ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

+4
ரூபன்
தாமு
ramesh.vait
மீனு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by மீனு Fri Oct 30, 2009 12:55 am

[You must be registered and logged in to see this link.]

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்.. தவறுகள் இருப்பின்..மன்னிக்கவும்.. இங்கே சொல்வன..சத்தியமா யாரையும் புண் படுத்துவதற்கு அல்ல மீனு இங்கே ஒரு சின்ன விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..


இங்கே உங்கள் கருத்துக்களையும்.. எதிர் பார்க்கின்றேன்... நமக்கு நினைவாற்றல் எவளவு அவசியமோ ...அதே போல ஞாபகமறதி மிக அவசியம்...என்ன ..ஒரு மார்க்கமா பார்கிறீங்க ,, வழமை போல மொக்கை போடா கிளம்பிட்ட மீனு என்று பலர் தலையில் அடிச்சுக்கிற சவுண்ட் கேக்குது..- இருந்தாலும்..மீனு கொஞ்சம் பிடிவாத காரி ..சொல்ல வந்ததை சொல்லாம போக மாட்டா...


வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ,.. அதேபோல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி... மிக அவசியம். இது கொஞ்சம் முரண்பாடாகத் தோன்றினாலும் இதில் மிகப்பெரிய உண்மை மறைந்துள்ளது.

ஒருவரின் கைரேகையைப் போலவே... மற்றொருவரின் கைரேகை இருக்காது. ..உடலைச் சரிபாதியாக மடித்தால் இரண்டு பகுதிகளுக்கும்... வித்தியாசம் காணலாம். இயற்கையாகவே... உடலின் இடப்பக்க உறுப்புகள் ...சற்று சிறியனவாக இருக்கும். அப்படி இருக்கும்போது மனிதனுக்கு மனிதன்... எப்படி வேறுபடாமல் இருக்க முடியும்?

அன்றாட வாழ்வில் நாம் ...பலவித மனிதர்களைச் சந்திக்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறார்கள்... சிலர் மிகவும் நல்லவர்கள்... ஆனால் நாம் விரும்பியபடி அவர்களுடன்... நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டுவதில்லை.... சிலர் வலியவந்து அட்டைபோல் நம்மை ஒட்டிக்கொள்கிறார்கள்... தாங்கிக் கொள்வதற்கும் முடியவில்லை,... தட்டிவிடுவதற்கும் தெரியவில்லை.

தாயின் வயிற்றிலுள்ள குழந்தையால்.. கேட்கவும்,.. கற்றுக்கொள்ளவும் முடியும்.. என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது... ஆனால் நாம் எதைத்தான்... கற்றுக்கொண்டு வெளியே வந்தோம் ..என்பது விளங்காத புதிர்.... யாரையும் நம்மால் அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை... நம்மில் பெரும்பாலோர்க்குப் பரந்தமனது.

எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறோம்... பட்டபின்தான் எல்லாம் விளங்குகிறது. மூளைக்கு வலி கிடையாது.... இதயம் வலியறியுமே! ..பிறந்த குழந்தைக்குக் கறுப்பு.., வெள்ளை தவிர வேறு வித்தியாசங்களே தெரியாது.... நமக்கும் பல சமயங்களில் வித்தியாசம் காணத் தெரிவதில்லை... நம்பிக்கைத் துரோகங்களையும் வஞ்சகங்களையும்... சந்தித்தபின் கவலை கொள்கின்றோம்..... இவரா அப்படிச் செய்துவிட்டார்?.. அவரா இப்படிச் சொன்னார்? ..என்றெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறது.

ஏமாற்றிவிட்டாளே படுபாவி ..என்று ஆதங்கப்படுகிறது. இப்படியும் கேடுகெட்ட உறவுகளா? ..என்று உள்ளம் அழுகிறது. அடடா, கவலைகளில்தான் எத்தனை எத்தனை ரகங்கள்!


ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கஷ்டநிலை... சிலர் அழகாகச் சிரிக்கிறார்கள். ..அருள்வடிவாகத் தெரிகிறார்கள்... சிறிது நேரத்தில் அந்தச் சிரிப்பே பயங்கரமாகத் தோன்றுகிறது... மெல்ல மெல்ல அவர்கள் காட்டுமிராண்டியாய் ...மாறுவதைப் பார்க்க முடிகிறது. யாரைத்தான் நம்புவது?

இங்கு ஒரு சிறிய கதை ஒன்றை ..சொல்ல விரும்புகிறேன் என் நண்பர்களுக்கு ..என்ன டா கண்ணோட்டம் என்கிறாள்..இப்போ கதைக்கு வரால் என்று நினைப்பதும் தெரியும்..ஆனா..கண்டிப்பா படியுங்கள் நண்பர்களே..

ஒரு ஜென் குரு. அவருடன் அவரது சீடன்... குடிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்... வழியில் ஒரு ஆறு... அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்... ஓர் இளம்பெண்ணும் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள்... திடீரென ஆற்றில் வெள்ளம். ...அதிவேகமாக நீர்மட்டம் உயர்ந்துவிட்டது.... அந்தப் பெண்ணோ வெள்ளத்தில் தத்தளித்தாள்... உயிருக்குப் போராடினாள்... ஜென் குரு பட்டென்று அவளை நெருங்கி அப்படியே தூக்கினார்... தன் தலைக்குமேல் அவளைத் தூக்கியபடி ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தார்.... அந்தப் பெண்ணை இறக்கி விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தார்... சீடனுக்கோ.. ஒரே அதிர்ச்சி. ...ஆனாலும் குருவைக் கேள்வி கேட்க ...அவனுக்குத் தைரியமில்லை.... குருவோ அவனுடைய தவிப்பை புரிந்து கொண்டார்... சீடனைப் பார்த்து,.. `என்ன குழப்பம்? ..பயப்படாமல் கேள்' என்றார்.... தயங்கிய சீடன் தைரியத்தை ...வரவழைத்துக் கொண்டு,.. `குருவே, இன்று காலை ஆற்றில் நடந்த சம்பவம்...' என்று இழுத்தான்... `தைரியமாகச் சொல்' ...என்றார் குரு. `இல்லை குருவே, ஆற்றில்.. ஓர் இளம்பெண்ணைத் தொட்டுத் தலைக்குமேல் தூக்கினீர்களே?'... என்று எப்படியோ கேட்டுமுடித்துவிட்டான் சீடன்... ஜென் குரு கோபப்படவில்லை... கடகடவென்று சிரித்தார். ...`சீடனே, அவளை நான் அங்கேயே இறக்கி விட்டுவிட்டேனே! ...நீ இன்னுமா அவளைச் சுமந்துகொண்டிருக்கிறாய்?' ...என்றார். சீடன் மவுனமானான்.

அந்த சீடனைப் போலத்தான் ..நாமும். ...தேவையற்ற பல விஷயங்களை நம் தலைமேல்... தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறோம்... பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல....

சிலருடைய மனம் எப்போதுமே.. எதையாவது எண்ணிக் கலங்குகிறது. ..வசமாக சிக்கிக்கொண்டோமோ... என்று அடிக்கடி பயப்படுகிறது... அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையே அவஸ்தைதான்... வாழ்வின் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டால் ஆனந்தம்.

சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத பக்குவத்தைப் பெற்றுவிட்டால் பரமானந்தம்.... நினைவுகளால், ...கனவுகளால் நெருக்கப்படுகின்ற நெஞ்சம்..., ஆசைகளால் அவஸ்தைகளால் நொறுக்கப்படுகின்ற இதயம்..., உறவுகளால், பிரிவுகளால் பிழியப்படுகின்ற கண்ணீர்..., துரோகங்களால் விரோதங்களால் காயமடைகின்ற உணர்வுகள் இவைஅனைத்தையும்... மேற்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வதில்தான் மானுடத்தின் பெருமை அடங்கி உள்ளது...

மனித முகங்களில் பெரும்பாலானவை பொய் முகங்களே.... உறவுகளில் ஏராளமானோர் காகிதப்பூக்களே.... நட்பிலும்கூட நரிக்குணங்கள்... கைகுலுக்கும்போதுதான் கரடி என்று உங்களுக்குத் தெரியவரும்....

சிலர் சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பார்கள்.... சிலர் விஷம வார்த்தைகளிலேயே கதையை முடிப்பார்கள்.... இன்னும் சில கில்லாடிகள் இருகிறார்கள்.... தங்களுக்குக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் வந்து பேசுவார்கள்..., குழைவார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போதெல்லாம்... இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழும்பும்.... நல்லவர்களைவிட இத்தகைய களிமண் உருண்டைகளே உலகில் அதிகம்.

. தங்களுக்குள்ளே எப்போதும் கொம்பு.. சீவிக்கொண்டிருக்கின்ற மனிதர்கள் ஏராளம்.... நன்றி கெட்டவர்கள் எக்கச்சக்கம்... அற்புதமான உலகில் அவர்கள் அற்பமானவர்கள். அவர்களுக்கு நடுவே... நம்மை நாம் காத்துக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும்.... அது எப்படி முடியும்? முடியும். வேதனை செய்கின்ற நினைவுகளையும், வஞ்சக வார்த்தைகளையும்... மனிதர்களையும் மறக்கத் தெரிய வேண்டும்.

ஆம்! மறக்கத் தெரிய வேண்டும்.... அந்த வித்தையைக் கற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியும்... தேர்வெழுதப் போகின்ற மாணவனுக்கு ஞாபகசக்தி தேவை... காயப்பட்டுத் துடிப்பவனுக்கு வலியைப் பற்றிய நினைவே இல்லாத மறதி தேவை.

ஞாபக மறதியை பலவீனம் என்று கருதிவிடக்கூடாது. ...அதுவும் ஒருவகை யோகம். விழிப்பிற்கும் ...உறக்கத்திற்கும் எப்படியோ, அப்படித்தான் ஞாபக சக்திக்கும்.., ஞாபக மறதிக்கும் சம முக்கியத்துவம் உண்டு... நினைவுகளைத் துறந்துவிட்டால் ...சுகம் சுகம் சுகம் மட்டுமே .

மறதியே நிம்மதி... இங்கு நம் ஈகரையில் பலரை தினமும் சந்திக்கின்றோம்....பேசுகின்றோம்.. மனம் விட்டும் பேசுகின்றோம்.. பல சமயம் சந்தோசங்களும் ...சில சமயம் துக்கங்களும் ..நமக்கு கிடைக்கின்றன.. சந்தோசங்களை நம் மனசில் அழகா நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.. துக்கங்களை மறந்து விட வேண்டும்..

ஞாபகங்கள் வாழ்வை பழைய நிலைக்கு அல்லது கவலைகளுக்குள் இழுத்துச் செல்கின்றன.... மறதியே வாழ்வைப் புதிதாக்குகிறது.... கலக்கத்துடனே உறங்கச் சென்று அதே கலக்கத்துடன்.. காலையில் கண்விழிக்கின்றவன் நிம்மதியாக வாழ முடியுமா? ...தூக்கத்தில் கண்ட கெட்ட கனவையே... நினைத்துக் கொண்டிருப்பவன் அன்றைய பொழுதை.... ரசிக்க முடியுமா? தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பவர்கள் ...எத்தனை பேர்? தூக்க மாத்திரைகளையே உணவாக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்? ...அத்தனைக்கும் காரணம் என்ன? ...தேவையற்ற நினைவுகள்!... அத்தகைய நினைவுகளை.. உதிர்த்துவிடத் தெரிய வேண்டும்.

நஷ்டக் கணக்கையே நினைத்துக்கொண்டிருந்தால் ...எதிர்காலமே இருளாகத் தெரியும். மற்றவர்கள் ஏற்படுத்திய காயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால்.. வாழ்க்கையே வேதனையாகத் தோன்றும்.... எனவே மறக்கப் பழகுங்கள். வாழ்வைப் பழைய நிலைக்குள் தள்ளுகின்ற நினைவுகளைத் துறந்துவிட்டால் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றுவிடும்....

காதல் தோல்வி என்று பலர்... தற்கொலை செய்து கொள்கிறார்களே,... அதில் என்ன நியாயம் இருக்கிறது?... மறக்க முடியவில்லை என்று எழுதி வைத்துவிட்டுத் தங்களை மாய்த்துக் கொள்கிறார்களே!... அவர்கள் வாழ்ந்ததில் என்ன அர்த்தம் இருக்கிறது?

இங்கே மீனு சொன்னவற்றை பலர் முழுதாக படித்தார்களோ தெரியவில்லை ..கண்டிப்பா படித்தவர்கள்..மனசு இப்பொழுது தெளிவுடன் இருக்கும் என்பது..மீனுவின் அசைக்க முடியாத நம்பிக்கை ..

நன்றிகள்..

கண்ணோட்டம் என்று வந்தால்..புத்தியோட்டம் இருக்கென்று சலிக்கின்றீர்களா..நாம் தரும் கண்ணோட்டத்தால் சிரிக்கவும் வேண்டும்..சிந்திக்கவும் வேண்டும் என்பதே இந்த மீனுவின் ஆசை.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by ramesh.vait Fri Oct 30, 2009 2:10 am

[You must be registered and logged in to see this image.]
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by தாமு Fri Oct 30, 2009 5:19 am

மீனு உனக்கு உள்ள இவ்வளவு டலன்ட்டா.... உண்மையில் மனமார்ந்த பார்ட்டுக்குள்... வாழ்த்துக்கலும். [You must be registered and logged in to see this image.]

ஞாபக மரதி நல்லது தான்... உண்மை மீனு ஆனால் நம் பட்ட கஷ்டம் அடிக்கடி நமக்கு கண் முன் வருகிரது....

அந்த கஷ்டத்தை மரக்கனும்... ஆனால் அது நமக்கு சொல்லி தந்த படத்தை மறக்க கூடாது.... [You must be registered and logged in to see this image.]

எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறோம்... பட்டபின்தான் எல்லாம் விளங்குகிறது. மூளைக்கு வலி கிடையாது.... இதயம் வலியறியுமே! ..பிறந்த குழந்தைக்குக் கறுப்பு.., வெள்ளை தவிர வேறு வித்தியாசங்களே தெரியாது.... நமக்கும் பல சமயங்களில் வித்தியாசம் காணத் தெரிவதில்லை... நம்பிக்கைத் துரோகங்களையும் வஞ்சகங்களையும்... சந்தித்தபின் கவலை கொள்கின்றோம்..... இவரா அப்படிச் செய்துவிட்டார்?.. அவரா இப்படிச் சொன்னார்? ..என்றெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறது.

இந்த மாதிரி நம்பி நான் ஏமாந்தது ஏராலம்.... நான் உதவி என்று வந்ததும் முன் ஓடி செய்து பின் கறிவேப்பிலை போல் தூக்கி போட்டவர்கள் அதிகம்... [You must be registered and logged in to see this image.]

என் பழைய‌ நண்பன் ( அவனையும் அவன் குடும்பத்தையும் அடியோடு வெறுக்கிரேன் ) எவ்வளவு நம்பிக்கையில் இருந்தோன்... நான் திருமணம் ஆகி வந்ததும் அவர்கள் வீட்டில் தங்கி இருந்த போது என் மனைவியை எவ்வளவு கொடுமை படுத்துனாங்க தெரியுமா? ஆனால் என் எதிரில் அவர்கலிடம் நல்ல பழகுவது போல் நடித்து அவலை நெகடித்து விட்டார்கள்.. [You must be registered and logged in to see this image.] . [You must be registered and logged in to see this image.]


உண்மை தெரிந்தது நான் உடைந்து போனேன்.... [You must be registered and logged in to see this image.]

திருமணம் ஆகி வந்ததை விட அவல் இளைத்து, ( இரவு என்னுடன் சாப்பிடும் சாப்பாடு மாடும்தான் ... சாப்படுக்கு பனம் தந்து இருந்தோம் ), மன நிலை பதிக்கும் அளவுக்கு ( தானாக புலம்ப ஆரபித்தால் )ஆகிடுச்சு.... [You must be registered and logged in to see this image.]

அப்பரம் நான் தனியாக வந்தும் அவள் கொஞ்சம் கொஞ்சம் தேர ஆரம்பித்தால்... [You must be registered and logged in to see this image.]

அந்த சீடனைப் போலத்தான் ..நாமும். ...தேவையற்ற பல விஷயங்களை நம் தலைமேல்... தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறோம்... பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... [You must be registered and logged in to see this image.]

ஆனால் அதனை எல்லம் மரக்க முடியலையோ என்ன செய்ய... இன்பத்தை விட துன்பம் அதிகமாக நினைவுக்கு ஆட்டி படிக்கிரது.... [You must be registered and logged in to see this image.]

அதுக்குதான் மனித மனம் குரங்கு என்று சொன்னார்கலோ... [You must be registered and logged in to see this image.]

மனித முகங்களில் பெரும்பாலானவை பொய் முகங்களே.... உறவுகளில் ஏராளமானோர் காகிதப்பூக்களே.... நட்பிலும்கூட நரிக்குணங்கள்... கைகுலுக்கும்போதுதான் கரடி என்று உங்களுக்குத் தெரியவரும்.
...
உண்மையான வார்த்தை மீனு... ஆனால் அதை நாம் தெரிந்து கொள்ளவது ரொம்ப கடினம்.... [You must be registered and logged in to see this image.]

காதல் தோல்வி என்று பலர்... தற்கொலை செய்து கொள்கிறார்களே,... அதில் என்ன நியாயம் இருக்கிறது?... மறக்க முடியவில்லை என்று எழுதி வைத்துவிட்டுத் தங்களை மாய்த்துக் கொள்கிறார்களே!... அவர்கள் வாழ்ந்ததில் என்ன அர்த்தம் இருக்கிறது? [You must be registered and logged in to see this image.]


என்னை பொருத்த வரை தற்கொலை என்பது கோழை தனம்... [You must be registered and logged in to see this image.]


அதுவும் காதலுக்கா என்பது சுத்த அம்பக்... [You must be registered and logged in to see this image.]


" வாழ்க்கையோ போர்களம்
வாழ்ந்து தான் பார்க்கனும்
போர்கலம் மாரலாம்
வாழ்க்கை தான் மாருமே...." [You must be registered and logged in to see this image.]


எதிர் நீச்சல் போட்டு வெற்றி பேறுவது தான் வாழ்க்கை.... [You must be registered and logged in to see this image.]
அந்த வெற்றி தான் நிரந்தர சுகமும் கூட... [You must be registered and logged in to see this image.]

சரி ரொம்ப அருத்துட்டேனா... சாரி சாரி.... [You must be registered and logged in to see this image.]


யாரும் தவராக நினைக்க வேண்டாம் இதை படித்ததும் என்னையும் மீரி என் மன வேதனை கொட்டிட்டேன்... [You must be registered and logged in to see this image.]

தவறாக என்ன வேண்டாம்... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by ரூபன் Fri Oct 30, 2009 6:01 am

அட்வைஸ் பிடிக்காமல்தான் நான் பள்ளிக்குடமே போவதை விட்டேன் இங்கும் மீனு ஒரே அட்வைஸ் மழையாக இருக்கே அதுசரி எங்கே கண்ணோட்டம் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by kirupairajah Fri Oct 30, 2009 10:49 am

மனித வாழ்க்கையில் நடைமுறையில் நிகழும் பல சம்பவங்கள் மிகவும் சிறப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, மனதில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து வாழ்வது மனதிற்கு மகிழ்ச்சிதான், "வாழ்வைப் பழைய நிலைக்குள் தள்ளுகின்ற நினைவுகளைத் துறந்துவிட்டால் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றுவிடும்" இது உண்மைதான், ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமில்லை, சிலர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இலகுவாக மாறிவிடுவார்கள், சிலர் தங்களைத்தாமே வருத்திக்கொண்டு கஸ்ரப்படுவார்கள், இதற்கு அவர்கள் வளர்ந்த சூழ்நிலையும் காரணமாய் அமைந்து விடும். ஈகரைக்கண்ணோட்டத்திற்கு இங்கு கூறப்பட்டவைக்கும் எந்த தொடர்புமில்லை, ஆனால் இதை வேறு ஒரு தலைப்பில் பதிந்திருந்தால் அனேகமானவர்கள் பார்க்கத்தவறியிருப்பார்கள். நல்ல பதிவு பாராட்டுக்களும் நன்றியும் மீனு!


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by nandhtiha Fri Oct 30, 2009 10:52 am

வணக்கம்
நம்புவதற்காகச் சந்தேகப் படு என்பது என் கொள்கை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by அபிராமிவேலூ Fri Oct 30, 2009 11:38 am

ஞாபகங்கள் வாழ்வை பழைய நிலைக்கு அல்லது கவலைகளுக்குள் இழுத்துச் செல்கின்றன.... மறதியே வாழ்வைப் புதிதாக்குகிறது..

மறதியே நிம்மதி... இங்கு நம் ஈகரையில் பலரை தினமும்
சந்திக்கின்றோம்....பேசுகின்றோம்.. மனம் விட்டும் பேசுகின்றோம்.. பல சமயம்
சந்தோசங்களும் ...சில சமயம் துக்கங்களும் ..நமக்கு கிடைக்கின்றன..
சந்தோசங்களை நம் மனசில் அழகா நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.. துக்கங்களை
மறந்து விட வேண்டும்..


மனித முகங்களில் பெரும்பாலானவை பொய் முகங்களே.... உறவுகளில் ஏராளமானோர்
காகிதப்பூக்களே.... நட்பிலும்கூட நரிக்குணங்கள்... கைகுலுக்கும்போதுதான்
கரடி என்று உங்களுக்குத் தெரியவரும்...


வளை நான் அங்கேயே இறக்கி விட்டுவிட்டேனே! ...நீ இன்னுமா அவளைச் சுமந்துகொண்டிருக்கிறாய்?'
எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறோம்... பட்டபின்தான் எல்லாம் விளங்குகிறது. மூளைக்கு வலி கிடையாது.... இதயம் வலியறியுமே!
[You must be registered and logged in to see this image.]
மீனும [You must be registered and logged in to see this image.] சூப்பர் ரொம்ப நல்ல கருத்துகள்
மனதை மட்டும் அல்ல புத்தியும்
தெளிந்த நிரோடையாக உள்ளது
[You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by Tamilzhan Fri Oct 30, 2009 11:38 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by அபிராமிவேலூ Fri Oct 30, 2009 11:40 am

Tamilzhan wrote:[You must be registered and logged in to see this image.]
சும்மா கை தட்டுன பத்தாது கருத்து கூறவும் (மீனுவின் வேண்டுகோள் )
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by மீனு Fri Oct 30, 2009 11:49 am

இங்கே பாராட்டிய ரமேஷ்,தாமு,கிருபை,நந்திதா அக்கா ,தமிழன் அண்ணா..அபி குட்டி எல்லோருக்கும் நன்றிகள்.. ..பல
தாமு உங்கள் வாழ்க்கையில் உங்கள் மனசில் ஏற்பட்ட வலி மறப்பது கடினமே..
உங்கள் உயிரை(மனைவியை ) வதைத்து உள்ளார்களே.. இவர்களும்மனிதன் என்ற உருவத்தில் வாழும் ..மிருகங்கள் .தான்..இவர்கள் திருந்த மாட்டார்கள் தாமு ..
கிருபை கண்ணோட்டம் என்பதில் இதில் போட்டது தப்பாய் எனக்கு தெரியல..போடணும் என்று நினைத்தேன்..போட்டேன்..
அபி குட்டி ரொம்ப நன்றி குட்டி ..
அண்ணா நீங்க கைதட்டினாலே அது பெரிய பாராட்டுதான்..
ரமேஷ் ,,அவர் ஸ்டைல் ..இப்படிதான் .....


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum