புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 36 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 36 of 81 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 58 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 36 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:10 am

10 ஆயிரம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரும் இந்திய அரசு

மத்திய அரசின் உணவுப் பொருள் பொது வினியோக முறை பெரும்பாலும் ரெயில் போக்குவரத்தை சார்ந்தே அமைந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை முன்பைப் போல் சரளமான முறையில் கொண்டு செல்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, எதிர்வரும் காலங்களில் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏறபடாத வகையில் இப்பகுதிகளுக்கு அரிசியை சப்ளை செய்ய உலகளாவிய டெண்டரை மத்திய அர்சுகு சொந்தமான ‘ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ கோரியுள்ளது.

முதல் கட்டமாக 10 ஆயிரம் டன் அரிசியை சப்ளை செய்வதற்கு டெண்டர் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

25 சதவீதம் நொய் கலந்த அரிசியை குறைந்தபட்சம் 5 ஆயிரம் டன் வரை சப்ளை செய்வதற்கான குறைந்தபட்ச விலையை வரும் 23-ம் தேதிக்குள் அறிவிக்குமாறு அந்த டெண்டரின் மூலம் கோரப்பட்டுள்ளது.

ரெயில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நிறைவடையும்வரை மணிப்பூர், மிஜோரம் போன்ற மாநிலங்களுக்கு சப்ளை செய்ய சுமார் ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய ‘ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 3:58 am

இந்தியாவுக்கு உதவ தயார்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், செப்.09 - ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக கூரியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானத்தில் சென்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பலத்த மழை, வெள்ளப் பெருக்கில் காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் இருபுறங்களிலும் உயிரிழந்த மக்களுக்கு, பாகிஸ்தான் மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் மக்களின் துயரை குறைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:11 pm

100-க்கும் மேற்பட்ட போகோ ஹரம் தீவிரவாதிகள் பலி: நைஜீரிய அரசு அறிவிப்பு

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினரிடமிருந்து பயிற்சியும், நிதியும் பெற்று நைஜீரியா நாட்டில் இயங்குபவர்கள் போகோ ஹரம் தீவிரவாதிகள். இவர்கள் ஷரியத் என்னும் இஸ்லாமிய சட்டத்தின் கீழான ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயுதம் ஏந்தி நைஜீரியாவில் போராடி வருகிறார்கள். சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் மற்றும் பெண்களை குறிவைத்து இவர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று, அண்டை நாடான கேமரூன் எல்லையில் போட்டோகால் என்ற இடத்தில் இந்த தீவிரவாதிகள் குண்டு வீச்சு நடத்தி அதன் மூலம் ஊடுருவ முயன்றனர். உடனே அவர்களுக்கு கேமரூன் ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.இதில் 100-க்கும் மேற்பட்ட போகோ ஹரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என நைஜீரிய அரசு அறிவித்தது. இது அந்த தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:12 pm

வெள்ளத்தில் சிக்கித்தவித்த பாகிஸ்தான் கோல்ப் அணியினரை மீட்டது இந்திய ராணுவம்

காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக 2,500 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதில், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சிக்கித்தவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் சார்க் நாடுகளுக்கான கோல்ப் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 28 பேர் கொண்ட கோல்ப் அணி ஒன்று ஸ்ரீநகருக்கு வந்திருந்தது.

இந்த அணியினர் பயிற்சிக்காக கோல்ப் மைதானத்துக்கு சென்றபோது வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். இதேபோல் நேபாள நாட்டு தூதர் ஒருவரும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கித்தவித்தார். இவர்கள் அனைவரையும் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டதாக மீட்பு பணிகளை கவனித்து வரும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.




உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:12 pm

மலேசியன் எம்.எச்.17 விமானம் உயர் ஆற்றல் கொண்ட பொருட்களால் தாக்கப்பட்டுள்ளது; ஆய்வாளர்கள் தகவல்

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த ஜுலை 17ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முதல் கட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது இதில், விமானத்தின் வெளிப்புறத்தில் உயர் ஆற்றல் சக்திகள் கொண்ட பொருட்கள் தாக்குதலாலேயே விமானம் தகர்க்கப்பட்டதாக விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நெதர்லாந்து அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் வெளிப்புறத்தில் ஏவுகணை மூலமே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.




உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:13 pm

சீன அதிபர் முதல் முறையாக இந்தியா வருகை

சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல் முறையாக அடுத்தவாரம் இந்தியா பயணம் மேற்கொள்கிறார். மேலும் இலங்கை,மாலத்தீவு, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் ,பயணம் செய்கிறார் தஜிகிஸ்தானில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் ஜி ஜின்பிங் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அங்கு நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் மாலத்தீவு செல்கிறார். தொடர்ந்து இலங்கை , இந்தியாவிற்கும் பயணம் மேற் கொள்கிறார். 19 ந்தேதி தனது பயணத்தை முடித்து கொள்கிறார். என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:13 pm

பாகிஸ்தான் அரசியல் நெருக்கடி: இம்ரான்கான் கட்சி கோரிக்கைகளில் இருந்து இறங்கிவர மறுப்பு; அரசு குற்றசாட்டு

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி பதவி ஏற்றார்.

அந்த தேர்தலில் நவாஸ் செரீப் மோசடி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியும் குற்றம் சாட்டின . இரண்டு கட்சிகளும் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த 27 நாட்களாக இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.இதனால் பாகிஸ்தானில் நெருக்கடிநிலை ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தில் இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடியை தீர்க்க அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு கேட்டு கொண்டன. இந்த பேச்சு வார்த்தைக்கு இம்ரான்கானும் மதத்தலைவர் தாஹிர் உல்காதிரியும் சம்மதம் தெரிவித்தனர்.

இதை இவ்விரு கட்சிகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தை குறித்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்திய பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தார் கூறும்போது இம்ரான்கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் ஒன்றை மட்டும் ஏற்றுகொள்ளவில்லை. பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மற்றும் ஏற்று கொள்ளவில்லை.என்று கூறினார்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது உள்ளிருப்பு போராட்டத்தை மாற்றி உள்ளனர்.

இம்ரான் கானின் ஆர்ப்பாட்டம் விமர்சனத்தை எதிர்கொள்ளும் அதே நேரம். நாட்டில் ஏற்பட்டு உள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும் சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் கான் தனது போராட்டத்தை 2 வாரம் தள்ளி வைத்து உள்ளார்.

பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியை தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது பாகிஸ்தான் பயணத்தை தள்ளி வைத்து உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 11:28 pm

பாகிஸ்தானில் மசூதி இடிந்து விழுந்து 12 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று மசூதி இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர்.

இரண்டடுக்கு கட்டிடமான அந்த மசூதிக்குள் சுமார் 50 பேர் இன்று பகல் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, மசூதியின் ‘மினாரா’ (கூம்பு வடிவ கோபுரம்) சரிந்து தளத்தின் மீது விழுந்தது.

மினாரா விழுந்த வேகத்தில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்துவரும் கன மழையால் ஊறிப்போய் இருந்த மசூதியின் தளம் மினாராவுடன் சேர்ந்து இடிந்து கீழே விழுந்தது. இதில் மசூதியின் உள்ளே தொழுதுக் கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பிரேதங்களை வெளியே எடுத்துள்ள மீட்புப் படையினர், காயமடைந்த 11 பேரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எஞ்சியுள்ளோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பாகிஸ்தானை தாக்கியுள்ள மழை வெள்ளம் லாகூர் நகரையும் பெருமளவில் பாதித்துள்ளதால், பழைமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள், தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிக்கு சென்று தங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:26 pm

பாகிஸ்தானில் மசூதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

பாகிஸ்தானில் மசூதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் நேற்று மாலை மசூதி ஒன்று இடிந்து விழுந்தது. மாலை 50க்கும் மேற்பட்டோர்கள் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டபோது திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 24 பேர் பலியாகினர். மசூதி இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனடியாக காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 7 பேரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்ததால் இன்னும் இரண்டு பேர் மசூதிக்கு அடியே சிக்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமடைந்தது. இதனால் அங்குள்ள

செனாப், ஜீலம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளது. வெள்ளத்திற்கு 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மழையின் போது மசூதியில் தண்ணீர் நின்றுள்ளது. இதனால் மசூதியின் சுவர்கள் பலவீனம் அடைந்து இடிந்து விழுந்துள்ளது. என்று மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பாழடைந்த கட்டிடங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 10, 2014 5:28 pm

உலகச் செய்திகள்!  - Page 36 103459460 உலகச் செய்திகள்!  - Page 36 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 36 of 81 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 58 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக