புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_m10ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 10:36 pm


சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை!

நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆங்கிலக் கல்வியால் தாய்மொழிக் கல்வி கைவிடப்படுவதைக் கண்டு, இந்திய மாநில அரசுகள் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குகின்றன. விளைவாக, குழந்தைகள் இரண்டாவது மொழியாகத் தாய்மொழியை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் படிக்கின்றனர். ஆனால், அது இரண்டாவது மொழியாக இருப்பதாலேயே அதில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அம்மொழிகளைக் கற்கின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் தாய்மொழியைக் கற்கின்றன. அதாவது, தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு துறையில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலக் கல்வி தேவைப்படுகிறது. ஆகவே, கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்.

மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இதைக் கற்றுக் கொள்ளும். அதற்கேற்ப தொடர்ச்சியாகத் தமிழின் நூல்களை எல்லாம் அந்த எழுத்துருவுக்கு மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு எழுத்துருக்களுமே ஒருதலைமுறைக் காலம் புழக்கத்தில் இருக்கலாம். மேலும், இன்றைய தொழில் நுட்பத்தில் எந்த ஓர் எழுத்தையும் ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படு கின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது. மலாய் மொழி வாழவும் செய்கிறது. அதன் எழுத்துருக்களைத் தனியாக எவரும் பயில வேண்டியதில்லை. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் அதை வாசித்துவிடலாம். ஆங்கில எழுத்துருக்கள் மலாய் மொழியை வளப்படுத்தவே செய்கின்றன. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்.

- ஜெயமோகன், எழுத்தாளர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 10:41 pm

-
சிங்கப்பூரில் முதலாம் வகுப்புக்கு முன்னதாக ப்ரீகேஜி

யுகேஜி போன்ற படிப்புகளில் குழந்தைகளுக்கு சித்திரம்
வரைவதில் ஆர்வம் ஏற்படுத்துகிறார்கள்...
-
சித்திரம் வரையும் குழந்தைகளால் எப்படிப்பட்ட எழுத்தையும்
எளிமையாக எழுதக் கற்றுக் கொள்ள முடியும்...
-
சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது..
-
நூலக வாசிப்புக்கு பால்மணம் மாறாத குழந்தைகளும்
அங்கு வருகிறார்கள்...அதற்கென உள்ள பகுதியில்
குழந்தைகளுக்கு சத்தமாக சொல்லிக் கொடுக்கலாம்...
-
சாதரணமாக மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட
பள்ளியில் உள்ள நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிக்க
வேண்டும்...என்ன புத்தகம் படித்தான், அதன் சுருக்கம்
என்ன என்பதை அதற்கென உள்ள நோட்டில் எழுதி
ஆசிரியரிடம் , அதற்காக ஒதுப்க்கப்பட்ட நாளில் காண்பிக்க
வேண்டும்...
-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 07, 2013 10:46 am

நல்ல தமிழே எழுத்தாய் இருக்கும் போது எதற்கு ஆங்கிலத்தில தமிழ்?

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 2:16 pm

தமிழை விட ஒரு அழகான மொழி இல்லை... நம் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.... அது அழிவதற்கு நாம் ஒருநாளும் விடக்கூடாது... நாம் நம் தாய் மொழியில் சிந்தித்தால் மட்டுமே நம் அறிவு மேம்படும்...



அன்புடன் அமிர்தா

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Aஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Mஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Iஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Rஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Tஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Hஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? A
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Nov 07, 2013 2:27 pm

தமிழ் மொழியை ஆங்கில எழுத்துருவில் எழ்துவதோ படிப்பதோ மீண்டும் அங்கிலேயரிடம் அடிமையாவதற்கு சமம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2013 4:05 pm

எனக்கு என்ன சொல்வது என்று தெரியலை, கட்டுரையாளர் சொல்வதும் சரியாகப்படுகிறது
பின்னுட்டங்களும் சரி என்றே படுகிறது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக