Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 69 of 81
Page 69 of 81 • 1 ... 36 ... 68, 69, 70 ... 75 ... 81
உலகச் செய்திகள்!
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகச் செய்திகள்!
பாக்.சீனா பஸ் சேவை துவக்கம்
பிஜீங்:
பாகிஸ்தானின், லாகூர் நகரை, சீனாவின், கஷ்கர் நகருடன்
இணைக்கும், புதிய பஸ் சேவை, நாளை முதல் துவங்க உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக,
இந்த பஸ், சென்று வரும்.
இது குறித்து, சீன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில், சீனாவின் நிலை, மிகத் தெளிவாக
உள்ளது. இதை, பல முறை தெரிவித்து விட்டோம்.
இந்த பஸ் சேவைக்கும், பாகிஸ்தான் உடனான எல்லைப்
பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால், காஷ்மீர்
விவகாரத்தில், சீனாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை
ஒருபோதும் பாதிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------
தினமலர்
பிஜீங்:
பாகிஸ்தானின், லாகூர் நகரை, சீனாவின், கஷ்கர் நகருடன்
இணைக்கும், புதிய பஸ் சேவை, நாளை முதல் துவங்க உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக,
இந்த பஸ், சென்று வரும்.
இது குறித்து, சீன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில், சீனாவின் நிலை, மிகத் தெளிவாக
உள்ளது. இதை, பல முறை தெரிவித்து விட்டோம்.
இந்த பஸ் சேவைக்கும், பாகிஸ்தான் உடனான எல்லைப்
பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால், காஷ்மீர்
விவகாரத்தில், சீனாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை
ஒருபோதும் பாதிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------
தினமலர்
Re: உலகச் செய்திகள்!
தலிபான் தந்தை மவுலானா ஷமி உல்-ஹாக் சுட்டுக்கொலை
-
-
இஸ்லாமாபாத்:
தலிபான் நந்தை என அழைக்கப்படும் மவுலானா ஷமி உல்-ஹாக்
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் தனதுவீட்டில் இருந்த போது
மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டதாக அவரது உதவியாளர்
தெரிவித்துள்ளார்.
82 வயதான மதகுருவான மவுலானா ஷமி-உல்ஹாக்,
1990-களில் தரூம் உலேம் ஹக்கானியா என்ற அமைப்பையும்ா,
பாக்.கின் கைபர் பக்துன்வாலா பகுதிகளில் தலிபான் அமைப்பையும்,
மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள்
உருவாக காரணமாக இருந்தவர் என கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
-
---------------------------
தினமலர்
-
-
இஸ்லாமாபாத்:
தலிபான் நந்தை என அழைக்கப்படும் மவுலானா ஷமி உல்-ஹாக்
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் தனதுவீட்டில் இருந்த போது
மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டதாக அவரது உதவியாளர்
தெரிவித்துள்ளார்.
82 வயதான மதகுருவான மவுலானா ஷமி-உல்ஹாக்,
1990-களில் தரூம் உலேம் ஹக்கானியா என்ற அமைப்பையும்ா,
பாக்.கின் கைபர் பக்துன்வாலா பகுதிகளில் தலிபான் அமைப்பையும்,
மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள்
உருவாக காரணமாக இருந்தவர் என கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
-
---------------------------
தினமலர்
Re: உலகச் செய்திகள்!
எச்1.பி விசா: விதிகளை கடுமையாக்கியது அமெரிக்கா
-
வாஷிங்டன்:
எச்1 பி விசாவுக்கான விதிகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது.
இதன்படி, இந்த விசாவின் கீழ் ஆட்களை தேர்வு செய்வதற்கு முன்,
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் துறையிடம்,
குறிப்பிட்ட அந்த பதவிகளுக்கு உள்நாட்டில் ஆட்கள் இல்லை.
வெளிநாட்டில் இருந்து ஆட்களை தேர்வு செய்யலாம் என்ற சான்றிதழை
பெற வேண்டும்.
மேலும், விசா கோரும் நிறுவனங்கள், எந்த பணிகளுக்காக
அது தேவைப்படுகிறது, அந்த பணியின் தன்மைகள், பணிக்காலம்
உள்ளிட்டவை குறித்து தகவல்களையும், தங்களது நிறுவனத்தில்
எத்தனை வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர் என்பதையும்
தெரிவிக்க வேண்டும்.
-
தினமலர்
-
வாஷிங்டன்:
எச்1 பி விசாவுக்கான விதிகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது.
இதன்படி, இந்த விசாவின் கீழ் ஆட்களை தேர்வு செய்வதற்கு முன்,
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் துறையிடம்,
குறிப்பிட்ட அந்த பதவிகளுக்கு உள்நாட்டில் ஆட்கள் இல்லை.
வெளிநாட்டில் இருந்து ஆட்களை தேர்வு செய்யலாம் என்ற சான்றிதழை
பெற வேண்டும்.
மேலும், விசா கோரும் நிறுவனங்கள், எந்த பணிகளுக்காக
அது தேவைப்படுகிறது, அந்த பணியின் தன்மைகள், பணிக்காலம்
உள்ளிட்டவை குறித்து தகவல்களையும், தங்களது நிறுவனத்தில்
எத்தனை வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர் என்பதையும்
தெரிவிக்க வேண்டும்.
-
தினமலர்
Re: உலகச் செய்திகள்!
* இங்கிலாந்தில் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலையும்,
அவரது மகள் யுலியாவையும் ரசாயன தாக்குதல் நடத்தி
கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ரஷியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
இதற்காக ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா
பரிசீலித்து வருகிறது.
-
------------------------------------------------
-
* ரஷியா, சீனா, அமெரிக்காவுக்கு எதிராக நிற்கக்கூடிய
வகையில் பலம் வாய்ந்த உண்மையான ஐரோப்பிய
ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர்
மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
---------------------------------------------
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும்
அர்ஜெண்டினாவில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது
சந்தித்து பேச உள்ளனர்.
இதை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
-
-------------------------------------
* ஆப்கானிஸ்தானில் பான்சிர் மாகாணத்தில் உள்ள
அவசரகால ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள்
இறந்துள்ளனர். இதற்கான காரணம் தெரியவரவில்லை.
-
-----------------------------------------
தினத்தந்தி
Re: உலகச் செய்திகள்!
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் இடம் பெறும் 2 இஸ்லாமிய பெண்கள்
---
வாஷிங்டன்,
அமெரிக்காவில் இடைத்தேர்தலில் அமெரிக்க மக்கள்
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றது
ஜனநாயக கட்சி .
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 218 இடங்களை
கைப்பற்றி உள்ளது.
வெர்மான்ட் மாகாணத்தின் கவர்னர் தேர்தலில்
கிறிஸ்டின் ஹால்குஸ்ட் ( வயது 29) என்ற திருநங்கை
போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று
முதல் திருநங்கை கவர்னராகி உள்ளார்.
கூடுதலாக, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு
இரண்டு முஸ்லீம் பெண்கள் உறுப்பினர்கள் கிடைத்து
உள்ளனர். சோமாலிய அகதி இலன் ஒமர் மற்றும்
பாலஸ்தீனியத்தை சேர்ந்த
ரஷிதா தலாப் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டு
உள்ளனர்.
இருவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.
ஒமர் மினியாபோலிஸ், மினசோட்டாவில் வெற்றி
பெற்றார்.
தலாப், டெட்ராய்ட் மாவட்டம் டியர்பார்னில் தேர்ந்து
எடுக்கப்பட்டார்.
-
------------------------------
தினத்தந்தி
---
வாஷிங்டன்,
அமெரிக்காவில் இடைத்தேர்தலில் அமெரிக்க மக்கள்
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றது
ஜனநாயக கட்சி .
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 218 இடங்களை
கைப்பற்றி உள்ளது.
வெர்மான்ட் மாகாணத்தின் கவர்னர் தேர்தலில்
கிறிஸ்டின் ஹால்குஸ்ட் ( வயது 29) என்ற திருநங்கை
போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று
முதல் திருநங்கை கவர்னராகி உள்ளார்.
கூடுதலாக, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு
இரண்டு முஸ்லீம் பெண்கள் உறுப்பினர்கள் கிடைத்து
உள்ளனர். சோமாலிய அகதி இலன் ஒமர் மற்றும்
பாலஸ்தீனியத்தை சேர்ந்த
ரஷிதா தலாப் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டு
உள்ளனர்.
இருவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.
ஒமர் மினியாபோலிஸ், மினசோட்டாவில் வெற்றி
பெற்றார்.
தலாப், டெட்ராய்ட் மாவட்டம் டியர்பார்னில் தேர்ந்து
எடுக்கப்பட்டார்.
-
------------------------------
தினத்தந்தி
Re: உலகச் செய்திகள்!
வரவேற்போம்
பெண் பிரதிநிதிகள் மற்றும்
இஸ்லாமிய பெண் பிரதிநிதிகளை
பெண் பிரதிநிதிகள் மற்றும்
இஸ்லாமிய பெண் பிரதிநிதிகளை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உலகச் செய்திகள்!
ஏமனில் கடும் போர் - 58 பேர் பலி
-
ஏடன்,
ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி
படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்
2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி
உள்நாட்டுப்போர் மூண்டது.
4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.
அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள்
களத்தில் குதித்துள்ளன.
அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா,
2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து
வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள்,
சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து
கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு
வருகின்றன.
ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம்
வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த
கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர்
கொல்லப்பட்டனர்.
அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அதிபர் படை வட்டாரங்கள் கூறுகையில்
, “கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி
வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை
நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என்று
தெரிவித்தன.
-
----------------------
தினத்தந்தி
-
ஏடன்,
ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி
படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்
2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி
உள்நாட்டுப்போர் மூண்டது.
4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.
அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள்
களத்தில் குதித்துள்ளன.
அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா,
2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து
வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள்,
சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து
கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு
வருகின்றன.
ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம்
வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த
கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர்
கொல்லப்பட்டனர்.
அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அதிபர் படை வட்டாரங்கள் கூறுகையில்
, “கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி
வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை
நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என்று
தெரிவித்தன.
-
----------------------
தினத்தந்தி
Re: உலகச் செய்திகள்!
அமெரிக்க இசை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் பலி
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் நகரில் ‘பார்டர்லைன் பார் அண்ட் கிரில்’ என்ற பெயரில் ஒரு இசை விடுதி இயங்கி வருகிறது.
அங்கு நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இளைய தலைமுறையினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இரவு சுமார் 11.40 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் அவர் பலரை சுட்டு வீழ்த்தி விட்டார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.
இது பயங்கரவாத தாக்குதலா என்பதுவும் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம், அமெரிக்காவை பதற்றத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.
தினத்தந்தி
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் நகரில் ‘பார்டர்லைன் பார் அண்ட் கிரில்’ என்ற பெயரில் ஒரு இசை விடுதி இயங்கி வருகிறது.
அங்கு நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இளைய தலைமுறையினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இரவு சுமார் 11.40 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் அவர் பலரை சுட்டு வீழ்த்தி விட்டார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.
இது பயங்கரவாத தாக்குதலா என்பதுவும் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம், அமெரிக்காவை பதற்றத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.
தினத்தந்தி
Re: உலகச் செய்திகள்!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால்
தஞ்சம் கோர முடியாது - டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
-
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள்
குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய
அமெரிக்க நாட்டினர்,
அமெரிக்கா வந்து தஞ்சம் அடைவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் ‘கேரவன்’
வாகனங்களில் வருவதை ‘படையெடுப்பு’ என்று டிரம்ப்
விமர்சித்து வந்தார்.
நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் பிரசாரத்தின்போதும்,
மத்திய அமெரிக்க நாட்டினர் வருகைக்கு எதிரான
கருத்துக் களை டிரம்ப் வெளியிட்டார். அது மட்டுமின்றி
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்கா வர
முயற்சிக்கிறவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில்
எல்லையில் அவர் பல்லாயிரக் கணக்கில் படை வீரர்களை
குவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று வாஷிங்டன் வெள்ளை
மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது,
சி.என். என். நிருபர் அகோஸ்டா இந்தப் பிரச்சினையை
எழுப்பியபோதுதான் டிரம்புடன் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிரடியாக அமெரிக்காவிற்குள் சட்ட
விரோதமாக நுழைகிறவர்கள் தஞ்சம் கோர முடியாது என
கூறும் புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரல்
பொறுப்பு வகிக்கும் மேத்யூ விட்டேகரும், உள்நாட்டு
பாதுகாப்பு வல்லுனர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இடைக்கால
இறுதி விதி என்ற பெயரில் ஒரு அறிவிக்கையை
வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்
கூறி இருப்பதாவது:-
நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி,
அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்கிற பட்சத்தில்,
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிற வெளிநாட்டினரை
தடுத்து நிறுத்துகிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
அவர்கள் மீது சரியானது என கருதப்படுகிற எந்தவொரு
கட்டுப்பாட்டையும் அவரால் விதிக்கவும் முடியும்.
இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும்,
அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம்
வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகவும் யாரும்
சட்டவிரோதமாக நுழைந்து தஞ்சம் கோர முடியாது என
கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள்
குவிகின்றன.
இதுபற்றி அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு கருத்து
தெரிவிக்கையில், “அகதிகள் தஞ்சம் கோர முடியாது என
டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதி, சட்ட விரோதமானது”
என கூறியது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர்
குமி நாய்டூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கொள்கை
முடிவானது, ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை
அபாயத்தில் கொண்டு போய் விட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினத்தந்தி
தஞ்சம் கோர முடியாது - டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
-
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள்
குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய
அமெரிக்க நாட்டினர்,
அமெரிக்கா வந்து தஞ்சம் அடைவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் ‘கேரவன்’
வாகனங்களில் வருவதை ‘படையெடுப்பு’ என்று டிரம்ப்
விமர்சித்து வந்தார்.
நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் பிரசாரத்தின்போதும்,
மத்திய அமெரிக்க நாட்டினர் வருகைக்கு எதிரான
கருத்துக் களை டிரம்ப் வெளியிட்டார். அது மட்டுமின்றி
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்கா வர
முயற்சிக்கிறவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில்
எல்லையில் அவர் பல்லாயிரக் கணக்கில் படை வீரர்களை
குவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று வாஷிங்டன் வெள்ளை
மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது,
சி.என். என். நிருபர் அகோஸ்டா இந்தப் பிரச்சினையை
எழுப்பியபோதுதான் டிரம்புடன் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிரடியாக அமெரிக்காவிற்குள் சட்ட
விரோதமாக நுழைகிறவர்கள் தஞ்சம் கோர முடியாது என
கூறும் புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரல்
பொறுப்பு வகிக்கும் மேத்யூ விட்டேகரும், உள்நாட்டு
பாதுகாப்பு வல்லுனர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இடைக்கால
இறுதி விதி என்ற பெயரில் ஒரு அறிவிக்கையை
வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்
கூறி இருப்பதாவது:-
நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி,
அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்கிற பட்சத்தில்,
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிற வெளிநாட்டினரை
தடுத்து நிறுத்துகிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
அவர்கள் மீது சரியானது என கருதப்படுகிற எந்தவொரு
கட்டுப்பாட்டையும் அவரால் விதிக்கவும் முடியும்.
இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும்,
அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம்
வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகவும் யாரும்
சட்டவிரோதமாக நுழைந்து தஞ்சம் கோர முடியாது என
கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள்
குவிகின்றன.
இதுபற்றி அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு கருத்து
தெரிவிக்கையில், “அகதிகள் தஞ்சம் கோர முடியாது என
டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதி, சட்ட விரோதமானது”
என கூறியது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர்
குமி நாய்டூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கொள்கை
முடிவானது, ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை
அபாயத்தில் கொண்டு போய் விட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினத்தந்தி
Re: உலகச் செய்திகள்!
அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது
- ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
--
-
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத்தீயானது கொழுந்து விட்டு எரிகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே (நேற்று முன்தினம் மதியம் வரை) 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.
இந்த காட்டுத்தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களையெல்லாம் சாலைகளில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் கேனியான், பட்டி வேலி பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தீயை அணைப்பதற்கு நூற்றுக் கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.
தீ பரவி வருகிற பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நெருக்கடி கால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக் கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.
தினத்தந்தி
- ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
--
-
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத்தீயானது கொழுந்து விட்டு எரிகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே (நேற்று முன்தினம் மதியம் வரை) 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.
இந்த காட்டுத்தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களையெல்லாம் சாலைகளில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் கேனியான், பட்டி வேலி பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தீயை அணைப்பதற்கு நூற்றுக் கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.
தீ பரவி வருகிற பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நெருக்கடி கால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக் கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.
தினத்தந்தி
Page 69 of 81 • 1 ... 36 ... 68, 69, 70 ... 75 ... 81
Similar topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 69 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|