Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கல்விப் பூங்காவில்
சிந்தனைப் பூக்கள் !
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள்
அரசுப்பணியில் செயலராக இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.
இவரது முந்தைய நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது .
நூல் ஆசிரியர் சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .
இந்த நூலை ஆசிரியர் இனத்திற்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .காரணம் இது கல்வி தொடர்பான விளக்க நூல் .
காணிக்கை !
"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."
இதனைப் படித்ததும் எனக்கு ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்து அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் டாக்டர் இராதா கிருஷ்ணனும் ,எனது ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள் .
.
மதுரை காமராஜ் - அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ் .வி .சிட்டிபாபு அவர்களின் அணிந்துரை கல்விப் பூங்காவின் வரவேற்பு தோரண வாயிலாக உள்ளது .
" கல்வியாளர்களுக்கும் மாணவச் செல்வங்களும் இந்நூலின் வழியாக நடந்தால் வெற்றி நிச்சயம் ."
இந்த நூலின் பயனைப் பறை சாற்றுவதாக உள்ளது .
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குறிப்பிட்டுள்ள வரிகள் மிக நன்று .
" இப்போதும் ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல .. உங்களோடு பகிர்ந்து கொள்ளும் யதார்த்தமான ஆலோசனைகள் உங்கள் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் ."
திருடர்களால் திருட முடியாதது .கொடுத்தாலும் குறையாதது என்ற சிறப்பை உடைய கல்வியின் மேன்மையை , நன்மையை விளக்கிடும் அற்புத நூல் . உலகப்பொதுமறையான திருக்குறள் , அவ்வையின் வரிகள் , மகாகவி பாரதியின் கவிதை வரிகள் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் ,ஜி .டி .நாயுடு சொன்னது வரை மேற்கோள் காட்டி மிக நன்றாக எழுதி உள்ளார்கள் .
5 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .முதல் கட்டுரையை திருக்குறளுடன் தொடங்கி மாற்றுத் திறனாளிகளின் திறமையை எழுதி முடித்துள்ளார் . கல்வியின் சிறப்பை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் . பெரிய கட்டுரையில் பொருத்தமான மேற்கோள்கள் காட்டி எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும் எழுதி உள்ளார் .
" கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல மக்களின்
விழிப்புணர்வைத் தூண்டி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்து நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும் ."
உண்மைதான் .இன்றைய கல்வி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் தருகின்றது .ஆனால் நல்ல மனிதர்களைத் தரவில்லை .நற்பண்பு மிக்கவர்களாக கல்வியாளர்கள் திகழ வேண்டும். அதுதான் கல்வியின் பயன் .
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் கருத்தை வழி மொழிந்து எழுதியுள்ள கருத்துக்கள் மிக நன்று .
" சாதிப் பாகுபாடுகளால் சரிந்து விடாமல்
இன வேறுபாடுகளால் சிதறி விடாமல்
மத வேறுபாடுகளால் சிதைந்து விடாமல்
மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டு -எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டு 'ஒரே மைந்த இனம் '- ' உலகம் ' ஒரு வீடு ' என்கிற உணர்வுகளால் ."
கல்விக்கூடத்தில் எந்தவித வேறுபாடும் காட்டாமல் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
இன்றைக்கு ஆசிரியர் மாணவர் உறவு சரியில்லை .தினந்தோறும்
செய்தித்தாளில் விரும்பத்தகாத செய்திகள் வந்த வண்ணமுள்ளன .
பள்ளி மாணவன் ஆசிரியைக் கொன்ற செய்தி . பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கொன்ற செய்தி ,ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து மாணவ மாணவியர் தற்கொலை .இந்த நூல் படித்தால் இது பொன்ற செயல்கள் நடைபெறாது .ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் படிக்க வேண்டிய நூல் இது .ஆற்றுப்படுத்தும் நூல் .
கல்வி கற்றல் என்பது பதவி கிடைத்ததும் நேர்மையான வழியில் ஊதியமாக மாதாமாதம் வரும் .வருமானம் வரும் .வருமான தரும் அட்சயப் பாத்திரம்தான் கல்வி என்பதை, நூல் ஆசிரியர் முனைவர்
மூ .இராசாராம் இ .ஆ .ப அவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இருப்பதால் சொல் விளையாட்டில் விளக்கி உள்ளார் .
" LEARNING - என்ற கற்றல் எனும் பொருள்படும் சொல்லில் உள்ள
' L' என்ற எழுத்தை நீக்கி விட்டால் , EARNING என்ற சொல் கிடைக்கும் .ஆம் ! ஒன்றைப் பற்றி நன்றாகக் கற்று விட்டால் , ஏற்ற ஊதியம் கிடைக்கும் அல்லவா ! "
குடியால் இன்றைக்கு சமுதாயம் சீரழிந்து வருவதை மனித நேய ஆர்வலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .குடியால் வன்முறை நிகழ்கின்றது .ஒழுக்கம் சிதைகின்றது .அதனைக் கண்டித்து குடி குடி கெடுக்கும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார் .
போதை பழக்கம் !
போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும் தொற்று நோயாகப் பற்றிப் படர்ந்து வருகிறது .ஒழுக்கமும் பண்பாடும் உருக்குலையச் செய்கிறது. வயோதிகர்களை - வாலிபர்களை மட்டுமல்ல குமரப் பருவத்தையும் இந்தக் கொள்ளை நோய் தாக்கத் தொடங்கி விட்டது .மது அரக்கன் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை .
போதைப் பழக்கத்தின் தீங்கை எழுதி மாணவர்களை நல் வழிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை எழுதி உள்ளார் .
'கல்வித் தத்துவங்கள் ' என்ற கட்டுரையில் பல்வேறு மலர்களில் தேன் சேகரிக்கும் தேனீயைப் போல பல்வேறு நூல்களில் இருந்து கல்வி தொடர்பான கருத்துக்களை சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார். காந்தியடிகள் ,அறிஞர் அண்ணா ,கவியரசு கண்ணதாசன் ஆகியோர் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் .தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள்.மேல் நாட்டு அறிஞர்கள் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் யாவும் நூலில் உள்ளது .
கல்வியால் சிறப்படைந்த நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம்
இ .ஆ .ப அவர்கள் கல்விக்கு சிறப்பு செய்துள்ள நூல் .கல்வியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
மிகச் சிறப்பாக, நேர்த்தியாக அச்சிட்ட குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .
சிந்தனைப் பூக்கள் !
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள்
அரசுப்பணியில் செயலராக இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.
இவரது முந்தைய நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது .
நூல் ஆசிரியர் சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .
இந்த நூலை ஆசிரியர் இனத்திற்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .காரணம் இது கல்வி தொடர்பான விளக்க நூல் .
காணிக்கை !
"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."
இதனைப் படித்ததும் எனக்கு ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்து அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் டாக்டர் இராதா கிருஷ்ணனும் ,எனது ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள் .
.
மதுரை காமராஜ் - அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ் .வி .சிட்டிபாபு அவர்களின் அணிந்துரை கல்விப் பூங்காவின் வரவேற்பு தோரண வாயிலாக உள்ளது .
" கல்வியாளர்களுக்கும் மாணவச் செல்வங்களும் இந்நூலின் வழியாக நடந்தால் வெற்றி நிச்சயம் ."
இந்த நூலின் பயனைப் பறை சாற்றுவதாக உள்ளது .
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குறிப்பிட்டுள்ள வரிகள் மிக நன்று .
" இப்போதும் ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல .. உங்களோடு பகிர்ந்து கொள்ளும் யதார்த்தமான ஆலோசனைகள் உங்கள் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் ."
திருடர்களால் திருட முடியாதது .கொடுத்தாலும் குறையாதது என்ற சிறப்பை உடைய கல்வியின் மேன்மையை , நன்மையை விளக்கிடும் அற்புத நூல் . உலகப்பொதுமறையான திருக்குறள் , அவ்வையின் வரிகள் , மகாகவி பாரதியின் கவிதை வரிகள் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் ,ஜி .டி .நாயுடு சொன்னது வரை மேற்கோள் காட்டி மிக நன்றாக எழுதி உள்ளார்கள் .
5 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .முதல் கட்டுரையை திருக்குறளுடன் தொடங்கி மாற்றுத் திறனாளிகளின் திறமையை எழுதி முடித்துள்ளார் . கல்வியின் சிறப்பை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் . பெரிய கட்டுரையில் பொருத்தமான மேற்கோள்கள் காட்டி எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும் எழுதி உள்ளார் .
" கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல மக்களின்
விழிப்புணர்வைத் தூண்டி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்து நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும் ."
உண்மைதான் .இன்றைய கல்வி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் தருகின்றது .ஆனால் நல்ல மனிதர்களைத் தரவில்லை .நற்பண்பு மிக்கவர்களாக கல்வியாளர்கள் திகழ வேண்டும். அதுதான் கல்வியின் பயன் .
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் கருத்தை வழி மொழிந்து எழுதியுள்ள கருத்துக்கள் மிக நன்று .
" சாதிப் பாகுபாடுகளால் சரிந்து விடாமல்
இன வேறுபாடுகளால் சிதறி விடாமல்
மத வேறுபாடுகளால் சிதைந்து விடாமல்
மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டு -எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டு 'ஒரே மைந்த இனம் '- ' உலகம் ' ஒரு வீடு ' என்கிற உணர்வுகளால் ."
கல்விக்கூடத்தில் எந்தவித வேறுபாடும் காட்டாமல் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
இன்றைக்கு ஆசிரியர் மாணவர் உறவு சரியில்லை .தினந்தோறும்
செய்தித்தாளில் விரும்பத்தகாத செய்திகள் வந்த வண்ணமுள்ளன .
பள்ளி மாணவன் ஆசிரியைக் கொன்ற செய்தி . பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கொன்ற செய்தி ,ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து மாணவ மாணவியர் தற்கொலை .இந்த நூல் படித்தால் இது பொன்ற செயல்கள் நடைபெறாது .ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் படிக்க வேண்டிய நூல் இது .ஆற்றுப்படுத்தும் நூல் .
கல்வி கற்றல் என்பது பதவி கிடைத்ததும் நேர்மையான வழியில் ஊதியமாக மாதாமாதம் வரும் .வருமானம் வரும் .வருமான தரும் அட்சயப் பாத்திரம்தான் கல்வி என்பதை, நூல் ஆசிரியர் முனைவர்
மூ .இராசாராம் இ .ஆ .ப அவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இருப்பதால் சொல் விளையாட்டில் விளக்கி உள்ளார் .
" LEARNING - என்ற கற்றல் எனும் பொருள்படும் சொல்லில் உள்ள
' L' என்ற எழுத்தை நீக்கி விட்டால் , EARNING என்ற சொல் கிடைக்கும் .ஆம் ! ஒன்றைப் பற்றி நன்றாகக் கற்று விட்டால் , ஏற்ற ஊதியம் கிடைக்கும் அல்லவா ! "
குடியால் இன்றைக்கு சமுதாயம் சீரழிந்து வருவதை மனித நேய ஆர்வலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .குடியால் வன்முறை நிகழ்கின்றது .ஒழுக்கம் சிதைகின்றது .அதனைக் கண்டித்து குடி குடி கெடுக்கும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார் .
போதை பழக்கம் !
போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும் தொற்று நோயாகப் பற்றிப் படர்ந்து வருகிறது .ஒழுக்கமும் பண்பாடும் உருக்குலையச் செய்கிறது. வயோதிகர்களை - வாலிபர்களை மட்டுமல்ல குமரப் பருவத்தையும் இந்தக் கொள்ளை நோய் தாக்கத் தொடங்கி விட்டது .மது அரக்கன் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை .
போதைப் பழக்கத்தின் தீங்கை எழுதி மாணவர்களை நல் வழிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை எழுதி உள்ளார் .
'கல்வித் தத்துவங்கள் ' என்ற கட்டுரையில் பல்வேறு மலர்களில் தேன் சேகரிக்கும் தேனீயைப் போல பல்வேறு நூல்களில் இருந்து கல்வி தொடர்பான கருத்துக்களை சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார். காந்தியடிகள் ,அறிஞர் அண்ணா ,கவியரசு கண்ணதாசன் ஆகியோர் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் .தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள்.மேல் நாட்டு அறிஞர்கள் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் யாவும் நூலில் உள்ளது .
கல்வியால் சிறப்படைந்த நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம்
இ .ஆ .ப அவர்கள் கல்விக்கு சிறப்பு செய்துள்ள நூல் .கல்வியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
மிகச் சிறப்பாக, நேர்த்தியாக அச்சிட்ட குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .
Re: கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல ..
-
ஆசிரியர் மற்றும் ஃமாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்...
-
-
ஆசிரியர் மற்றும் ஃமாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்...
-
Similar topics
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|