புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
92 Posts - 61%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 17 of 81 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 49 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 17 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:29 am

 இந்திய கப்பலில் ரூ.1600 கோடி மதிப்புள்ள ஹெராயின் ஆஸ்திரேலியா பிடித்தது

உலகச் செய்திகள்!  - Page 17 DRUGS_PIX-300

குஜராத் மாநிலம் மலாயா என்ற இடத்தை சேர்ந்த ஹாஜி பஷீர் என்ற வியாபாரி ஒரு கப்பலை ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வாடகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கினார். கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அந்த கப்பல் குஜராத்தின் டுனா துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது. பல்வேறு நாடுகளுக்கு சென்ற பின்னர் அந்த கப்பல் கென்ய கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சென்று கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கப்பல் படையினர் அந்த கப்பலை மடக்கி சோதனை போட்டனர்.

அப்போது கப்பலில் 1023 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 46 சிமெண்டு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1600 கோடி. அதனை அவர்கள் கைப்பற்றினார்கள். காந்திதாம் எஸ்.பி. தீபக் நகோனி கூறும்போது, அந்த கப்பல் பல நாடுகளுக்கு சென்றுள்ளதால் போதைப் பொருள் எங்கு ஏற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:40 am


சிரியாவில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல்


சிரியாவில் நடந்த விஷக் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை சில நகரங்களைக் கைப்பற்றியுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. அந்த நகரங்களின் மீது விஷக் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னர் இட்லிப், ஹமா மாகாணங்களில் இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பலர் பலியாயினர். இதற்கு ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை சிரியா மறுத்தது. இந்நிலையில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல் தமனாக் நகரின் மீது பறந்த ஹெலிகாப்டர் 2 விஷக் குண்டுகளை வீசியதாக தெரியவந்துள்ளது. அவை குளோரின் வாயுவை வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்ததாகுதலை சிரியா நடத்தவில்லை என்று அறிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:41 am


யுக்ரேன் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன


கிழக்கு யுக்ரேனில் ஸ்லவியான்ஸ்க் நகரில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருவதாக யுக்ரேனின் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஆர்ஸென் அவாகோவ் கூறியுள்ளார்.

அரச படைகள் நகரிலுள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இன்னும் மூன்று சோதனைச் சாவடிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ரஷ்ய ஆதரவுப் படையினர் கூறுகின்றனர்.

யுக்ரேனின் இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டுவீழ்த்துப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்த விமானிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யுக்ரேன் உறுதிப்படுத்தியுள்ளது.

தரையிலிருந்து வானுக்குத் தொடுக்கப்படும் ஏவுகணைகளைக் கொண்டு இந்த ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

ரஷ்ய ஆதரவுச் சக்திகள் வெறுமனே அமைதியான போராட்டக்காரர்கள் என்பதற்கு மாறாக, முழுமையான ஆயுத மற்றும் நிபுணத்துவ வளங்களைப் பெற்றுள்ளதையே இந்த சம்பவம் காட்டுவதாகவும் யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

பழிவாங்கல் நடவடிக்கை: ரஷ்யா

இதற்கிடையே, யுக்ரேனின் தென்-கிழக்குப் பிராந்தியத்தில் யுக்ரேன் தண்டிக்கும் விதமான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனின் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட உடன்படிக்கை மீதிருந்த கடைசி நம்பிக்கையையும் அது ஒழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழப்ப நிலைமைகளைத் தணிப்பதற்கு ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற சூழ்நிலையில், யுக்ரேன் அரசாங்கம் அமைதியான சமூகங்கள் மீது பழிவாங்கல் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக ரஷ்ய அதிபரின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

தென்- கிழக்கு யுக்ரேனில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் புடீன் தனது பிரதிநிதியை அனுப்பியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:42 am


போரின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட ஐ.நா. பட்டியலில் இலங்கை!



ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு போர்களின் போது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த மோதல்களில் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன இது தொடர்பான ஐ.நா பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா தெரிவித்துள்ளார்.

போராட்ட குழுவினர், ஆயுதக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் என, 34 ஆயுதக் குழுக்கள், மோதல் சூழலில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு உள்ளன.

இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா, அங்கோலா,போஸ்னியா ஹெர்சகோவினா, கம்போடியா, கினியா, லைபீரியா, லிபியா, நேபாளம், சியராலியோன், சோமாலியா, சூடான், யேமன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஐவரி கோஸ்ட், காங்கோ, மாலி, தென்சூடான், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:44 am

ஆப்கனில் கடும் நிலச்சரிவு: 2000 பேர் மாயம்

ஆப்பானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை.

இதுகுறித்து பதக்சான் மாகாண கவர்னர் ஷா வலியுல்லா அதீப் கூறியதாவது:-

கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளன. இதில் வசித்த 2000-த்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில் மொத்தம் உள்ள வீடுகளில் 75 சதவீத வீடுகள் புதைந்துள்ளன.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவி மற்றும் மண் தோண்டும் கருவிகள் இல்லாததால் அவர்களால் வேகமாக பணியைச் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணம் இந்து குஷ் மற்றும் பாமீர் மலைத்தொடரிலும், சீனாவின் எல்லையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 5:29 am

பறக்கும் விமானத்திலேயே குழந்தை பெற்ற நைஜீரிய பெண்

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நைஜீரியாவில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. அதில் நைஜீராயாவைச் சேர்ந்த 26 மாத கர்ப்பிணியான உஜுன்வா ஒஷே (வயது 31) தன் குழந்தையுடன் பயணம் செய்தார். விமானம் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது ஒஷேவாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் வந்தவர்கள் குழந்தையை பத்திரமாக பெற்றெடுக்க உதவினர். ஆறரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனே தரையிறக்க வலியுறுத்தப்பட்டது.

விமானியும் தாய் மற்றும் குழந்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்ததையும் பொருட்படுத்தாமல் தரையிறக்க முடிவு செய்தார். அப்போது விமானம் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவான பலேரிக் தீவுகளில் உளள் பால்மி டி மலோர்ஸ் என்ற விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி அந்த விமான நிலையத்தின் அதிகாரியை தொடர்பு கொண்டு விமானத்தை இறக்க ஒப்புதல் பெற்று விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பறந்து சென்றது.

36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்த விமானத்தில் குழந்தை பிறந்த அந்த பெண் கூறியதாவது:-

நான் எனது குழந்தையுடன் அமெரிக்கா செல்ல வேண்டும். லண்டனில் இறங்கி மற்றொரு விமானத்தில் அமெரிக்க செல்ல திட்டமிட்டுருந்தேன். எனக்கு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்க வேண்டும். ஆனால் முன்கூட்டியே குழந்தை பிறந்ததால் குழந்தையை ஆஸ்பத்திரியில் வைத்து கவனிக்க வேண்டியுள்ளது. நான் திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். குழந்தைக்கு மிக்கேல் என பெயர் வைத்துள்ளேன்.

எனக்கு என் குழந்தை தேவை. ஆகவே இங்கே தங்குவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. என்னோடு அவன் வீட்டுக்கு வரும்போது நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:24 am


அமெரிக்காவிலும் மெர்ஸ் ஆட்கொல்லி நோய் பரவல்?

சவுதி அரேபியா உள்ளிட்ட அரேபிய நாடுகளில் உயிர்கொல்லியாகப் பரவி வரும் மெர்ஸ் (MERS) நோய், தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 70–க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய ஒருவரை இந்நோய் தாக்கியுள்ளது. அவரை இண்டியானாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நோய் தாக்குதலுக்குள்ளானவர் யார்? என்ற விவரங்கள் எதுவும் வெளியிட வில்லை. ஆனாலும் அவருடைய உடல்நிலை கட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:30 am

 ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் இன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

முதலாவது குண்டு வெடிப்பு, குண்டுஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு குண்டுஸ் பகுதியில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டிருந்த இராணுவ ஜீப் வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். மேலும் ஒரு இராணுவ விரர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

இரண்டாவது தாக்குதல், கண்டகர் மாகணத்தில் உள்ள மரூப் மாவட்டத்தில் ஒரு சாலையோரத்தில் குண்டுவெடித்தது. இதில் தேசிய பாதுகாப்பு படை சேர்ந்த வீரர்கள் இருவர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

சமிபத்தில் தலீபான்கள் அதிக எண்ணிக்கையிலான வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:34 am

தெற்கு சூடான் போரில் 9,000 குழந்தைப் போராளிகள்: ஐ.நா.

தெற்கு சூடானில் அரசுக்கும் போராளிக் குழுவுக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் 9,000க்கும் அதிமான குழந்தைப் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

தெற்கு சூடானில் தின்கா மற்றும் நுவெர் எனும் இரு இனக்குழுக்கள் இருக் கின்றன. தற்போது, தெற்கு சூடானை ஆட்சி புரிவது தின்கா இனக்குழு ஆகும். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த இரண்டு இனக்குழுக்களுக்கும் இடையே சண்டை மூண்டது.

அரசுக்கும், போராளிக் குழுவுக்கும் இடையிலான இந்தப் போர் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

போர் பகுதிகளில் ஆய்வு

சமீபத்தில், மூன்று நாள் பயணமாக இந்த நாட்டுக்குச் சென்றிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை போர் நடைபெறும் பகுதிகளை ஆராய்ந்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் கூறுகை யில், "இந்தப் போரில் 9,000க்கும் அதிகமான சிறார்கள் இரண்டு பக்கத்திலும், ஆயுதங்கள் ஏந்திப் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு தரப்புமே குற்றவாளிகள்தான்" என்றார் அவர்.

மேலும் அவர், "போரினால் நாட்டில் நிலவும் பட்டினியைப் பற்றி இரண்டு பக்கத் தலைவர்களும் கவலை கொள் ளாமல் இருப்பதைக் கண்டு நான் திகைக்கிறேன்.

தங்களின் தனிப்பட்ட தோல்விகளை பரஸ்பரம் அமைதியாகத் தீர்க் காமல், போரில் ஈடுபடுவதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினிக்கு ஆளா கிறார்கள்" என்றார்.

கோடிக்கு மேற்பட்டோர் பாதிப்பு

இந்தப் போரில் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் வீடு களைவிட்டு புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இதுகுறித்து ஐ.நா. தெற்கு சூடானை எச்சரித்தாலும் அதைப் பற்றி அந்த அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

"கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக இரண்டு பக்கத்திலிருந்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அவர்களால் நிறைவேற்ற முடியாமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் நவி பிள்ளை.



உலகச் செய்திகள்!  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 5:50 am

தாய்லாந்து மன்னர் முடிசூடி 64 ஆண்டுகள்: மக்கள் கொண்டாட்டம்

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அட்யூல்டேஜ் முடிசூடி 64 ஆண்டுகள் ஆனதை அந்நாட்டு மக்கள் விமரிசையாக கொண்டாடினர். கடற்கரை நகரமான ஹுவா ஹின்னில் நடந்த கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து மன்னருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்போது 86 வயதாகும் மன்னர் பூமிபோல் மற்றும் இளவரசர் வஜிரலாங்கான் தாய்லாந்து கொடி ஏந்தி வாழ்த்த வந்த மக்களைப் பார்த்து கை அசைத்தபடி வாகனத்தில் வலம் வந்தனர். பின்னர் க்ளை கேங்வான் அரண்மனையில் நடைபெற்ற புத்த மத சம்பிரதாயங்களில் அரச குடும்பத்தினர், பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். 1950ஆம் ஆண்டு தமது 18-வது வயதில் மன்னராக முடிசூடிய பூமிபோல்தான் உலகின் அதிக ஆண்டுகள் ஆட்சி புரியும் மன்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 17 of 81 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 49 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக