Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 5 of 81
Page 5 of 81 • 1, 2, 3, 4, 5, 6 ... 43 ... 81
உலகச் செய்திகள்!
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகச் செய்திகள்!
உளவு பார்த்த விவகாரம்: இந்தோனேசியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது- ஆஸ்திரேலிய பிரதமர்
இந்தோனேசியாவை ஆஸ்திரேலியா உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்காக, அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார். இதனால், இரு நாடுகளிடேயேயான உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் டோனி அபாட் செவ்வாய்க்கிழமை பேசுகையில், "நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் எடுத்தும்வரும் நடவடிக்கைக்காக இந்தோனேசிய விவகாரத்தில் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்காது. சரியான காரணத்துக்காகவே உளவுத்துறை தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மற்ற நாடுகளோ அல்லது அரசோ இதுபோன்ற காரணத்துக்காக உளவு நடவடிக்கையில் இறங்கினால், அவை மன்னிப்பு கேட்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ""அண்டை நாடுகளுக்கு அதிக மதிப்பளிக்கும் நாங்கள், தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆஸ்திரேலிய வளங்களை அவற்றுக்கு உதவுவதற்கே பயன்படுத்துகிறோமே ஒழிய, தீங்கு விளைவிப்பதற்கில்லை. எனினும், இந்தோனேசிய-ஆஸ்திரேலிய நல்லுறவுக்கான பாதை அருகிலேயே உள்ளது, வெகு தூரத்தில் இல்லை'' என்றார்.
இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, அவரது மனைவி அனி மற்றும் மூத்த அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய உளவு அமைப்பு ஒட்டுக்கேட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஆஸ்திரேலியாவை, இந்தோனேசிய அதிபர் மாளிகை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், பிரதமர் டோனி அபாட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடெனிடமிருந்து பெற்ற ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்தோனேசிய அதிபர் மற்றும் அவருக்கு நெருக்கமான 9 பேரை உளவு பார்த்ததாக ஆஸ்திரேலிய ஒளிபரப்புக்குக் கழகமும், "தி கார்டியன்' நாளிதழும் செய்தி வெளியிட்டிருந்தன.
அவற்றில், "ஆஸ்திரேலியப் பிரதமராக உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கெவின் ரூட் பதவி வகித்தபோது, மின்னணு புலனாய்வு அமைப்பும், பாதுகாப்பு இயக்குனரகமும் இணைந்து, 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேசிய அதிபர் யுதோயோனோவின் செல்போனை 15 நாள்கள் ஒட்டுக்கேட்டுள்ளன. அதிபரின் மனைவி அனி, துணை அதிபர் போய்டியோனோ, முன்னாள் துணை அதிபர் யூசுப் கல்லா உள்ளிட்ட 9 பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தோனேசியாவை ஆஸ்திரேலியா உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்காக, அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார். இதனால், இரு நாடுகளிடேயேயான உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் டோனி அபாட் செவ்வாய்க்கிழமை பேசுகையில், "நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் எடுத்தும்வரும் நடவடிக்கைக்காக இந்தோனேசிய விவகாரத்தில் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்காது. சரியான காரணத்துக்காகவே உளவுத்துறை தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மற்ற நாடுகளோ அல்லது அரசோ இதுபோன்ற காரணத்துக்காக உளவு நடவடிக்கையில் இறங்கினால், அவை மன்னிப்பு கேட்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ""அண்டை நாடுகளுக்கு அதிக மதிப்பளிக்கும் நாங்கள், தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆஸ்திரேலிய வளங்களை அவற்றுக்கு உதவுவதற்கே பயன்படுத்துகிறோமே ஒழிய, தீங்கு விளைவிப்பதற்கில்லை. எனினும், இந்தோனேசிய-ஆஸ்திரேலிய நல்லுறவுக்கான பாதை அருகிலேயே உள்ளது, வெகு தூரத்தில் இல்லை'' என்றார்.
இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, அவரது மனைவி அனி மற்றும் மூத்த அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய உளவு அமைப்பு ஒட்டுக்கேட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஆஸ்திரேலியாவை, இந்தோனேசிய அதிபர் மாளிகை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், பிரதமர் டோனி அபாட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடெனிடமிருந்து பெற்ற ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்தோனேசிய அதிபர் மற்றும் அவருக்கு நெருக்கமான 9 பேரை உளவு பார்த்ததாக ஆஸ்திரேலிய ஒளிபரப்புக்குக் கழகமும், "தி கார்டியன்' நாளிதழும் செய்தி வெளியிட்டிருந்தன.
அவற்றில், "ஆஸ்திரேலியப் பிரதமராக உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கெவின் ரூட் பதவி வகித்தபோது, மின்னணு புலனாய்வு அமைப்பும், பாதுகாப்பு இயக்குனரகமும் இணைந்து, 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேசிய அதிபர் யுதோயோனோவின் செல்போனை 15 நாள்கள் ஒட்டுக்கேட்டுள்ளன. அதிபரின் மனைவி அனி, துணை அதிபர் போய்டியோனோ, முன்னாள் துணை அதிபர் யூசுப் கல்லா உள்ளிட்ட 9 பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Re: உலகச் செய்திகள்!
மோடிக்கு விசா மறுப்பு நீட்டிப்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
மத சுதந்திரத்தை மீறியதாகக்கூறி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிப்பதை நீட்டிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கீத் எலிசன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிட்ஸ் மற்றும் 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.
அதில், ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்க கூடாது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கான மத சுதந்திரம் மற்றும் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
அமெரிக்க-இந்திய நல்லுறவு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத சுதந்திரத்தை மீறியதாகக்கூறி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிப்பதை நீட்டிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கீத் எலிசன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிட்ஸ் மற்றும் 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.
அதில், ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்க கூடாது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கான மத சுதந்திரம் மற்றும் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
அமெரிக்க-இந்திய நல்லுறவு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Re: உலகச் செய்திகள்!
ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடை
ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவது தொடர்பாக 6 மாதங்கள் வரை காத்திருக்குமாறும், அதற்குள்ளாக பேச்சுகளின் மூலமும் ராஜ்ஜிய நடவடிக்கைகளின் அடிப்படையிலும் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பேச்சு நடத்தவுள்ள நிலையில், ஒபாமா தெரிவித்துள்ள இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஒபாமா கூறியதாவது: ஈரான் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படும் முடிவை அறிந்து கொள்ள அடுத்த 6 மாதங்கள் காத்திருக்குமாறு இஸ்ரேல், ஈரான், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் சி.இ.ஓ. கவுன்சில் ஆணடுக் கூட்டத்தில் பேசும்போது ஒபாமா இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்துவிடாமல் செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் கையாள்வோம். இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஈரானுக்கு உள்ள உறுதியை அறிந்து கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிப்பதில் தவறில்லை. இந்த வாரத்துக்குள்ளோ அல்லது அடுத்த வாரத்துக்குள்ளோ உடன்பாடு ஏற்படும் என்று கருதவில்லை. எனினும், இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து இருக்கும். அணு ஆயுதத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் வகையில் இந்த பொருளாதாரத் தடைகள் இருக்கும்” என்றார்.
ஈரானுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜெனீவாவில் பேச்சு நடத்தவுள்ள சூழ்நிலையில் ஒபாமாவின் கருத்து வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவது தொடர்பாக 6 மாதங்கள் வரை காத்திருக்குமாறும், அதற்குள்ளாக பேச்சுகளின் மூலமும் ராஜ்ஜிய நடவடிக்கைகளின் அடிப்படையிலும் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பேச்சு நடத்தவுள்ள நிலையில், ஒபாமா தெரிவித்துள்ள இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஒபாமா கூறியதாவது: ஈரான் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படும் முடிவை அறிந்து கொள்ள அடுத்த 6 மாதங்கள் காத்திருக்குமாறு இஸ்ரேல், ஈரான், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் சி.இ.ஓ. கவுன்சில் ஆணடுக் கூட்டத்தில் பேசும்போது ஒபாமா இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்துவிடாமல் செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் கையாள்வோம். இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஈரானுக்கு உள்ள உறுதியை அறிந்து கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிப்பதில் தவறில்லை. இந்த வாரத்துக்குள்ளோ அல்லது அடுத்த வாரத்துக்குள்ளோ உடன்பாடு ஏற்படும் என்று கருதவில்லை. எனினும், இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து இருக்கும். அணு ஆயுதத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் வகையில் இந்த பொருளாதாரத் தடைகள் இருக்கும்” என்றார்.
ஈரானுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜெனீவாவில் பேச்சு நடத்தவுள்ள சூழ்நிலையில் ஒபாமாவின் கருத்து வெளியாகியுள்ளது.
Re: உலகச் செய்திகள்!
பாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் 5 பேர் பலி
பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். ஹங்கு மாவட்டத்தில், தல் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் அடுத்தடுத்து 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
தாலிபன்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தாது என பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று இத் தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது தொடங்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தற்போதைய அதிபர் ஒபாமா காலத்திலும் தொடர்கிறது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். ஹங்கு மாவட்டத்தில், தல் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் அடுத்தடுத்து 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
தாலிபன்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தாது என பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று இத் தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது தொடங்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தற்போதைய அதிபர் ஒபாமா காலத்திலும் தொடர்கிறது குறிப்பிடத்தக்கது.
Re: உலகச் செய்திகள்!
காரை மோதி 3 கி.மீ., தூரம் இழுத்து சென்று இந்திய பெண் கொலை : அமெரிக்க வாலிபர் வெறிச்செயல்
பாஸ்டன் : அமெரிக்க ஓட்டலில் பணியாற்றிய, இந்திய பெண்ணை, 3 கி.மீ., தூரம் காரில் இழுத்து சென்று கொன்றவனை, போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின், பாஸ்டன் பகுதியில் உள்ள, நெடுஞ்சாலை ஓட்டலில், இந்தியாவை சேர்ந்த காஞ்சன் பென், 58, பணியாற்றினார். அவரது கணவரும் அதே ஓட்டலில் பணியாற்றினார். சமீபத்தில் இவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. இந்நிலையில், இந்த ஓட்டலுக்கு வந்த, இரண்டு இளைஞர்கள், ஓட்டலில் தங்கியதற்கான கட்டணத்தை செலுத்த மறுத்தனர். இதனால், காஞ்சன் பென்னுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. மனைவிக்கு ஆதரவாக காஞ்சன் பென் கணவரும், அந்த இளைஞர்களிடம் வாதிட்டார். இதனால், கோபமடைந்த அந்த இளைஞர்கள், தாங்கள் வந்த காரை, அவர்கள் மீது மோதினர். இதில், காஞ்சன் பென்னின் கணவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
தரையில் விழுந்த காஞ்சன் பென்னை, அப்படியே, 3 கி.மீ., தூரம் வரை, அந்த பாதகர்கள் இழுத்து சென்றனர். இதில், காரின் அடியில் சிக்கி காஞ்சன் பென் உயிரிழந்தார்.இதற்கிடையே, வழி போக்கர்கள் சிலர், காரின் அடியில் சடலம் கிடப்பது கண்டு, போலீசாரிடம் தெரிவித்தனர். காஞ்சன் பென்னின் சடலத்தை மீட்ட போலீசார், கொலையாளி, மோசஸ் அக்லோக், 22, என்பவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பாஸ்டன் : அமெரிக்க ஓட்டலில் பணியாற்றிய, இந்திய பெண்ணை, 3 கி.மீ., தூரம் காரில் இழுத்து சென்று கொன்றவனை, போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின், பாஸ்டன் பகுதியில் உள்ள, நெடுஞ்சாலை ஓட்டலில், இந்தியாவை சேர்ந்த காஞ்சன் பென், 58, பணியாற்றினார். அவரது கணவரும் அதே ஓட்டலில் பணியாற்றினார். சமீபத்தில் இவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. இந்நிலையில், இந்த ஓட்டலுக்கு வந்த, இரண்டு இளைஞர்கள், ஓட்டலில் தங்கியதற்கான கட்டணத்தை செலுத்த மறுத்தனர். இதனால், காஞ்சன் பென்னுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. மனைவிக்கு ஆதரவாக காஞ்சன் பென் கணவரும், அந்த இளைஞர்களிடம் வாதிட்டார். இதனால், கோபமடைந்த அந்த இளைஞர்கள், தாங்கள் வந்த காரை, அவர்கள் மீது மோதினர். இதில், காஞ்சன் பென்னின் கணவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
தரையில் விழுந்த காஞ்சன் பென்னை, அப்படியே, 3 கி.மீ., தூரம் வரை, அந்த பாதகர்கள் இழுத்து சென்றனர். இதில், காரின் அடியில் சிக்கி காஞ்சன் பென் உயிரிழந்தார்.இதற்கிடையே, வழி போக்கர்கள் சிலர், காரின் அடியில் சடலம் கிடப்பது கண்டு, போலீசாரிடம் தெரிவித்தனர். காஞ்சன் பென்னின் சடலத்தை மீட்ட போலீசார், கொலையாளி, மோசஸ் அக்லோக், 22, என்பவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Re: உலகச் செய்திகள்!
சாலை விபத்து: சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதி!
சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பயணம் செய்த கார் நேற்றிரவு 8.30 மணியளவில் மலாக்கா அருகே விபத்திற்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் சுப்ரமணியம் உயிர் தப்பினார்.
நேற்று இரவு மலாக்காவில் நடைபெற்ற மஇகா கூட்டமொன்றில் கலந்து கொள்ள புத்ரஜெயாவில் இருந்து தனது புரோட்டான் பெர்டானா காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 220.7 வது கிலோமீட்டரில் விபத்து நிகழ்ந்தது.
இதில் சுப்ரமணியத்தின் கழுத்து மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக அலோர்காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்த பின்னர், தீவிர சிகிக்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்விபத்தில் சுப்ராவின் மெய்க்காப்பாளர் சுல்கிப்ளி அப்துல் வஹாப்புக்கு பலத்த காயங்களும், காரோட்டிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டு இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பயணம் செய்த கார் நேற்றிரவு 8.30 மணியளவில் மலாக்கா அருகே விபத்திற்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் சுப்ரமணியம் உயிர் தப்பினார்.
நேற்று இரவு மலாக்காவில் நடைபெற்ற மஇகா கூட்டமொன்றில் கலந்து கொள்ள புத்ரஜெயாவில் இருந்து தனது புரோட்டான் பெர்டானா காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 220.7 வது கிலோமீட்டரில் விபத்து நிகழ்ந்தது.
இதில் சுப்ரமணியத்தின் கழுத்து மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக அலோர்காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்த பின்னர், தீவிர சிகிக்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்விபத்தில் சுப்ராவின் மெய்க்காப்பாளர் சுல்கிப்ளி அப்துல் வஹாப்புக்கு பலத்த காயங்களும், காரோட்டிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டு இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Re: உலகச் செய்திகள்!
சீனாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்து 35 பேர் பலி
சீனாவின் கடற்கரை நகரமான குவிங்டாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து குவிங்டாவ் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வெய்பாங் நகரில் சீனாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் (அரசுக்கு சொந்தமானது) பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளது.
கச்சா எண்ணெய் கிடங்கு அமைந்துள்ள ஹுவாங்டாவ் முதல் வெய்பாங் நகர் வரையில் 176 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியம் பைப்லைன் போடப்பட்டுள்ளது. இந்த லைனின் இடையே குவிங்டாவ் நகரில் கசிவு ஏற்பட்டதால் சப்ளை நிறுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கசிவை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதையடுத்து, விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். கச்சா எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்தில் 35 பேர் இறந்தனர். மேலும் காயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சீனாவின் கடற்கரை நகரமான குவிங்டாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து குவிங்டாவ் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வெய்பாங் நகரில் சீனாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் (அரசுக்கு சொந்தமானது) பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளது.
கச்சா எண்ணெய் கிடங்கு அமைந்துள்ள ஹுவாங்டாவ் முதல் வெய்பாங் நகர் வரையில் 176 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியம் பைப்லைன் போடப்பட்டுள்ளது. இந்த லைனின் இடையே குவிங்டாவ் நகரில் கசிவு ஏற்பட்டதால் சப்ளை நிறுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கசிவை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதையடுத்து, விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். கச்சா எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்தில் 35 பேர் இறந்தனர். மேலும் காயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Re: உலகச் செய்திகள்!
இலங்கையில் ஈழ எழுத்தாளர் ஜெயபாலனிடம் விசாரணை
இலங்கை சென்ற ஈழ எழுத்தாளர் வ.ஜ.ச. ஜெயபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறியதாக ஜெயபாலனை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கை அரசுக்கு எதிராக செய்தியாளர்களின் பேட்டியின் போது கருத்து கூறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாங்குளம் அருகே கைதான ஜெயபாலனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது காவல்துறை.
இலங்கை சென்ற ஈழ எழுத்தாளர் வ.ஜ.ச. ஜெயபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறியதாக ஜெயபாலனை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கை அரசுக்கு எதிராக செய்தியாளர்களின் பேட்டியின் போது கருத்து கூறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாங்குளம் அருகே கைதான ஜெயபாலனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது காவல்துறை.
Re: உலகச் செய்திகள்!
உளவு பார்க்கிற வேலையெல்லாம் வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை
சிங்கப்பூரின் புலனாய்வுக்குத் தேவையான எந்த ஒரு விவரத்தையும் மலேசிய பகிரத் தயாராக உள்ளது. எனவே இந்த வேவு பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
“முறைப்படி பார்த்தால், எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் ரகசியங்களை வேவு பார்க்க முயற்சி செய்யக்கூடாது” என்று சாஹிட் குறிப்பிட்டார்.
அனைத்துலக அளவில் வேவு பார்க்கும் வேலைக்கு அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் செயல்படுவதாக வெளிநாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹிட் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் முன்னரே அமெரிக்காவிற்கு மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.
“அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அப்போதாவது அவர்கள் அண்டை நாடான நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கட்டும்” என்று உள்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்ட நாளான இன்று புத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சாஹிட் தெரிவித்துள்ளார்.
உளவு விவகாரங்களில் அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் இருப்பதாக ஊடகங்கள் கூறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்று கூறி, சிங்கப்பூர் தூதரகத்தின் தலைவரை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மலேசிய அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் குத்தகைதாரர் எட்வார்ட் ஸ்நோடென், சிங்கப்பூரில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களின் வழியாக இந்த உளவு வேலைகள் நடக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடலுக்கடியில் கேபிள்களை பதித்து செயல்பட்டு வரும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேசன்ஸ் (Singapore Telecommunications – SingTel) நிறுவனம் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது.
“இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுக்கும். அண்டை நாடுகளை உளவு பார்ப்பது நல்ல நண்பனை உளவு பார்ப்பது போன்றது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் புலனாய்வுக்குத் தேவையான எந்த ஒரு விவரத்தையும் மலேசிய பகிரத் தயாராக உள்ளது. எனவே இந்த வேவு பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
“முறைப்படி பார்த்தால், எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் ரகசியங்களை வேவு பார்க்க முயற்சி செய்யக்கூடாது” என்று சாஹிட் குறிப்பிட்டார்.
அனைத்துலக அளவில் வேவு பார்க்கும் வேலைக்கு அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் செயல்படுவதாக வெளிநாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹிட் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் முன்னரே அமெரிக்காவிற்கு மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.
“அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அப்போதாவது அவர்கள் அண்டை நாடான நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கட்டும்” என்று உள்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்ட நாளான இன்று புத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சாஹிட் தெரிவித்துள்ளார்.
உளவு விவகாரங்களில் அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் இருப்பதாக ஊடகங்கள் கூறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்று கூறி, சிங்கப்பூர் தூதரகத்தின் தலைவரை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மலேசிய அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் குத்தகைதாரர் எட்வார்ட் ஸ்நோடென், சிங்கப்பூரில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களின் வழியாக இந்த உளவு வேலைகள் நடக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடலுக்கடியில் கேபிள்களை பதித்து செயல்பட்டு வரும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேசன்ஸ் (Singapore Telecommunications – SingTel) நிறுவனம் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது.
“இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுக்கும். அண்டை நாடுகளை உளவு பார்ப்பது நல்ல நண்பனை உளவு பார்ப்பது போன்றது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார்.
Re: உலகச் செய்திகள்!
சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்
சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது.
சீனாவின் உத்தரவு
சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தர வேண்டும் என்று சீனா சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கும், அதன் நேச நாடான ஜப்பானுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் இதுவரை தொடர்ந்து வருகிற நிலையை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் கூறினார்.
அமெரிக்க போர் விமானங்கள்
இந்த நிலையில் அந்த பிரச்சினைக்குரிய பகுதியின்மீது அமெரிக்காவின் பி&52 ரக போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்றன. ஆனால் இது குறித்து சீனாவுக்கு முன்கூட்டி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க&சீன உறவுகள் மையத்தை சேர்ந்த பேராசிரியர் சன் ஜெ கருத்து தெரிவிக்கையில், Ò இதேபோன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று விமானங்களை அமெரிக்கா அனுப்பினால், சீனாவும் இதே பாணியில் பதிலடி கொடுக்க நேரிடும். சீனா வார்த்தையாலே மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்குமானால் அது இழிவானதாக அமைந்து விடும்Ó என கூறினார்.
கண்காணிக்கப்பட்டனவா?
சீன ராணுவ அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததை முழுமையாகக் கண்காணித்தோம் என்றது. ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அமெரிக்க போர் விமானங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என மறுத்துள்ளது.
இதற்கிடையே சீனாவில் பிரச்சினைக்குரிய பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சி என்ற பெயரில் பறந்திருப்பது நீண்ட காலம் திட்டமிட்டு நிறைவேற்றிய பயணம், இரண்டு போர் விமானங்கள் குவாமில் இருந்து புறப்பட்டு சென்று குவாமுக்கு திரும்பின என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் ஸ்டீவன் வார்ரன் தெரிவித்தார்.
ஜப்பானும் மீறியது
அமெரிக்க போர் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் ஜப்பானும் தனது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங் ஆகியவற்றின் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறக்கிறபோது, அது குறித்த தகவல்களை சீனாவுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என கூறி உள்ளது.
அதை அந்த விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. சீனாவின் உத்தரவை மீறியதால் பயணிகள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் சிவில் விமான தொழில் சங்கம் கூறி உள்ளது.
சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது.
சீனாவின் உத்தரவு
சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தர வேண்டும் என்று சீனா சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கும், அதன் நேச நாடான ஜப்பானுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் இதுவரை தொடர்ந்து வருகிற நிலையை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் கூறினார்.
அமெரிக்க போர் விமானங்கள்
இந்த நிலையில் அந்த பிரச்சினைக்குரிய பகுதியின்மீது அமெரிக்காவின் பி&52 ரக போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்றன. ஆனால் இது குறித்து சீனாவுக்கு முன்கூட்டி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க&சீன உறவுகள் மையத்தை சேர்ந்த பேராசிரியர் சன் ஜெ கருத்து தெரிவிக்கையில், Ò இதேபோன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று விமானங்களை அமெரிக்கா அனுப்பினால், சீனாவும் இதே பாணியில் பதிலடி கொடுக்க நேரிடும். சீனா வார்த்தையாலே மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்குமானால் அது இழிவானதாக அமைந்து விடும்Ó என கூறினார்.
கண்காணிக்கப்பட்டனவா?
சீன ராணுவ அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததை முழுமையாகக் கண்காணித்தோம் என்றது. ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அமெரிக்க போர் விமானங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என மறுத்துள்ளது.
இதற்கிடையே சீனாவில் பிரச்சினைக்குரிய பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சி என்ற பெயரில் பறந்திருப்பது நீண்ட காலம் திட்டமிட்டு நிறைவேற்றிய பயணம், இரண்டு போர் விமானங்கள் குவாமில் இருந்து புறப்பட்டு சென்று குவாமுக்கு திரும்பின என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் ஸ்டீவன் வார்ரன் தெரிவித்தார்.
ஜப்பானும் மீறியது
அமெரிக்க போர் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் ஜப்பானும் தனது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங் ஆகியவற்றின் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறக்கிறபோது, அது குறித்த தகவல்களை சீனாவுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என கூறி உள்ளது.
அதை அந்த விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. சீனாவின் உத்தரவை மீறியதால் பயணிகள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் சிவில் விமான தொழில் சங்கம் கூறி உள்ளது.
Page 5 of 81 • 1, 2, 3, 4, 5, 6 ... 43 ... 81
Similar topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 5 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|