Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 42 of 81
Page 42 of 81 • 1 ... 22 ... 41, 42, 43 ... 61 ... 81
உலகச் செய்திகள்!
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகச் செய்திகள்!
இந்திய எதிர்ப்பை மீறி சீன நீர்மூழ்கிகளுக்கு இலங்கை அனுமதி
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கை அரசு, தன் துறைமுகங்களுக்குள் அனுமதித்து வருகிறது. கடந்த செப்டம்பரில், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய இலங்கை, இப்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
வல்லரசு நாடு:
ஆசியா பகுதியில் வல்லரசு நாடாக விளங்கும் சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் அவ்வப்போது உரசல் போக்கை கொண்டுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், கடந்த செப்டம்பரில், ஈரான் நாடு அமைந்துள்ள பாரசீக வளைகுடா பகுதிக்கு பயணம் மேற்கொண்டன. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளும், டீசலில் இயங்கும் நீர்மூழ்கிகளும், அந்த கப்பல்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. அவற்றில், சில ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை.அந்த கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக பயணித்து, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள, பாக் நீரிணை வழியாக, பாரசீக வளைகுடாவுக்கு செல்ல இருந்தன. அந்த கப்பல்களை, இலங்கை துறைமுகத்தில் நிறுத்த, இலங்கை அனுமதிக்கக் கூடாது என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கோதபய ராஜபக்ேஷயிடம், இந்திய அரசு வலியுறுத்தியது.எனினும், அதை கேட்காமல், இந்தியாவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சில நாட்கள் தங்க அனுமதி வழங்கப்பட்டது; கடந்த செப்டம்பரில், இது நடந்தது.அப்போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சீனாவின் சண்டை நாடுகளில் ஒன்றான வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
நட்புறவு:
அந்த நேரத்தில், இந்திய நகரங்களை தாக்கும் தூரத்தில் உள்ள, பாக் நீரிணையில், சீன நீர்மூழ்கி கப்பல்கள் தங்க இலங்கை அனுமதி அளித்தது.அதுபோல, ஏடன் வளைகுடா என அழைக்கப்படும், எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகள் அமைந்துள்ள பகுதிக்கு சீன நீர்மூழ்கி கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் அந்த கப்பல்கள், இலங்கையின் துறைமுகத்தை அடைய உள்ளன.அங்கு, அந்த கப்பல்கள் சில நாட்கள் தங்கவும், எரிபொருட்களை நிரப்பவும், இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.சில ஆண்டுகளாகவே, சீனாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான நட்புறவு நிலவி வருகிறது. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த இலங்கை, தன் போக்கை மாற்றிக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நெருக்கம் காண்பித்து வருகிறது.
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரால் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ள இலங்கைக்கு, ஜப்பான் ஏராளமாக நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், இப்போது, ஜப்பானையும் விட, சீனா அதிகமாக நிதியுதவி வழங்கி வருகிறது. அம்பன்தோட்டை துறைமுகம், மாத்தரை சர்வதேச விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது.இதற்கு பிரதிபலனாகவும், நன்றிக் கடனாகவும், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு, இலங்கை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வருகிறது. இது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதை, இலங்கை கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கை அரசு, தன் துறைமுகங்களுக்குள் அனுமதித்து வருகிறது. கடந்த செப்டம்பரில், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய இலங்கை, இப்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
வல்லரசு நாடு:
ஆசியா பகுதியில் வல்லரசு நாடாக விளங்கும் சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் அவ்வப்போது உரசல் போக்கை கொண்டுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், கடந்த செப்டம்பரில், ஈரான் நாடு அமைந்துள்ள பாரசீக வளைகுடா பகுதிக்கு பயணம் மேற்கொண்டன. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளும், டீசலில் இயங்கும் நீர்மூழ்கிகளும், அந்த கப்பல்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. அவற்றில், சில ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை.அந்த கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக பயணித்து, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள, பாக் நீரிணை வழியாக, பாரசீக வளைகுடாவுக்கு செல்ல இருந்தன. அந்த கப்பல்களை, இலங்கை துறைமுகத்தில் நிறுத்த, இலங்கை அனுமதிக்கக் கூடாது என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கோதபய ராஜபக்ேஷயிடம், இந்திய அரசு வலியுறுத்தியது.எனினும், அதை கேட்காமல், இந்தியாவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சில நாட்கள் தங்க அனுமதி வழங்கப்பட்டது; கடந்த செப்டம்பரில், இது நடந்தது.அப்போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சீனாவின் சண்டை நாடுகளில் ஒன்றான வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
நட்புறவு:
அந்த நேரத்தில், இந்திய நகரங்களை தாக்கும் தூரத்தில் உள்ள, பாக் நீரிணையில், சீன நீர்மூழ்கி கப்பல்கள் தங்க இலங்கை அனுமதி அளித்தது.அதுபோல, ஏடன் வளைகுடா என அழைக்கப்படும், எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகள் அமைந்துள்ள பகுதிக்கு சீன நீர்மூழ்கி கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் அந்த கப்பல்கள், இலங்கையின் துறைமுகத்தை அடைய உள்ளன.அங்கு, அந்த கப்பல்கள் சில நாட்கள் தங்கவும், எரிபொருட்களை நிரப்பவும், இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.சில ஆண்டுகளாகவே, சீனாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான நட்புறவு நிலவி வருகிறது. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த இலங்கை, தன் போக்கை மாற்றிக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நெருக்கம் காண்பித்து வருகிறது.
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரால் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ள இலங்கைக்கு, ஜப்பான் ஏராளமாக நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், இப்போது, ஜப்பானையும் விட, சீனா அதிகமாக நிதியுதவி வழங்கி வருகிறது. அம்பன்தோட்டை துறைமுகம், மாத்தரை சர்வதேச விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது.இதற்கு பிரதிபலனாகவும், நன்றிக் கடனாகவும், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு, இலங்கை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வருகிறது. இது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதை, இலங்கை கண்டுகொள்ளவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
டெல்லி-கோலாலம்பூர் விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது
புதுடெல்லியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 129 பேரை ஏற்றி கொண்டு சென்ற மலிண்டோ விமானம் மியான்மர் வான் வழியே பறந்து சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாய்லாந்து நாட்டின் டான் முயெங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் ரக 737-900ஈ.ஆர். விமானம் ஒன்று நேற்றிரவு 10.05 மணியளவில், 3 குழந்தைகள் மற்றும் 8 விமானிகள் உட்பட 121 பயணிகளுடன் பறந்து சென்றது. மலேசியாவை சேர்ந்த இந்த விமானம் தொழில் நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் விமானி அவசரகால பட்டியலை உடனடியாக பார்த்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டார். அதன்பின்னர் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பி சென்று உள்ளார்.
விமானத்தின் தொழில்நுட்ப விவகாரம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இது குறித்து தொடர்புடைய அதிகாரிகள், இயந்திரம் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனத்திடமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு விட்டது என்று விமான நிலைய அறிக்கை தெரிவித்து உள்ளது. விமான பயணிகள் கோலாலம்பூர் செல்லும் மற்றொரு விமானத்தில் (மலேசிய நேரப்படி 4.45 மணி அளவில்) பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 129 பேரை ஏற்றி கொண்டு சென்ற மலிண்டோ விமானம் மியான்மர் வான் வழியே பறந்து சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாய்லாந்து நாட்டின் டான் முயெங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் ரக 737-900ஈ.ஆர். விமானம் ஒன்று நேற்றிரவு 10.05 மணியளவில், 3 குழந்தைகள் மற்றும் 8 விமானிகள் உட்பட 121 பயணிகளுடன் பறந்து சென்றது. மலேசியாவை சேர்ந்த இந்த விமானம் தொழில் நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் விமானி அவசரகால பட்டியலை உடனடியாக பார்த்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டார். அதன்பின்னர் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பி சென்று உள்ளார்.
விமானத்தின் தொழில்நுட்ப விவகாரம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இது குறித்து தொடர்புடைய அதிகாரிகள், இயந்திரம் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனத்திடமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு விட்டது என்று விமான நிலைய அறிக்கை தெரிவித்து உள்ளது. விமான பயணிகள் கோலாலம்பூர் செல்லும் மற்றொரு விமானத்தில் (மலேசிய நேரப்படி 4.45 மணி அளவில்) பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் எச்சரிக்கையும் மீறி, சீன கப்பல்களை, தங்கள் துறைமுகத்தில் நிறுத்த, இலங்கை அனுமதி அளித்தது. இதுகுறித்து மத்திய அரசு அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இதற்கு 'எரிபொருள் நிரப்புவதற்காகவே, இலங்கை துறைமுகத்தில் எங்களின் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; இது, வழக்கமான நடவடிக்கை தான்' என, சீனா மழுப்பியிருக்கிறது. வெளிநாடுகளின் துறைமுகங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக, மற்ற நிறுவனங்களின் கப்பல்கள் நிறுத்தப்படுவது, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடவடிக்கை தான். இவ்வாறு, சீனா கூறியிருக்கிறது.இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தில்,'கடந்த, 2010லிருந்து, 230க்கும் அதிகமான போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ளன. இது, நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கை தான்' என, தெரிவித்துள்ளது.
இதற்கு 'எரிபொருள் நிரப்புவதற்காகவே, இலங்கை துறைமுகத்தில் எங்களின் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; இது, வழக்கமான நடவடிக்கை தான்' என, சீனா மழுப்பியிருக்கிறது. வெளிநாடுகளின் துறைமுகங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக, மற்ற நிறுவனங்களின் கப்பல்கள் நிறுத்தப்படுவது, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடவடிக்கை தான். இவ்வாறு, சீனா கூறியிருக்கிறது.இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தில்,'கடந்த, 2010லிருந்து, 230க்கும் அதிகமான போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ளன. இது, நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கை தான்' என, தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
காதலியின் நடத்தையில் சந்தேகம் உதடு, காது, மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலர்
தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது).அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார்.
பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரான கெய்க்கு மாதம் 2 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து வந்தார். சமீப காலமாக சூ கெய்யின் நடத்தையில் சென்னுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தனது காதலியை வீட்டில் படுக்கையில் தூங்கி கொண்டு இருந்தார் அப்போது சென் அவரை கட்டிப்போட்டார். பின்னர், கத்தியால் காதலியின் மூக்கு, காதுகள், உதபடுகளை துண்டு துண்டாக வெட்டிபனார். அவற்றை கழிப்பபறை கோப்பபைக்குள் போட்டு மறைத்தார். பின்னர் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்தார்.
காதலி சங்குவா மருத்துவ மனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறும் போது பெண்ணின் வெட்டிய உறுப்புகளை தேடிபார்த்தோம் அனைத்தும் முழுவதும் கூர்மையான கத்தியால் துண்டு துண்டாக வெட்டபட்டு உள்ளது. மீண்டும் முகத்தை சீரமைப்பது மிகவும் கடினம் என கூறினார்.
கைது செய்யபட்ட ஹூவாங் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது).அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார்.
பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரான கெய்க்கு மாதம் 2 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து வந்தார். சமீப காலமாக சூ கெய்யின் நடத்தையில் சென்னுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தனது காதலியை வீட்டில் படுக்கையில் தூங்கி கொண்டு இருந்தார் அப்போது சென் அவரை கட்டிப்போட்டார். பின்னர், கத்தியால் காதலியின் மூக்கு, காதுகள், உதபடுகளை துண்டு துண்டாக வெட்டிபனார். அவற்றை கழிப்பபறை கோப்பபைக்குள் போட்டு மறைத்தார். பின்னர் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்தார்.
காதலி சங்குவா மருத்துவ மனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறும் போது பெண்ணின் வெட்டிய உறுப்புகளை தேடிபார்த்தோம் அனைத்தும் முழுவதும் கூர்மையான கத்தியால் துண்டு துண்டாக வெட்டபட்டு உள்ளது. மீண்டும் முகத்தை சீரமைப்பது மிகவும் கடினம் என கூறினார்.
கைது செய்யபட்ட ஹூவாங் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
ஆசிரியை குத்திக்கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டு ஜெயில்
இங்கிலாந்தில் ஆசிரியை குத்திக் கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கார்பஸ் கிறிஸ்துவ கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆன்மார்குயர் (வயது 61) என்ற ஆசிரியை ஸ்பெயின் மற்றும் மத வகுப்பு நடத்தி வந்தார். இதே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் பாடம் நடத்திக்கொண்லி இருந்த ஆசிரியை ஆன்மார்குயரை கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்தார். கொலை நடந்தபோது வகுப்பறையில் 30 மாணவர்கள் இருந்தனர். ஆசிரியரை மாணவன் கொலை செய்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியை ஆன்மார்குயர் மீது மாணவன் வெறுப்புடன் இருந்ததால் இந்த கொடூர செயலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மாணவனை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, மாணவனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இங்கிலாந்தில் ஆசிரியை குத்திக் கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கார்பஸ் கிறிஸ்துவ கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆன்மார்குயர் (வயது 61) என்ற ஆசிரியை ஸ்பெயின் மற்றும் மத வகுப்பு நடத்தி வந்தார். இதே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் பாடம் நடத்திக்கொண்லி இருந்த ஆசிரியை ஆன்மார்குயரை கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்தார். கொலை நடந்தபோது வகுப்பறையில் 30 மாணவர்கள் இருந்தனர். ஆசிரியரை மாணவன் கொலை செய்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியை ஆன்மார்குயர் மீது மாணவன் வெறுப்புடன் இருந்ததால் இந்த கொடூர செயலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மாணவனை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, மாணவனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
முகரம் பண்டிகை நாளில் சவூதி அரேபியாவில் 5 பேர் சுட்டுக்கொலை
சவூதி அரேபியாவில் சன்னி பிரிவினரின் ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் –ஆசா மாவட்டம், அல் தல்வா கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்களான ஷியா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முகரம் பண்டிகை நாளில், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த 3 மர்ம ஆசாமிகள், கண் இமைக்கும் நேரத்தில் பொதுமக்கள் மீது எந்திர துப்பாக்கிகளாலும், கைத்துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்து ‘சீல்’ வைத்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சவூதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சவூதி அரேபியாவில் சன்னி பிரிவினரின் ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் –ஆசா மாவட்டம், அல் தல்வா கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்களான ஷியா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முகரம் பண்டிகை நாளில், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த 3 மர்ம ஆசாமிகள், கண் இமைக்கும் நேரத்தில் பொதுமக்கள் மீது எந்திர துப்பாக்கிகளாலும், கைத்துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்து ‘சீல்’ வைத்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சவூதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
* அமெரிக்க வாழ் இந்தியரான பர்புர் சிங் (வயது 39), அங்கு கலிபோர்னியாவில் கடை ஒன்று நடத்தி வந்தார். இந்தக் கடையில் அவர் அரசின் துணை ஊட்டச்சத்து உதவி திட்டத்தை செயல்படுத்துவதில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
* இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வின்சென்ட் சிங் (45). அமெரிக்காவில் எல்க் குரோவ் என்ற இடத்தில் வசித்து வந்த இவர், அங்கு முதலீடு துறையில் ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நியூயார்க் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
* அமெரிக்காவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, கவர்னர் பதவி என பல பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் 2 டஜனுக்கும் மேலான இந்தியர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹாலே, எம்.பி. அமி பெரா, ரோ கன்னா ஆகிய மூவரின் தேர்தல் முடிவுகளை இந்திய சமூகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
ஈரானில் ஆடவர் வாலிபால் போட்டியை பார்த்த பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை
ஈரான் விதிகளை மீறி ஆடவர் வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்றதாக அந்நாட்டில் பிரிட்டன் பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கான்ச்சே கவாமி(25) கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே நடத்த வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்ற குற்றத்துக்காக அந்த விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆடவர் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது. பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறல்கள் நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டிய பெண்களின் கடமை" என்று கூறினார்.
ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கான்ச்சே மீது அரசின் விதிகளை மீது நடந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் எவின் சிறைக்கு விசாரணைகாக அனுப்பப்பட்டார்.
ஈரான் வாழ் பிரிட்டன் நாட்டு பெண்ணான கான்ச்சே கவாமியின் கைது எதிர்த்து அந்த நாட்டில் பிரிட்டன் வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஞாயிறு) அன்று கான்ச்சே மீதான வழக்கு தொடர்பான விசாரணையில் அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கான்ச்சே கவாமியின் சகோதரர் இது குறித்து கூறும்போது, "இரான் நாட்டு விதிகள் என்று முறையில் கான்ச்சே கைது செய்யப்பட்டதாக நீதிபதிகள் கூறினர். ஆனால் இங்கு எதுவுமே வெளிப்படையான முறையில் நடத்தப்படவில்லை என்பது தான் உண்மை. எனது சகோதரி ஏற்கனவே 5 மாத சிறை தண்டனையை பெற்று இருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களை முன்வைத்து சட்டத்தை மீறி கான்ச்சே பிரச்சாரம் செய்ததாக தண்டனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு இது தொடர்பான விவரம் இன்னும் கிடைக்கவில்லை" என்றார்.
ஈரான் விதிகளை மீறி ஆடவர் வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்றதாக அந்நாட்டில் பிரிட்டன் பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கான்ச்சே கவாமி(25) கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே நடத்த வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்ற குற்றத்துக்காக அந்த விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆடவர் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது. பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறல்கள் நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டிய பெண்களின் கடமை" என்று கூறினார்.
ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கான்ச்சே மீது அரசின் விதிகளை மீது நடந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் எவின் சிறைக்கு விசாரணைகாக அனுப்பப்பட்டார்.
ஈரான் வாழ் பிரிட்டன் நாட்டு பெண்ணான கான்ச்சே கவாமியின் கைது எதிர்த்து அந்த நாட்டில் பிரிட்டன் வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஞாயிறு) அன்று கான்ச்சே மீதான வழக்கு தொடர்பான விசாரணையில் அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கான்ச்சே கவாமியின் சகோதரர் இது குறித்து கூறும்போது, "இரான் நாட்டு விதிகள் என்று முறையில் கான்ச்சே கைது செய்யப்பட்டதாக நீதிபதிகள் கூறினர். ஆனால் இங்கு எதுவுமே வெளிப்படையான முறையில் நடத்தப்படவில்லை என்பது தான் உண்மை. எனது சகோதரி ஏற்கனவே 5 மாத சிறை தண்டனையை பெற்று இருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களை முன்வைத்து சட்டத்தை மீறி கான்ச்சே பிரச்சாரம் செய்ததாக தண்டனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு இது தொடர்பான விவரம் இன்னும் கிடைக்கவில்லை" என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
ஈரானில் ஆடவர் வாலிபால் போட்டியை பார்த்த பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை
-
பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய
உண்மை...
அயல் நாட்டில் வாழும்போது அந்த நாட்டு சட்டங்களை மதிக்க
வேண்டும்..சட்டத்தை மீறிவிட்டு, பின்னர் அவஸ்தை படக்கூடாது...!
-
-
பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய
உண்மை...
அயல் நாட்டில் வாழும்போது அந்த நாட்டு சட்டங்களை மதிக்க
வேண்டும்..சட்டத்தை மீறிவிட்டு, பின்னர் அவஸ்தை படக்கூடாது...!
-
Re: உலகச் செய்திகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1101594சிவா wrote:முகரம் பண்டிகை நாளில் சவூதி அரேபியாவில் 5 பேர் சுட்டுக்கொலை
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சவுதியில் நடக்கும் விஷயங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரிவது இல்லை ...உலகின் பெரிய மனித உரிமை மீறல்கள் அங்குதான் நடக்கிறது.
தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 42 of 81 • 1 ... 22 ... 41, 42, 43 ... 61 ... 81
Similar topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 42 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|