ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்

2 posters

Go down

புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர் Empty புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்

Post by சாமி Sat Nov 02, 2013 8:33 am

உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசம் விந்திய மலைத் தொடரின் பன்னா வனத்தில் முற்றிலுமாக அழிந்துப்போன புலிகள் இனத்தை மீண்டும் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் விஞ்ஞானிகள் மற்றும் வன அதிகாரிகள். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை.

கடந்த நூற்றாண்டில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 60 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டாது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே.

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மட்டுமே புலிகள் வசிக்கின்றன. இந்தியாவில் புலிகள் அழிந்த - அழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் விந்திய மலைத் தொடர் - பன்னா வனப்பகுதி. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட புலிகள் வசித்தன. இது வன உயிரியல் மாஃபியாக்களின் கண்களை உறுத்தின. அதைத் தொடர்ந்து அப்பகுதி, புலிகள் வேட்டைக்காக மாஃபியாக்களின் சொர்க்க பூமியானது. குறிப்பாக, வட இந்தியாவின் பாரம்பரிய புலி வேட்டைக்காரர்களான பஹாரியாஸ் மற்றும் பாருதி சமூகத்தினர் அங்கு இருந்த மொத்தப் புலிகளையும் வேட்டையாடி தீர்த்தனர். ஒருகட்டத்தில் அங்கு புலிகள் இனமே அழிந்துபோனது.

அதன்பின் பல ஆண்டுகள் அங்கு புலிகள் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்ட திட்டங்கள் பலன் தரவில்லை. 2008-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலைய (Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானியான ரமேஷ் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்ட ‘பன்னா புலிகள் மீட்டெடுப்பு மற்றும் மறு உருவாக்கம் திட்டம்’ இன்று அங்கு கணிசமான எண்ணிக்கையில் புலிகளை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து ரமேஷிடம் பேசினோம்.

புலிகள் மறு உருவாக்கம்

‘‘புலிகள் மறு உருவாக்கம் என்பது அரிதினும் அரிதாகவே வெற்றிப் பெறக்கூடியத் திட்டம். ஏனெனில் அதன் வாழ்க்கை முறை, அதன் மீதான வேட்டைகள், மனிதன் - புலி மோதல்கள் அதனை அழிவுப்பாதைக்கு கொண்டுச் செல்கின்றன. மேலும், புலிகள் தூண்டப்பட்ட சினை முறை (Induced ovulation) மூலமே கர்ப்பம் தரிக்கின்றன. அதாவது, ஒரு பெண் புலி, பல ஆண் புலிகளுடன் பல முறை இணை சேர்ந்தாலும் அதுவாக விரும்பினால் மட்டுமே கருத்தரிக்கும். இது பூனைகள் குடும்பத்துக்கும் சில நாய்கள் குடும்பத்துக்கும் உரிய உயிரியல் உண்மை. இதனால், புலிக்குட்டிகள் உயிர் வாழும் வாய்ப்பு 50 சதவீதத்துக்கும் குறைவே.

ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் காப்பகம், தென் ஆப்பிரிக்கா உள்பட உலகின் பல வனங்களில் இதுபோன்ற திட்டங்கள் முயற்சிக்கப்பட்டாலும் அவை வெற்றி பெறவில்லை. அந்த சூழலில்தான் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் என்னிடம் இத்திட்டத்தை 2008-ம் ஆண்டு ஒப்படைத்தது. திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான என் தலைமையில் டாக்டர் ஜான்சன், டாக்டர் சுபரஞ்சன் சென் மற்றும் சில உதவியாளர்களுடன் களம் இறங்கினேன்.

மொத்தம் 543 சதுர கி.மீ. கொண்ட பன்னா வனப்பகுதியில் எங்கள் குழுவினர் ஓர் ஆண்டு கள ஆய்வு செய்தோம். ஆய்வில் அங்கு சராசரியாக ஒரு சதுர கி.மீ. பரப்பில் 45 மான்கள் வரை இருப்பது தெரிந்தது. அதன்படி இங்கு 25 முதல் 35 புலிகள் வரை வசிக்கலாம்.

2009-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் பென்ஞ் புலிகள் காப்பகம், பந்தாவ்கார் புலிகள் காப்பகம், கன்ஹா புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து இரு பெண் புலிகள், ஒரு ஆண் புலி என மூன்று புலிகளைக் கொண்டுவந்து பன்னாவில் விட்டோம். என்ன ஆச்சரியம். அடுத்த ஆண்டே இரு பெண் புலிகளும் தலா நான்கு குட்டிகளை ஈன்றன. 2011-ம் ஆண்டு கன்ஹா புலிகள் காப்பகத்தில் இருந்து மேலும் இரு பெண் புலிகளை கொண்டு வந்தோம். அவைகளும் ஐந்து குட்டிகளை ஈன்றன. இப்படியே கடந்த நான்கு ஆண்டுகளில் பன்னா வனத்தில் புலிகளின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு புலியின் கழுத்திலும் செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் ஜி.பி.எஸ். ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.

இதுவரை இங்கு ஆறு புலிக்குட்டிகள் இறந்துள்ளன. புலிக்குட்டிகளின் உயிர் வாழும் சாத்தியம் 50 சதவீதம்தான். ஆனால், பன்னாவில் அதை 83 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இந்த சதவீதம் ஓர் உலகச் சாதனை. இப்படி ஒரு மறு உருவாக்கம் இதுவரை உலகில் எங்குமே சாத்தியப்படவில்லை.

தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்துக்காக கூடுதலாக 1000 சதுர கி.மீ. வனப்பகுதியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் இச்சாதனை சாத்தியமானது. குறிப்பாக, பன்னா வன உயர் அதிகாரிகள் தொடங்கி அடிமட்ட ஊழியர்களின் பங்கு இதில் மகத்தானது. விரைவில் பன்னா மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்துவோம்” என்றார்.

டாக்டர் ரமேஷ் பற்றி…

இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் ரமேஷ் ஒரு தமிழர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவுக்கு உட்பட்ட மருத்துவக்குடி கிராமம். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் எம்.எஸ்.சி. வன உயிரியல் படித்த இவர், கடந்த 16 ஆண்டுகளாக இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுகிறார். இணை ஆய்வாளரான டாக்டர் ஜான்சனும் தமிழரே. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் மீன்கள் ஆராய்ச்சியாளர்.

இச்சாதனை வெளிநாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட சில நாடுகள் இதன் உயர் தொழில்நுட்பம் மற்றும் செயல்திட்டத்தை கேட்டுப் பெற்றுச் சென்றுள்ளன. சமீபத்தில் கம்போடியா நாட்டின் வனத்துறை அழைத்ததின்பேரில் ரமேஷ் அங்கு சென்று இத்திட்டத்தை விளக்கம் அளித்துவிட்டு வந்துள்ளார். -தெஹிண்டு
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர் Empty Re: புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 02, 2013 10:28 am

மிகவும் பாராட்டப்படவேண்டிய செய்தி. நன்றி சாமி அவர்களே புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர் 1571444738 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum