புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
25 Posts - 50%
heezulia
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_m10பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:08 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1395319_10200552808612217_354290195_n

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்...! அவரின் வாழ்க்கை வரலாறு சிறு தொகுப்பாய்க் கீழே...!

தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டித் தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.

தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியர் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் எனத் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள்.

தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்த இசுலாமியத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார். இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தாயை இழந்த பின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்கத் தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித் தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராகத் தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்புதான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாடின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்த பின்பு தேவர் மிகப் பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டிப் போராடினார். இந்தப் போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை.

குற்றபரம்பரைச் சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன் பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னர் தேவர் மாவட்ட வாரியத் தலைவரானார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:09 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1380723_454510738003704_2062120839_n

ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த நம் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள் இன்று !! தேவர் ஜெயந்தியாக தமிழகம் எங்கும் அது கொண்டாடப்படுகிறது.

நெற்றி முழுதும் திருநீறு, நெஞ்சம் முழுதும் இறை பக்தி என்று வாழ்ந்த ஒரு பழுத்த ஆன்மிகவாதி தேவர் அவர்கள். உலக அரங்கில் இந்தியா கம்பீரமாய் எழுந்து நிற்க வேண்டும் என்று நினைத்தவர்களுள் அவரும் ஒருவர். சுதந்திர கணலாக பொங்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு உறுதுனையாக இருந்தவர்களுள் தேவர் ஐயா மிக முக்கியமானவர்.

"திராவிடம்" எனும் பெயரை கண்டெடுத்து அதை வைத்து அரசியல் லாபம் பார்க்கத் தொடங்கிய திராவிட மலங்களை தேவர் ஐயா வெறுத்தார். குள்ளநரி கூட்டமாக உருவெடுத்திருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை அவர் எதிர்த்தார். திராவிட நாத்திகவாதிகளை "போலிகள்" என்று அவர் வரையறுத்தார்.

ஒரு மனிதர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்துக் கொண்டு அதே சமயத்தில் அரசியலை ஒதுக்கி விடாமல் மக்களுக்கு எப்படி சேவையாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டு தேவர் பெருமகனார்.

அவரின் பிறந்தநாளான இன்று என்னுடைய பிறந்தநாளும் அமைந்திருப்பது நான் செய்த பாக்கியம். எனக்குவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தேவர் ஐயாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:10 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1382067_574780762595025_999352007_n

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:11 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேவரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  62724_574779859261782_10337675_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:11 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம்,செல்லூர் கே,ராஜூ,ஆர்.காமராஜ், கலெக்டர் நந்தகுமார், ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1424341_574780539261714_1414399290_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:11 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலை அருகே அமைக்கபட்டு உள்ள அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  941824_574779342595167_295803248_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:16 pm

தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  3ab97294-5c3b-4dcf-aee3-aaf4c4502e26_S_secvpf

முத்துராமலிங்க தேவரின் 106–வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி, சாந்தி, காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.,கே.அன்பழகன், சீதாராமன், சொர்ண சேதுராமன், குமாரமுருகன், தி.நகர் கார்த்திக், கொய்யாதோப்பு ராம்குமார், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த்சாகர், சித்ரா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்..

பா.ஜனதா சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், சக்கரவர்த்தி, பிரகாஷ், திருப்புகழ், ஆறுமுக ராஜ், கேன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன், எஸ்.பிரசாத், பாபு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

லட்சிய தி.மு.க. சார்பில் அதன் தலைவர் டி.ராஜேந்தர், எம்.எம்.ஆர். மதன் மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மணியரசன், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

தமிழக யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷேக்தாவூத் மாலை அணிவித்தார்.

வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் உள்ள தேவர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் பகுதி செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன், அருள் ராஜ், எட்.ராஜா, மாரிமுத்து உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்து சத்ய சேனா சார்பில் மாநில தலைவர் வசந்த குமார் தலைமையில் சீனிவாசன், காந்தி உள்பட அமைப்பின் நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர். தேவர் புலிப்படை சார்பில் நிர்வாகிகள் சுரேஷ் காந்தி, நீலகண்டன், ஆதிமூலம், அன்பழகன், நீதிராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். தேவர் பேரவை சார்பில் நிர்வாகிகள் செல்லம், சந்திரன், சித்திரை குமார், தர்மராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:31 pm


தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Oct/15422dc1-dcfd-4e2d-b0c6-1a4b7380a4a1_S_secvpf.gif

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.25 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் அனைத்து சமூக மக்களால் போற்றப்பட கூடியவர். தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்லூரிகளுக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்டி பெருமை சேர்த்தோம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பசும்பொன்னில் அனையா விளக்கு அமைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவர் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தேவையற்றது. தேர்தலுக்காக இங்கு நாங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 5:34 pm


தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  07ba396a-3103-476d-b942-4c5f2a1db27d_S_secvpf

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–

பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் 'வெப்' காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 30, 2013 11:15 pm

இந்த நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக