புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%
Shivanya
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
10 Posts - 2%
prajai
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதைகள்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:42 am

First topic message reminder :

ஜனனம்!
“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 9:38 am

ஒரு நிமிடக் கதை: தொலைவு
-

“என்னங்க, உங்க அம்மாவோட எழுபதாவது பிறந்தநாளைக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கலாம்க” என்றாள் வசந்தின் மனைவி அகிலா. வசந்த் ஒரு நிறுவனத்தின் மேலாளர்.

வீட்டுக்கு மூத்தவன். தந்தையின் மறைவுக்கு பின் அவன் இரு இளைய சகோதரிகளுக்கும் உள்ளூரிலே திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டான்.

சகோதரிகளும் அவர்கள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருந்தனர். வசந்தும், அகிலாவும் வேலைக்குச் சென்றபின் அம்மா மட்டும் தனியே வீட்டில் டிவி பார்த்துகொண்டோ, கோவிலுக்கு சென்றோ பொழுதை போக்குவாள். அவ்வப்போது மகள்களும், பேரக் குழந்தைகளும் அவளை பார்க்க வந்து போவார்கள்.

வசந்துக்கும் அகிலா சொல்வது சரியெனப் பட்டது. அம்மாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தால் அவளது தனிமை குறையும். மகள்கள், பேரனுடன் பேசிக் கொள்வாள்.

அம்மாவின் பிறந்த நாள் அன்று, “அம்மா, இதோ உனக்கு ஏத்தமாதிரி ஒரு போன்” என்று பரிசுப் பொட்டலத்தை நீட்டினான்.

அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அவளுக்கு போனை எப்படி இயக்குவது என்று ஒருவாரம் எல்லோருமாக சேர்ந்து சொல்லித் தந்தனர்.

அவளும் மகள்களுடன் உற்சாகமாக பேசிவந்தாள். அதைப் பார்த்து வசந்த் சந்தோஷப்பட்டான். மகள்களும், “அம்மா, வத்தல் குழம்புக்கு என்ன மசாலா போடுவீங்க?” என்று எல்லாவற்றிக்கும் போனில் கூப்பிடு வார்கள்.

ஒரு மாதம் கழிந்தது. அம்மா வாட்டமாக இருப்பதாக உணர்ந்தான் வசந்த். கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டாள்.

ஒரு காலை அம்மாவே வசந்திடம், “இனிமேல் எனக்கு இந்த போன் வேண்டாம்டா ” என்று கூறினாள்.

புரியாமல் விழித்த வசந்த்திடம், “நான் எல்லார்கிட்டயும் பேசணும்னுதான் போன் வாங்கி கொடுத்தே. ஆனா, போன் வந்தப்புறம், யாருமே என்னைப் பாக்க வீட்டுக்கு வரமாட்டேங்கிறாங்கடா. எல்லாத்தையும் போன்லயே பேசிடறாங்க. என் பேரன் கூட முன்ன வாரத்துக்கு ஒரு தடவை வருவான்.

இப்ப வர்றதில்லை. கேட்டா, அதான் போன்ல பேசறேனே பாட்டின்னு சொல்றான். இந்த போனால, என் சொந்தமெல்லாம் இன்னும் தூரமா போயிடுமோனு இருக்கு. இத நீயே வச்சுக்கோ. அவங்க எப்பவும் போல என்னை நேரா வந்து பாக்கட்டும்” என்றாள்.

அம்மா சொல்வது வசந்துக்கும் சரியெனப்பட்டது!

=

தமிழ் தி இந்து காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 10:44 am

ரொம்ப சரி போன் எவ்வளவுக்கு எவ்வளவு நம் தூரத்தை குறைக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தூரத்தையும் ஏற்படுத்துகிறது புன்னகை .....அருமையான பகிர்வு ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 11:41 pm

வசதி

எனக்கு மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் பாபுவின் குழந்தைக்கு காதணி விழா. நான் என் மனைவி சித்ராவையும், ஃப்ரான்ஸில் இருந்து வந்திருக்கும் என் தங்கை பத்மாவையும் அந்த விழாவுக்கு அனுப்பி வைத்தேன். வேலை பளு காரணமாக நான் செல்ல முடியவில்லை.

விழா முடிந்து திரும்பி வந்த என் மனைவி தன் முகத்தை தூக்கி மூன்றாவது மாடியில் வைத்திருந்தாள். “என்னாச்சு, ஏன் இப்படி ‘உம்’முன்னு இருக்கே?” என்று என் தங்கைக்கு தெரியாமல் அவளிடம் கேட்டேன்.

“எல்லாத்துக்கும் காரணம் என்கூட நீங்க உங்க தங்கச்சியை அனுப்பி வைச்சதுதான்!” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஏய்... அவ வெளிநாட்ல இருந்து ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கா. அவளுக்கு ஒரு ரிலாக்ஸா இருக்கட் டுமேன்னு உங்கூட அனுப்பி வைச்சேன். அது ஒரு குத்தமா?” என்றேன்.

அவள் சொன்னாள்... “நான் உங்க மேலயோ, உங்க தங்கச்சி மேலயோ குத்தம் சொல்லலைங்க. ஆனா, உங்க ஃபிரெண்டோட மனைவி இருக்காங்களே... நாங்க போனதும், உங்க தங்கச்சியைப் பார்த்து ‘இது யாரு?’ன்னு கேட்டாங்க. நான் ‘இவங்க என் நாத்தனார், ஃபிரான்ஸ்ல இருந்து வந்திருக்காங்க’ன்னு சொன்னதும், அதுக்கு மேல அவங்க என்னைக் கண்டுக்கவே இல்லை. ஃபங்ஷன் முடிஞ்சு வர வரைக்கும் உங்க தங்கச்சியை மட்டும் அப்படி விழுந்து, விழுந்து கவனிச்சவங்க என்னை சாப்பிட்டியான்னு கூட ஒரு வார்த்தை கேட்கவே இல்லைங்க” என்றாள்.

அதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். என் நண்பரின் குடும்பம் பணம் உள்ளவர்களைப் பார்த்துதான் பல் இளிப்பார்களா?... இவ்வளவு காலமாக இது அறியாமல் நான் இருந்திருக்கிறேனே!

என் மனைவி உறங்கியதும் அவளுக்கு தெரியாமல் நான் என் நண்பன் பாபுவுக்கு போன் செய்தேன். அவன் போனை ஆன் செய்ததும் என் ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

அனைத்தையும் நிதானமாக கேட்டுக்கொண்டிருந்த பாபு பின் பேச ஆரம்பித்தான்...

“நண்பா, நீ என்னை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா... சித்ரா யார்?... நாங்க யார்?... நாமெல்லாம் ஒரே குடும்பம். உன் தங்கை பத்மா யார்?... வெளிநாட்டுல இருந்து வந்திருக்கிற என் உயிர் நண்பனின் தங்கை. அவளுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்?... நம்ம உறவு பத்தி அவளுக்கு என்ன தெரியும்?... அதனாலதான் உனக்கும், உன் குடும்பத்துக்கும் தர வேண்டிய ஒட்டுமொத்த மரியாதையை நாங்க உன் தங்கச்சிக்கு கொடுத்தோம். சித்ரா என் கூட பிறந்த தங்கச்சி மாதிரி. ஆனா, பத்மா அப்படி இல்லையே…”

பாபுவின் உண்மையான மனநிலை புரிய… சித்ரா பேச்சைக்கேட்டு அவசரப்பட்டு விட்டோமோ என மனது உறுத்தியது.

எஸ். எஸ். பூங்கதிர்




ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:06 am

ம்...சில சமையங்களில் இப்படி ஆவது உண்டு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 1:59 am

காரணம்

“என்ன சார், இன்னிக்கு இட்லி கல் மாதிரி இருந்துச்சு?” என்ற வாடிக்கையாளரின் குரல் ஹோட்டல் கல்லாவில் உட்காந்திருந்த மூர்த்தியின் சிந்தனையைக் கலைத்தது.

மூர்த்தி அந்த வட்டாரத்தில் பிரபலமான ஹோட் டல் நடத்தி வருபவர். மூன்று வேளையும் அவர் ஹோட்டலில் கூட்டம் இருக்கும். அவரது சமீபத்திய கவலை, அவர் ஹோட்டலில் கூட்டம் குறைந்ததுதான். காரணம், அவருக்கு போட்டியாக மூன்றாவது தெருவில் முளைத்துள்ள புதிய ஹோட்டல்தான்.

“யோவ், எல்லாம் நல்ல மாவுதான்யா !”- ஏற்கெனவே எரிச்சலில் இருந்த மூர்த்தி எரிந்து விழுந்தார்.

அடுத்து வந்த நபர் “சாம்பார்...” என்று வாயை திறக்கும் முன், “என்னய்யா.. சாம்பார் கெட்டுப் போச்சா? “என்று எரிந்து விழுந்தார். அதற்கு வாடிக்கையாளர், “இல்லீங்க. சாம்பார் வடை பார்சல் இருக்கானு கேக்க வந்தேன்” என்றவாறு நழுவினார்.

எப்படியாவது அந்த புதிய ஹோட்டலுக்கு சென்று, அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட மூர்த்தி முடிவெடுத்தார். அன்றிரவு அந்த ஹோட்ட லுக்கு சென்றார். இரவு 10 மணியிலும் நல்ல கூட்டம். அரை இருட்டான ஒரு இடத்தில் அமர்ந்து கொண் டார். அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் சர்வர், “சார், என்ன சாப்பிடு றீங்க” என்று கேட்டுக் கொண்டு, மூர்த்தி கேட்ட உணவை கொண்டு வைத்தார்.

‘உணவின் சுவையும் அவ்வளவு பிரமாதம் இல்லை, இடமும் தனது ஹோட் டல் போலத்தான் இருக்கிறது. பிறகு ஏன் இங்கு மட் டும் இவ்வளவு கூட்டம்?’ என்று நினைத்துக் கொண்டார்.

“சார், சாப்பாடு எப்படி , வேறு எதுவும் வேணுமா” என்றபடி ஒரு இளைஞர் வந்து மூர்த்தியிடம் கேட்டுவிட்டு, “தம்பி, சாருக்கு சட்னி ஊத்து” என்றபடி பக்கத்து மேஜைக்கு சென்றார்.

சாம்பார் கொண்டு வந்த சர்வரிடம் மூர்த்தி, “யாருப்பா அவர்?” என்றார்.

“அவர்தான் சார், எங்க முதலாளி. பேருக்குத் தான் முதலாளி. கொஞ்சம் கூட பந்தாவே இல்லா மல், இறங்கி வந்து வேலை பார்ப்பார். வர்ற வாடிக்கையாளர்கிட்ட போய் குறை நிறை கேட்டு தெரிஞ்சுப்பார். குறை எது சொன்னாலும் ஏத்துப்பார்” என்றார் அந்த சர்வர்.

என்னதான் முதலாளியாக இருந்தாலும், வாடிக்கையாளரிடம் சென்று அவர்களின் நிறை, குறைகளை அறிந்து, அவர்களிடம் இன்முகத்துடன் பேசுவதுதான், வாடிக்கையாளர்களின் முதல் எதிர்பார்ப்பு என்று புரிந்து கொண்டார் மூர்த்தி.




ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 10:24 pm

இது தெரியாமலா அவர் இவ்வளவு நாள் வியாபாரம் செய்தார் ?....... அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:55 am

போதனை

கோயில் வாசலில் முத்து கடையில்தான் எப்போதும் பூ, மாலை எல்லாம் வாங்குவேன். ஆனால் நேற்று அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்து முத்து கடைக்கு பூ வாங்கப் போகவே எரிச்சலாக இருந்தது எனக்கு. இன்று வேறு கடையில் பூ வாங்க முடிவு செய்து வெளியே கிளம்பினேன். எதிரே முத்து.

“என்ன… முத்து….?”

“பூ வாங்க ஒரு ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தால் நாளை சாயங்காலம் திரும்பத் தந்துடுவேன் சார்.”

“அதெல்லாம் சரிதான். கடனா பணம் தர்றேன், வாங்கிக்க. ஒரு விஷயம் சொல்றேன். அதை திருத்திக்க முடியுமான்னு பார்… நேற்று நீ கடையில் எட்டாவது படிக்கிற உன் மகனை மாலை கட்ட வைச்சு துன்புறுத்தறதைப் பார்த்தேன். படிக்கிற பையனை இப்படி வேலை வாங்கலாமா? நல்லா யோசிச்சு பார்” என்றேன்.

“சார்… பையனை நல்லாத்தான் படிக்க வைக்கறேன். படிச்ச படிப்பு கை கொடுக்கலைன்னாலும், கத்துக்கிட்ட தொழில் எதிர்காலத்தில் கை கொடுக்கட்டுமேன்னுதான் என்னுடைய தொழிலை பழக வைச்சிருக்கேன். அப்புறம் நான் எப்படி இடுப்பு ஒடிய உட்கார்ந்து பூ கட்டி பொழைச்சு, அவனை படிக்க வைக்கிறேங்கிற கஷ்டத்தை உணர்ந்து அவன் நல்லா படிக்கணுங்கிறதையும் போதிக்கத்தான் அவனை கடையில உட்கார வைச்சிருக்கேன் சார். அதைப் போய் சார் தப்பா நினைச்சிட்டிங்களே?” என்றான் முத்து பணிவாக.

ஆயிரம் ரூபாயை எண்ணி முத்துவிடம் கொடுத்தேன். பிறகு அவன் பின்னாலேயே சென்றேன்.. பூ வாங்குவதற்காக.

குன்றக்குடி சிங்காரவடிவேல்




ஒரு நிமிடக் கதைகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 1:09 am

சூப்பர் கதை சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக