புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
81 Posts - 67%
heezulia
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
5 Posts - 4%
viyasan
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
18 Posts - 3%
prajai
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமா என்றொரு அக்கா! Poll_c10ரமா என்றொரு அக்கா! Poll_m10ரமா என்றொரு அக்கா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமா என்றொரு அக்கா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 7:32 pm

அலுவலக வேலையாகச் சென்னைக்குப் போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது.

"ரமாவைப் போய்ப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லி விட்டார்.

இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகி விட்டேன் என்றாலும் பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியது. அப்பாவே இன்றுவரை பேசியதில்லை.

பெரியப்பா கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர்.

பெரியப்பா என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்து விடலாம். ரமாவைப் போய் பார்ப்பது அதைவிடக் கடினம்.

மனசு கரித்தது.

பஸ்ஸில் ஏறி ஓரத்து சீட்டில் உட்கார்ந்து கையசைத்த போதும் மறக்காமல், "ரமாவைப் பார்த்து விட்டு வா' என்றார்.

"சரி' என்றேன்.

"அட்ரஸ் இருக்கில்லே?'

"டைரியில் குறிச்சி வச்சிருக்கேன்'

"நான் வறேன்'

நகர்ந்தார். பஸ்ஸும்.

சாலையோர மரங்களைப் போல், மனிதர்களைப் போல் மனதும் பின்னோக்கி ஓடியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்டெல்லா டீச்சர் சர்ச்சுக்குப் போன கையோடு வீட்டுக்கு வந்தாள்.

அப்பொழுது நான் பதின்மூன்று வயது பாலு.

"குட்மார்னிங், டீச்சர்'

"உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன். படிக்கிறியா, விளையாடறியா?'

"படிக்கிறேன் டீச்சர்.'

அதற்குள் உள்ளேயிருந்து ரமா வந்தாள்.

"வாங்க... டீச்சர், உட்காருங்க!'

டீச்சரும், ரமாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.

"எங்கே டீச்சர், இவ்வளவு தூரம்?'

"சர்ச்சுக்குப் போயிட்டு வர்றேன்.. வழியில உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமன்னு...'

"ரொம்ப சந்தோஷம். பாலு, உள்ளே போய் காபி கொண்டு வரச் சொல்லு.'

"அதெல்லாம் எதுக்கும்மா?' என்றாள் டீச்சர்.

"பரவாயில்லை. இருக்கட்டும். ரவி எப்படி படிக்கிறான்.'

காபிக்குச் சொல்லிவிட்டு வந்த நான் ஒரு ஓரமாய் நின்றேன்.

"உன் தம்பிகள்லே ரவி ஆவரேஜ்தான்! பாலுதான் இன்டலிஜென்ட்...'

"ரவிதான் என் தம்பி. பாலு எங்க சித்தப்பா பிள்ளை.'

ரமாவின் அந்தப் பதில் என் மனசை அறைந்தது.

டீச்சருக்கும் எப்படியோ இருந்திருக்க வேண்டும். வேறு விஷயங்களைப் பேசி விட்டுப் போய் விட்டார்கள்.

பஸ் ஏர்-ப்ரேக்கில் அதிர்ந்து நின்றது.

பின் மண்டை சீட்டில் மோதி வலித்தது.

நிறைய பேர் என்னைப்போலவே இடித்துக் கொண்டார்கள்.

"நீ சாவறதும் இல்லாம் என்னையும் வம்பில் இழுத்து விட்டுடுவியேடா, கபோதி. சைக்கிள்லே ஏறிட்டேன்னா மண்ல எறங்க மாட்டியோ' என்று திட்டிக் கொண்டே டிரைவர் வண்டியை மீண்டும் ஓட்டினார்.

நிறைய பேர் வலிதாங்க முடியாமல் மண்டையைத் தடவிக் கொண்டு அரற்றினார்கள்.

எனக்கு மண்டை மரத்துப் போய்விட்டது.

அதுவும் ரமாவின் உபயம்தான்!

"டேய் ரவி, தட்டை ஒழுங்கா கழுவணுண்டா. இதோ பாரு, நீ கழுவின தட்டுல சரியாவே பத்து போகலை!'

"உன் வேலையைப் பார்த்துக்கினு போடா'

.........................................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 7:34 pm

ரவி சுத்த சோம்பேறி. சாப்பிட்ட தட்டைக் கூடச் சரியாகக் கழுவவில்லை. அதனால்தான் சொன்னேன்.

அதுகூட இப்பொழுதென்றால் சொல்லியிருக்க மாட்டேன். சின்ன வயசின் பரபரப்பில் சொல்லி விட்டேன்.

குடும்பத் தூணின் பிள்ளையென்பதை அவனும் அலட்சியமான பதிலில் நிரூபித்து விட்டான்.

விஷயம் அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை.

எங்கள் பேச்சு ரமாவின் காதில் விழுந்து விட்டது.

உள்ளறையிலிருந்து வந்தாள்.

"டேய் பாலு, உன் தட்டைக் காட்டுடா!'

எனக்கு வியர்த்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.

"குடுடா'

பிடுங்கி இப்படியும், அப்படியுமாக திருப்பித் தேடினாள்.

கிடைத்து விட்டது - ஒற்றை பருக்கை.

"ஏண்டா, நீயே தட்டை ஒழுங்கா கழுவலை. நீ என்னடா அவன் தப்பைக் கண்டுபிடிக்கிறது?'

"இல்லேக்கா வந்து.. வந்து... நான் ஒழுங்காதான் கழுவினேன். எப்படியோ ஒரே ஒரு...'

"நங்'கென்று தலையில் இறங்கிய வலி உடம்பு முழுவதும் உறுத்தியது.

பேச்செல்லாம் நின்று போக கண்ணே கரைந்து போக அழுதேன் - துளியும் சத்தமில்லாமல்.

சத்தம் போடக்கூடாதென்பது ரமாவின் கண்டிஷன்.

சத்தமாக அழுதால் நான் ஓயும் வரை அவள் ஓயாமல் குட்டுவாள்.

அவளை இப்பொழுது போய்ப் பார்க்க வேண்டும்.

ரமா வீட்டிலிருந்தவரை இளவரசி மாதிரி இருந்தவள், அவள் வைத்ததுதான் சட்டம்.

பெரியப்பாவின் பிரிய மகள் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.

தெருவை அடைத்துப் பந்தல் போட்டுத்தான் அவள் திருமணம் நடந்தது.

புகுந்த வீடு போன பிறகு அவளை அவ்வப்பொழுது வீட்டு விசேஷங்களில் பார்த்ததுதான்!

படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகு குடும்பத்திலிருந்தே தனித்திருந்ததால் ரமாவைப் பார்க்க வேண்டிய அவசியம் இதுவரை இல்லாமலிருந்தது. இப்பொழுது ஏற்பட்டு விட்டது.

வீட்டை அடைந்தபொழுது வாசலில் நின்றிருந்த ரமாவின் நாத்தனார் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று உள்ளே போனாள்.

உள்ளே நுழைந்தேன்.

நகரின் கட்டட நெரிசலில் குறுகிப் போன வீடு, அகலத்தில் ஒடுங்கி இருந்தது.

நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த ரமாவின் மாமியார் கண்ணுக்கு மேலே கையை வைத்து உறுத்துப் பார்த்துக் கொண்டே "யாரது?' என்றாள்.

"நான் பாலு.'

"பாலுன்னா?'

உறவை ஞாபகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் நான். உள்ளறையிலிருந்து தூக்கிச் செருகிய புடைவையும் துடைத்துக் கொண்ட கையுமா வந்தது... ரமாதான்!

இளைத்து, அழகு குன்றி, கன்னத்தில் கவலைக் குழியுடன் இருந்தாள்.

ரமாவின் கணவர் கைநிறைய சம்பாதிக்கிறவர் தான்!

என்றாலும், பெரிய குடும்பி, தம்பி, தங்கைகளென்று வாழ்க்கையைப் பங்குகொள்ள நிறைய பேர்.

எப்போழுதோ ஒருமுறை பெரியப்பா, "ரமாவை வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேன்னு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமாகப் பார்த்துக் கொடுத்திருக்கலாம்' என்று நொந்து கொண்டது இப்பொழுது நினைவு வந்தது.

"வா பாலு'

"யார் ரமா, இந்தத் தம்பி.'

"என் தம்பிதான் அத்தை, பாலு'

"அடடே, இப்பத்தான் ஞாபகம் வருது, உங்க சித்தப்பா பிள்ளை இல்லே.'

"ஆமாம்.'

"உட்காருப்பா.'

உட்கார்ந்து கொண்டேன்.

"ரமா, தம்பிக்குக் காஃபி கொண்டு வா.'

"பாலு காஃபி, டீயெல்லாம் சாப்பிட மாட்டான். ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.' - அன்புடன் என் தோளைப் பிடித்து அழுத்தி விட்டுச் சொன்னாள்.

"ஊர்ல எல்லாரும் சௌக்கியமா...?' என்று மாமி சம்பிரதாய விசாரணைகளைத் தொடங்கினாள்.
ரோபோ மாதிரி எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன்.

மனசெல்லாம் அந்தக் கேள்விதான்!

ரமாவா இவள்... "என் தம்பிதான், அத்தை. பாலு' என்று சொல்பவள் ரமாவா? ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன் என்று பரபரப்பாய்ச் சொல்பவள் ரமாவா?

எப்படி மாறிப் போனாள்?

யோசித்ததில் புகுந்த வீட்டின் அழுத்தங்கள் ரமாவை இப்படி மாற்றியிருக்கும் என்று புரிந்தது.

பட்டை தீட்டினால் வைரம். புடம் போட்டால் தங்கம். அனுபவப்பட்டால்தானே மனிதர்கள்?

ரமாவை இனி அக்கா என்று கூப்பிடும் பொழுது அது வெறும் சம்பிரதாயமாக இருக்காது.


நன்றி - மங்கையர் மலர் - போளூர் ஆர். வனஜா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக