Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 29 of 81
Page 29 of 81 • 1 ... 16 ... 28, 29, 30 ... 55 ... 81
உலகச் செய்திகள்!
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகச் செய்திகள்!
போர் நிறுத்தத்துக்கு இடையிலும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: பலி 1066 ஆக உயர்வு
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கடந்த 21 நாட்களாக தீவிரமாக சண்டையிட்டு வரும் இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் கடந்த 26-ம் தேதி 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இடிபாடுகளுக்குள் பல பிணங்கள் சிக்கியிருப்பதாகவும் அவற்றை அகற்ற உதவிடும் வகையில் போர் நிறுத்தத்தை மேலும் சில மணி நேரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து, இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் முன்னர் அறிவித்தது.
பின்னர், நேற்று அதிகாலை ஒளிபரப்பான இஸ்ரேல் அரசின் தொலைக்காட்சி செய்தியின்படி மனிதநேய அடிப்படையில் ஞாயிறு இரவு வரை மேலும் 24 மணி நேரத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.
பின்னர், காஸாவில் வாழும் மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வழி வகுக்கும் வகையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலை கேட்டுக் கொண்டனர்.
இதனை இஸ்ரேலும் ஏற்றுக் கொண்ட நிலையில், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கிகளும், காலாட்படையினரும் வெளியேறும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 5 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இவற்றில் 4 ராக்கெட்களை இஸ்ரேல் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. ஒரு ராக்கெட் மட்டும் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் ஒரு வீடு இடிந்து தரை மட்டமாகியது.
இதனையடுத்து, காஸா பகுதி மீதான வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடர்ந்து நடத்துமாறு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
போர் நிறுத்ததை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டு அந்த அறிவிப்பை மீறிய வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்தும் தாக்குதலில் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ..? அதை செய்தே தீருவோம்’ என்று பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து மீண்டும் துவங்கிய இரு தரப்பு தாக்குதலின் விளைவாக பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 1066 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ராணுவ வீரர் சார்ஜெண்ட் பராக் ரெஃபாயில் டெகோர்க்கர்(27) உள்பட 46 பேர் பலியாகியுள்ளனர். இரு தரப்பிலும் சுமார் 6 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கடந்த 21 நாட்களாக தீவிரமாக சண்டையிட்டு வரும் இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் கடந்த 26-ம் தேதி 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இடிபாடுகளுக்குள் பல பிணங்கள் சிக்கியிருப்பதாகவும் அவற்றை அகற்ற உதவிடும் வகையில் போர் நிறுத்தத்தை மேலும் சில மணி நேரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து, இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் முன்னர் அறிவித்தது.
பின்னர், நேற்று அதிகாலை ஒளிபரப்பான இஸ்ரேல் அரசின் தொலைக்காட்சி செய்தியின்படி மனிதநேய அடிப்படையில் ஞாயிறு இரவு வரை மேலும் 24 மணி நேரத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.
பின்னர், காஸாவில் வாழும் மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வழி வகுக்கும் வகையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலை கேட்டுக் கொண்டனர்.
இதனை இஸ்ரேலும் ஏற்றுக் கொண்ட நிலையில், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கிகளும், காலாட்படையினரும் வெளியேறும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 5 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இவற்றில் 4 ராக்கெட்களை இஸ்ரேல் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. ஒரு ராக்கெட் மட்டும் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் ஒரு வீடு இடிந்து தரை மட்டமாகியது.
இதனையடுத்து, காஸா பகுதி மீதான வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடர்ந்து நடத்துமாறு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
போர் நிறுத்ததை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டு அந்த அறிவிப்பை மீறிய வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்தும் தாக்குதலில் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ..? அதை செய்தே தீருவோம்’ என்று பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து மீண்டும் துவங்கிய இரு தரப்பு தாக்குதலின் விளைவாக பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 1066 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ராணுவ வீரர் சார்ஜெண்ட் பராக் ரெஃபாயில் டெகோர்க்கர்(27) உள்பட 46 பேர் பலியாகியுள்ளனர். இரு தரப்பிலும் சுமார் 6 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
ஐ.நா. வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் ‘திடீர்’ சம்மதம்
இஸ்ரேல்-காஸா முனையை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நேற்று முன்தினம் 12 மணி நேர போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையிலான இந்த போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிக்க ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. இதை இஸ்ரேல் ஏற்றது. ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகள் முதலில் நிராகரித்தனர். பின்னர் மனம் மாறி அவர்களும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.
இது தொடர்பாக ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி விடுத்துள்ள அறிக்கையில், “ரம்ஜான் நோன்பு நிறைவுக்கான ஏற்பாடுகளை செய்துகொள்வதற்காகவும், ஐ.நா. சபையின் மத்தியஸ்தத்துக்கு பதில் அளிக்கும் விதத்திலும், பாலஸ்தீன மக்களின் தற்போதைய வாழும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டித்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-காஸா முனையை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நேற்று முன்தினம் 12 மணி நேர போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையிலான இந்த போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிக்க ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. இதை இஸ்ரேல் ஏற்றது. ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகள் முதலில் நிராகரித்தனர். பின்னர் மனம் மாறி அவர்களும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.
இது தொடர்பாக ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி விடுத்துள்ள அறிக்கையில், “ரம்ஜான் நோன்பு நிறைவுக்கான ஏற்பாடுகளை செய்துகொள்வதற்காகவும், ஐ.நா. சபையின் மத்தியஸ்தத்துக்கு பதில் அளிக்கும் விதத்திலும், பாலஸ்தீன மக்களின் தற்போதைய வாழும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டித்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
.
hmm
#IndiaWithIsrael
நாமும் ஆதரவளிப்போம் ..தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில்
hmm
#IndiaWithIsrael
நாமும் ஆதரவளிப்போம் ..தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: உலகச் செய்திகள்!
ஈராக் எண்ணெய் கிணறுகளை தீவிரவாதிகள் கைப்பற்றினர்
அர்பில்: ஈராக்கின் வடக்கே அமைந்துள்ள 2 எண்ணெய் கிணறுகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று கைப்பற்றினர்கள். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் குர்தீஷ் அரசு ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.ஈராக்கில் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக சன்னி பிரிவு ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். திக்ரித், மொசூல் உட்பட பல்வேறு நகரங்களையும் கைப்பற்றினர்.அங்கு அரசு படையினருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.இத்தாக்குதலில் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர்.இந்நிலையில், ஈராக்கின் வடக்கே குர்தீஷ் இனத்தவர் ஆளும் பகுதிகளையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் ஜிகாதி பிரிவு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் குர்தீஷ் இனத்தவரின் பெஷ்மெர்கா பிரிவினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.சிரியா நாட்டின் எல்லைக்கு அருகே நேற்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையிலும் ஜுமர் பகுதியில் உள்ள மொசூல் நகரில் நடைபெற்ற சண்டையிலும் 16 பெஷ்மெர்கா வீரர்கள் பலியானார்கள். இத்தாக்குதலின்போது 100 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 38 பேரை சிறைபிடித்து இருக்கிறோம் என்று குர்தீஷ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அய்ன் ஜாலா மற்றும் பாத்மாவில் உள்ள, ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யும் 2 எண்ணெய் கிணறுகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அத்துடன், அவர்கள் கைப்பற்றிய ஒரு மின் உற்பத்தி நிலையத்தையும் ஜுமர் மற்றும் அதை சுற்றியுள்ள பிராந்தியங்களையும் நாளை இரவுக்குள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றி விடுவோம் என்று குர்தீஷ் பிராந்திய அரசு உயர் அதிகாரி கயாத் சுர்சி நேற்றிரவு கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
சீனாவில் பூமி அதிர்ச்சிக்கு 180 பேர் பலி கட்டிடங்கள் சேதம்
சீனாவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிக்கு 180 பேர் பலியானார்கள். 1300 பேர் காயம் அடைந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.
பூமி அதிர்ச்சி
சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கியாவோஜியா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கு இருந்தவர்கள் வெளியே ஓடினர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
நிலநடுக்கத்தை உணர்ந்த லூதியன் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘நான் இருக்கும் 5–வது மாடி அறை கடுமையாக குலுங்கியது. மேஜை மீது இருந்த பொருட்கள் சாய்ந்து உருண்டு விழுந்தன’ என்றார்.
கார் டிரைவர் ஒருவர் தெரிவிக்கையில், ‘காரில் சென்றபோது திடீரென பூமி ஆடியது. படகு போல கார் அசைந்ததை உணர்ந்தேன்’ என்றார்.
180 பேர் சாவு
இந்த நில நடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் கருவியில் 6.5 அளவு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 180 பேர் பலியாகி விட்டதாகவும் 1300 காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடக்கிறது. நகர நிர்வாகம் சார்பில் உடனடியாக 3 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் 2 ஆயிரம் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
திபெத்திலும் நிலநடுக்கம்
இதே பகுதியில் கடந்த 1974–ம் ஆண்டில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆயிரத்து 400 பேர் பலியானார்கள். அடுத்து 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5.7 ரிக்டர் அளவு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 80 பேர் இறந்தனர். 800–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நேற்று காலை திபெத்தில் உள்ள சிகேட்சி என்ற இடத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவானது. சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அந்த பகுதி இந்தியாவின் அருணாசலபிரதேசம் மற்றும் நேபாள நாட்டு எல்லை அருகே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
இதே பகுதியில் கடந்த 1974–ம் ஆண்டில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆயிரத்து 400 பேர் பலியானார்கள். அடுத்து 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5.7 ரிக்டர் அளவு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 80 பேர் இறந்தனர். 800–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நேற்று காலை திபெத்தில் உள்ள சிகேட்சி என்ற இடத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவானது. சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அந்த பகுதி இந்தியாவின் அருணாசலபிரதேசம் மற்றும் நேபாள நாட்டு எல்லை அருகே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்
ஸ்பெயின்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக வெளியுலகை தொடர்பு கொண்ட பழங்குடியினருக்கு உயிரை கொல்லும் சுவாசக்கோளாறு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மானுட சமூக தொடர்பிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும், அவர்களில் பலர் அந்நோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே காடுகளில் அவர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டாலும் முதல் முறையாக தற்போது தான் வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் முன்வந்துள்ளனர்.
சிம்பாட்டியா கிராமத்தில் உள்ள என்விரா ஆற்றில் ஆடைகளற்ற நிலையில் காணப்பட்ட ஏழு பழங்குடியினர், பிரேசிலின் அசானிங்கா பழங்குடியின உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களான இந்தியரல்லாதவர்கள் தாக்குவதால் தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்தியரல்லாதவர்களால் கொல்லப்பட்ட தங்கள் இனத்தை சேர்ந்த மூன்று பேரை ஒரே இடத்தில் புதைத்ததாக தெரிவித்த அவர்கள், மேலும் சிலரது உடல்களை பிணந்தின்னி கழுகுகள் தின்றதாகவும் தெரிவித்தனர். தங்கள் குடில்களை சேதப்படுத்திய போதைபொருட்கள் கடத்தும் கும்பல் தங்களை அங்கிருந்து காலி செய்யும்படி மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்பெயின்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக வெளியுலகை தொடர்பு கொண்ட பழங்குடியினருக்கு உயிரை கொல்லும் சுவாசக்கோளாறு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மானுட சமூக தொடர்பிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும், அவர்களில் பலர் அந்நோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே காடுகளில் அவர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டாலும் முதல் முறையாக தற்போது தான் வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் முன்வந்துள்ளனர்.
சிம்பாட்டியா கிராமத்தில் உள்ள என்விரா ஆற்றில் ஆடைகளற்ற நிலையில் காணப்பட்ட ஏழு பழங்குடியினர், பிரேசிலின் அசானிங்கா பழங்குடியின உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களான இந்தியரல்லாதவர்கள் தாக்குவதால் தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்தியரல்லாதவர்களால் கொல்லப்பட்ட தங்கள் இனத்தை சேர்ந்த மூன்று பேரை ஒரே இடத்தில் புதைத்ததாக தெரிவித்த அவர்கள், மேலும் சிலரது உடல்களை பிணந்தின்னி கழுகுகள் தின்றதாகவும் தெரிவித்தனர். தங்கள் குடில்களை சேதப்படுத்திய போதைபொருட்கள் கடத்தும் கும்பல் தங்களை அங்கிருந்து காலி செய்யும்படி மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
மெக்சிகோ நகர மேயர் சுட்டுக் கொலை
மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள சியரா மெட்ரே மலைப்பகுதியில் இருக்கும் சிறிய நகரம் அயுட்லா ஆகும். இந்த நகரத்தின் மேயராக இருந்த மானுவேல் கோமஸ் டொரெஸ் நேற்று மாலை தன்னுடைய பண்ணை வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் இவரது ஊழியர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் பலியானார்.
மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் இதே பகுதியில் பணி புரிந்துவந்த துணை காவல்துறைத் தலைமை அதிகாரி ஒருவரும் கொலை செய்யப்பட்டார். ஆனால் இதற்குக் காரணமானவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
கடந்த ஏழு வருடங்களில் இங்கு பலியான 50க்கும் மேற்பட்ட உள்ளூர் தலைவர்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்குமாறு மெக்சிகோவின் உள்ளூர் அரசு அமைப்பானது அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
பசிபிக் கடலோரப் பகுதியில் நடைபெற்றுவரும் போதை மருந்துக் கடத்தலுக்குக் காரணமாக விளங்கும் பிரதான கடத்தல் குழுவின் மறைவிடமாக ஜலிஸ்கோ விளங்கிவருகின்றது. இதனால் தோன்றும் வன்முறைக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் மெக்சிகோவில் அதிகபட்சமாக 27,213 பேர் பலியாகியுள்ளதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் 2012ஆம் ஆண்டைவிட 2013ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,500க்கும் மேல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு நெருக்கமானவர்களைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் இயற்கை மரணம் என்று மக்கள் குறிப்பிடுவதும் இந்த எண்ணிக்கை குறைவிற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள சியரா மெட்ரே மலைப்பகுதியில் இருக்கும் சிறிய நகரம் அயுட்லா ஆகும். இந்த நகரத்தின் மேயராக இருந்த மானுவேல் கோமஸ் டொரெஸ் நேற்று மாலை தன்னுடைய பண்ணை வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் இவரது ஊழியர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் பலியானார்.
மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் இதே பகுதியில் பணி புரிந்துவந்த துணை காவல்துறைத் தலைமை அதிகாரி ஒருவரும் கொலை செய்யப்பட்டார். ஆனால் இதற்குக் காரணமானவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
கடந்த ஏழு வருடங்களில் இங்கு பலியான 50க்கும் மேற்பட்ட உள்ளூர் தலைவர்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்குமாறு மெக்சிகோவின் உள்ளூர் அரசு அமைப்பானது அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
பசிபிக் கடலோரப் பகுதியில் நடைபெற்றுவரும் போதை மருந்துக் கடத்தலுக்குக் காரணமாக விளங்கும் பிரதான கடத்தல் குழுவின் மறைவிடமாக ஜலிஸ்கோ விளங்கிவருகின்றது. இதனால் தோன்றும் வன்முறைக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் மெக்சிகோவில் அதிகபட்சமாக 27,213 பேர் பலியாகியுள்ளதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் 2012ஆம் ஆண்டைவிட 2013ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,500க்கும் மேல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு நெருக்கமானவர்களைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் இயற்கை மரணம் என்று மக்கள் குறிப்பிடுவதும் இந்த எண்ணிக்கை குறைவிற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகச் செய்திகள்!
சிவாவுக்குப் பாராட்டுகள் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 29 of 81 • 1 ... 16 ... 28, 29, 30 ... 55 ... 81
Similar topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 29 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|