Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி கதைகள்
2 posters
Page 1 of 1
தீபாவளி கதைகள்
மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில் ஒவ்வொரு கதை இருக்கிறது.
1. தந்திராஸ்
மன்னர் ஹிமாவின் மகன் தனது 16 வயதில் அதுவும் திருமணமான 4–வது நாளில் பாம்பு கடித்து இயற்கை எய்துவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது தனது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புதுமனைவி, பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள். வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள், பொற்காசுகள், வெள்ளிகாசுகளை, நவரத்தினங்களை கொட்டி வைத்தாள். இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து அரண்மனையே பிரகாசித்தது.
குறிப்பிட்ட நேரத்தில் இளவரசனின் உயிரை எடுப்பதற்காக எமன் பாம்பு வேடம் தரித்து உள்ளே வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின் கண்கள் குருடாகி விட்டது. இளவரசன் இருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டு கொண்டே இருந்தது. அதற்குள் விடிந்து விட்டது. 4–வது நாள் முடிந்து விட்டதால் பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின் தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்கள். இது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்.
அன்றைய தினம் பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் நீண்ட நாள் வாழ பூஜை செய்வார்கள். நன்கு பிசையப்பட்ட மாவில் தீபம் ஏற்றி, எமனுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். இந்து மரபுப்படி அழித்தல் தொழிலை செய்துவரும் எமனை, தனந்த்ரயோதஷி (தந்திராஸ்) தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தால் ஆண்களுக்கு ஆசி வழங்கி நீண்ட ஆயுள் கொடுப்பார் என்பது ஐதீகம்.
1. தந்திராஸ்
மன்னர் ஹிமாவின் மகன் தனது 16 வயதில் அதுவும் திருமணமான 4–வது நாளில் பாம்பு கடித்து இயற்கை எய்துவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது தனது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புதுமனைவி, பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள். வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள், பொற்காசுகள், வெள்ளிகாசுகளை, நவரத்தினங்களை கொட்டி வைத்தாள். இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து அரண்மனையே பிரகாசித்தது.
குறிப்பிட்ட நேரத்தில் இளவரசனின் உயிரை எடுப்பதற்காக எமன் பாம்பு வேடம் தரித்து உள்ளே வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின் கண்கள் குருடாகி விட்டது. இளவரசன் இருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டு கொண்டே இருந்தது. அதற்குள் விடிந்து விட்டது. 4–வது நாள் முடிந்து விட்டதால் பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின் தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்கள். இது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்.
அன்றைய தினம் பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் நீண்ட நாள் வாழ பூஜை செய்வார்கள். நன்கு பிசையப்பட்ட மாவில் தீபம் ஏற்றி, எமனுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். இந்து மரபுப்படி அழித்தல் தொழிலை செய்துவரும் எமனை, தனந்த்ரயோதஷி (தந்திராஸ்) தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தால் ஆண்களுக்கு ஆசி வழங்கி நீண்ட ஆயுள் கொடுப்பார் என்பது ஐதீகம்.
Re: தீபாவளி கதைகள்
2. நரகசதுர்த்தி
இது தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் மாதம் 1–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டு விட்டது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவனது சொர்க்க ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான். 16 ஆயிரம் பெண்களையும் சிறைபிடித்தான். தேவேந்திரனின் தாய் அதிதி அணிந்திருந்த மந்திர சக்தி கொண்ட கம்மலையும் எடுத்து சென்று விட்டான்.
இதனையடுத்து தேவர்கள் தங்களை காக்க வேண்டி மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து அபயம் கேட்டனர். அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்த மகாவிஷ்ணு நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று தேவர்களையும், மக்களையும் காத்தார்.
நரகாசுரன் தேவலோகத்தில் இருந்து சிறைபிடித்து சென்ற 16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். அதிதியின் மந்திர சக்தி கொண்ட கம்மலையும் மீட்டார். உலக மக்களை பயத்தில் இருந்து நீக்கிய அந்த நாளையே நரக சதுர்த்தி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
இது தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் மாதம் 1–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டு விட்டது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவனது சொர்க்க ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான். 16 ஆயிரம் பெண்களையும் சிறைபிடித்தான். தேவேந்திரனின் தாய் அதிதி அணிந்திருந்த மந்திர சக்தி கொண்ட கம்மலையும் எடுத்து சென்று விட்டான்.
இதனையடுத்து தேவர்கள் தங்களை காக்க வேண்டி மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து அபயம் கேட்டனர். அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்த மகாவிஷ்ணு நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று தேவர்களையும், மக்களையும் காத்தார்.
நரகாசுரன் தேவலோகத்தில் இருந்து சிறைபிடித்து சென்ற 16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். அதிதியின் மந்திர சக்தி கொண்ட கம்மலையும் மீட்டார். உலக மக்களை பயத்தில் இருந்து நீக்கிய அந்த நாளையே நரக சதுர்த்தி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
Re: தீபாவளி கதைகள்
3. பெரிய தீபாவளி
இதுதான் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை. நரகாசுரன் இறந்ததையடுத்து அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் இனிப்பு சாப்பிட்டு பட்டாசுகளை வெடித்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதை லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் தான் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதாக நம்பப்படுகிறது. ராமர், சீதையுடன் அயோத்தி திரும்பிய மகிழ்ச்சியின் வெளிப்பாடே பெரிய தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதேபோல பெரிய தீபாவளி நாளில்செல்வத்தின் கடவுளான லட்சுமி வீட்டுக்கு வந்து நேரடியாக அருள்புரிவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அவர் வீட்டுக்குத்தான் லட்சுமி வருவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
எனவே பெரிய தீபாவளி தினத்தன்று வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி விளக்குகளால் அலங்கரித்து லட்சுமியை வரவேற்கும் விதமாக பூஜை செய்வார்கள். இதனைத்தொடர்ந்து ‘தீபாவளிச்சா பட்வா’ என்ற விழா கொண்டாடப்படுகின்றது. இதன்படி பெண்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டி ஆலமரத்தில் நூல் கட்டி சுற்றி வந்து வழிபட்டு சிறப்பு பூஜை செய்வார்கள்.
இதுதான் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை. நரகாசுரன் இறந்ததையடுத்து அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் இனிப்பு சாப்பிட்டு பட்டாசுகளை வெடித்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதை லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் தான் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதாக நம்பப்படுகிறது. ராமர், சீதையுடன் அயோத்தி திரும்பிய மகிழ்ச்சியின் வெளிப்பாடே பெரிய தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதேபோல பெரிய தீபாவளி நாளில்செல்வத்தின் கடவுளான லட்சுமி வீட்டுக்கு வந்து நேரடியாக அருள்புரிவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அவர் வீட்டுக்குத்தான் லட்சுமி வருவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
எனவே பெரிய தீபாவளி தினத்தன்று வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி விளக்குகளால் அலங்கரித்து லட்சுமியை வரவேற்கும் விதமாக பூஜை செய்வார்கள். இதனைத்தொடர்ந்து ‘தீபாவளிச்சா பட்வா’ என்ற விழா கொண்டாடப்படுகின்றது. இதன்படி பெண்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டி ஆலமரத்தில் நூல் கட்டி சுற்றி வந்து வழிபட்டு சிறப்பு பூஜை செய்வார்கள்.
Re: தீபாவளி கதைகள்
4. கோவர்த்தன பூஜை
நாளை இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராமன் பாலம் கட்டிய போது அனுமான் கோவர்த்தன மலையை தூக்கி சென்றாராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும் போது என்னை ஏன் இங்கே வைத்து விட்டு செல்கிறாய் என்று அனுமானிடம் அந்த மலை கேட்டது.இதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து உன்னை தூக்குவார், அதுவரை இங்கேயே கார்த்திரு என்று அனுமான் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மலையை தூக்கி பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகிறார்கள்.
தேவலோக அரசபதவியில் இருந்த இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர், இந்திரனுக்கு செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்தி ஆயர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்து விழா எடுக்க கூறினார். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன்ஆயர்குலத்து மக்களையும், ஆலோ சனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை மறந்த இந்திரன் வர்ணதேவனை அழைத்து மேகங்களை திரட்டி கடும் மழையை பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான்.
அப்போது, கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி மக்களுக்கு குடையாக பிடித்து மக்களை காத்தார். தனது தோல்வியை உணர்ந்த இந்திரன் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதார மகிமையை உணர்ந்து கர்வம் அழிந்தான். இந்த நாளில் வீட்டிலேயே மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவார்கள்.
நாளை இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராமன் பாலம் கட்டிய போது அனுமான் கோவர்த்தன மலையை தூக்கி சென்றாராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும் போது என்னை ஏன் இங்கே வைத்து விட்டு செல்கிறாய் என்று அனுமானிடம் அந்த மலை கேட்டது.இதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து உன்னை தூக்குவார், அதுவரை இங்கேயே கார்த்திரு என்று அனுமான் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மலையை தூக்கி பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகிறார்கள்.
தேவலோக அரசபதவியில் இருந்த இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர், இந்திரனுக்கு செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்தி ஆயர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்து விழா எடுக்க கூறினார். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன்ஆயர்குலத்து மக்களையும், ஆலோ சனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை மறந்த இந்திரன் வர்ணதேவனை அழைத்து மேகங்களை திரட்டி கடும் மழையை பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான்.
அப்போது, கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி மக்களுக்கு குடையாக பிடித்து மக்களை காத்தார். தனது தோல்வியை உணர்ந்த இந்திரன் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதார மகிமையை உணர்ந்து கர்வம் அழிந்தான். இந்த நாளில் வீட்டிலேயே மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவார்கள்.
Re: தீபாவளி கதைகள்
5. ‘பாவ்–பீச்‘ விழா
நரகாசுரனை கொன்று விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார். அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டு வரவேற்றார். இந்த நாளை பாவ்பீச் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழா 4–ந் தேதி (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சகோதரர்கள் தங்களது சகோதரிகள் வீடுகளுக்கு சென்று அவர்களை நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர்.
நரகாசுரனை கொன்று விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார். அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டு வரவேற்றார். இந்த நாளை பாவ்பீச் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழா 4–ந் தேதி (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சகோதரர்கள் தங்களது சகோதரிகள் வீடுகளுக்கு சென்று அவர்களை நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர்.
Re: தீபாவளி கதைகள்
நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|