு வயது முதல் (ஞானசேகரன், குணசேகரன்) ரங்கூனில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் மதுரையில் தந்தையுடன் இவர்களின் தங்கை கல்யாணி வசித்து வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளையும் பார்த்தாகி விட, உலகப் போர் காரணமாக அண்ணன்மார்கள் மூவரும் ரங்கூனிலிருந்து தங்கையின் கல்யாணத்திற்கு வர கப்பலில் இடம் கிடைக்காததால் கடைத்தம்பி குணசேகரன் மட்டும் திருமணத்திற்கு இந்தியா புறப்பட்டு வருகிறான். கப்பலும் குறிப்பிட்ட நேரத்தில் மதராஸ் வரமுடியாமல் போர்க் காரணங்களினால் தாமதப்படுகிறது. திருமணம் முடிந்து கர்ப்பமுறும் கல்யாணி குழந்தையைப் பெற்றெடுத்து கணவனை விபத்தில் பறி கொடுக்கிறாள். தந்தையையும் இழக்கிறாள். அநாதை ஆகிறாள். கப்பலில் மதராஸுக்கு தாமதமாக வந்து சேரும் குணசேகரன் தான் கொண்டுவந்த பணத்தையும், பொருளையும் வஞ்சகர்களிடம் பரிதாபமாகப் பறி கொடுக்கிறான். ஒரு சாண் வயிற்றுக்காக பைத்தியம் போல நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். விதவையான கல்யாணி இட்லிக் கடை நடத்தி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள். தன் தங்கையை பல சிரமங்களுக்கிடையில் மதுரை வந்து கண்டு மனம் நொந்து போகிறான் குணசேகரன். தான் அண்ணன் என்று அவளிடம் காட்டிக் கொள்ளாமலேயே.அவளுக்கு துணையாக அவளுடனே இருக்கிறான். கல்யாணிக்கு அவன் கிறுக்கண்ணா. ஆனால் அங்குள்ள காமுகன் ஒருவனின் நடத்தைக்குப் பயந்து இட்லிக்கடையை விட்டு விட்டு குழந்தையுடன் அந்த ஊரை விட்டே போய் விடுகிறாள். கல்யாணியைக் காணாமல் தேடி அலைகிறான் குணசேகரன்.

இடையில் போரின் உக்கிரம் தாளாமல் ரங்கூனிலிருந்து தமிழகம் திரும்ப பயணப்படும் ஞானசேகரனும் சந்திரசேகரனும் ஜப்பான் விமானங்களின் குண்டு வீச்சால் பிரிகிறார்கள். தம்பிகளை இழந்து தவிக்கும் சந்திரசேகரன் திருச்சி வந்து நீதிபதியாகி தன் தங்கை கல்யாணியைத் தேடுகிறார். ஞானசேகரன் குண்டு வீச்சால் கால்களை இழந்து நொண்டியாகிறான். பர்மா அகதிகளில் ஒருவனாக தமிழகம் வந்து சேர்கிறான். ஞானசேகரனும் அவனுடன் வந்த மற்ற அகதிகளும் ஆதரவின்றி  பிச்சைக்காரர்களாகவே ஆகி விடுகின்றனர்.

அனாதையாகத் திரியும் குணசேகரனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு நல்வாழ்வு காட்டுகிறாள் புரட்சி எண்ணம் கொண்ட விமலா என்ற ஒரு கோதை.

ஊர் விட்டு ஊர் மாறி வந்து காமுகர்களிடமும், கயவர்களிடமும் சிக்கி சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறாள் கல்யாணி. பசிக் கொடுமையில் குழந்தைக்கு பால் வாங்கக் கூட இயலாத நிலையில் அனைவரிடமும் பிச்சை கூட கேட்கிறாள் கல்யாணி. ஆனால் யாரும் இரக்கம் காட்டவில்லை. மாறாக அவள் கற்பைத்தான் விலை பேசுகிறார்கள். கோவில் பூசாரி ஒருவன் கல்யாணியின் கற்பை சூறையாட முயல்கிறான். வாழவே வழியில்லாமல் போன நிலையில் பசியின் அகோரப் பிடியில் தவிக்கும் தன் மழலைச் செல்வத்தையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயல்கிறாள் கல்யாணி. ஆனால் காவலர்களிடம்  மாட்டிக் கொள்கிறாள். வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ அவளுடைய அண்ணன் சாட்சாத் சந்திரசேகரன்தான். கல்யாணி தன்னுடைய சோகக்கதையை கோர்ட்டில் சொல்ல அவள் தன் தங்கை என்று தெரிந்து துடித்து விழும் நீதிபதி அண்ணன் சந்திரசேகரன் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

கல்யாணின் வாழ்வை சூறையாட நினைத்த பகல் வேஷ காமாந்தக பூசாரி ஒருவனை வெட்டி நீதிமன்றம் புகுகிறான் குணசேகரன். அங்கு தனக்காகவும், குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக கோர்ட்டில் நிற்கும் தன் தங்கைக்காகவும் புரட்சிகரமாக புதுமையாக வாதாடுகிறான். தான் பட்ட துயரங்களையும் தன் தங்கை கல்யாணி பட்ட துயரங்களையும் எடுத்துரைக்கிறான். சமூகத்தில் பெண்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் ஏற்படும் கொடுமைகளைப் பற்றியும் சாடுகிறான். வழக்கு முடிவுக்கு வந்து குணசேகரன் நிரபராதி என்று விடுதலையாகிறான். கல்யாணியின் குழந்தையும் கருணை மனம் கொண்ட குணசேகரனுக்கு அடைக்கலம் தந்த அதே விமலாவால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைப்பதால் கல்யாணியும் குற்றத்திலிருந்து விடுவிக்கப் படுகிறாள். தன் தங்கையைக் கண்ட சந்தோஷத்தில் அண்ணன் சந்திர சேகரனும் குணமடைகிறார். பிச்சைக்காரனாக அலைந்து திரிந்த ஞானசேகரனும் குடும்பத்துடன் இணைகிறான். தன் வாழ்வில் உறுதுணையாய் நின்ற விமலாவைக் கரம் பற்றுகிறான் குணசேகரன். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது. பிச்சைகாரர்களுக்காக ஒரு அநாதை விடுதியும் திறக்கப்படுகிறது.

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 TH02_PARASAKTHI_1350808g

கதாநாயகன் குணசேகரனாக நடிகர் திலகம், அண்ணன் சந்திரசேகரனாக எஸ்.வி.சகஸ்ரநாமம், தம்பி ஞானசேகரனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், தங்கை கல்யாணியாக ஸ்ரீரஞ்சனி, கதாநாயகி விமலாவாக பண்டரிபாய் திறம்பட நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் மிக அற்புதமாக இயக்கம் செய்தனர்.

நடிகர் திலகத்தின் முதல் படம். நாயகனாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு சிலகாட்சிகளும் எடுக்கப்பட்ட பிறகு 'தோற்றப் பொலிவு சரியில்லை... பையன் மீன் மாதிரி வாயைத் திறக்கிறான்' என்று  ஏ.வி.எம்.செட்டியார்,மற்றும் சிலர் சிவாஜியை நிராகரித்து அன்றைய பிரபலம் கே.ஆர்.ராமசாமி அவர்களை நாயகனாக மாற்றிப் போடலாம் என்று சொல்ல, படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் நடிகர் திலகத்தின் நடிப்பின் மேல் இருந்த நம்பிக்கையால் சிவாஜியை மாற்ற இயலாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். சிவாஜி இல்லையென்றால் படத்தின் பங்குதாரர் நிலையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து விட்டார்.

சிவாஜியின் அசாத்தியமான திறமையை நாடகங்கள் வாயிலாக அறிந்திருந்த, அப்போதைய அரசியல் பெருந்தலையாய் வளர்ந்து கொண்டிருந்த அறிஞர் அண்ணா சிவாஜியைத்தான் கதாநாயகனாகப் போட வேண்டும் என்று சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல் மெய்யப்ப செட்டியார் ஒத்துக் கொண்டார்.

ஒல்லியான உடல்வாகுடன் வறுமையாகத் தெரிந்த சிவாஜிக்கு இரண்டு  மாதங்கள் நல்ல ஆகாரங்கள் வழங்கி அவர் தோற்றப் பொலிவு மெருகூட்டப்பட்டது. மறுபடி ஷூட்டிங் தொடங்கியது. இரவுபகலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு 1952-இல் பராசக்தி தீபாவளிக்கு வெளியிடப்பட்டு மாபெரும் புரட்சி வெற்றி பெற்றது. திராவிட இயக்க கொள்கைகள் பலமாக அடியெடுத்து வைத்து நுழைய பாலமாக அமைந்தது பராசக்தி.

நடிகர் திலகத்தின் முதல் படத்திலேயே அவருடைய பிரம்மிக்கத்தக்க புதுமையான நடிப்பைக் கண்டு திரையுலகமே வாய் பிளந்தது. புரட்சிக் கருத்துக்கள் கொண்ட கூர்மையான கதைக்கு மிகவும் பொருத்தமான கலைஞரின் வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் சிவாஜியின் குரலில் சிங்கநாதமாய் ஒலித்தன. பராசக்தியின் வசனங்கள் புதிதாக வரும் நடிகர்களுக்கு பாலபாடமாகியது. அந்த நீதிமன்றக் காட்சி ("நீதிமன்றம்...  விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது") வசனத்தைப் பேசிக்காட்டினால்தான் திரையுலகிலே எவரும் அடியெடுத்து வைக்க முடியும் என்ற நிலை நீண்ட வருடங்கள் தொடர்ந்தது. கமல், சிவக்குமார் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த வசனத்தைப் பேசிக்காட்டி விட்டுத்தான் தமிழ் சினிமா உலகில் கால் பதிக்க முடிந்தது.

அதுவரை படம் நெடுக பாடல்களும், உணர்ச்சியில்லாத வசன உச்சரிப்புகளும், பொறுமையை சோதிக்கும் சவ சவ இழுவைக் காட்சிகளுமாய் இருந்த தமிழ்த்திரையுலகம் பராசக்திக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க மிகப் பெரிய தூண்டுகோலாய் அமைந்தது 'பராசக்தி'

பராசக்திக்கு முன் பராசக்திக்குப் பின் என்று தமிழ்த் திரையுலக வரலாறு மாறியது. சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்று உலக நடிப்பிலக்கணமே இரண்டாக ஆனது.



இன்றுவரை அனைவரும் அதிசயப்படுவது இது சிவாஜிக்கு முதல் படமா? என்றுதான். நாடக மேடை அனுபவம் அப்படிக் கை கொடுத்தது இந்தக் கலைஞனுக்கு. 'தென்றலைத் தீண்டியதில்லை நான்' என்னும் வசனம் மட்டுமே திரையரங்குகளில் நம் காதுக்குக் கேட்கும். மற்ற வசனங்கள் ரசிகர்கள் கைத்தட்டல்களில் காதுகளில் விழாது. குரலின் ஏற்ற இறக்கங்கள், மிக மிகத் தெள்ளத் தெளிவான உச்சரிப்பு, நொடிக்கொரு தரம் மாறும் முகபாவம், முதல் படத்திலேயே பணக்கார ரங்கூன்வாசியாக, பணமிழந்து வாடும் ஏழையாக, ராஜாவாக, மந்திரியாக, சேவகனாக தனி நடிப்பு, பைத்தியக்காரனாக பலவித உணர்ச்சிகளில் பாங்கான நடிப்பு, டூயட்டில் ஆண்மை கம்பீரம், வறுமையின் வாட்டத்தை முகத்தில் பிரதிபலிக்கும் திறமை, நீதி மன்றத்தில் சிங்கமென கர்ஜித்து முழங்கும் முழக்கம் என ஒரே படத்திலேயே அத்தனை விஷயங்களையும் வழங்கி இன்று வரை நம் நெஞ்சில் குணசேகரனாக வாழ்கிறார் நடிகர் திலகம்.

படம் காங்கிரஸ்கார ஆட்சியால் தடை செய்யப்பட்டு மீண்டு வந்து வெள்ளி விழாக் கொண்டாடியது. பலஊர்களில் நூறு நாட்கள் கண்டது. ஈழத்தில் பிரம்மாண்ட வெற்றியினைப் பெற்றது. மறு வெளியீடுகளிலும் அமர்க்களமாக ஓடியது.அந்த வருடத்தின் மறக்க முடியாத தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அமைந்தது.

'புதுப் பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே'.... 'ஓ ரசிக்கும் சீமானே வா'... 'கா கா கா...  நெஞ்சு பொறுக்குதில்லையே'... 'பூமாலை... புழுதி மண் மேலே' என்ற வெகு பிரசித்தி பெற்ற சலிக்காத பாடல்கள்.

பராசக்தி பாடல்களை இயற்றியோர்: மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயண கவி, காமாஷிநாதன்

மாருதிராவ் அவர்களின் சிறப்பான பளிச்சென்ற ஒளிப்பதிவு

கிருஷ்ணன் பஞ்சு இரட்டையரின் அற்புதமான புதுமை இயக்கம்

என்று இந்த பராசக்தி சகலத்திலும் சக்தி பெற்று விளங்கினாள். அது மட்டுமல்ல. தமிழ்த்திரை உலகம் பெருமை கொள்ள அருமையான சிவாஜி கணேசன் என்ற ஒப்பற்ற நடிக மைந்தனை நமக்கு அருளினாள்

இந்தக் கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.

(பராசக்தி தொடருவாள்).


Last edited by vasudevan31355 on Wed Nov 13, 2013 11:15 am; edited 7 times in total
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down


 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 Thu Nov 14, 2013 9:39 pm

'சிவாஜி என்ற மாநடிகர்' நெடுந்தொடருக்கு வரவேற்பு அளித்த அத்துணை பேருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

'பராசக்தி' முதல் பதிவை பாராட்டிய அன்பிற்கினிய நல்லுளங்கள் சிவா, பூர்ணகுரு, ராஜா, பாலாஜி, வீயார், ஜாஹிதாபானு, ஜெனிசிவா அனைவருக்கும் என் நன்றிகள்.

சிவா சார்,

அண்ணா அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி கூறிய அருமையான கருத்தை இங்கு பதித்து பதிவை சிறப்பாக்கியதற்கு மிக்க நன்றி.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by சிவா Thu Nov 14, 2013 10:24 pm

vasudevan31355 wrote:
அண்ணா அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி கூறிய அருமையான கருத்தை இங்கு பதித்து பதிவை சிறப்பாக்கியதற்கு மிக்க நன்றி.
மகிழ்ச்சி அண்ணா!

(என்னை சிவா என்று மட்டும் அழைத்தால் போதும்! அதுவே எனக்கு மகிழ்ச்சி தரும்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by krishnaamma Fri Nov 15, 2013 1:16 pm

//புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். //

அருமையான திரி, நல்லா இருக்கு, தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by M.M.SENTHIL Fri Nov 15, 2013 1:36 pm

நடிப்புலக வரலாறு,
அவரின் வரலாறு
வரவேற்க வேண்டியதே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by jayaravi Thu Nov 28, 2013 6:44 pm

பராசக்தியினால்  உயர்ந்தமனிதன்

Dear Vasu sir - You are time and again demonstrating through your passionate postings that you have no parallel to draw to describe about NT . Even magazine or journals during those days would not have explained so nicely the way you did. Hats Off to you and God bless.

Ravi
Hyderabad

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 3838410834  'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 103459460
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by ayyasamy ram Thu Nov 28, 2013 7:01 pm

பதிவகள்... 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 3838410834 
-
 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 HCPiNrQdRQ6xtcLT5mOE+sivaji_ganesan
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 Mon Dec 02, 2013 8:45 am

அருமை தோழர்கள் கிருஷ்ணம்மா, செந்தில், ஜெயரவி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 Mon Dec 02, 2013 8:47 am

அய்யாசாமி அவர்களே!

தாங்கள் பதிவிட்டுள்ள நடிகர் திலகத்தின் நினைவுத் தபால் தலை படம் அருமை. மிக்க நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by S.VINOD Mon Dec 02, 2013 9:04 am

வாசு சார்

மையம் திரியில் உங்கள் -ஈகரை பதிவுகள் பற்றிய தகவல்களை வழங்கிய திரு .கோபால் - பிரபல உலக தர விமர்சன ஆய்வாளர் மற்றும் மக்கள் திலகத்தை நேசிக்கும் பண்பாளர் எங்கே ?
S.VINOD
S.VINOD
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 Tue Jan 14, 2014 9:04 am

அனைவருக்கும் நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் கூடிய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Hqdefault
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

 'சிவாஜி என்ற மாநடிகர்'  - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum