ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

3 posters

Go down

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Empty இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

Post by சிவா Fri Nov 08, 2013 2:13 pm

"இலங்கையில் நடக்கு "காமன்வெல்த்' மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பிரதிநிதியைக் கூட அனுப்பக்கூடாது' - இப்படி ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையில் நிறைவேற்றி அதிர்வேட்டு கிளப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் "ஜெ'.

இதற்கிடையே, "மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்!' என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசகத்தின் வார்த்தைகளால் தமிழக மக்களிடம் அனல் அலை.

சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அதிபர் ஒரு போர்க் குற்றவாளியாக பார்க்கப்படும் நிலையில், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உலக நாடுகளிடம் நட்பை ஏற்படுத்துவதும், செய்த குற்றத்தை மறைப்பதுமே ராஜபக்ஷேவின் எண்ணம்.

ஆனால் அவரது எண்ணத்தில் முதல் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது கனடா... மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்து ராஜபக்ஷேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என வெளிவரும் தகவல்களால் தமிழக கட்சிகளிடம் கொந்தளிப்பு.

இது குறித்துப் பேசும் அ.தி.மு.க. துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், "இந்திராகாந்திப் பிறகு வந்த காங்கிரஸ் தலைவர்கள் அவர் கட்டிக் காத்து வந்த வெளிநாட்டுக் கொள்கையை கைவிட்டுவிட்டார்கள்.

அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, இந்தோனேசியாவின் சுகர்னோ, எகிப்தின் நாசர்... உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பெயர் சொல்லி அழைத்தவர் இந்திராகாந்தி. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தலைவராக அவர் இருந்தார்.

104 நாடுகள் கலந்து கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்பதை உரக்கச் சொன்னவர் அவர். ஆனால், இப்போது நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர் சுயமாக எந்த முடிவும் எடுப்பதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமல்ல, இந்தியத் தமிழர் பிரச்னையிலும் அவர் மௌனச் சாமியாராகத்தான் வலம் வருகிறார்!' என்கிறார்.

எப்போதுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வந்திருக்கும் காங்கிரஸ் இம்முறையும் அதையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இல்லையென்றால் "இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என்று சொன்ன இலங்கைத் தூதரை இதுவரை கண்டிக்காமல் இருந்திருக்குமா? என்று கேட்கிறார்கள் அவர்கள்.

"உண்மைதான். ஒரு மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது. மாறாக அம்மாநிலத்தோடு கலந்து பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை என காரணம் சொல்லி தப்பிக்கக் கூடாது. காரணம், தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான். இல்லையென்றால் கூட்டாட்சித் தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். மாநிலத்தைப் பாதிக்கும் பிரச்னையின் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்தியா தனிமைப்படுத்தப்படும்னு இலங்கைத் தூதர் சொல்வது சுத்த அபத்தம். நாம் என்ன காலனி ஆதிக்கத்தின் கீழா வாழ்ந்து கொண்டிருக்கோம்.

இதற்கு முன்பு வேறு எந்த நாட்டுத் தூதர்கள், அமைச்சர்களும் இப்படிப் பேசியதில்லை. அதுவும் நம் நாட்டுத் தலைநகரில் இருந்துகிட்டே இப்படிப் பேசியிருப்பது தவறு' எனச் சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா.

இதில் எட்டாவது அதிசயம் என்ன தெரியுமா? தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் இலங்கைக்கு ஆதரவான கருத்தைப் பிரதிபலித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரித்திருப்பது.

தனித்து விடப்படுவதோடு, வாக்கு வங்கியும் பறி போய்விடும் என்கிற பயம்தான் தீர்மானத்தை ஆதரிக்கக் காரணமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன்!

"இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்க மயற்சி நடந்தால் அதனை எதிர்க்கக்கூடாது என்பதை பதிவு செய்துவிட்டுத்தான் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது.

அதற்கும், காங்கிரஸ் வாக்கு வங்கிக்கும் சம்பந்தமில்லை. அதேபோல் தனித்து விடப்படுவோம் என்கிற பயமும் எங்களுக்கில்லை' எனச் சொல்லும் ஞானதேசிகன், "இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இலங்கைத் தூதர் சொல்லவில்லை. அவரது கருத்து திரித்துக் கூறப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்!' என தூதருக்கும் அவர் தேசத்திற்கும் மெலிதாக ஒரு நேசக்குரலும் கொடுக்கிறார்.

- எஸ். அன்வர். @ குமுதம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Empty Re: இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

Post by T.N.Balasubramanian Fri Nov 08, 2013 4:32 pm

நமது பிரதமர் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம். 
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான  முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Empty Re: இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

Post by பாலாஜி Fri Nov 08, 2013 4:33 pm

T.N.Balasubramanian wrote:நமது பிரதமர் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம். 
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான  முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Empty Re: இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

Post by T.N.Balasubramanian Fri Nov 08, 2013 10:03 pm

பிரதமர் காமன்வெல்த் மா நாட்டை புறக்கணிக்க கூடிய சாத்திய கூறுகள் உருவாகி உள்ளதாக தெரிகிறது. உறுதி ஆக்கப்பட வில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Empty Re: இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum