புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 37 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 37 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 37 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 37 of 81 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 59 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 37 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:30 pm

இந்தோனேசியா சுலாவேசி தீவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட் டது. இதனால் வடக்கு சுலாவேசியில் உள்ள மனடோ, கொரன்டாலோ ஆகிய பகுதிகள் குலுங் கின.

இந்த நில நடுக்கம் சுலோவோசிக்கும் மலுகு தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் 30 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடபடவில்லை.




உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:31 pm

பாகிஸ்தான் போர் விமானம் குண்டு வீசியதில் 35 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய விமான குண்டு வீச்சு தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியாகினர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்தன. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் போர் விமானங்கள், தலீபான் முகாம்களை குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்து வருகிறது. அமெரிக்க ராணுவமும் அவ்வபோது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துகிறது. தற்போது வாஜிரிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு பாதுக்காப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அங்கு பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜூன் மாதம் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 950க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.




உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 6:11 pm


* 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியானார்கள். இந்த விமானம், எண்ணற்ற அதிவேக பொருட்கள் வந்து தாக்கியதால் விழுந்து விபத்துக்குள்ளானது என நெதர்லாந்து பாதுகாப்பு வாரியம் இப்போது அறிவித்துள்ளது.

* சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் கிளர்ச்சியில், கிளர்ச்சியாளர்களுடன் 74 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் இணைந்து சண்டையிடுவதாக ஆய்வு தகவல் ஒன்று கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளையும், 25 சதவீதத்தினர் மேற்கத்திய நாடுகளையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

* அமெரிக்காவில் நிதி மேலாளராக செயல்பட்டு வந்தவர் மேத்யூ மார்த்தோமா (வயது 40). இந்தியரான இவர் மீது உள் வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நியூயார்க் கோர்ட்டு, அவர் குற்றவாளி என கண்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

* கருங்கடல் பகுதி வான்வெளியில் கனடா போர் விமானம் பறந்தபோது, ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில் ரஷியா விமானம் பறந்ததாக புகார் எழுந்துள்ளது. இதை ரஷிய ராணுவத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

* சோமாலியாவில் தலைநகர் மொகாதிசுவில் அல் சபாப் தீவிரவாதிகள், ஆப்பிரிக்க அமைதிப்படை வாகனம், போலீஸ்–பாதுகாப்பு படை வாகனங்களை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் சிக்கி 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 6:29 pm

MAS பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏர்ஏசியா விருப்பம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 10 – மாஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக 6,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கசானா நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளதால், அவர்களில் பலரை ஏர்ஏசியா நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணியில் அமர்த்த முன்வந்துள்ளது.

இன்று ஃபில் அப் அண்ட் ஃபிளை ஃபிரி என்ற நிகழ்வின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஏர்ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி ஃபெர்னாண்டஸ், மாஸ் பணியாளர்களை தங்களது நிறுவனத்தை பணியில் அமர்த்த இருக்கும் தகவலை வெளியிட்டார்.

“200 பணியாளர்களில் இருந்து தற்போது 15,000 பணியாளர்கள் வரை தற்போது அதிகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள்” என்று டோனி தெரிவித்தார்.

ஏர்ஏசியா நிறுவனத்தில் சுமார் 50 சதவிகிதம் பேர் முன்னாள் மாஸ் பணியாளர்கள் தான் என்பதையும் டோனி அறிவித்தார்.

எனினும், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியாவில் இருந்து மாஸ் நிறுவனத்திற்கும் பல பணியாளர்கள் சென்றதாகவும், இது ஒரு ஆரோக்கியமான விசயம் தான் என்றும் டோனி தெரிவித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 6:37 pm

சிங்கப்பூரில் விபத்து தமிழ் வாலிபர் சாவு

சிங்கப்பூரில் வசித்து வந்தவர் கருப்பசாமி காளை முருகன் (வயது 24). தமிழ் வாலிபரான இவர் கடந்த சனிக்கிழமை, சாங்கி என்ற இடத்தில் மண் கையிருப்பு தளம் ஒன்றில் லாரிகளை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் லாரிகளை உள்ளேயும், வெளியேயும் அனுப்பிக்கொண்டிருந்தபோது ஒரு டிப்பர் லாரி அவரை இடித்து தள்ளியது. இதில் அவர் தலை துண்டானது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் மண்ணில் புதைந்தது.

இது தொடர்பான வழக்கில், டிப்பர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தின்போது, கருப்பசாமி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதனால் பின்னுக்கு வந்த லாரியை கவனிக்காமல் விபத்தில் சிக்கிக்கொண்டதாகவும் அங்கிருந்த டிரைவர்கள் கூறினர்.

ஆனால் அவர் லாரி டிரைவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தபோதுதான் விபத்தில் சிக்கிக்கொண்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 5:22 am

பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல்களுக்கு 44 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கார் குண்டு தாகுதல்கள் மற்றும் வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர்.

புதிய பாக்தாத் நகரில் உள்ள போக்குவரத்து போலீசாரின் சோதனைச்சாவடி ஒன்றின் மீது குண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோதச் செய்ததில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீசார் பலியாகினர்.

இதேபோல், தெற்கு பாக்தாத்தில் உள்ள புறக்காவல் நிலையம் மீது தற்கொலைப்படை நடத்திய கார் குண்டு தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர்.

வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல்களுக்கு 19 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மற்றொரு மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக, நேற்று ஒரே நாளில் பாக்தாத் நகரில் மட்டும் வன்முறை தாக்குதல்களுக்கு 44 பேர் பலியாகியும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:07 pm

* சிரியாவில் கோலன் ஹைட்ஸ் பகுதியில் பிஜி தீவை சேர்ந்த ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 45 பேரை அல்கொய்தா ஆதரவு நுஸ்ரா முன்னணி தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இப்போது அவர்களை தீவிரவாதிகள் விடுதலை செய்து விட்டதாக அல் ஜசீரா டெலிவிஷன் செய்தி வெளியிட்டுள்ளது.

* ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வில்லனாக நடித்த ரிச்சர்டு ஹீல், தனது 74 வயதில் கலிபோர்னியா மருத்துவமனை ஒன்றில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

* விண்ணில் இயங்கி வருகிற சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ரஷிய வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்ச், ஓலக் ஆர்டெம்யெவ், நாசா வீரர் ஸ்டீவன் ஸ்வான்சன் ஆகியோரை சுமந்து கொண்டு பூமிக்கு திரும்பிய சோயுஸ் விண்கலம், திட்டமிட்டபடி கஜகஸ்தானில் உள்ள ஜெஸ்கஸ்கானில் தரை இறங்கியது.

* பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தொடர்ந்து இந்திய–பாகிஸ்தான் இடையே நல்லுறவு மலர்வதற்கு எதிராகவும், அதன் தலைவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும் பேசி வருகின்றனர் என அமெரிக்க உளவு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பின் துணை இயக்குனர் நிக்கோலஸ் ரஸ்மூஸ்சன் குற்றம் சாட்டி உள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:42 pm

பாகிஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க முல்தான் நகருக்குள் வெள்ளம் புகும் அபாயம்

பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாப் மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், இப்போது வரலாற்று சிறப்பு மிக்க நகரமான முல்தான் நகர் மற்றும் அங்குள்ள பிரபல வழிபாட்டு தலங்களை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 264 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க முல்தான் நகரைப் பாதுகாக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், செனாப் நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியிருப்பதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நகருக்குள் வெள்ளம் வராமல் தடுப்பதற்காக, தடுப்பணையை வெடிவைத்து தகர்த்து வெள்ளத்தை திசைதிருப்பவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

முல்தான் பிராந்தியத்தில் ஏற்கனவே பல பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜாங், முல்தான் மற்றும் முசாபர்கர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:06 am

தீவிரவாதத்தை ஒழிக்க சவூதி அரேபிய அரசு ஐ.நா.விற்கு நிதி உதவி!

நியூயார்க், ஆகஸ்ட் 14 - உலக அளவில் பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. சபைக்கு சவூதி அரேபிய அரசு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.

உலக அளவில் பெறுகி வரும் ஆயுத போராட்டத்தால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்கவும் ஐ.நா.சபை அனைத்து நாடுகளுடன் சேர்ந்து போராடி வருகின்றது.

இதற்கு உதவும் விதமாக ஆளும் சவூதி அரேபிய அரசாங்கம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை அமெரிக்காவுக்கான சவூதி உயர்தூதர் அடல் பின் அஹமத் அல் ஜுபைர் நேற்று ஐ.நா.விடம் வழங்கினார். இது பற்றி அவர் கூறியதாவது:-

“பெருகி வரும் தீவிரவாதம் உலக நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் உலக அளவிலான தீவிரவாதத்தை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

சமீபத்தில் சவூதி அரேபிய அரசு ஈராக் தீவிரவாதத்தால் வாழ்விழந்த மக்களின் நிவாரண உதவிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:32 pm

வியட்நாம் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓட்டம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் போதை மருந்து பழக்கம் என்பது தீவிர சமூகக் குற்றமாகக் கருதப்படுகின்றது. ஆனால் அங்கு தற்சமயம் 1,40,000 பேர் முதல் 1,83,000 வரை இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கைது செய்யப்படும்போது அரசு இவர்களை அங்குள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கின்றது. மற்றும் சிலர் அவர்களின் குடும்பத்தினராலேயே அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வடக்கு வியட்நாமின் ஹை போங் நகரத்தில் செயல்பட்டு வரும் ஜியா மின் என்ற மறுவாழ்வு மையத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்டோர் தப்பியுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இவர்களில் 30 பேர் தாமாகவே இந்த மையத்திற்குத் திரும்பியுள்ளதாகவும் மற்றவர்களைக் காவல்துறையினர் தேடிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு தப்பி வந்தவர்களில் பலர் நகர்ப்பகுதியில் உள்ள வீடுகளைத் தாக்கியுள்ளனர் என்றும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்தத் தகவலை வெளியிட்ட செய்தித்தளம் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து கொண்டு தெருவில் நடந்து சென்ற பலரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நூற்றுக்கணக்கானோர் இந்த மையத்திலிருந்து தப்பித்தனர். அதன்பின் 2010 மே முதல் 2012 ஏப்ரல் வரையிலும் அங்கு இதுபோன்ற உடைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்பின் தற்போது நடந்துள்ளது இரண்டாவது பெரிய நிகழ்வாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மறுவாழ்வு மையங்களை வற்புறுத்தல் சிறிது கொண்ட தொழிலாளர் முகாம்கள் என்று மனித உரிமைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

இங்கிருப்பதற்கான காலம் இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு செலவிடப்படும் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கிருப்பவர்கள் சம்பளம் இல்லாமலும், குறைந்த சம்பளத்திற்கும் அதிக நேரம் வேலை வாங்கப்படுகின்றார்கள் என்றும், இந்த நிலை மாறவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இவர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்றும் உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இதனை மறுத்துள்ள அரசு நிர்வாகமோ தங்களின் மறுவாழ்வு மையங்களினாலேயே நாட்டில் போதை மருந்து உபயோகிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 37 of 81 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 59 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக