ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 34 of 81 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 57 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 34 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sun Aug 24, 2014 5:38 am


நைஜீரியாவிலும் பரவுகிறது எபோலா

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆட்கொல்லி நோயாக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்று லைபீரியாவை அடுத்து தற்போது நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு புதிய சிகிச்சை மையங்கள் பல நிறுவப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் உலக சுகாதார மையத்தின் கணக்குப்படி இதுவரை இந்த தொற்றுக்கு 2,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1427 பேர் பலியாகிவிட்டனர். அதிகபட்சமாக லைபீரியாவில் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் எனுகு மாநிலத்தின் கிழக்கே 500 கிலோ மீட்டர்கள் வரை எபோலா பரவியுள்ளது. அங்கு 213 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கருதப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 16 பேருக்கு வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sun Aug 24, 2014 5:39 am

பிரதமரின் காரிலேயே திருட்டு

ஏழை, பணக்காரர் என எந்தவித பாகுபாடும் பாராமல், அனைவரிடமும் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். எனினும் அரசியல்வாதிகள், மந்திரிகள் போன்ற முக்கிய புள்ளிகளிடம் அவர்கள் எச்சரிக்கையாகவே இருப்பர். ஆனால் பெல்ஜியத்தில், அந்த நாட்டு பிரதமரிடமே திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) ஒன்றுக்கு பிரதமர் எலியோ டி ரூபோ சென்றிருந்தார். அப்போது அவரது விலை உயர்ந்த கார், ஜிம்முக்கு வெளியே நின்று கொண்டிருந்தது. பிரதமரின் கார் டிரைவர், அருகில் உள்ள புத்தகக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த லேப்டாப், சிறிய பெட்டி, செல்போன் சார்ஜர், துணிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை எடுத்துச்சென்று விட்டனர்.

இது தொடர்பாக பிரசல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், பிரதமரிடமே கைவரிசை காட்டிய பலே ஆசாமிகளைப்பற்றித்தான் அந்த நாட்டு ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு வருகின்றன.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by jesifer Sun Aug 24, 2014 10:08 am

உலகச் செய்திகள்!  - Page 34 1571444738 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Dr.S.Soundarapandian Mon Aug 25, 2014 10:13 am

உலகச் செய்திகள்!  - Page 34 1571444738 நன்றி மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Aug 25, 2014 5:35 pm

எங்களது கடல்பகுதியில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்: இலங்கை

இந்திய-இலங்கை கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக வருகிற 29-ந்தேதி டெல்லியில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பு நகரில் இலங்கை ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “மன்னார் வளைகுடாவில் இந்திய கடல் எல்லை பகுதியில் தரமான மீன்களும், இறால்களும் இல்லாமல் போய்விட்டது. ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்காக மதிப்பு மிக்க மீன்களும், இறால்களும் இலங்கை கடற்பகுதி பக்கத்தில்தான் காணப்படுகின்றன.

இந்திய கடல் பகுதியில் மீன்வளம் பெருகுவதற்கு எப்படியும் 3 ஆண்டுகள் ஆகும். எனவே, அதுவரை இந்திய மீனவர்களை தற்காலிகமாக இலங்கையின் கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இது குறித்து இலங்கை அரசின் மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், “இதுபோன்றதொரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. மேலும் இந்த விஷயத்தில் எங்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மன்னார் மீன்பிடிப்போர் சம்மேளனமும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதால், எங்களின் வாழ்வாதாரமே அடியோடு அழிந்துபோய்விட்டது என்று இந்த சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்டின் சோய்சா குற்றம்சாட்டினார்.

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதையும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளது.

எனினும் அண்மையில், இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 16 இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்ததை அடுத்து தாங்கள் கைது செய்த 94 இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்தது.

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Aug 25, 2014 11:08 pm

சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்

சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று பிற்பகல் பறந்துகொண்டிருந்த இரண்டு இலகுரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் அதில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

மோதிக்கொண்ட பின்னர் இவற்றில் ஒரு விமானம் செயின்ட் காலன் பகுதியில் உள்ள வயல்வெளியில் இறங்கியது. அதில் பயணித்த மூன்று பேரும், விமானியும் இந்த விபத்தில் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு விமானம் அருகில் உள்ள சிட்டர்டோர்ப் ராணுவதளத்தில் தரையிறங்கியது. இதிலிருந்த இரண்டு பயணிகளும் கூட படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது. விமானங்களின் சேதங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Aug 25, 2014 11:09 pm

நைஜிரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் வட கிழக்கு பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்தனர்

நைஜிரீயாவில் போகோஹரம் இஸ்லாமிய தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள சிறுமிகளையும் பெண்களையும் கடத்தி வந்தனர். வடகிழக்கு, பகுதியில் உள்ள நகரங்களும். கிராமங்களையும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அந்த பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.ஆனால் இது குறித்த தெளிவான அறிக்கை இல்லை. இதை நைஜீரியா ராணுவம் இது ஒரு வெற்று கோரிக்கை என நிராகரித்து உள்ளது

இது குறித்து போகோஹரம் தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் ஷேக்கு பேசிய வீடியோ ஒன்று வெளியிடபட்டு உள்ளது அதில் இந்த மாத தொடக்கத்தில் குவ்ஷா நகரை கைப்பற்றிய தீவிரவாதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கடைசி மக்கள் தொகை கணக்குப்படி குவ்ஷா நகரில் 2,65,000 வீடுகள் உள்ளன . இந்த பெரிய நகரம் தற்போது கோகோஹரம் தீவிரவாதிகள் கைவசம் சென்று உள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Aug 25, 2014 11:10 pm

சிரியா விமானதளத்தை கைப்பற்றினர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்; 500க்கும் மேற்பட்டோர் சாவு

சிரியா ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். விமானம் தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக நடந்த சண்டையில் இரதரப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் அமெரிக்க பத்திரிகை நிருபர் தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஈராக்கிலும் சரி, வேறு எங்கும் சரி, நம்மவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறார்கள். என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவிலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் சிரியா ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று நடைபெற்ற கடும் சண்டையின் இறுதியில் தீவிரவாதிகள் விமானதளத்தை கைப்பற்றிவிட்டனர்.

விமான தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து நேற்று வரையில் நடைபெற்ற சண்டையில் சுமார் 346 தீவிரவாதிகள் மற்றும் 170க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து தாப்கா விமானத் தளத்தை கைப்பற்றுவது தொடர்பான சண்டையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத் தளம் மட்டுமே அப்பகுதியில் ராணுவம் பிடியில் இருந்தது. அதனையும் தீவிரவாதிகள் தற்போது தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

தீவிரவாதிகள் நிலையாக இருக்கும் ராக்கா சிட்டி அருகே விமானதளம் கைப்பற்றப்பட்ட வெற்றி கொண்டாடப்பட்டுள்ளது. பல்வேறு மசூதிகளில் விமானதளம் கைப்பற்றப்பட்ட செய்திகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா ராணுவ வீரர்களின் தலைகளையும் தீவிரவாதிகள் காண்பித்துள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக சண்டை நடைபெற்றபோது சிரியா ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும், ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சிரியா ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பின்வாங்கிய சிரியா ராணுவ வீரர்கள் 150 பேரை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இப்பகுதியில் கடந்த ஒரு வாரங்களில் பல்வேறு ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் அங்கியிருந்த ஆயுதங்களை கொண்டு மேலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Aug 25, 2014 11:17 pm

ஹமாஸ் தளங்களில் இருந்து காஸா மக்கள் வெளியேற இஸ்ரேல் பிரதமர் வேண்டுகோள்

எகிப்தில் நடந்து வந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இஸ்ரேல்-காஸாமுனை இடையே மூர்க்கத்தனமாக சண்டை நடந்து வருகிறது. காஸாவில் 13 மாடி மக்கள் குடியிருப்பு ஒன்றை இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சு நடத்தி தகர்த்தன.. இது ஹமாஸ் திவீரவாதிகளின் கட்டளை மையமாக செயல்பட்டு வந்தது.இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பாலஸ்தீனிய மக்கள் தீவிரவாதிகளின் இடங்களை விட்டு வெளியேற வேண்டும் விரைவில் அங்கு தாக்குதல்கள் நடத்தபட்டும் எனஎச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பயங்கவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஹமாஸ் தீவிரவாதிகளின் தளங்களில் இருந்து வெளியேற காஸா மக்களை கேட்டு கொள்கிறேன்.அவர்களின் இடங்கள் ஒவ்வொன்றும் எங்கள் இலக்குகள் ஆகும் என மந்திரி சபை கூட்டத்தில் கேட்டு கொண்டு உள்ளார்.

இது குறித்து ஹமாசின் செய்தி தொடர்பாளர் அபு ஜூஹ்ரி கூறும் போது இஸ்ரேலிய பிரதமரின் இந்த எச்சரிக்கை அவர்கள் காஸா மக்களுக்கு எதிராக போர்குற்றங்களில் ஈடுபடுவதற்கு ஒரு உதாரணமாகும் என்று கூறினார்.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Aug 27, 2014 10:01 pm

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது: அமெரிக்கா

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் கிர்பி சுட்டிக்காட்டினார்.

இத்தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதியை இழந்து தவிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். நீண்ட காலமாக தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த கோடை காலம் முதல்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் கிர்பி தெரிவித்தார்.

பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதையொட்டி பாகிஸ்தானுடன் தாங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளதாகவும் கிர்பி கூறினார்.

தங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தற்போது சமூக உறவு நிலவுவதாகவும் கிர்பி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகச் செய்திகள்!  - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 34 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 81 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 57 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum