புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 16, 2016 2:10 pm

ராஜாஜியின் குலக்கல்வித்திட்டம்

காமராஜர் முதலமைச்சராக வருவதற்கான முதல் படியாக
அமைந்தது ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் ஆகும்.

1952-ஆம் ஆண்டு தமிழக முதல்வரான ராஜாஜி புதிய கல்வித்திட்டம்
ஒன்றை வெளியிட்டார். அதன்படி கிரமப்புறத்தில் தொடக்கக்கல்வி
பயிலும் மாணவர்கள் முழுநாள் படிப்பதற்குப் பதில், அரைநாள்
படித்துவிட்டு மீதி பாதி நாள் தத்தம் குலத் தொழிலைச் செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு தங்கள் குலத் தொழிலும், ஓரளவு எழுத்தறிவும் பெறும்
வகையிலான இதனைக் குலக் கல்வித் திட்டம் என அழைத்தார்.

இந்தத்திட்டம் பெரியாரைப் பொங்கி எழச் செய்த்து.
குலக்கல்வித்திட்டத்தைக் க்ண்டித்து அறிக்கை எழுதி தனது விடுதலை
நாளிதழில் பெரியார் வெளியிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அண்ணா
கண்டனம் தெரிவித்தார். பகுதி நேரக் கல்வி ஏற்பாடு அமல்
செய்யப்பட்டதும், சாதி முறையை நீடித்திருக்கச் செய்ய ராஜாஜி
விரும்புவதாக்க்கூறி இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ராஜாஜி முதலமைச்சராக நீடிப்பதையும், ராஜாஜியின் குலக்கல்வித்
திட்டத்தையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை
பெற்றன. குலக்கல்வித் திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் குலக்
கல்வி முறையை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின்
அறிக்கைகளுக்குப் பின்னரும் புதிய கல்வித் திட்டத்திற்கு எதிரான
ஆர்ப்பாட்டங்கள் குறையவில்லை.

அதிருப்தி அடைந்த பல காங்கிரஸ்கார்ர்களும், ராஜாஜி எதர்ப்புக்
கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ராஜாஜியின் மீது நம்பிகைக் இல்லாத்
தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியினர் முடிவு செய்தனர்.

பெரும்பான்மையும் கிடைத்தது. நம்பிக்கை இருக்கிறது என்ற
தீர்மானத்துக்குக் கையெழுத்து வாங்க ராஜாஜி கோஷ்டியினர் முயன்றனர்.
இதற்கு ஆதரவு கிடைக்காத்தால் நெருக்கடி அதிகமாகியது.
-
ராஜாஜியின் பதவி விலகல்
-
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தமக்கு எதிர்ப்பு இருந்ததால் பதவியிலிருந்து
விலகிடத் தாம் விரும்புவதாக நேருவிடம் ராஜாஜி தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நேரு தமிழக சட்ட மன்ற காங்கிரஸ் புதிய
தலைவரை தேர்ந்தெடுக்க ஆணையிட்டார்.

இருப்பினும் மார்ச் 23, 1954 – ஆம் நாள் முதலமைச்சர் ராஜாஜியை
அவரது தியாகராய நகர் பசுல்லா சாலை இல்லத்தில் சந்தித்து
‘நீங்கள் தொடர்ந்து திட்டத்தை மட்டும் திரும்ப பெறுங்கள்’ என்று
ராஜாஜியிடம் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர்
காமராஜர் வேண்டுகோள் விடுத்தார்,
-
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள ராஜாஜி மறுத்துவிட்டார்.
-
--------------------

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 16, 2016 4:22 pm

நல்ல பகிர்வு ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:47 pm

விவரத்துக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை ......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.வி.பொ.பா. ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 29, 2016 1:23 am

பெரிய ஆளா வருவேன்!

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 UOu6F9bUQlKIvUu3y6lp+MC_Mary_Kom

அந்தப் பெண், தான் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினாள். அவர்கள் குடும்பம் கிராமப்புறத்தில் வாழ்வது. அவளுடைய தந்தை சொன்னார், ""பெண்ணே அது முரட்டுத்தனமான விளையாட்டு, உனக்கு சரிப்பட்டு வராது'' என்று. ""அப்பா, நீங்க கொஞ்சமும் கவலைப்படாதீங்க, நான் இந்த விளையாட்டில் பெரிய ஆளா வருவேன்'' என்றார் பெண் உற்சாகத்துடன்.

மகளின் ஆர்வத்தைக் கண்ட தந்தை அவளுக்குத் தடை போடவில்லை. அவளை ஊக்குவித்தார். மகள் பங்கேற்கிற ஒவ்வொரு போட்டிக்கும் அவரும் உடன் சென்றார். அவளது வெற்றிகளைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். அந்தப் பெண் அவளுடைய வீட்டுக்கும், ஊருக்கும் மட்டுமல்ல, நாட்டுக்கே பெருமை தேடித் தந்திருக்கிறாள்.

அவள்தான் எம்.சி. மேரிகோம் என்று அழைக்கப்படுகிற மாங்தே சுங்னிஜாங் மேரிகோம். இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை.

(சாதனைப் பெண்கள்' என்னும் நூலிலிருந்து)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2016 7:53 pm

இவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரித்தார்கள்
-
பிரியங்கா சோப்ரா, மேரிகோமாக நடித்து அசத்தினார்...
-
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 SXwrAAb8SCqYNEpYqO7E+17-1405576831-mary-kom-priyanka-chopra23-600

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 30, 2016 12:54 am

ஆமாம் அண்ணா, வெகு அற்புதமான படம் அது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:17 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 QMg0sgPGRm2Pch6nWpJN+ivar_2807458h
ராகுல் கோஸ்லா

முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனமான மேக்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை விசா நிறுவனத்தின் மத்திய ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிரிவுகளின் தலைவராக பணி புரிந்தவர்.

இதே நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவிற்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பிலும் இருந்தவர்.

பாங்க் ஆப் அமெரிக்காவில் ரீடெய்ல் அசெட்ஸ் பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ஆசிய நாடுகளுக்கு தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

ரான்பாக்ஸி பார்மா நிறுவனத்தின் நிதி அதிகாரியாக பணியாற்றியவர்.

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதார பிரிவில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். மேலும் பட்டய கணக்காளர் படிப்பையும் முடித்துள்ளார்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:37 am

எட்வர்டு ஜென்னர்

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 ZAOyIUMvTdS3tHGZtFcE+225px-Edward_Jenner_by_James_Northcote

பிறப்பு: 17 மே, 1749

மறைவு: 26 ஜனவரி,1823

என்னை, 'நோய்த் தடுப்பூசிகளின் தந்தை' என்பார்கள்! இங்கிலாந்தில் உள்ள பெர்க்லி என்னும் ஊரில் பிறந்து, சகோதரிகளின் ஆதரவில் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மருத்துவத் துறையில் அதிகம் ஆர்வம் இருந்தது. நோய்கள் எல்லாம் இயற்கையின் எதிரிகளாக எனக்குத் தெரிந்தன. ஆகவே, 'ஒரு மருத்துவராகி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்' என்று முடிவெடுத்தேன்.

'டேனியல் லட்லாவ்' என்ற அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்று அறுவைச் சிகிச்சை நிபுணராகத் தேர்ச்சி பெற்றேன். லண்டனில் தூய ஜார்ஜ் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் உடற்கூறு அறுவைச் சிகிச்சையாளராகவும் 1770ல் பணியாற்றினேன். மாரடைப்பு பற்றி முதன் முதலில் ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் என்னையே சேரும்.

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி மருந்தை 20 ஆண்டு கால முயற்சிக்குப் பின் 1796ல் கண்டுபிடித்து வெற்றி பெற்றேன். மேலும் பல ஆய்வுகள் செய்து அம்மை நோய் பற்றிய ஆய்வு நூலையும் வெளியிட்டேன். எனக்கு முன்பாகவே பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்தை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி, ரெண்டெல், ப்ளெட் ஆகியோர் கண்டுபிடித்து இருந்தனர்.

ஆனால், என்னுடைய ஆராய்ச்சி முடிவுதான் விளக்கத்துடன் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 'ஃபிரான்சிஸ்கோ ஜாவியர் டி பால்மிஸ்' என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் கண்டறிந்த தடுப்பூசி மூலமாக பெரியம்மை நோயை ஒழித்தார். இதனால், என் புகழ் உலகம் எங்கும் பரவியது.

தேசிய தடுப்பூசிக் கழகத்தை 1808ஆம் ஆண்டு தோற்றுவித்தேன்.என் கண்டுபிடிப்புக்குப் பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் கிடைத்தன. மருத்துவ உலகில் என் பங்களிப்பு மிக உன்னதமானது என்று பலரும் சொல்கிறார்கள்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 10:45 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 8 AY5GrZClRK2wltRuTlHO+E_1472099776

இங்கு ஆறு அயல்நாட்டுப் பெண்மணிகளைப் பார்க்கிறீர்கள் தானே! இவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து யார் அவர்கள் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. சிறைச் சாலை சீர்திருத்தம். முக்கியமாகப் பெண்கள், சிறைச்சாலைகளில் கேவலமாக, கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டு, அதற்காகப் போராடி வெற்றி கண்டவர். க்வாக்கர் குடும்பத்தில் பிறந்த இவர் யார்?

2. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (லெனின் கிராட்)ல் பிறந்து, பாலட் நடனத்தில் புகழ்பெற்றவர் இவர். இவரது அன்னப் பறவை என்னும் நடனம் மகத்தானது. இவரது பெயர்?

3.வார்ஸாவில் (போலந்து) பிறந்த இவர், வறுமை வாட்டினாலும் விஞ்ஞானத்தில் மோகம் கொண்டவர். மணந்து கொண்ட கணவனும் ஒரு விஞ்ஞானி. தன் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற இவர் யார்?

4.ஆங்கில இலக்கியத்தில் புகழ் பெற்ற நாவலாசிரியை. 1816ல் யார்க் ஷயரில் பிறந்தவர். நான்கு சகோதரிகளோடும், ஒரு சகோதரரோடும் பிறந்து, வறுமையில் வாடியபடியே வாழ்ந்து, மகத்தானதோர் நாவலை எழுதியவர். இவரது பெயர்?

5.தனது பதினெட்டாவது வயதில் இங்கிலாந்தில் சிங்காசனத்தில் அமர்ந்து, எண்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கீர்த்தியுடன் ஆட்சி செய்த அரசியான இவர் யார்?

6.செல்வசெழிப்பில் பிறந்தும் துயருறும் நோயாளிகளுக்காக உழைக்க, தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். ப்ளாரன்ஸ் நகரில் 1820ம் ஆண்டு பிறந்த இவர் யார்?

விடைகள்:

1.எலிஸபெத்பிரை, 2.அன்னா பாவ்லோவா, 3.மேரிக்யூரி, 4.சார்லட்டி புராண்டி, 5.விக்டோரியா காராணி, 6. பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:52 am

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக