Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 8 of 81
Page 8 of 81 • 1 ... 5 ... 7, 8, 9 ... 44 ... 81
உலகச் செய்திகள்!
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உலகச் செய்திகள்!
சொந்த ஊரில் மண்டேலா உடல் அடக்கம்
ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்க விடுதலைக்காக, நிறவெறி அரசுக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக, 27 ஆண்டுகள், சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பின், 90ல் விடுதலையாகி, 94ல், அதிபரானார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், முதுமையின் காரணமாக, அரசியலில் இருந்து விலகினார். நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக அவர், சிகிச்சை பெற்றார். கடந்த 5ம் தேதி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வீட்டில், காலமானார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட உலக தலைவர்கள், தென் ஆப்ரிக்கா சென்று, மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பத்து நாட்கள், அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்ட பின், மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
பிரிட்டோரியாவில் உள்ள அதிபர் மாளிகையிலிருந்து, தென் ஆப்ரிக்க தேசிய கொடி போர்த்தப்பட்ட அவரது உடல், நேற்று முன்தினம், எம்ததா விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து, 31 கி.மீ., தூரம் காரில், அவரது உடல், ஊர்வலமாக, சொந்த ஊரான குனுவுக்கு எடுத்து வரப்பட்டது. மண்டேலாவின் ஆதரவாளர்கள், சாலையின் இருபுறமும் மனித சங்கிலி போன்று கைகோர்த்து, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதி சடங்கின் போது, மண்டேலாவின் மனைவி கிரேசா மாச்சல், மாஜி மனைவி வின்னி உள்ளிட்ட, 450 பேர் மட்டும், அவரது உடல் அருகே அனுமதிக்கப்பட்டனர். மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பாடல் பாடப்பட்டது. மண்டேலா பிறந்த தெம்பு இன வழக்கப்படி, இறுதி சடங்கின் போது, எருமை மாடு பலி கொடுக்கப்பட்டது. சிங்கத்தின் தோல், போர்த்தப்பட்டது. இரண்டு மணி நேரம் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டப்பின், அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்க விடுதலைக்காக, நிறவெறி அரசுக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக, 27 ஆண்டுகள், சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பின், 90ல் விடுதலையாகி, 94ல், அதிபரானார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், முதுமையின் காரணமாக, அரசியலில் இருந்து விலகினார். நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக அவர், சிகிச்சை பெற்றார். கடந்த 5ம் தேதி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வீட்டில், காலமானார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட உலக தலைவர்கள், தென் ஆப்ரிக்கா சென்று, மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பத்து நாட்கள், அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்ட பின், மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
பிரிட்டோரியாவில் உள்ள அதிபர் மாளிகையிலிருந்து, தென் ஆப்ரிக்க தேசிய கொடி போர்த்தப்பட்ட அவரது உடல், நேற்று முன்தினம், எம்ததா விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து, 31 கி.மீ., தூரம் காரில், அவரது உடல், ஊர்வலமாக, சொந்த ஊரான குனுவுக்கு எடுத்து வரப்பட்டது. மண்டேலாவின் ஆதரவாளர்கள், சாலையின் இருபுறமும் மனித சங்கிலி போன்று கைகோர்த்து, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதி சடங்கின் போது, மண்டேலாவின் மனைவி கிரேசா மாச்சல், மாஜி மனைவி வின்னி உள்ளிட்ட, 450 பேர் மட்டும், அவரது உடல் அருகே அனுமதிக்கப்பட்டனர். மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பாடல் பாடப்பட்டது. மண்டேலா பிறந்த தெம்பு இன வழக்கப்படி, இறுதி சடங்கின் போது, எருமை மாடு பலி கொடுக்கப்பட்டது. சிங்கத்தின் தோல், போர்த்தப்பட்டது. இரண்டு மணி நேரம் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டப்பின், அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Re: உலகச் செய்திகள்!
சிவா அவர்களின் அயல்நாட்டுச் செய்திப் பகுதி வரவேற்கத்தக்கது ! நமக்கு ஓர் உலகப் பார்வை கிடைக்கிறது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: உலகச் செய்திகள்!
சீன விண்கலம் அனுப்பிய முதல்படம்
பீஜிங்: சீன விண்வெளி ஆய்வு துறை, சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த சக்கர வண்டி, சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கி, படங்களை எடுத்து வருகிறது. சீன விண்கலத்தில் பறந்த சீன தேசிய கொடியின் முதல் வண்ண புகைப்படம் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துள்ளது. இந்த படம், ஆய்வு மையத்தின் பெரிய திரையில் திரையிட்டு காண்பிக்கபட்டது.
பீஜிங்: சீன விண்வெளி ஆய்வு துறை, சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த சக்கர வண்டி, சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கி, படங்களை எடுத்து வருகிறது. சீன விண்கலத்தில் பறந்த சீன தேசிய கொடியின் முதல் வண்ண புகைப்படம் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துள்ளது. இந்த படம், ஆய்வு மையத்தின் பெரிய திரையில் திரையிட்டு காண்பிக்கபட்டது.
Re: உலகச் செய்திகள்!
உலகளவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து அதிகம் கஞ்சா பயிரிடும் மியான்மர்
உலக அளவில் அதிக அள்வு கஞ்சா பயிரிடப்படும் நாடுகளில் முதலிடத்தை வகிப்பது ஆப்கானிஸ்தான் ஆகும். தற்போது அதற்கு அடுத்த இடத்தி மியான்மர் வந்து உள்ளது. அங்கு இந்த ஆண்டு மட்டும் 870 ட்ன் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளது.இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும்.ஆப்கானிஸ்தானில் 5500 டன் கஞ்சா பயிரிடபட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 49 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை ஐ.நாவின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
போதைப் பொருளுக்கான கிராக்கியும், பர்மாவின் வட கிழக்குப் பகுதியிலிருக்கும் ஷாண் மலைப் பிரதேசத்திலுள்ள ஏழ்மை நிலையும், கஞ்சா பயிர் அதிகரிப்பதற்கு காரணம் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.
Re: உலகச் செய்திகள்!
ஆப்பிரிக்க நாடான மாலி பாராளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வெற்றி
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி நடந்தது. அதில் இசுலாமிய அரசு பதவிக்கு வந்தது.இந்த நிலையில் அங்கு மீண்டும் ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி நடந்தது. அதில் இசுலாமிய அரசு பதவிக்கு வந்தது.இந்த நிலையில் அங்கு மீண்டும் ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளன.
Re: உலகச் செய்திகள்!
கடைகளில் திருடிய நாய் கைது
அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும், பிறகு அருகில் உள்ள இடத்தில் அப்பொருட்களை புதைத்து வைப்பதும் பதிவாகி இருந்தது. அதுபோல், வேறு சில பெரிய கடைகளிலும் அந்நாய் இதேபோல் திருடி உள்ளது. கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த நாயை கைது செய்து கூண்டில் அடைத்தனர். தாங்கள் கைது செய்தவர்களில் இதுதான் சிறந்த கைது என்று போலீசார் வர்ணித்தனர். கடை ஊழியர்களோ, நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும், பிறகு அருகில் உள்ள இடத்தில் அப்பொருட்களை புதைத்து வைப்பதும் பதிவாகி இருந்தது. அதுபோல், வேறு சில பெரிய கடைகளிலும் அந்நாய் இதேபோல் திருடி உள்ளது. கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த நாயை கைது செய்து கூண்டில் அடைத்தனர். தாங்கள் கைது செய்தவர்களில் இதுதான் சிறந்த கைது என்று போலீசார் வர்ணித்தனர். கடை ஊழியர்களோ, நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
Re: உலகச் செய்திகள்!
’காப்பிரைட்’டராக பணியாற்றிய பெண் இறப்பு: '30 மணிநேரம் தொடர்ந்து வேலை பார்த்ததாக டுவிட்டரில் தகவல்’
இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்த பெண் பலியானார்.
இந்தோனேஷியாவில் மிட்டா துரன் என்ற பெண் ’காப்பிரைட்’டராக அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அவர் நிறுவனத்தில் தொடர்ந்து 30 மணி நேரம் தூக்கம் இன்றி வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காலையில் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த மற்ற பணியாளர்கள் அவர் இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பலியான மிட்டா துரன் இறப்பதற்கு முன்பாக ”30 மணிநேரமாக வேலை பார்க்கிறேன், தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மிட்டா இறந்ததற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வேலை பார்த்ததே அவரது இறப்பு காரணம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வேலை நேரத்தின் போது மிட்டா உலுக்கு ஆற்றலை கொடுக்க குளிர்பானங்களை குடித்து வந்துள்ளார்.
இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்த பெண் பலியானார்.
இந்தோனேஷியாவில் மிட்டா துரன் என்ற பெண் ’காப்பிரைட்’டராக அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அவர் நிறுவனத்தில் தொடர்ந்து 30 மணி நேரம் தூக்கம் இன்றி வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காலையில் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த மற்ற பணியாளர்கள் அவர் இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பலியான மிட்டா துரன் இறப்பதற்கு முன்பாக ”30 மணிநேரமாக வேலை பார்க்கிறேன், தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மிட்டா இறந்ததற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வேலை பார்த்ததே அவரது இறப்பு காரணம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வேலை நேரத்தின் போது மிட்டா உலுக்கு ஆற்றலை கொடுக்க குளிர்பானங்களை குடித்து வந்துள்ளார்.
Re: உலகச் செய்திகள்!
சிங்கப்பூரில் கலவரம் நடந்த பகுதியில் 6 மாதங்களுக்கு மதுபானம் விற்க தடை
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், தெற்காசியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் பணி செய்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்ற இந்திய தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். அதன்படி இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர், பயங்கரமான ஆயுதங்களுடன் அப்பகுதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதில் 10 போலீசார் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.
சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக, தெற்கு ஆசிய தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர்களை கைது செய்தனர். அங்கு மதுபானங்கள் விற்க தடை செய்யப்பட்டது. கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கலவரம் நடந்த பகுதியில் மதுபானங்கள் விற்க விதிக்கப்பட்ட தடையை மேலும், 6 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், தெற்காசியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் பணி செய்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்ற இந்திய தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். அதன்படி இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர், பயங்கரமான ஆயுதங்களுடன் அப்பகுதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதில் 10 போலீசார் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.
சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக, தெற்கு ஆசிய தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர்களை கைது செய்தனர். அங்கு மதுபானங்கள் விற்க தடை செய்யப்பட்டது. கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கலவரம் நடந்த பகுதியில் மதுபானங்கள் விற்க விதிக்கப்பட்ட தடையை மேலும், 6 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
Re: உலகச் செய்திகள்!
மத அவமதிப்பு புகாரில் பாக். டாக்டர் கைது
பாகிஸ்தானில் பூட்டோ பிரதமராக இருந்த போது 1974–ம் ஆண்டில் ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தார். அதன்படி அஹ்மடி சிறுபான்மையினர் முஸ்லிம் அல்லாதவர்களாக கருதப்படுவார்கள். இங்கிலாந்தில் இருந்து மசூத் அகமது என்ற டாக்டர் பாகிஸ்தானுக்கு திரும்பி தொழில் செய்தார். சிகிச்சை பெற சென்ற நோயாளி ஒருவர் இவர் மீது வீடியோ ஆதாரத்துடன் மத அவமதிப்பு செய்வதாக புகார் கூறினார்.
இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மசூத் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து அவர் லாகூர் செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பாகிஸ்தானில் பூட்டோ பிரதமராக இருந்த போது 1974–ம் ஆண்டில் ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தார். அதன்படி அஹ்மடி சிறுபான்மையினர் முஸ்லிம் அல்லாதவர்களாக கருதப்படுவார்கள். இங்கிலாந்தில் இருந்து மசூத் அகமது என்ற டாக்டர் பாகிஸ்தானுக்கு திரும்பி தொழில் செய்தார். சிகிச்சை பெற சென்ற நோயாளி ஒருவர் இவர் மீது வீடியோ ஆதாரத்துடன் மத அவமதிப்பு செய்வதாக புகார் கூறினார்.
இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மசூத் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து அவர் லாகூர் செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Page 8 of 81 • 1 ... 5 ... 7, 8, 9 ... 44 ... 81
Similar topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 8 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|