புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 34 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 34 of 81 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 57 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 34 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:38 am


நைஜீரியாவிலும் பரவுகிறது எபோலா

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆட்கொல்லி நோயாக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்று லைபீரியாவை அடுத்து தற்போது நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு புதிய சிகிச்சை மையங்கள் பல நிறுவப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் உலக சுகாதார மையத்தின் கணக்குப்படி இதுவரை இந்த தொற்றுக்கு 2,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1427 பேர் பலியாகிவிட்டனர். அதிகபட்சமாக லைபீரியாவில் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் எனுகு மாநிலத்தின் கிழக்கே 500 கிலோ மீட்டர்கள் வரை எபோலா பரவியுள்ளது. அங்கு 213 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கருதப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 16 பேருக்கு வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.



உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:39 am

பிரதமரின் காரிலேயே திருட்டு

ஏழை, பணக்காரர் என எந்தவித பாகுபாடும் பாராமல், அனைவரிடமும் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். எனினும் அரசியல்வாதிகள், மந்திரிகள் போன்ற முக்கிய புள்ளிகளிடம் அவர்கள் எச்சரிக்கையாகவே இருப்பர். ஆனால் பெல்ஜியத்தில், அந்த நாட்டு பிரதமரிடமே திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) ஒன்றுக்கு பிரதமர் எலியோ டி ரூபோ சென்றிருந்தார். அப்போது அவரது விலை உயர்ந்த கார், ஜிம்முக்கு வெளியே நின்று கொண்டிருந்தது. பிரதமரின் கார் டிரைவர், அருகில் உள்ள புத்தகக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த லேப்டாப், சிறிய பெட்டி, செல்போன் சார்ஜர், துணிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை எடுத்துச்சென்று விட்டனர்.

இது தொடர்பாக பிரசல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், பிரதமரிடமே கைவரிசை காட்டிய பலே ஆசாமிகளைப்பற்றித்தான் அந்த நாட்டு ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு வருகின்றன.



உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 24, 2014 10:08 am

உலகச் செய்திகள்!  - Page 34 1571444738 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 25, 2014 10:13 am

உலகச் செய்திகள்!  - Page 34 1571444738 நன்றி மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 5:35 pm

எங்களது கடல்பகுதியில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்: இலங்கை

இந்திய-இலங்கை கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக வருகிற 29-ந்தேதி டெல்லியில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பு நகரில் இலங்கை ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “மன்னார் வளைகுடாவில் இந்திய கடல் எல்லை பகுதியில் தரமான மீன்களும், இறால்களும் இல்லாமல் போய்விட்டது. ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்காக மதிப்பு மிக்க மீன்களும், இறால்களும் இலங்கை கடற்பகுதி பக்கத்தில்தான் காணப்படுகின்றன.

இந்திய கடல் பகுதியில் மீன்வளம் பெருகுவதற்கு எப்படியும் 3 ஆண்டுகள் ஆகும். எனவே, அதுவரை இந்திய மீனவர்களை தற்காலிகமாக இலங்கையின் கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இது குறித்து இலங்கை அரசின் மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், “இதுபோன்றதொரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. மேலும் இந்த விஷயத்தில் எங்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மன்னார் மீன்பிடிப்போர் சம்மேளனமும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதால், எங்களின் வாழ்வாதாரமே அடியோடு அழிந்துபோய்விட்டது என்று இந்த சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்டின் சோய்சா குற்றம்சாட்டினார்.

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதையும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளது.

எனினும் அண்மையில், இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 16 இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்ததை அடுத்து தாங்கள் கைது செய்த 94 இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்தது.

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:08 pm

சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்

சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று பிற்பகல் பறந்துகொண்டிருந்த இரண்டு இலகுரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் அதில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

மோதிக்கொண்ட பின்னர் இவற்றில் ஒரு விமானம் செயின்ட் காலன் பகுதியில் உள்ள வயல்வெளியில் இறங்கியது. அதில் பயணித்த மூன்று பேரும், விமானியும் இந்த விபத்தில் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு விமானம் அருகில் உள்ள சிட்டர்டோர்ப் ராணுவதளத்தில் தரையிறங்கியது. இதிலிருந்த இரண்டு பயணிகளும் கூட படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது. விமானங்களின் சேதங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை



உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:09 pm

நைஜிரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் வட கிழக்கு பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்தனர்

நைஜிரீயாவில் போகோஹரம் இஸ்லாமிய தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள சிறுமிகளையும் பெண்களையும் கடத்தி வந்தனர். வடகிழக்கு, பகுதியில் உள்ள நகரங்களும். கிராமங்களையும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அந்த பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.ஆனால் இது குறித்த தெளிவான அறிக்கை இல்லை. இதை நைஜீரியா ராணுவம் இது ஒரு வெற்று கோரிக்கை என நிராகரித்து உள்ளது

இது குறித்து போகோஹரம் தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் ஷேக்கு பேசிய வீடியோ ஒன்று வெளியிடபட்டு உள்ளது அதில் இந்த மாத தொடக்கத்தில் குவ்ஷா நகரை கைப்பற்றிய தீவிரவாதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கடைசி மக்கள் தொகை கணக்குப்படி குவ்ஷா நகரில் 2,65,000 வீடுகள் உள்ளன . இந்த பெரிய நகரம் தற்போது கோகோஹரம் தீவிரவாதிகள் கைவசம் சென்று உள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:10 pm

சிரியா விமானதளத்தை கைப்பற்றினர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்; 500க்கும் மேற்பட்டோர் சாவு

சிரியா ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். விமானம் தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக நடந்த சண்டையில் இரதரப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் அமெரிக்க பத்திரிகை நிருபர் தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஈராக்கிலும் சரி, வேறு எங்கும் சரி, நம்மவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறார்கள். என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவிலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் சிரியா ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று நடைபெற்ற கடும் சண்டையின் இறுதியில் தீவிரவாதிகள் விமானதளத்தை கைப்பற்றிவிட்டனர்.

விமான தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து நேற்று வரையில் நடைபெற்ற சண்டையில் சுமார் 346 தீவிரவாதிகள் மற்றும் 170க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து தாப்கா விமானத் தளத்தை கைப்பற்றுவது தொடர்பான சண்டையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத் தளம் மட்டுமே அப்பகுதியில் ராணுவம் பிடியில் இருந்தது. அதனையும் தீவிரவாதிகள் தற்போது தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

தீவிரவாதிகள் நிலையாக இருக்கும் ராக்கா சிட்டி அருகே விமானதளம் கைப்பற்றப்பட்ட வெற்றி கொண்டாடப்பட்டுள்ளது. பல்வேறு மசூதிகளில் விமானதளம் கைப்பற்றப்பட்ட செய்திகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா ராணுவ வீரர்களின் தலைகளையும் தீவிரவாதிகள் காண்பித்துள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக சண்டை நடைபெற்றபோது சிரியா ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும், ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சிரியா ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பின்வாங்கிய சிரியா ராணுவ வீரர்கள் 150 பேரை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இப்பகுதியில் கடந்த ஒரு வாரங்களில் பல்வேறு ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் அங்கியிருந்த ஆயுதங்களை கொண்டு மேலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:17 pm

ஹமாஸ் தளங்களில் இருந்து காஸா மக்கள் வெளியேற இஸ்ரேல் பிரதமர் வேண்டுகோள்

எகிப்தில் நடந்து வந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இஸ்ரேல்-காஸாமுனை இடையே மூர்க்கத்தனமாக சண்டை நடந்து வருகிறது. காஸாவில் 13 மாடி மக்கள் குடியிருப்பு ஒன்றை இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சு நடத்தி தகர்த்தன.. இது ஹமாஸ் திவீரவாதிகளின் கட்டளை மையமாக செயல்பட்டு வந்தது.இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பாலஸ்தீனிய மக்கள் தீவிரவாதிகளின் இடங்களை விட்டு வெளியேற வேண்டும் விரைவில் அங்கு தாக்குதல்கள் நடத்தபட்டும் எனஎச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பயங்கவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஹமாஸ் தீவிரவாதிகளின் தளங்களில் இருந்து வெளியேற காஸா மக்களை கேட்டு கொள்கிறேன்.அவர்களின் இடங்கள் ஒவ்வொன்றும் எங்கள் இலக்குகள் ஆகும் என மந்திரி சபை கூட்டத்தில் கேட்டு கொண்டு உள்ளார்.

இது குறித்து ஹமாசின் செய்தி தொடர்பாளர் அபு ஜூஹ்ரி கூறும் போது இஸ்ரேலிய பிரதமரின் இந்த எச்சரிக்கை அவர்கள் காஸா மக்களுக்கு எதிராக போர்குற்றங்களில் ஈடுபடுவதற்கு ஒரு உதாரணமாகும் என்று கூறினார்.




உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:01 pm

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது: அமெரிக்கா

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் கிர்பி சுட்டிக்காட்டினார்.

இத்தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதியை இழந்து தவிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். நீண்ட காலமாக தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த கோடை காலம் முதல்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் கிர்பி தெரிவித்தார்.

பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதையொட்டி பாகிஸ்தானுடன் தாங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளதாகவும் கிர்பி கூறினார்.

தங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தற்போது சமூக உறவு நிலவுவதாகவும் கிர்பி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 34 of 81 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 57 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக