Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இவர்? - ஸ்டாலின் !
+11
Muthumohamed
SenthilMookan
KINGUMAR
M.M.SENTHIL
jenisiva
amirmaran
சிவா
ரேவதி
ayyasamy ram
அசுரன்
krishnaamma
15 posters
Page 9 of 9
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
யார் இவர்? - ஸ்டாலின் !
First topic message reminder :
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.
nandri - siruvarmalar
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.
nandri - siruvarmalar
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
ஒரு சிறிய் கத்தியை மகனுக்கு பரிசாக வழங்கினார் தந்தை. மகனும், அதை உடனே பதம் பார்த்தான். கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் வெட்டிச் சீவினான்.
வீட்டுத் தோட்டத்தினுள் புகுந்து, கைவந்தபடி வெட்டித் தள்ளினான். அவற்றில் ஒன்று, தந்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சிறந்த செடி வகையாகும். பெரிய பதவியிலுள்ள அவனுடைய தந்தை, அச்செடிக்குத் தானே தண்ணீர் விடுவார்; பராமரிப்பார்; தம் நேரடி கவனத்தில் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.
அன்று மாலைப் பொழுது, தாம் அருமையாக வளர்த்து வந்த செடி வெட்டுண்டு கிடப்பதைக் கண்டு வெகுண்டெழுந்தார். 'வெளிநாட்டுச் செடியை வெட்டியவனை சும்மா விடப்போவதில்லை!' என்று கர்ஜித்தார்.
வீட்டிலுள்ள அனைவரும் பயந்தனர். சிறுவன் வெட்டியது யாருக்கும் தெரியாது. தந்தையோ அதிக கோபத்தில் இருந்தார். சிறுவனது மனச்சாட்சி குத்தியது. அப்பா முன் சென்றான்.
'அப்பா, நான் தான் அந்தச் செடியை வெட்டிவிட்டேன். நீங்கள் பரிசாகத் தந்த கத்தியால் சில செடிகளை வெட்டிப்பார்த்தேன். அவற்றில் இதுவும் அகப்பட்டு விட்டது...' என்று அழுகையோடு கூறினான்.
தந்தையின் கோபம் தணிந்தது; மகனைத் தூக்கி முத்தம் கொடுத்தார்.
'மகனே, இம்மாதிரி ஆயிரம் செடிகள் போனாலும் எனக்குக் கவலையில்லை. என் மகன் உண்மையை சொன்னானே... அதுவே எனக்குப் போதும்!' என்றார்.
அந்த சிறுவன் யார் தெரியுமா...
அவர்தான், அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்த ஜார்ஜ் வாஷிங்டன். அவரின் பெயரால் அமெரிக்காவில் இன்று ஒரு பெரிய நகரமே அமைந்துள்ளது.
வீட்டுத் தோட்டத்தினுள் புகுந்து, கைவந்தபடி வெட்டித் தள்ளினான். அவற்றில் ஒன்று, தந்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சிறந்த செடி வகையாகும். பெரிய பதவியிலுள்ள அவனுடைய தந்தை, அச்செடிக்குத் தானே தண்ணீர் விடுவார்; பராமரிப்பார்; தம் நேரடி கவனத்தில் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.
அன்று மாலைப் பொழுது, தாம் அருமையாக வளர்த்து வந்த செடி வெட்டுண்டு கிடப்பதைக் கண்டு வெகுண்டெழுந்தார். 'வெளிநாட்டுச் செடியை வெட்டியவனை சும்மா விடப்போவதில்லை!' என்று கர்ஜித்தார்.
வீட்டிலுள்ள அனைவரும் பயந்தனர். சிறுவன் வெட்டியது யாருக்கும் தெரியாது. தந்தையோ அதிக கோபத்தில் இருந்தார். சிறுவனது மனச்சாட்சி குத்தியது. அப்பா முன் சென்றான்.
'அப்பா, நான் தான் அந்தச் செடியை வெட்டிவிட்டேன். நீங்கள் பரிசாகத் தந்த கத்தியால் சில செடிகளை வெட்டிப்பார்த்தேன். அவற்றில் இதுவும் அகப்பட்டு விட்டது...' என்று அழுகையோடு கூறினான்.
தந்தையின் கோபம் தணிந்தது; மகனைத் தூக்கி முத்தம் கொடுத்தார்.
'மகனே, இம்மாதிரி ஆயிரம் செடிகள் போனாலும் எனக்குக் கவலையில்லை. என் மகன் உண்மையை சொன்னானே... அதுவே எனக்குப் போதும்!' என்றார்.
அந்த சிறுவன் யார் தெரியுமா...
அவர்தான், அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்த ஜார்ஜ் வாஷிங்டன். அவரின் பெயரால் அமெரிக்காவில் இன்று ஒரு பெரிய நகரமே அமைந்துள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
“டேய் அவன் காலைப் பாருடா!”
“என்னடாப்பா அவன் காலில் அதிசயம்!”
“சரியா பாரேன். அவன் இடது கால்விரலைப் பார்த்தால் அதிசயம் தானாய்த் தெரிந்துவிடும்!”
“ஆமாண்டா, இது என்ன அவனுக்கு இடது காலிலே நாலே நாலு விரல்தான் இருக்கிறது! ஒரு விரல் எங்கே போய்விட்டதாம்?”
“எங்கேயும் போகவில்லை. சரியாகப் பார். இரண்டாவது விரலும் மூன்றாவது விரலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது தெரியவில்லையா?”
“அடடே, ஆமாண்டா! நாலு விரல்கள் இருந்தாலும் நடையைப் பார்த்தாயா... எவ்வளவு முறுக்காக நடக்கிறான்!”
தெருவழியாக செல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து இப்படி இரு பையன்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். பாவம், அந்தச் சிறுவன் என்ன செய்வான்... பிறக்கும்போதே அவனுக்கு இடது காலில் நாலு விரல்கள்தான் இருந்தன.
அவன் ஒரு பணக்காரப் பையனாக இருந்தால் காலிலே, 'பூட்ஸ்' போட்டிருப்பான். அந்தக் குறை மற்றவர்களுக்கு தெரியாமலிருக்கும். ஆனால், அவனோ பரம ஏழை. அவன் அப்பா செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தார்.
'அப்பாதான் செருப்புத் தைப்பவர் ஆயிற்றே! ஏன் தம்முடைய மகனுக்கு பூட்ஸ் தைத்து கொடுக்கக் கூடாது' என்று சிலர் கேட்கலாம்.
'பூட்ஸ்' தைப்பதென்றால், முதலில் தோல் வாங்க வேண்டாமா... பணத்திற்கு அவர் என்ன செய்வார்?
பூட்ஸ் அணியாமல் வெறும் காலுடன் நடந்த அந்தச் சிறுவனை அடிக்கடி அவனுடைய நண்பர்களும், மற்றவர்களும் கேலி செய்து வந்தனர். இது அவனுக்கு ஆத்திரமூட்டியது; சில சமயங்களில் கோபம் வந்துவிடும்; அவர்களை அடித்து நொறுக்கிவிடுவான். எத்தனையோ தடவைகள், 'குஸ்தி' போட்டிருக்கிறான். வெற்றியும் பெற்றிருக்கிறான்.
அவன் யார்?
அவன்தான் டேவிட்.
டேவிட், கோபா, இவாஜேவிச் என்றெல்லாம் அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆனாலும், இரும்பு மனிதன் என்று சொன்னால் தான் உங்களுக்குப் புரியும்.
இப்போதும் புரியவில்லையா?
ஒரு சின்ன க்ளூ... 'இரும்பு மனிதன்!' என்பதை ரஷ்யாவில் எப்படி அழைப்பார்கள்.
யார் இவர், விடை: ஸ்டாலின். ஸ்டாலின் என்றாலே 'இரும்பு மனிதன்' என்பது தான் பொருள். செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து, ரஷ்ய தேசத்திற்கே தலைவராயிருந்த ஸ்டாலின் தான் அந்த நாலு விரல் பையன்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
தலைவர்களின் வரலாறுகளை அறிந்துகொள்ள அருமையான தொகுப்பு !
பல தலைவர்களைப்பற்றி தொகுப்பு என்பதால்
" யார் இவர் ஸ்டாலின் " என்ற தலைப்பைவிட
" யார் இவர் ? " என்பதுதான் சரியான தலைப்பாக இருக்கமுடியும் .
பல தலைவர்களைப்பற்றி தொகுப்பு என்பதால்
" யார் இவர் ஸ்டாலின் " என்ற தலைப்பைவிட
" யார் இவர் ? " என்பதுதான் சரியான தலைப்பாக இருக்கமுடியும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
M.Jagadeesan wrote:தலைவர்களின் வரலாறுகளை அறிந்துகொள்ள அருமையான தொகுப்பு !
பல தலைவர்களைப்பற்றி தொகுப்பு என்பதால்
" யார் இவர் ஸ்டாலின் " என்ற தலைப்பைவிட
" யார் இவர் ? " என்பதுதான் சரியான தலைப்பாக இருக்கமுடியும் .
நன்றி ஐயா, .." யார் இவர் ? " என்பதுதான் தலைப்பு, ஆனால் நான் புதிதாக சேர்க்கும் பேரை பக்கத்தில் போடுவதால், புதிய பதிவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு உள்ளே வருவார்கள் .அதனால் தான் அப்படி போட்டுள்ளேன்.........எப்போதுமே என் திரிகளில் இப்படி போட்டு வருகிறேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» யார் இவர்????????
» இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இவர் யார்?
» இவர் யார் தெரிகிறதா..???
» யார் இவர் ..? கண்டுபிடியுங்கள்..!
» இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இவர் யார்?
» இவர் யார் தெரிகிறதா..???
» யார் இவர் ..? கண்டுபிடியுங்கள்..!
Page 9 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|