புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_voting_barஒரு நிமிடக் கதைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதைகள்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:42 am

First topic message reminder :

ஜனனம்!
“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 13, 2013 1:17 pm

எல்லா கதைகளுமே நல்லா இருக்கு புன்னகை பகிர்வுக்கு நன்றி நண்பர்களே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 5:25 pm

அவசர உதவி!

ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ரெங்காவின் செல்போன் அந்த நடுநிசியில் அலறி, அவரை எழுப்பிவிட்டது.

“நான் மயிலாப்பூர்லேர்ந்து ஷங்கரன் பேசறேன் டாக்டர்..!’’

“சொல்லுங்க, என்ன பிராப்ளம்?”

“பைபாஸ் சர்ஜரி...”

“பண்ணிடுவோம். பேஷன்ட்டை உடனே கொண்டுவந்து அட்மிட் பண் ணுங்க. ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கு. அட்ரஸ் சொன்னா உடனே அனுப்பி வைக்கிறேன்!”

“வந்து... பைபாஸ் பண்ணணுமா வேணாமான்னு தெரிஞ்சுக்க ஏதோ ஒரு டெஸ்ட் பண்ணுவீங்களே...”

“ஆஞ்சியோகிராம்தானே... பண்ணிடா லாமே!”

“ஹிஹிஹி, தூக்கம் வரலை. குறுக்கெழுத்து போட்டுட்டு இருந்தேன். ஒண்ணே ஒண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு. கொடுத்திருக்கிற க்ளூவுக்கு நீங்க சொன்ன வார்த்தை சரியாப் பொருந்துது. ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!”




ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 5:26 pm

புகழ்ச்சி!

புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே இல்லை என்பான் சந்துரு. மிடுக்கான தோற்றம், கம்பீரமான குரல், நேர்த்தியான உடை, நடக்கும் ஸ்டைல், அழகான கையெழுத்து, சாதிக்கும் திறமை எனப் பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ளஸ் பாயின்ட் இருக்கும். அப்படி, அவர் கள் தங்களைப் பெருமிதமாக நினைக்கிற ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டு பிடித்து, அதை வைத்தே அவர்களைப் புகழ்ந்து தள்ளி, நல்ல பேர் வாங்கிவிடு வான் சந்துரு.

ஆனால், புதுசாக வந்த மேனேஜரிடம் அவன் பாச்சா பலிக்கவில்லை. புகழ்ச் சிக்கு மயங்காதவராக இருந்தார் அவர்.

ஒரே மாதம்தான்... அவரையும் மடக்கித் தன் வலையில் வீழ்த்திவிட்டான். ‘எப்படிடா சாதிச்சே?’ என்றோம்.

“வேறொண்ணுமில்லை... ‘உங்களை மாதிரி புகழ்ச்சிக்கு அடிமையாகாம இருக் கிறவங்க லட்சத்தில் ஒருத்தர், கோடியில் ஒருத்தர்தான் சார்! அந்த விஷயத்தில் நீங்க ரொம்ப கிரேட்!’னு சொன்னேன்!” என்றான்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 5:27 pm

சாதுர்யம்!



கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் மனைவியை அனுப்பிவைத்து விட்டு, நான் ஆபீஸ் போன அரை மணி நேரத்தில் மனைவியிடமிருந்து மிஸ்டு கால்! உடனடியாக என் மொபைலிலிருந்து தொடர்புகொண்டேன்.

“ஹலோ, இன்ஸ்பெக்டர் அங்கிளா? நல்லாருக்கீங்களா அங்கிள்? எங்கேர்ந்து பேசறீங்க? சேலத்துலேர்ந்தா? சேலத்துல என்னைப் பார்க்க வரீங்களா? வாங்க அங்கிள்! பஸ் சேலம்கிட்டே வரும்போது உங்களுக்கு கால் பண்றேன். தேங்க்ஸ் அங்கிள்! மாமியைக் கேட்டதாச் சொல்லுங்க!” என்று பேசி, இணைப்பைத்துண்டித் தாள் என் மனைவி.

எனக்கு எதுவும் புரியவில்லை.

மறுபடி, அவள் கோவை போய்ச் சேர்ந்த பின், ராத்திரி ஒன்பது மணிக்கு போன் செய்தாள்.

“என்னங்க, நேத்து பஸ்ஸுல எனக்குப் பின் ஸீட்டுல உட்கார்ந்திருந்தவன் சரியில்லை. ஜாடை மாடையா பேசுறதும், டீஸ் பண்றதுமா இருந்தான். அதான், அப்படிப் பேசினேன். அதுக்கப்புறம் அவன் கப்சிப்னு ஆயிட்டான். நானும் தொந்தரவு இல்லாம நிம்மதியா வீடு வந்து சேர்ந்தேன்..!”




ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 5:28 pm

கனம்!


அந்தச் சிறுமிக்குப் பத்துப் பன்னிரண்டு வயது தான் இருக்கும். பஸ்ஸுக்காகக் காத்திருந்தவர்களில் அவளும் ஒருத்தி.

ஒரு குட்டிப் பையனைத் தூக்கிச் சுமந்தபடி நின்றிருந்தாள். ரொம்ப நேரமாக பஸ் வரவில்லை. அவளும் அந்தப் பையனைக் கீழே இறக்கிவிடுவதாக இல்லை.

பொறுக்க முடியாமல், “ஏம்மா, அவனைக் கீழே இறக்கிவிடறதுதானே? பஸ் வரும்போது தூக்கிக்கிட்டாப் போச்சு! எவ்வளவு நேரம்தான் பாவம், நீ கனத்தை சுமந்துக்கிட்டே இருப்பே!” என்றேன்.

சட்டென்று அவள் சொன்னாள்... “கனமா? இது என் தம்பிங்க!”




ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:08 am

கவர் ஞானம்!


தனது ஒரே மகளின் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக மூழ்கியிருந்தார் பேராசிரியர் கல்யாணராமன். நெல்லைச் சீமையில் இது போன்ற கல்யாண விருந்தை இதுவரை யாருமே அனுபவித்திருக்கக்கூடாது என்று சொல்லி விருதுநகர் சமையலுக்கு ஏற்பாடு செய்தார்.

‘‘ஆனாலும், 2000 பேருக்குச் சாப்பாடு என்பது கொஞ்சம் அதிகம் இல்லையா?’’ என்று மனைவி கேட்டதற்கு, ‘‘போடி அசடே! இதுவே போதுமா என்று நான் குழம்பிக்கொண்டு இருக்கிறேன். தெரிந்தவர், அறிந்தவர், உறவினர் என எல்லாக் கல்யாணங்களுக்கும் நான் போகமுடியாவிட்டாலும், நண்பர் நாகராஜன் மூலமாக மொய்க் கவர் கொடுத்தனுப்பத் தவறியதே இல்லை. நீ வேண்டுமானால் பார், கூட்டம் குவியப் போகிறது!’’ என்றார்.

ஆனால், முகூர்த்த நேரம் நெருங்கியும் மண்டபத்தில் ஐம்பது பேர்கூட இல்லை. நண்பர் நாகராஜன் மூலம் மொய்க் கவர்கள்தான் 2,000 வந்து சேர்ந்திருந்தன!

- சேவியர்



ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:09 am

திண்டாட்டம்!


தான் திடீரென்று இறந்து போய் விட்டால், வெளி உலகமே தெரியாத தன் அப்பாவி மனைவி ஜானகி ரொம் பவும் திண்டாடிப் போவாளே என்பதால், தான் இருக்கும்போதே அவளுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று, மறுநாளே அவளை பேங்க்குக்குஅழைத்துப்போய் பணம் போட, எடுக்க, மின்கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்த, அமெரிக்காவில்இருக் கும் மகனுக்கு இ-மெயில் அனுப்ப என எல்லாம் வரிசையாகச் சொல் லிக்கொடுத்தார் வாசுதேவன்.

ஆனால் பாவம், மறுவாரமே பாத் ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு போய்ச் சேர்ந்தாள் ஜானகி.

டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் எடுத்து வைப்பதிலிருந்து அவருடைய அனைத் துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்துவந்த மனைவி இல்லாமல், இப்போது வாசுதேவன்தான் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்!

- கருணையானந்தன்



ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:09 am

மகனின் கரிசனம்!


இவ்வளவு காலமாக, கிராமத்தில் தான் இருக் கோமா செத்தோமா என்றுகூடப் பார்க்க வராத தன் மகன் திடீரென தன்னைப் பார்க்க வந்தது மட்டுமின்றி, ஏறக்குறைய முழுப்பார்வையுமே இழந்து, தடுமாறிக்கொண்டு இருந்த தன்னை டவுனில் உள்ள பிரபல கண் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வேறு அழைத்து வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி பழனியம்மாளுக்கு.

கண் மருத்துவர், பழனியம்மாளின் கண்களை நன்கு சோதித்த பின், வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவள் மகனிடம் சிகிச்சை தொடர்பாகப் பேசத் தொடங்க,

‘‘சிகிச்சை இருக்கட்டும் டாக்டர்! இவங்களுக்குப் பார்வை இல்லை என்று நீங்கள் ஒரு சான்றிதழ் கொடுத்தால், அதை வைத்து வீட்டில் உடல் ஊனமுற்றவரை பராமரிக்கக் கொடுக்கப்படும் வருமான வரி விலக்கு பெற முயற்சிக்கலாம். நான் இப்போது அதற்காகத்தான் வந்தேன்’’ என்றான் மகன்!

- பி.ரமேஷ்



ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:10 am

வாத்தியாரம்மா... கணக்கு தப்பு!


‘‘முத்து! உனக்கு நான் இரண்டு மாடும், இன்னொரு இரண்டு மாடும், அதன் பிறகு இன்னும் இரண்டு மாடும் கொடுத்தால், உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடுகள் இருக்கும்?’’

‘‘எட்டு, டீச்சர்!’’

‘‘மண்டு! கணக்கை மறுபடியும் சொல்றேன். முதல்ல இரண்டு மாடு தரேன். அப்புறம் இரண்டு மாடு தரேன். மறுபடியும் இரண்டு மாடு தரேன். ஆக, உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடுகள்?

‘‘எட்டு, டீச்சர்!’’

‘‘போடா முட்டாள்! சரி, இப்ப அதே கணக்கை வேற விதமா சொல்றேன். உனக்கு நான் முதல்ல இரண்டு ஆடு தரேன். அப்புறம் இரண்டு ஆடு தரேன். மறுபடியும் இன்னும் இரண்டு ஆடு தரேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கும்?’’

‘‘ஆறு டீச்சர்!’’

‘‘அட, இப்ப மட்டும் எப்படிடா சரியா சொன்னே?’’

‘‘எங்க வீட்ல ரெண்டு மாடுதான் இருக்கு டீச்சர்! ஆடு இல்லியே!’’

- எஸ்கலின் ராணி



ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:11 am

மறதி!


அந்த போலீஸ் உயரதிகாரிக்கு இப் போது பெரிய நெருக்கடி! ரௌடி ‘கோழி’ கோவிந்தனைப் போட்டுத்தள்ள அவர்தான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்குக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஆனால், ‘கோழி’ பெரிய அரசியல் தலைவருக்குக் கொடுக்க வேண்டி யதைக் கொடுத்து, கார்த்திக்கை வேறு ஊருக்குமாற்றிவிட்டான். இப்போது எப்பாடு பட்டாவது ‘கோழி’யைப் பத்திரமாகப் பாது காக்க வேண்டிய கட்டாயம் உயரதிகாரிக்கு.

கார்த்திக்கை அவனது செல்லில் தொடர்பு கொள்ளலாம் என்றால், மறந்து வீட்டில் வைத்துவிட்டுப் போய்விட்டான். அவன் மனைவி எடுத்து பதில் சொல்கிறாள். சே..!

நல்லவேளையாக கார்த்திக்கே அவரைத் தொடர்புகொண்டான். ‘‘சார்! ஒரு குட் நியூஸ். நீங்க சொன்னபடி என்கவுன்ட்டரைக் கச்சி தமா முடிச்சுட்டேன். ‘கோழி’ சேப்டர் ஓவர்! நேர்ல வந்து ரிப்போர்ட் தர்றேன்!’’

அதிகாரி உறைந்துபோனார்.

தன்னை வேறு ஊருக்குத் தூக்கியடித்து விட்ட விவகாரம் தெரிந்துதான், வேண்டு மென்றே கார்த்திக் தனது செல்போனை வீட்டில்‘மறதி’யாக விட்டுவிட்டுப் போனான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்!

- அன்னம்



ஒரு நிமிடக் கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக