ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

+4
ராஜா
ரூபன்
மீனு
Tamilzhan
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by Tamilzhan Thu Oct 29, 2009 11:38 pm

First topic message reminder :

மீனுவின் ரங்கோலி...!

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 32368491


ராஜாவின் ரங்கோலி..!

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 13609651


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by அபிராமிவேலூ Fri Oct 30, 2009 1:40 pm

Tamilzhan wrote:
Kraja29 wrote:போனா போகுது விடுவோம் மீனு , நான் வந்த உடனே தனி மடல் போட்டு ஒரே அழுகை தெரியாம செய்திட்டேன் விட்டுடுங்கள் அப்படின்னு. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 572280

லஞ்சமா ஒரு பாட்டில் கேட்டார் அத மட்டும் சொல்லவேயில்ல.... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 440806
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by ராஜா Fri Oct 30, 2009 1:41 pm

சார் , பழைய பாட்டில் வாங்குறது.................. ,, பழைய பேப்பர் வாங்குறது .........




தோடா....... பழைய பாட்டில் வந்குறவர் வந்துட்டாரு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by யமுனாஸ் Fri Oct 30, 2009 2:50 pm

மீனு ரங்கோலி கொள்ளை அழகு.. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 154550
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 56667
super super meenu kutty
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by Tamilzhan Fri Oct 30, 2009 2:52 pm

யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by VIJAY Fri Oct 30, 2009 2:53 pm

Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

என்னது சரக்கா?? ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by kirupairajah Fri Oct 30, 2009 3:00 pm

கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?


ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by அபிராமிவேலூ Fri Oct 30, 2009 3:08 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

என்னது சரக்கா?? ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 649524 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 649524
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by ரூபன் Fri Oct 30, 2009 3:10 pm

yamuna wrote:மீனு ரங்கோலி கொள்ளை அழகு.. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 154550
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 56667
super super meenu kutty

யமுனா நல்லாவே பாடுறீங்கள் பக்கப்பாட்டு அதுசரி எல்லோருமே பொன்னுங்கல்தானே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by Tamilzhan Fri Oct 30, 2009 3:11 pm

kirupairajah wrote:கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?

திராவிட இனத்தாருக்கே உரிய அற்புதக் கலை கோலம். தெற்கு ஆசியாவிலோ, உலகின் பிற பகுதி களிலோ திராவிடரல்லாதோர் வாழையடி வாழையாகக் கோலம் வரைதலில்லை. ரங்கோலி, ஆலாபன என்ற இந்தியக் கலை வடிவங்களெல்லாம் வெறும் தரைப் படங்களே. கோலத்தின் கணிதத் தன்மை இவற்றிற்குக் கிடையாது. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்து விடலாம். சதுர வடிவில் உள்ள ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங் கள். அதன் எதிர் மூலைகள் இரண்டை ஒரு கோட்டால் இணைத்துக் கொள்ளுங்கள். வரைந்த கோட்டின் மீது கத்தரிக் கோலைப் பிரயோகித்து, சதுரத்தை இரண்டு துண்டுகளாக வெட்டுங் கள். இரண்டும் ஒன்று போலிருக் கின்றன அல்லவா? இப்பண் பிற்குச் சமச்சீர்மை (Symmetry) என்று பெயர். ஒரு சதுரத்திற்கு நான்கு சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும். வட்டத்திற்கு எண்ணற்ற சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும்.

கோலத்திற்கு குறைந்தது ஒரு சமச்சீர்கோடாவது வரைய முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால் கோலங்கள் சமச்சீர்மை பெற்ற உருவங்கள். ரங்கோலி போன்ற கலை வடிவங்களுக்கு சமச்சீர்மை கட்டாயமுமல்ல, வழக்கமுமல்ல. கோலத்தின் வடஇந்தியப் பதிப்பு கள் எனத் தவறாகக் கருதப்படும் வடிவங்கள் புள்ளிகள் எனும் செங் கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படும் கட்டடங் கள் அல்ல.

சமீப காலமாக வண்ணக் கோலத்தினை ரங்கோலி என்று பிழையாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. ரங்கோலியும் கோலமும் தரையில் வரையப்படுகின்றன என்பதைத் தவிர அவற்றிடையே வேறு எந்த ஒற்றுமையுமில்லை.

ரங்கோலியைக் கைபோன போக்கில் வரையலாம். அது, ஒரு படத்தைச் சிறிய அலகு களாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. கோலத்தின் இலக்கணம் ரங்கோலிக்கு இல்லை. ரங்கோலி காட்டாறுப் பிரவாகம் என்றால் கோலம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட வாய்க்கால்கள் வழியே ஒழுங்குடன் நேர்த்தியாக நிகழும் பாய்வு.

கோலம் ஏன் வரையப்படு கிறது? எறும்புகளுக்கு தானம் வழங் கும் ஒரு முறையாக அதைச் சிலர் கருது கின்றனர். அது உண்மை யெனில் கல்மாப் பொடியால் கோலம் வரைவதேன்? பழங்காலத் தில் அரிசி மாவினால் மட்டுமே கோலமிடப்பட்டதாக எங்கும் குறிப் பில்லை. கொடையில் கலை எப்போதுமே புகுத்தப்பட்டதில்லை. எறும்புகளுக்கே கோல மாவு என்றால் அதைத் தூவினாலோ குவித்து வைத்தாலோ போது மானது. எறும்புகளை வளைத்து நெளித்து ஓட வைத்துப் பாடாய்ப் படுத்துதல் அவசியமா? காக்கைக்கு உணவு வைப்போர் எவரேனும் அதற்கென உருவம் எதுவும் உண்டாக்குகிறார்களா?

கோலம் புனிதத்தன்மை பெற்றுள்ள கலை வடிவம். நல்ல நாட்களுடனும், மங்கல விழாக் களுடன் கோலத்திற்கு உள்ள தொடர்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்திரம் எனப்படும் செப்பு மந்திரத் தகடுகளில் நாம் பார்க்கும் உருவங்கள் கோலங்களி லிருந்து அதிகம் வேறுபட்டவை யல்ல. கோவில் சுவர்களிலும் கோலங்களைக் காணலாம். சென்னைக்கு அருகே உள்ள அச்சரப்பாக்கம் கோவிலின் கோபுரத்தில் கோலமொன்று காணப்படுகிறது. கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்திலுள்ள, பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப் பட்ட சமணக் கோவில்களின் தூண் களில் கோலங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கோலங்களை உடலில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கமும் பரவ லாகக் காணப்படுகிறது. மிட்டாய்த்தட்டு, ஆசனப் பலகை என்ற பெயர்களு டைய மதத்தொடர்பற்ற கோலங்களும் ஏராளமாக உள்ளன. புனிதம், மந்திரம், தீமை விலக்கல் போன்ற வற்றுடன் கோலத்திற்கும் தொடர்பு உண்டென்றாலும் அது அழகுணர்ச்சியின் வெளிப்பாடே. மதரீதியான கலை அல்ல.

கற்றோர், கல்லாதோர், செல்வக் குடியினர், ஓட்டுக் குடியினர் என்றெல்லாம் கோலம் வரைவோரிடையே பாகுபாடு இல்லை. எந்த ஒரு சமுதாயப் பிரிவிற்கும் கோலம் ஏக போக உரிமையானதல்ல. செலவு மிகுந்த கலையுமல்ல அது. கோலம் எவ்வளவு பழமை யானது? உறுதியாகத் தெரிய வில்லை. சங்க இலக்கியங்கள் கோலத்தைப் பற்றிப் பேசுவ தில்லை. பிங்கல் நிகண்டு போன்ற நிகண்டுகளில் கோலம் பற்றிய குறிப்பு எதுவுமில்லை. கோலத் தைப் பற்றிப் பேசும் முதல் இலக்கியம் "மீனாட்சியம்மை குறம்' பதினாறாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நூல்.""புழுகாலே தரைமெழுகு பிள்ளையார்வை பொற்கோல மிட்டுநிறை நாழிவையாய்!''

என்று வருகிறது. அடுத்த நூற்றாண்டில் திரிகூடராசப்பக் கவிராயர் "திருக்குற்றாலக் குறவஞ்சி'யில் ""குங்குமஞ் சந்தனக்குழம்பிற குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்கியக் கொழும்புகையுங் காட்டி'' என எழுதியுள்ளார்.

கோலம் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியக் குறிப்புகளோ இல்லாதது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் அக்காலத்திற்கு முன் கோலங்கள் தீட்டப்பட்டதில்லை என நிச்சயமாக அடித்துப் பேச முடியாது. பெண் களது கலையை ஆணாதிக்க இலக்கிய ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம். அல்லது, அவர்கள் எழுதிய குறிப்பு கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்குள்ள வனுவாது தீவுக் கூட்டத்தில் வசிக்கும் மாலேகுலா எனும் மக்கள் மணல் வரையும் ஓவியங்களில் சில நமது கோலங்களுடன் பெருத்த ஒற்றுமைகள் கொண்டுள்ளன.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by kirupairajah Fri Oct 30, 2009 3:14 pm

தகவலுக்கு நன்றி தமிழன்! இங்கு கோலம் என்றுதான் அழைப்பார்கள்


ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Empty Re: ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum