புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
prajai
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதைகள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:42 am

First topic message reminder :

ஜனனம்!
“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 3:01 pm

சிவா wrote:
திண்டாட்டம்!


தான் திடீரென்று இறந்து போய் விட்டால், வெளி உலகமே தெரியாத தன் அப்பாவி மனைவி ஜானகி ரொம் பவும் திண்டாடிப் போவாளே என்பதால், தான் இருக்கும்போதே அவளுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று, மறுநாளே அவளை பேங்க்குக்குஅழைத்துப்போய் பணம் போட, எடுக்க, மின்கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்த, அமெரிக்காவில்இருக் கும் மகனுக்கு இ-மெயில் அனுப்ப என எல்லாம் வரிசையாகச் சொல் லிக்கொடுத்தார் வாசுதேவன்.

ஆனால் பாவம், மறுவாரமே பாத் ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு போய்ச் சேர்ந்தாள் ஜானகி.

டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் எடுத்து வைப்பதிலிருந்து அவருடைய அனைத் துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்துவந்த மனைவி இல்லாமல், இப்போது வாசுதேவன்தான் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்!

- கருணையானந்தன்

அடாடா.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 3:03 pm

சிவா wrote:
மகனின் கரிசனம்!


இவ்வளவு காலமாக, கிராமத்தில் தான் இருக் கோமா செத்தோமா என்றுகூடப் பார்க்க வராத தன் மகன் திடீரென தன்னைப் பார்க்க வந்தது மட்டுமின்றி, ஏறக்குறைய முழுப்பார்வையுமே இழந்து, தடுமாறிக்கொண்டு இருந்த தன்னை டவுனில் உள்ள பிரபல கண் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வேறு அழைத்து வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி பழனியம்மாளுக்கு.

கண் மருத்துவர், பழனியம்மாளின் கண்களை நன்கு சோதித்த பின், வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவள் மகனிடம் சிகிச்சை தொடர்பாகப் பேசத் தொடங்க,

‘‘சிகிச்சை இருக்கட்டும் டாக்டர்! இவங்களுக்குப் பார்வை இல்லை என்று நீங்கள் ஒரு சான்றிதழ் கொடுத்தால், அதை வைத்து வீட்டில் உடல் ஊனமுற்றவரை பராமரிக்கக் கொடுக்கப்படும் வருமான வரி விலக்கு பெற முயற்சிக்கலாம். நான் இப்போது அதற்காகத்தான் வந்தேன்’’ என்றான் மகன்!

- பி.ரமேஷ்

அடப்பாவி...........உன்ன வாரி வெயில போட கோபம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 3:05 pm

சிவா wrote:
மறதி!


அந்த போலீஸ் உயரதிகாரிக்கு இப் போது பெரிய நெருக்கடி! ரௌடி ‘கோழி’ கோவிந்தனைப் போட்டுத்தள்ள அவர்தான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்குக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஆனால், ‘கோழி’ பெரிய அரசியல் தலைவருக்குக் கொடுக்க வேண்டி யதைக் கொடுத்து, கார்த்திக்கை வேறு ஊருக்குமாற்றிவிட்டான். இப்போது எப்பாடு பட்டாவது ‘கோழி’யைப் பத்திரமாகப் பாது காக்க வேண்டிய கட்டாயம் உயரதிகாரிக்கு.

கார்த்திக்கை அவனது செல்லில் தொடர்பு கொள்ளலாம் என்றால், மறந்து வீட்டில் வைத்துவிட்டுப் போய்விட்டான். அவன் மனைவி எடுத்து பதில் சொல்கிறாள். சே..!

நல்லவேளையாக கார்த்திக்கே அவரைத் தொடர்புகொண்டான். ‘‘சார்! ஒரு குட் நியூஸ். நீங்க சொன்னபடி என்கவுன்ட்டரைக் கச்சி தமா முடிச்சுட்டேன். ‘கோழி’ சேப்டர் ஓவர்! நேர்ல வந்து ரிப்போர்ட் தர்றேன்!’’

அதிகாரி உறைந்துபோனார்.

தன்னை வேறு ஊருக்குத் தூக்கியடித்து விட்ட விவகாரம் தெரிந்துதான், வேண்டு மென்றே கார்த்திக் தனது செல்போனை வீட்டில்‘மறதி’யாக விட்டுவிட்டுப் போனான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்!

- அன்னம்

super ! sabaash !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:35 am

மாமியார்

சுதாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாளே?

ச்சே.. ச்சே.. என்ன பொம்பளை இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்?

சுதா, கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்...

“என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலமையை பத்தி பேசக்கூடாதா?”

கதிர் அவள் சொல்வதை கேட்டு கொதித்து போனான். “நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றி கேட்பேன்” என்று ஆறுதல் கூறினான்.

அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு சரசுவிடம் கதிரின் அம்மா “கடவுள் புண்ணியத்துல...என் மருமகள் சுதாவுக்கு சுகப்பிரசவம் நடந்தா, திருப்பதிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகபிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையையும் செய்யாம அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சாதானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்கு சுகபிரசவம் ஆயிட்டா அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்ப அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். நல்லது நடந்தா சரி!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதை ஒட்டுக் கேட்டு கொண்டிருந்த சுதாவின் கண்கள் குளமாயின!

எஸ்.எஸ். பூங்கதிர்



ஒரு நிமிடக் கதைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:36 am

அம்மா

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.

“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?... சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க. அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?

எஸ்.எஸ்.பூங்கதிர்



ஒரு நிமிடக் கதைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 12:27 pm

சிவா wrote:அம்மா

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.

“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?... சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க. அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?

எஸ்.எஸ்.பூங்கதிர்
மேற்கோள் செய்த பதிவு: 1085845

இந்த கதை நம் தளத்தில் இருக்கு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 10:20 am

நன்றி சிவா எல்லாக் கதைகளையும் படித்து ரசித்தேன்.. ரம்ப அருமை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:14 am

அழகு

சாரதா மனதுக்குள் வருந்தினாள். இந்த முறையும் மகனுக்கு பெண் பார்க்க போகும்போது அவன் நண்பன் பிரவீனும் கூட வருகிறான் என்பதே வருத்தத்துக்கு காரணம். சாரதாவின் மகன் சுந்தர் கருப்பு நிறம். சராசரிக்கும் கீழே அழகு, ஆனால் அவன் நண்பன் பிரவீன் எலுமிச்சை நிறம், அசப்பில் நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். பெண் பார்க்கப் போகும் போதெல்லாம் அவனையும் சுந்தர் தவறாமல் அழைத்துபோவான். பார்க்கும் பெண் எல்லாம் அவனையும் தன் மகனையும் ஒப்பிட்டுப் பார்த்து வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள், இது சுந்தருக்கு தெரியவில்லையே என்பதுதான் சாரதாவின் வருத்தம். மகனிடம் தன் குமுறலை வெளியிட்டாள்.

“சுந்தர் இந்த முறை பெண் பார்க்கப் போகும் போது நம்மகூட பிரவீன் வரவேண்டாம்பா?”

“அம்மா நீ ஏன் பிரவீன் வரவேண்டாம்னு சொல்லுறேங்கிறது எனக்குத் தெரியாம இல்லை, பிரவீன் கூட என்னை ஒப்பிட்டு பார்த்திட்டு பொண்ணுங்க என்னை புடிக்கலைன்னு சொல்லுறாங்க அதானே?. இன்னைக்கு என்னை புடிக்குதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் நாள் கழிச்சு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டா என்னம்மா பண்றது?”

மகன் கேட்ட கேள்வியில் ஆடிப்போனாள் சாரதா. சுந்தர் தொடர்ந்தான்.

“அம்மா நான் வேணும்னேதான் ஒவ்வொரு தடவையும் பெண் பார்க்கப் போகும்போது என் நண்பன் பிரவீனை அழைச்சிட்டுப் போறேன், என்னோட அழகை மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்காத வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு பொண்ணைத்தான் நான் தேடுறேன். அதுவரைக்கும் என் கூட பெண் பார்க்க என் நண்பன் வரத்தான் செய்வான்” என்றதும் அவன் அம்மா வாயடைத்துப் போனார்.

வி.சகிதா முருகன்



ஒரு நிமிடக் கதைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:15 am

ஐம்பதாயிரம்

ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!”

அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள்.

“அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா.

சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம்!”

இது சகுந்தலாவுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ‘‘சரி... இப்ப நான் என்ன செய்யணும்?’’ என்றாள்.

“பெருசா ஒண்ணுல்லம்மா, என் கல்யாண செலவுக்கு அப்பாகிட்ட பேசி ஐம்பதாயிரம் வாங்கிக் கொடுத்தா போதும்!”

“என்ன சொல்ற..? முழுசா ஐம்பதாயிரமா? ராதிகாவுக்கா? எந்த நம்பிக்கையில இதை கேட்கற சகுந்தலா?”

“என்னங்க பெரிய ஐம்பதாயிரம்..? அஞ்சு வருஷமா நம்மள அப்பா, அம்மான்னு கூப்பிட்டு நம்ம கூடவே வீட்டு வேலை செய்துட்டு இருக்கா. அவளை நம்பி ஐம்பதாயிரம் கடனா கொடுக்க முடியாதா..? மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு!”

எதுவும் பேசாமல் ‘செக் புக்’கை எடுத்தார் சகுந்தலாவின் கணவர்.

எஸ்.எஸ்.பூங்கதிர்





ஒரு நிமிடக் கதைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:36 am

ஒரு நிமிடக் கதைகள் - Page 4 3838410834 ஒரு நிமிடக் கதைகள் - Page 4 103459460

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக