புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
21 Posts - 45%
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
1 Post - 2%
prajai
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
383 Posts - 49%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
26 Posts - 3%
prajai
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
sugumaran
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு நிமிடக் கதைகள் I_vote_lcapஒரு நிமிடக் கதைகள் I_voting_barஒரு நிமிடக் கதைகள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதைகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:12 am

ஜனனம்!
“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:14 am

வாய்!

கல்யாண மண்டபத்தில் கூட்டம் திமிறிக்கொண்டு இருந்தது.

தெருவை அடைத்து ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் மிஸஸ் மங்களா ராமநாதன்.

“ஏய்... அங்கே பாரேன். எவ்ளோ பெரிய தொழிலதிபரின் மனைவி! ஆனா, அந்த பந்தா எதுவும் இல்லாம, சிம்பிளா காட்டன் புடவையில வந்திருக்கா பாரு. அவ நினைச்சிருந்தா நகைக் கடையையே சுமந்துட்டு வந்திருக்கலாமே! ஆனா, பொட்டுத் தங்கம் இருக்குதா உடம்புல? அடடா... என்ன அடக்கம்! எத்தனை எளிமை!” - அங்கே இருந்தவர்களின் வாய்கள் வியப்பில் சளசளத்தன.

சிறிது நேரத்தில், அங்கே வந்தாள் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி. இவர்கள் அந்தஸ்தோடு நெருங்கி வர முடியாத ஏழை என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

“இதென்னடி கண்றாவி! அபிஷேகத்துக்குத் தயாரா நிக்கிற தைல நாச்சியார் போல வந்திருக்காளே? கழுத்தும் காதும் மூளியா, அச்சுபிச்சுன்னு ஒரு புடவையை எடுத்துச் சுத்திக்கிட்டு... சே! கல்யாணத்துக்கு வர்ற மாதிரியா வந்திருக்கா? தரித்திரம்!”

அதே வாய்கள்தான்!

- கீதாநாதன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:15 am

குறை!

“எ ன்ன சார், வர வர உங்க கடை டிபனே சரியில்லையே?” என்றபடியே, கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளியிடம் பில்லுக்கான பணத்தைக் கொடுத்தான் ரகு.

“ஸாரி சார், ஒரு வாரமா நம்ம பழைய மாஸ்டர் வரலை. உறவுக்காரங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு போயிருக்கார். அடுத்த வாரத்திலிருந்து சரியாயிடும்!”-மீதிச் சில்லறையைக் கொடுத்தபடியே பவ்யமாகச் சொன்னார் முதலாளி.

ரகு வெளியேறிய பின்பு, “என்னங்க, இந்த ஆளுக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கிட்டு... இவர் மட்டும்தாங்க தினமும் ஏதாவதுநோணாவட்டம் சொல்லிக்கிட்டே இருக்காரு. மத்தவங்க எல்லாம் எதுவும் சொல்லாம சாப்பிட்டுட்டுப் போறாங்க!” என்று முதலாளியிடம் புகார் போலச் சொன்னார் சர்வர்.

முதலாளி புன்னகைத்துவிட்டு, “எதுவுமே சொல்லாமப் போறவங்க ரெகுலர் கஸ்டமரா இருக்க மாட்டாங்க. அப்படியே தொடர்ந்து கொஞ்ச நாளா வர்றவங்களா இருந்தாலும், டிபன் சரியில்லேன்னதும் சத்தமில்லாம அடுத்த ஓட்டலைத் தேடிப் போயிடுவாங்க. ஆனா, இவர் அப்படி இல்லே. தொடர்ந்து நம்ம ஓட்டலுக்கே வர்றாரு. இனிமேலும் வருவாரு. இவர் மாதிரி கஸ்டமர்கள்தான் நமக்கு முக்கியம்!” என்றார்.

- வேலுபாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:15 am

கைடு!

ஜெ ய்சல்மீர் ஹவேலிகளைச் சுற்றிப் பார்க்க நான் போயிருந்தபோது, “கைடு வேணுமா சார்?” என்றபடி அந்தச் சிறுவன் ஓடி வந்தான்.

எட்டு வயதுதான் இருக்கும். கிழிந்த சட்டை. கலைந்த தலை. மெலிந்த உடம்பு. ‘இவனுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது!’ என்ற நினைப்பை, அவன் மீதான இரக்கம் ஒதுக்கியது.

“சரி, வா!” என்றேன்.

அவன் உற்சாகமாக ஆரம்பித்தான்... “இது பட்வோ கீ ஹவேலி. அதோ... அது ஒரு காலத்தில் இந்த ஊரில் பிரதம மந்திரியாக இருந்த சாலிம் சிங்குடையது. இதோ, இந்த ஹவேலி, அரச சபையில் பிரபுவாக இருந்த பிரேம் சந்த்தினுடையது. உழைப்பால் உயர்ந்து பெரும் பணக்காரரானவர் அவர். ஆனால், அவருக்குப் பின் வந்த சந்ததிகள் சோம்பேறிகள் மட்டுமல்ல; உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டு அத்தனைச் சொத்துக்களையும் தொலைத்தவர்கள்...”

“அட, இத்தனை விவரமும் உனக்கு எப்படித் தெரியும்?” என்றேன் ஆச்சர்யமாக.

“தெரியாமல் என்ன சார், அந்தப் பரம்பரையில் எங்க அப்பா நான்காவது தலைமுறை. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அவருக்கு மருந்து வாங்கக்கூட முடியாமல், நான் கைடு வேலை பார்க்கிறேன்..!”

- லக்ஷ்மி ரமணன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:16 am

நிற்பதுவே...

‘‘கா லெல்லாம் வலிக்குதுப்பா..!’’

குனிந்தபடி முழங்கால்களில் கைகளை ஊன்றிக்கொண்டு பரிதாபமாகச் சொன்ன மகனைச் சமாதானப்படுத்தினார் பெரியசாமி. ‘‘கொஞ்சம் பொறுத்துக்கப்பா. அடுத்த பஸ்ல போயிரலாம்!’’

‘‘போங்கப்பா, ஒரு மணி நேரமா இப்படியேதான் சொல்லிட்டு இருக்கீங்க! இப்ப வந்து நின்ன பஸ்லயாவது ஏறியிருக்கலாம்ல?’’

‘‘கூட்டத்தைப் பார்த்தேதானே. உட்கார ஸீட்டே இல்லை. அதுல போயிருந்தா, பஸ் ஸ்டாண்டு வரைக்கும் நின்னுட்டேதான் போகணும்!’’

‘‘இப்பவும் நின்னுட்டுதானே இருக்கோம். இவ்வளவு நேரமா இப்படி ரோட்ல நிக்கிறதுக்குப் பதிலா, பஸ்ல ஏறி நின்னுருந்தோம்னா, இந்நேரம் வீட்டுக்கே போயிருக்கலாம்!’’ என்றான்.

‘‘அட, ஆமாம்தானே!’’

- ஒப்பிலான்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:17 am

சின்னப் புள்ளையா இருக்கே!

‘‘ஹ லோ மாலதி, நான் அமுதா பேசறேன்...’’

‘‘ஹேய் அமுதா! எப்படி இருக்கே?’’

‘‘நான் நல்லா இருக்கேன். நீதான் மாலதி ரொம்பப் பெரிய ஆளா மாறிட்டே. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் கண்டுக்கிறதே இல்லை.’’

‘‘ஹேய், அப்படி இல்லை அமுதா. என்கிட்டே யார் நம்பரும் இல்லை. தவிர, இப்போ நான் நிஜமாவே ரொம்ப பிஸி. கம்பெனி வேலையா மாசத்தில் பாதி நாள் பறந்துட்டே இருக்கேன். ஆமா, உனக்கென்ன இப்போதான் என் ஞாபகம் வந்ததா?’’

‘‘நேத்துதான் உன் செல் நம்பரே கிடைச்சுது. எத்தனை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேக்குறது..?’’

‘‘எனி குட் நியூஸ்?’’

‘‘ஆமா, எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு... அடுத்த மாசம் கல்யாணம்.’’

‘‘கங்கிராட்ஸ், எனக்குக்கூட வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காங்க அமுதா.’’

‘‘வீட்ல பார்க்கிறாங்களா? என்ன சொல்றே, ஸாரி... ப்ளஸ் டூ படிக்கிறப்போ பாண்டியன்னு ஒருத்தரை நீ லவ் பண்ணியேப்பா!’’

‘‘பாண்டியன்..? ஓ, அவரா? முகமே மறந்துபோச்சு. அதுக்கப்புறம் நான் காலேஜ் சேர்ந்து யு.ஜி., பி.ஜி., பி.ஹெச்டி., முடிச்சு, இப்போ வேலையில் சேர்ந்து மூணு வருஷம் ஆகிடுச்சு. அதுக்குள்ளே நாலஞ்சு பாண்டியன்களைப் பார்த்துட்டேன் அமுதா! நீ இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கே!’’

-வந்தனா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 2:17 am

மும்பையில் ஒரு நண்பன்!

அ லுவலக வேலை விஷயமாக மும்பை போனபோது, யதேச்சையாக ஒரு ஷாப்பிங் மாலில் அவனைப் பார்த் தேன். ஓடிப் போய், “என்ன கோபால், என்னைத் தெரியுதா?” என்று அவன் தோளைத் தொட்டேன்.

அவன் என்னை ஏற இறங்கப் பார்த்து “மன்னிக்கணும், நீங்க யார்னு தெரிய லையே! தவிர, நான் கோபால் இல்லை. ஸ்ரீஹரிவர்மா!” என்றான் இந்தியில்.

“ ஸாரி! அச்சு அசல் என் நண்பன் கோபால் மாதிரியே இருந்தீங்களா, அதான்! என்ன, அவன் கொஞ்சம் ஒல்லியா இருப்பான். மீசை வெச்சிருப்பான்...”

‘‘ஓ!”

“அந்த நாயை என் ஃப்ரெண்டுன்னு சொல் லிக்கவே அசிங்கமா இருக்கு, சார்! திருட்டுப் பய. வேலையை விட்டு நிக்கப் போறேன்னுகூடச் சொல்லாம என்கிட்டே ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிட்டு, வேலையை ரிஸைன் பண்ணிட்டு மும்பை வந்துட்டான். சோத்துல உப்பு போட்டுத் திங்கிறவனா இருந்தா, என்கிட்டே வாங்கின பணத்தை செக் போட்டு அனுப்பி யிருப்பான். பொறுக்கி, பேமானி...” என்று சகல வசவு வார்த்தைகளையும் பிரயோகித்துவிட்டு, அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

பின்னே, என்ன பண்ணச் சொல்றீங்க... வெறும் ரெண்டாயிரம் ரூபாய்க்காக, கூடப் பழகின நண்பனையே தெரியாதவன் மாதிரி ஆக்ட் கொடுக்கிறவனை?

-கண்ணன் பாலாஜி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2013 7:19 am

யதார்த்தமான கதைகள்...!
-
ஒரு நிமிடக் கதைகள் 3838410834 

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 13, 2013 8:12 am

அதிக ஆசை வேண்டாமே!

உணவகம் சென்ற நண்பர் அங்கிருந்த அறிவிப்பு பலகையை பார்த்து, படித்து,தேவைக்கு அதிகமாகவே வாங்கி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்

"நீங்கள் எதை வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ சாப்பிடுங்கள். அதற்கான தொகையை உங்கள் பேரனிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்." என்பதுதான் அறிவிப்பு பலகையில் இருந்த வாசகம்.

சாப்பிட்டு கை கழுவி வெளியில் வந்தவரை தடுத்து நண்பரிடம் ஒரு பில்லை கொடுத்து பணம் காட்டிவிட்டு செல்லுமாறு கூறினார் மற்றொருவர்.

கோபம் தலைக்கேற உணவக பொறுப்பாளரிடம் சென்று, அறிவிப்பு பலகையில் எனது பேரனிடம் பெற்றுக்கொள்வதாக எழுதிவிட்டு என்னிடமே கேட்பது ஏன் என்று கேட்டார்.

பொறுப்பாளர் பொறுமையாக "இது நீங்கள் சாப்பிட்டதற்கு அல்ல. உங்கள் தாத்தா சப்பிட்டதற்கான பில்" என்ற பதிலில் அதிர்ச்சியடைந்து பணம் செலுத்திவிட்டுச் சென்றார்.

அதிவேகம் ஆபத்தானது போல, அதிக ஆசையும் அவசியமானது அல்ல.

நா.செ.மணி

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 13, 2013 9:15 am

ஏழை தொழிலாளி ஒருவர் தனது மகனுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து விருந்து சாப்பிடும்பொழுது மகன் அடிக்கடி தண்ணீர் சாப்பிடுவதை பார்த்து தொடையில்கிள்ளி மெதுவான குரலில் “டேய், தண்ணியை குடிச்சுட்டு வயித்தை நொப்பாம சாதத்த சாப்பிடுடா” என கூறிக்கொண்டிருந்தார். ஆனாலும் பையன் கேட்காமல் தண்ணீரும் சாப்பாடுமாக தொடர்ந்தான்,

வீடு திரும்பியதும் மகனிடம் சப்தம்போட்டார். ஆனால் மகனோ தயங்கி தயங்கி “அப்பா நீங்கள் தானே, நான் லீவு நாளில் உங்களுடன் இருந்தபொழுது, ஏன் அப்பா, ஆழ்துளை குழியில் காங்கிரீட் போடும்போது அடிக்கடி தண்ணீர் ஊத்துறீங்க என்று கேட்டேன் – அப்பதாண்ட அது போயி நல்ல செட்டாகி நெறையா போடமுடியும்” என்று சொன்னீர்கள் என்றான்.

அதை கேட்ட தந்தை மறுபடியும் இரண்டு சாத்து சாத்தி “இத ஏன்டா அங்கேயே எங்கிட்டேயும் சொல்லலை” என்றார்.

நா.செ.மணி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக