புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 32 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 32 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 32 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 32 of 81 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 56 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 32 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:53 pm

உள்நாட்டுப்போர் நடந்துவரும் சிரியா மீது அமெரிக்க விமானங்கள் பறக்க தடை

உள்நாட்டுப்போர் நடந்துவரும் சிரியா மீது அமெரிக்க விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படையினருக்கும், அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 4–வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த சண்டைகள் தீவிரமான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், சிரியாவின் மீது அமெரிக்காவின் அனைத்து விமானங்களும் பறப்பதற்கு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தடை விதித்தது. இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘‘சிரியாவில் இரு தரப்பினருக்கும் இடையேயான ஆயுதம் தாங்கிய மோதல்கள், பாதுகாப்பு சூழலை கெடுப்பதாக அமைந்துள்ளது. பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அது அபாயம் விளைவிப்பதாக அமைந்திருக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப்போரில் இதுவரை சுமார் 1¾ லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:53 pm

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மறைவிடங்கள் மீது ராணுவம் சரமாரியாக குண்டு வீச்சு; 48 தீவிரவாதிகள்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மறைவிடங்கள் மீது ராணுவம் சரமாரியாக குண்டு வீசியதில் 48 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் மாகாணம், தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக பாகிஸ்தானில் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. பேச்சுவார்த்தை தொடர்பான முடிவு வெளியாகாத நிலையில் கராச்சி விமான நிலையத்தில் தலீபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் என 37 பேர் பலியாகினார். இதனையடுத்து மீண்டும் அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தானில் தொடங்கிவிட்டது. தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா, பாகிஸ்தான் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் வடக்கு வாஜிரிஸ்தான் மற்றும் கைபர் மாகாணங்களில் தீவிரவாதிகள் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 48 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் 7 தீவிரவாதிகள் பதுங்கும் இடம், 9 வாகனங்கள் மற்றும் பல மோட்டார் சைக்கிள்கள் மீது குண்டுகளை வீசியுள்ளது. தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் மாகாணத்தில் திராக் பள்ளத்தாக்கில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு வாஜிரிஸ்தானில் தீவிரவாதிகள் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 4:40 am

காஸாவில் வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்; போர் நிறுத்தத்தை தீவிரவாதிகள் மீறிவிட்டனர் என குற்றச்சாட்டு

காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தத்தை மீறி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த மாதம் 8–ந் தேதி தொடங்கிய கடும் சண்டையில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் சண்டை காரணமாக காஸா பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தும் இருக்கிறார்கள். இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சி, எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இவ்விரு தரப்புக்கும் இடையே அமல்படுத்தப்பட்டிருந்த 5 நாள் சண்டை நிறுத்தம், இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சண்டை நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலைமை நீடித்தது. ‘‘இந்த 24 மணி நேர சண்டை நிறுத்தம், இரு தரப்பினரும் தங்கள் பேச்சுவார்த்தையை நிறைவு செய்வதற்கு உரிய அவகாசம் வழங்கும்’’ என்று பாலஸ்தீன அதிகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தரப்பில், ‘‘எகிப்து வேண்டுகோளை ஏற்று, பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறுவதற்கு ஏதுவாக மேலும் 24 மணி நேரம் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது’’ என கூறப்பட்டது.

இந்த நிலையில் காஸாவின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. காஸாவில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது என்று அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் போர் நிறுத்தத்தை மீறிவிட்டனர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. இஸ்ரேல் நாட்டின் தெற்குபகுதியில் உள்ள பெர்ஷீபா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் வீசியுள்ளனர் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 4:43 am

இந்தியா–பாக். மோதல் வலுக்கிறது மேலும் 2 பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் தூதரை மேலும் 2 காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்தித்து பேசினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை ரத்து

இந்தியாவின் எதிர்ப்பை மீறி, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான அவாமி நடவடிக்கை கமிட்டி தலைவர் மீர்வாய்ஸ் உமர் பாரூக், ஷபீர் ஷா உள்ளிட்டோருடன் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த இந்தியா, 25–ந் தேதி நடைபெற இருந்த இந்தியா–பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

மேலும் 2 பேர் சந்திப்பு

இந்நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நேற்று மேலும் 2 பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சையது அலி ஷா ஜிலானி, ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோர்தான் அந்த பிரிவினைவாத தலைவர்கள்.

முற்றுகை

இதற்கிடையே, இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அவர்களை கலைக்க போலீசார் முயன்றபோது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து கூட்டிச்சென்றனர்.

பாகிஸ்தான் கருத்து

ஆனால், பாகிஸ்தான் தூதரை திரும்பப்பெற மாட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் தெரிவித்தார்.

பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்து பேசியது, இருநாட்டு ராஜ்ய உறவுகளை மீறிய செயல் அல்ல என்றும், இதற்கு முன்பும் இத்தகைய சந்திப்புகள் நடந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

பிரிவினைவாதிகள்

அதே சமயத்தில், பாகிஸ்தான் தூதருடனான சந்திப்பை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் நியாயப்படுத்தி உள்ளனர். ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கூறியதாவது:–

இதுபோன்ற சந்திப்புகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. அப்படியானால், முன்பு இருந்த பிரதமர்கள் செய்தது எல்லாம் தவறு, இப்போதைய பிரதமர் செய்வதுதான் சரி என்று அர்த்தமா?

இவ்வாறு அவர் கூறினார்.

சையது அலி ஷா ஜிலானி கூறுகையில், ‘காஷ்மீரை உள்நாட்டு பிரச்சினை என்று இந்தியா கூறுவது, உண்மைக்கு புறம்பானது. அது சர்வதேச பிரச்சினை’ என்றார்.

மீர்வாய்ஸ் உமர் பாரூக் கூறுகையில், ‘நிதி உதவி மூலம் தீர்ப்பதற்கு, காஷ்மீர் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை அல்ல. இது அரசியல் பிரச்சினை என்பதால், பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும். எனவே, மோடி அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 4:43 am

உள்விவகாரத்தில் தலையிடவில்லை-நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வற்புறுத்தி இருந்தார்.

இதுபற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான், இந்தியாவின் அடிமை அல்ல. பாகிஸ்தான், இறையாண்மை உடைய நாடு. காஷ்மீர் பிரச்சினையில் சட்டப்பூர்வ பங்குதாரர்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தூதர் தலையிடவில்லை. ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது, இது முதல்முறை அல்ல. பல்லாண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும், காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அது, சர்ச்சைக்குரிய பகுதி. அதுபற்றிய ஐ.நா. தீர்மானங்கள் நிறைய உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 4:46 am

பாகிஸ்தானில் போராட்டம் தீவிரம்: தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகிறார் இம்ரான்கான்

தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான இம்ரான்கான் மற்றும் பழமைவாத தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் போராடி வருகிறார்கள்.

அந்நாட்டின் லாகூர் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக வந்த இம்ரான்கான் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார். அத்துடன், நவாஸ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தையும் தொடங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

நிலைமை மோசமடைந்ததையடுத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்த அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 2 குழுக்களை பிரதமர் நவாஸ் அமைத்துள்ளார். இருப்பினும் அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளில் உள்ள தங்கள் உறுப்பினர்களை வாபஸ் பெறுவதற்கு இம்ரான்கான் அறிவித்தார்.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் மாளிகை இருக்கும் பகுதிக்குள் நுழைய தடைவிதித்துள்ளதை மீறி அங்கு நுழையப்போவதாக இம்ரான்கான் கூறியுள்ளார். அவரது அறிவிப்புக்கு பின் அக்கட்சி தொண்டர்களும் தடுப்புகளை தகர்த்து முன்னேறுவதற்கு ஏதுவாக ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். எனினும் தடை செய்யப்பட்ட பகுதியை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துவருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 4:47 am

எபோலா நோய்த்தொற்று அச்சம்: கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்பட்ட யு.ஏ.ஈ. விமானம்

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவர் தனக்கிருந்த புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக ஐக்கிய அரபுக் குடியரசு விமானம் மூலம் இந்தியா வந்துகொண்டிருந்தார். ஆனால் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அவர் தனது தொடர் விமானத்திற்காக காத்திருந்தபோது உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்து இறந்துள்ளார். மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்க முயற்சி செய்தபோது அவரிடம் எபோலா வைரஸ் நோய்த்தொற்றுக்கான சாத்தியக்கூறு இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் கிருமிநாசினிகளால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது என்று நேற்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:23 pm

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஹமாஸ் தளபதியின் மனைவி-மகள் பலி

3 இஸ்ரேலிய மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்தது.

இதற்கிடையில், இரு தரப்பினருக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் எகிப்து நாட்டின் ஆலோசனைக்கு இணங்க 72 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் சம்மதித்தனர்.

இந்த போர் நிறுத்தத்துக்கு இடையில் இரு தரப்பினரையும் கெய்ரோவுக்கு வரவழைத்து நிரந்தர சமாதானத்தை உண்டாக்கும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

(உள்ளூர் நேரப்படி) கடந்த 14-ம் தேதி நள்ளிரவோடு போர் நிறுத்த தற்காலிக ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வசதியாக மேலும் 120 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்கும்படி எகிப்து அரசு கேட்டுக் கொண்டது.

அதற்கிணங்க, 120 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர்.

சமாதான பேச்சுவார்த்தையில் சாதகமான போக்கு தென்பட்டதால் இரு தரப்பினரும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டித்துள்ளதாக நேற்று கெய்ரோவில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மீண்டும் ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் அரசு கெய்ரோவில் நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளது.

காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது 10 ராக்கெட்கள் வீசப்பட்டதாகவும், அதனையடுத்து, காஸா மீது நேற்று இஸ்ரேல் விமானப்படைகள் இரு முறை நடத்திய ஆவேச தாக்குதலில் 10 பேர் பலியானதான இன்று காலை செய்திகள் வெளியாகின.

அந்த தாக்குதலில் ஹமாஸ் ராணுவத்தின் தளபதி மொஹம்மட் டெய்ஃப் என்பவரின் மனைவியும் மகளும் பலியானதாக கெய்ரோவில் இன்று பேட்டியளித்த மவுசா அபு மர்சவ்க் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 429 பேர் அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்று ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது.

[note]எங்கள் பக்கத்து நாடு எந்த நாளும் எல்லைப் பகுதியில் சுட்டுக் கொண்டுதான் உள்ளான், ஆனால் எங்கள் நாட்டுத் தலைவர்களுக்குத்தான் நெஞ்சில் வீரம் வரமறுக்கிறது! [/note]



உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 10:44 pm

ஈராக்கில் மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 68 பேர் பலியானார்கள்.

அச்சுறுத்தல்

ஈராக்கில், சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கி, அரசுப்படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். அவர்கள் பல நகரங்களை கைப்பற்றி, பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர்.

தலைநகர் பாக்தாத்துக்கு அருகே தியாலா மாகாணத்தில் உள்ள சன்னி பழங்குடியின முஸ்லிம்களை, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுடன் சேருமாறு வற்புறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், அவர்கள் மீது தீவிரவாதிகள் ஆத்திரம் அடைந்தனர்.

மசூதியில் தாக்குதல்

இந்நிலையில், தியாலா மாகாணத்தின இமாம் வைஸ் கிராமத்தில் உள்ள சன்னி மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மசூதிக்குள் நுழைந்தான்.

அவன் திடீரென அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். அந்த களேபரத்தை பயன்படுத்திக் கொண்டு, மற்ற தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைந்தனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த சன்னி முஸ்லிம்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

68 பேர் பலி

தகவல் அறிந்து பாதுகாப்பு படையினரும், ஷியா பிரிவு போராளிகளும் அங்கு வந்தனர். ஆனால், தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததால் அவர்களில் 4 பேர் பலியானார்கள். 13 பேர் காயம் அடைந்தனர். மொத்தத்தில், இந்த தாக்குதலில் 68 பேர் பலியானார்கள். 50–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதல் காரணமாக, பல சமூகத்தினரும் அங்கம் வகிக்கும் அரசு அமைக்கும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 10:45 pm

இஸ்ரேல் உளவாளிகளாக செயல்பட்ட 18 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை

இஸ்ரேல் உளவாளிகளாக செயல்பட்ட 18 பாலஸ்தீனர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

காஸா முனையில் இருந்து கொண்டு, இஸ்ரேலுடன் சதி செய்து, உளவாளிகளாக செயல்பட்டு வந்ததாக 7 பாலஸ்தீனர்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மத்திய காஸா சதுக்கத்தில், மசூதி ஒன்றில் முஸ்லிம்கள் தொழுகை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, அவர்கள் முன்னிலையில், அந்த உளவாளிகளை தலைகளை துணியால் மூடி மறைத்து, கைகளை கட்டி, தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதேபோன்று, காஸா பகுதியில் ஒரு போலீஸ் நிலையத்தில் வைத்து 11 பாலஸ்தீனர்களை அவர்கள் இஸ்ரேல் உளவாளிகளாக செயல்பட்டு வந்ததாகக் கருதி, ஹமாஸ் இயக்கத்தினர் சுட்டுக்கொலை செய்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒரே நாளில் 18 உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, காஸாமுனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஸா நகரில் ஹமாஸ் தீவிரவாத இயக்க தலைவர்கள் வீடுகளின் மீது இஸ்ரேல் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து உளவாளிகளாக செயல்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 2,087 பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹமாஸ் இயக்கத்தினரும், இஸ்ரேல் ராணுவமும் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.




உலகச் செய்திகள்!  - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 32 of 81 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 56 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக