புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
44 Posts - 41%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
3 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
21 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 13 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 13 of 81 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 47 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 13 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:28 am

 அமெரிக்காவில் தந்தை மற்றும் வளர்ப்பு தாயால் கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவில் 5 வயது சிறுவனை மாடிப்படிகளுக்கு கீழே உள்ள பகுதியில் அவனது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் ஆகியோர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் தந்தை கைது செய்யப்பட்டார்.  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரீஸ் கவுண்டி பகுதியில் வசித்து வரும் தம்பதியர் பிராட்லி பிளெய்மியர் மற்றும் டம்மி பிளெய்மியர்.

டம்மிக்கு வயது 33.  இவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த தம்பதியரில் தந்தை பிராட்லிக்கு பிறந்த 5 வயது சிறுவன் ஒருவன் உள்ளான்.  டம்மி வளர்ப்பு தாயாக இருந்துள்ளார்.  ஆனால், சிறுவனை கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு கடந்த பிப்ரவரி 20ந்தேதி அருகில் இருப்பவர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது.  அப்பொழுது சிறுவனின் வீட்டிற்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பினர் மற்றும் போலீசார் அது குறித்து விசாரித்து விட்டு சென்றனர்.

அப்பொழுது அவர்கள் அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு சென்றதால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.  ஆனால், மீண்டும் கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து சிறுவனை விசாரிக்க வீட்டுக்கு சென்றனர்.  அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய செய்தது.  அந்த சிறுவன், மிக குறைந்த எடையுடன் போதிய உணவு வழங்கப்படாமல், உடம்பில் காயங்களுடன் இருந்துள்ளான்.

வீட்டின் மாடிப்படி பகுதியின் கீழே உள்ள சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது.  இதனை அடுத்து வளர்ப்பு தாய் டம்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  எனினும், 2 ஆயிரம் அமெரிக்க டாலர் ஜாமீன் தொகை அளித்து அவர் தண்டனையில் இருந்து தப்பினார்.  பிராட்லிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சிறுவன் அவனது உண்மையான தாயிடம் தற்பொழுது ஒப்படைக்கப்பட்டு உள்ளான்.  பாதுகாப்பு கருதி தாய் மற்றும் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.  கடந்த 2 வருடங்களாக தாயை விட்டு பிரித்து வைக்கப்பட்ட சிறுவன் மீண்டும் தனது தாயுடன் சேர்ந்து விட்டான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:30 am

 நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்

சிலியில் 8.3 அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்த்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் பலியாகினர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்தை நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு அங்கு சிறையில் இருந்த 300 பெண் கைதிகள் நிலநடுக்கத்திற்கு நன்றி கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கைதிகள் தப்பி ஓடியதை அந்நாட்டு உள்துறை மந்திரி தெளிபடுத்தியுள்ளார். மேலும், 45 பெண் கைதிகளை போலீசார் விரட்டி பிடித்துவிட்டனர் என்றும் மற்றவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:31 am

பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை?- தேசத் துரோகக் குற்றச்சாட்டை ஏற்றது நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.

1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.

அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார். ஏறக்குறைய தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார் முஷாரப். எனினும், பதவி ஆசை அவரை விடவில்லை. கடந்த ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் அங்கு தேர்தலில் நிற்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன.

இந்நிலையில், இதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். தன்னுடைய நோயைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். மார்ச் 31-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் கட்டாயமாக ஆஜராக வேண்டும், இல்லையெனில் ஜாமீன் இல்லாத கைதுக்கு ஆளாக நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது முஷாரப் ஆஜரானார்.

இந்த வழக்கில் இதுவரை 35 முறை வாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் முஷாரப் ஒரே ஒரு முறை மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்.

இதனிடையே துபாயில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தன் தாயைக் காண்பதற்கு முஷாரப் அனுமதி கேட்டிருந்தார். முஷாரப் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

முஷாரபின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரை வெளிநாடு செல்ல அனுமதிப்பதா வேண்டாமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து விட்டது.

'நான் என் நாட்டின் நலனுக்காகத்தான் செய்தேன். ஆனால் என்னைக் கொடுங் கோலன் என்று சொல்வதைக் கேட்டு நான் வருந்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் பர்வேஸ் முஷாரப்.

மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க அளவுக்கு அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். அல்லது குறைந்தபட்சம் தன் ஆயுள்காலம் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க நேரிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 6:14 pm

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்தார் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.

ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான இருதய நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டார்.

பாதுகாப்பு நிறைந்த பைசாபாத் - ரவால் டாம் சவுக் சாலையில் பர்வேஸ் முஷாரப் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் ஒரு அடி அளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் முன்னாள் அதிபர் முஷாரப்பை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் வெடிகுண்டு சாலை ஓரத்தில் இருந்த சாக்கடை அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்ப்குதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் மேலும் வெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகள் குறி:

பர்வேஸ் முஷாரப்புக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேச துரோக குற்றச்சாட்டு:

பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் கடந்த 31-ம் தேதி ஏற்றுக் கொண்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.

அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 6:15 pm

சிலியில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

சிலி நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று (புதன் கிழமை) 8.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 17 அதிர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்டன என சிலி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில அதிர்வுகள் சில நாட்களுக்கு இருக்கும் என சிலி பல்கலைக்கழக நில அதிர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 3:44 pm

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸில் போலியான கல்விச் சான்றிதழ்கள் – 350 ஊழியர்கள் பணிநீக்கம்!

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான, சர்வதேச ஏர்லைன்ஸ்(பிஐஏ)-ல் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் இருந்த, 350 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் பெரும்பான்மையானோர் அரசியல் பின்னணியிலும், சிபாரிசின் பேரிலும் பணிக்கு சேர்வதாகவும்,

அவர்களில் பலர் போலியான கல்வி சான்றிதழ்களையே சமர்பித்துள்ளதாகவும் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிஐஏ நிறுவன ஊழியர்கள் அனைவரின் கல்வி சான்றிதழ்களையும் சரிபார்க்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் இந்த சரிபார்க்கும் பணி பற்றி பிஐஏ நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் மஷ்ஹூத் தாஜ்வார் கூறுகையில்,

இதுவரை 350 ஊழியர்கள் போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து விமானிகள், விமானப் பணிப்பெண்கள், சில பொறியாளர்களும் அடங்குவர்” என்று கூறியுள்ளார்.

பிஐஏ – வில் சில மூத்த விமானிகளே போலியான சான்றிதழ்களை வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:20 pm

 பணத்தை திருடியதற்காக கணவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வேக வைத்த மனைவி

உலகச் செய்திகள்!  - Page 13 Inhuman-Chilean5819

சிலி நாட்டில் சாண்டியாக தென்பகுதியில் உள்ள மோலினா நகரில் வசிப்பவர் இங்கிலாந்தை சேர்ந்த  ரோசன்னா ஆண்ட்ரியா வால்டெஸ் (வயது 38) இவரது கணவர் கிளவ்டியா ஆண்ட்ரியா முனூஸ் (44) மனைவி ஆண்ட்ரி சேமித்து வைத்து இருந்த அவரது மர பெட்டியில் இருந்து  கணவர் முனூஸ் 9 ஆயிரம் அமெரிக்க டாலர்களை திருடி விட்டார்.இதனால் ரொசன்னா கோபம அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபம அடைந்த ரோசன்னா  கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.இருந்தாலும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை அவரது  உடம்பை  துண்டு துண்டாக வெட்டினார் ஒரு பானையில் போட்டு பல மணி நேரம் வேக வைத்தார்.பின்னர் வேகவைத்த கணவரின் உடல் பாகங்களை  ஒரு நைலான் பேக்கில் போட்டி நிரப்பி தனது காரின் பின்புறம் வைத்தார்.பின்னர் போலீசில் சென்று சரணடைந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 12:11 pm

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 23பேர் பலி 39 பேர் படுகாயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரின் எல்லைக்குட்பட்ட காய்கறி சந்தையில் இன்று பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 23 பேர் பலியாயினர்.

பழப் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 09, 2014 6:33 pm

மனித உயிர்கள் மதிப்பிழந்துவிட்டன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:52 am


அடுத்த 10 ஆண்டுகளில் 100 விமானங்களை வாங்க மலிண்டோ திட்டம்!

விமானச் சேவையை விரிவுபடுத்தவும், பயணிகளின் வசதிக்காவும் வரும் பத்தாண்டுகளில் 100 விமானங்களை வாங்க மலிண்டோ எண்ணம் கொண்டுள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் கூறினார்.

இதனிடையே, நேற்று முன்தினம் பிரான்சில் தயாரிக்கப்பட்ட அதிநவீன புதிய விமானம் ஒன்றை மலிண்டோ வாங்கியுள்ளது. சுபாங் ஜெயாவிலுள்ள விமான நிலையத்தில் “ஏடிஆர்” 72-600 ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டதாக மலிண்டோ ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூர், வெளிநாடுகளுக்கு சேவைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு வரவாக அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

அடுத்த பத்து ஆண்டுகளில் 100 விமானங்களை வாங்குவதை இலக்காவும் மலிண்டோ நிறுவனம் கொண்டுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு மலிண்டோ சேவையை தொடர உள்ளதாகவும் சந்திரன் தெரிவித்தார்.


Sponsored content

PostSponsored content



Page 13 of 81 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 47 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக