ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி

2 posters

Go down

ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி Empty ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி

Post by சிவா Sat Nov 02, 2013 1:25 am


ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி 1382421_576037559136012_128582792_n

''திருவள்ளுரில் இருக்கும் ஒரு போலி சாமியார் மென்பொருள் நிறுவனங்​களில் வேலை செய்யும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் மூளைச்சலவை செய்து, தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்​துகிறார். அந்த சாமியாரால் பல இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிகிறது. எப்படியாவது காப்பாத்துங்க சார்'' - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66802929) ஒரு பெண் குரல் இப்படி நடுக்கத்துடன் பேசியது.

அந்தப் பெண்ணைச் சந்தித்தோம். பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை. பதற்றத்துடன் பேசினார். ''நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்றேன். எனக்கு 23 வயசு. என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன், திருவள் ளூரில் இருக்கும் ஒரு ஆசிரமம் பற்றியும், அங்கு இருக்கும் சாமியார் பற்றியும் அடிக்கடி சிலாகித்துப் பேசுவான். ஒருநாள் என்னையும் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றான். அந்தச் சாமியாருக்கு 45 வயது இருக்கும். நெற்றி நிறைய பட்டை அடிச்சுக்கிட்டு காவிவேட்டி கட்டியிருந்தார். அம்பாள் சிலை வைத்து பஜனை, பூஜைனு ஜோராக, மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது. அவருடைய வார்த்தைகளும் உற்சாகம் தருவதாக இருந்தது. வாராவாரம் அங்கே போக ணும்னு ஆசை ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் பலரும் அந்தச் சாமியாரின் பேச்சைக் கேட்கவும் ஆசீர்வாதம் வாங்கவும் வந்திருந்தனர். என்னை அறிமுகம் செஞ்சுவெச்ச நண்பரும் பெரிய பொறுப்பில் இருப்பவர்தான்.

அங்கு வரும் பலரும் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள். 25 வயசுல இருந்து 30 வயசு உள்​ளவர்கள்​தான் அதிகம். கொஞ்சம் பழகியவுடன் சாமியார், என் குடுப்ப விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டாரு. பெரிய பேக்ரவுண்ட் இல்ல, தனியாதான் இருக்கேன், ஃப்ரெண்ட்ஸும் அதிகம் இல்லைனு நானும் எல்லாத்தையும் சொன்னேன். பிறகு, ஒவ்வொரு வாரமும் எதாவது காரணம் சொல்லி ஆசிரமத்துக்கு வரச்சொல்வாரு. ஆபீஸ் பிரச்னையை மறக் கலாம், ரெண்டு நாள் லீவுல சும்மாதானே இருக்கோம்னு போவேன். இதுபோல நாலு மாசம் தொடர்ந்து போனேன்.

ஒருநாள், பூஜை முடிந்தவுடன் சாமி தனியா கூப்பிட்டு பேசினாரு. 'உன் மனசுல ஏதோ கஷ்டம் இருக்கு. அந்தப் பாரத்தை என்கிட்ட இறக்கி வை’னு சொன்னாரு. 'எனக்கு அப்படி எதுவுமே இல்லை’னு சொன்னேன். உடனே அவர் செல் நம்பரைக் கொடுத்து, 'நேர்ல சொல்ல விருப்பம் இல்லைன்னா, போன்ல சொல்லு. எதுவும் என்கிட்ட மறைக்காத’னு கட்டாயப்படுத்தினாரு. அடிக்கடி போன்ல பேச ஆரம்பிச்சாரு. எனக்கு உண்மையாகவே ஒரு பிரச்னையும் இல்ல. ஆபீஸ்ல எல்லோருக்​கும் இருப்பதுபோல பிரஷர்தான். அவர் பேசப் பேச எனக்கே எதாவது பிரச்னை உள்ளதுபோல தோன்ற ஆரம்பிச்சது. என் னை 'அம்முக்குட்டி, செல்லக்குட்டி’னு கூப்பிட ஆரம்பிச்சாரு. என்னைப்போல இள வயது பெண்களை எல்லாம் இப்படித்தான் கூப்பிட்டாரு. அதனால, எனக்குப் பெரிசா தெரியலை.

ஒருநாள் வழக்கம்போல பேச ஆரம்​பிச்சவர், கொஞ்சம் கொஞ்சமா டாபிக் மாத்தி, 'ஆசிரமத்துல இருக்கும் ரெண்டு பொண் ணுங்ககூட எனக்கு செக்ஸ் தொடர்பு இருக்கு. வெளியே போகும்போது ஒன்றுசேர்ந்து சொர்க்கத்தில் மிதப்போம். நாமும் அப்படி ஒருநாள் செக்ஸ்ல ஈடுபடலாம். அப்பதான் நீ பிறவிப்பயன் அடைவாய்’னு சொன்னாரு. எனக்கு அதிர்ச்சியாகி, போனை உடனே கட் பண்ணிட்டேன். என்னை ஆசிரமத்துக்கு அறிமுகம் செய்துவைத்த நண்பர்​கிட்ட சொன்னேன். அவன், 'நீ உண்மையா இருக்கியா இல்லையான்னு இப்படித்தான் செக் பண்ணுவாரு’னு சொல்லி, என் மனசை மெள்ள மெள்ள மாத்தினான். சாமியாரும் திரும்பவும் போன் பண்ணி என்னென்னவோ பேசினாரு. திரும்பவும் பழையபடி பேச ஆரம்பிச்சேன்.

வீட்டில் எனக்கு கல்யாணப் பேச்சு எடுத்தாங்க. இதை ஒரு தகவலா சாமிகிட்ட சொன்னேன். உடனே, 'கல்யாணம் என்பது ஒரு மாயை. எல்லாப் பசங்களுமே இச்சைக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க. உன் உடம்பைத்​தான் பார்ப்பாங்க. நல்ல மனசைப் பார்க்க மாட்டாங்க. பேசாம என்னிடமே இருந்து கோயிலுக்கும் ஆசிரமத்துக்கும் சர்வீஸ் செய்’னு சொன்னாரு. ஒரு கட்டத்தில், அவர் சொல்லித்தான் எல்லா முடிவும் எடுக்கும் அளவுக்கு வந்துட்டேன். 'ஒரு வருஷம் மட்டும் உன் வேலையை விட் டுட்டு ஆசிரமத்துல இருந்து பாரு. அதுக்குப் பிறகு ஒரு முடிவு எடு. ஒருநாள் இரவு என்கூட தங்கு. இந்த உலகத்தின் அர்த்தம் உனக்கு புரியும்’னு சொன்னாரு. என் கற்பை சூறையாடுவதுதான் அவர் திட்டம்னு புரிஞ்சிக்கிட்டேன். 'என்ன ஆனாலும் வரமாட்டேன். முடியாது’னு சொல்லிட்டேன். 'இதுதான் கடைசி. வருஷ பூஜை யில மட்டும் கலந்துட்டுப் போ’னு சொன்னாரு. நானும் போனேன். அப்போ தொடக்கூடாத இடங்கள்ல எல்லாம் தொட்டு என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சார். அங்க இருந்து ஒருவழியா தப்பிச்சு வந்துட்டேன்.

திரும்பவும் எனக்கு போன் பண்ணி, 'நீ இங்கு வராம இருந்தாலும் பரவாயில்லை. உன்னை மாதிரி சப்போர்ட் இல்லாத, தனியாக இருக்கும் பெண்களை எனக்கு அறிமுகப்படுத்தி வை’னு வாய்கூசாம சொன்னாரு. என்னைப் அங்கு அறிமுகப்படுத்தி வைத்த நண்பன்கிட்ட போன் செய்து, சாமியார் தவறா நடந்துகிட்டாருன்னு சொன்னேன். அவன், 'ஏன் ரொம்ப பந்தா பண்ற’னு சொல்ல, எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அப்பதான் வெகுளியாக இருக்கும் பெண்களைக் குறித்து அவங்களை செக்ஸுக்குப் பயன்படுத்திக்கிறாங்கனு புரிஞ்சது. 'திரும்பவும் சாமியார் போன்

செஞ்சா, போலீஸ்ல சொல்லிடு​வேன்’னு அவன்கிட்ட சொன்னேன். ஒரு வாரம் யாரும் போன் பண்ணலை. பிறகு, அந்த ஆசிரமத்துக்கு போய்வரும் ஒரு பெண் போன் செய்து, 'ஏன் இப்படி பிடிகொடுக்காம இருக்க?குருஜி ரொம்ப நல்லவரு. நாங்க எல்லோரும் இப்படி பல தடவை இருந்திருக்கோம். அது எல்லாம் தப்பே கிடையாது’னு அதை நியாயப்படுத்தி சொன்னா. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. திட்டிட்டு போனை வெச்சுட்டேன். அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. ரொம்ப நல்லவ. அவளையும் மூளைச்சலவை செய்து, இப்படி செக்ஸுக்குப் பயன்படுத்திட்டு இருக்காங்க. பல பசங்ககிட்ட ஆசிரமத்துக்கு நிதி உதவின்னு வாங்கிகிட்டு, அங்கே வர்ற பொண்ணுங்களை குரூப் செக்ஸ்ல ஈடுபடுத்திட்டு இருக்காங்க. அவங்க வாழ்க்கையை எப்படியாவது காப்பாத்துங்க சார்'' எனச் சொல்லி கதறினார்.

இந்த விவரங்களை, தமிழகக் காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்- ஒழுங்கு) ராஜேந்திரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்து விசாரிக்க காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யமூர்த்திக்கு உத்தரவிட்டார். நம்மிடம் இருந்த சில ஆதாரங்களை சத்யமூர்த்தியிடம் கொடுத்து இருக்கிறோம். அவரும் விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார்.

காவல் துறையின் நடவடிக்கைக்காக காத்தி ருக்கிறோம்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி Empty Re: ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி

Post by ayyasamy ram Sat Nov 02, 2013 6:19 am

இப்படிப்பட்ட புகார்கள் போலீஸுக்கு ரொம்ப
பிடிக்கும்...
-
உடனே நடவடிக்கை எடுத்து விசாரணை செய்வார்கள்....
செய்து கொண்டே இருப்பார்கள்.....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum